ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 146
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/146.jpg)
பஞ்ச பூதங்களுக்கே தலைவன் நீ
பூமியை சுற்றி நீயே அதிகமாக இருக்கிறாய்
நீ நினைத்தால் பூமியை அழித்து விடலாம்
ஆனால் பொறுமையின் சிகரம் நீ
எத்தனை துன்பம் தந்தாலும் அமைதிகாக்கிறாய்
தண்ணீர் என்ற உன் பெயரை உச்சரித்தாலே
அப்படி ஒரு குளிர்ச்சி மனதினுள்
உன்னை பார்த்தால் அள்ளி அணைக்க தோன்றும்
பலரோ உன்னை காண்பதே தவமென நினைகிறார்கள்
நீ கிடைக்காமல் பலர் ஏக்க பார்வை பார்க்கிறார்கள்
பலருக்கோ நீ கிடைப்பதால் அப்படி ஒரு அலட்சியம்
உன்னால் வளர்ந்த மரத்தை வெட்டுகிறார்கள்
நீ அள்ளித்தந்த பசுமையை அழிக்கிறார்கள்
அதை பொறுத்து கொள்ளாமல்தான்
பலதடவை விஸ்வரூபம் எடுத்தாய்
ஆனால் இன்னும் திருந்தவில்லை இவர்கள்
உன்னுள் நஞ்சை கலக்குகிறார்கள்
உன்னுள் வாழும் பல உயிர்களை கொல்கிறார்கள்
அதை பொறுத்து கொள்ளாமல் மழையாய் வந்து கதறுகிறாய்
இதை புரிந்து கொள்ளாமல் சொர்க்கம் என்று நினைத்து
உன் அழுகையை புன்னைகையோடு அனுபவிக்கிறார்கள்
இதையெல்லாம் பொறுக்க முடியாமல் தான்
குழாயில் அருவியாய் துள்ளி விளையாடிய நீ
சொட்டு மருந்து போல் காட்சி அளிக்கிறாய்
இப்போதெல்லாம் உன்னை பார்த்தாலே பலர் கும்பிடுகிறார்கள்
ஆனால் உனக்குத்தான் மனம் இரங்கவில்லை
இனிமேலும் பொறுமை காக்காதே மானிடரே
நீர்தானே என்று அலட்சியம் செய்யாமல்
நீ பெற்ற குழந்தை போல் காத்து பழகு
நீரை காத்தாலே உன் தலைமுறை வாழும்
உலகம் செழித்திட நீர் தேவை இதை என்றும் மறவாதே