சத்திய சோதனை.....
சத்திய சோதனைன்னு வாழ்ந்த நம்ம காந்திஜி ...சுட்டு கொன்னாங்க....சதியம்ன்னாலே கொஞ்சம் பயமாதாங்க இருக்குது......
"சத்தியத்துக்கு" எப்பவுமே சோதனைகள் அதிகம் தான், அதுல இப்ப "சத்யம்" கம்பனியும் மாட்டிகிட்டது.....
அதே மாதிரி இன்னொரு பொருத்தம் கூட நினைவுக்கு வருது ........"ராமராஜ்" என்றாலும் பிரச்சினைக்குரிய "பெயரு" தான்.....போல .......
இது ரெண்டும் ஒரே இடத்துல இருந்தா.....பிரச்சினை இல்லாமல் போகாது என்பதற்கு "சத்யம்" கம்பனி எடுத்து காட்டு.
இலங்கையிலே எப்படி நம்ம அப்பாவி தமிழர்கள் வேதனையில் சிக்கி விமோசனத்துக்கு காத்து கிடக்குராங்களோ அப்படி ஆகி விட்டது "சத்தியத்தில்" வேலை பார்க்கும் ஒவ்வொருத்தரின் நிலைமையும்.......
"ச்சா.......என்னடா உலகம் இதுன்னு" நினைக்க தோணுதுங்க......
என்னை கேட்டா ஐ.டி. கம்பனிகளை பார்த்து மத்தவுங்க எல்லோரும் விட்ட பெருமூச்சும் பொறாமையும் தான் இப்படி ஒரு சோதனையான கால கட்டத்தை உருவாக்கி விட்டுடுச்சி......
சாமி வரம் குடுத்தாலும் அடுத்த வீட்டு காரனுக்கு ரெண்டு கண்ணும் பொட்டையா போகணம்னு வரம் கேட்குற நல்ல உள்ளங்கள் வாழும் பூமி தானே இது........
அதனால தான் பாவம் இன்னைக்கு "சத்தியத்துக்கே" சோதனை வந்துடுச்சி......
இன்னைக்கு "சத்திய" சோதனை........வரும் நாட்களில் மத்த கம்பனிகளுக்கும் இதே போல சோதனை காலம் வராம கவனத்தில் கொண்டுவராவிட்டால்......எதிர் கால இந்தியா வல்லரசு ஆகுமோ இல்லையோ திவால் ஆகிவிடும் என்பது தெளிவாக தெரிகிறது.......
"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்" ...என்று வேதனையாக பாட முடியவில்லை எச்சரிக்கை செய்ய தோன்றுகிறது......