Author Topic: ஜெனெரேஷன் கேப்  (Read 634 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஜெனெரேஷன் கேப்
« on: December 14, 2011, 06:20:56 PM »
ஜெனெரேஷன் கேப்



பள்ளிப்பருவ நாட்கள் வரையில் அம்மா அப்பாவின் மீது ஒருவித பயம், நடை உடை பேச்சு எல்லாவற்றிலுமே அப்பா, அம்மா, ஆசிரியை கூருவதுபடியே நடந்து கொள்ளவது, கல்லூரியில் கால் வைத்ததும் திடீரென்று வியக்கவைக்கும் ஒரு மாற்றம், மாற்றங்கள் தேவைதானே, அதற்கென்று இப்படியொரு மாற்றம் தேவைதானா? இது பெற்றோரின் ஆதங்கம், மாற்றம் இல்லை என்றால் என்னை ஒரு சக மாணவியாகவே நினைக்க மாட்டாங்க அப்படீன்னு சொல்லற கல்லூரி கூட்டம்,

படிப்பிலும் திடீர் மாற்றம் இருக்கா? மதிபெண்கள் குறைய ஆரம்பித்தால் புரிந்து விடும் மாற்றம் எந்த திசை நோக்கி போகிறது எனபது,

அறிவியல் வளர்ச்சி எந்த அளவிற்கு படிப்பை கெடுக்க முடியும் என்பதை உணர வைப்பதும் கல்லூரி பருவத்தில், செல்போன், கணிணி எத்தனை தேவையான அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்புகள்? இவற்றை இவர்கள் பயன் படுத்தும் முறை? இந்த அறிவியல் முன்னேற்றம் வராமலேயே இருந்திருக்கலாமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது!!!

தொலைக்காட்சி இல்லாமல் இருந்த காலத்தை எண்ணி பார்கிறேன், எத்தனை பேரை தினம் தினம் நமக்கு வீட்டினுள் கூட்டிவந்து காண்பிக்கின்றது,எத்தனை செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது, இவைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு அத்தனை முக்கியத்துவம் பெற்று விட்டன மீடியாக்கள். ஆனால் அவற்றை பயன் படுத்தும் முறை????

இப்படிஎல்லாம் கேட்டால், நீங்கள் எல்லாம் அறுபதுகளில் பிறந்தவர்கள் அப்படி பேசுகிறீர்கள் என்று பதில் கிடைக்கும், அப்படி என்றால் பின் வரும் சந்ததி உங்களை பார்த்து நீங்கள் எண்பதுகளில் பிறந்தவர்கள் அப்படித்தான் பேசுவீர்கள் என்று சொல்லும்போது எப்படி ஏற்றுக்கொள்ள போகின்றீர்கள் ? என்று நாங்கள் இறந்து விட்டிருந்தாலும் நீங்கள் நினைவு படுத்தி கொள்ளுங்கள் "இப்படித்தானே நாம் நம் பெற்றோரிடம் சொன்னோம்" என்று.

கைகளில் எப்பொழுதும் செல்போன், உபயோக படுத்த தெரியாமலா அல்லது அடிமையாகி விடுவதாலா என்று தெரியவில்லை, அதிகநேரம் உரையாடினால் உடல்நலத்திற்கு கெடுதல் என தெரிந்திருந்தும், மாற்றிக்கொள்ள முடிவதில்லை,

உடைகள் அணிவதிலும் கூட, நாகரீகம் என்ற பெயரில் எத்தனை கோலங்கள்? மேலை நாட்டு கலாசாரம் என்று ஒரு புறம் இருந்தாலும், அப்படி அணியாதவர் பட்டிகாட்டான் என்னும் எண்ணம் எத்தனை தவறு எனபது தெரிந்து இருகிறதா அல்லது தெரிந்து கொள்ள விருப்பம் இல்லையா? புரியவில்லை!!!!! ஆங்கிலம் பேசியே ஆகவேண்டும் இல்லையென்றால் மதிப்பில்லை எனபது, மடமையா? அல்லது முட்டாள்தனமா? நாகரீகம் அடைந்தவரின் அளவுகோல் ஆங்கிலம் பேசுவதும் பான்ட், ஷர்ட் அணிந்து கொள்வதும் தானா?

ஆங்கில அறிவு தேவைதானே? அதை யாராலும் மறுக்க முடியாதே, வேட்டி கட்டியவரெல்லாம் படிக்காத பாமரர் என்ற எண்ணம் எத்தனை அறியாமை? வேகம் இருக்கும் அளவிற்கு விவேகம் இருக்க வேண்டாமா? வயதில் முதியவர்க்கு மரியாதை எதற்கு என்று நடந்து கொள்வது கூட நாகரீகமா? யார் சொல்லி கொடுத்த நாகரீகம் இவையெல்லாம்? இதற்க்கு பெயர் நாகரீகம் இல்லை அநாகரீகம்.

காட்டு மிராண்டிகள் போல வாழ்ந்து வந்த மனிதனும் (ஆதி மனிதன்) அநாகரீகமாக இருந்தான் என்று தானே ஏடுகளில் வாசிக்கின்றோம்? நாகரீகம் அடைந்த மனிதன் மறுபடியும் அநாகரீகத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறான் என்று தானே பொருள்? ஒரு புறம் அறிவியல் முன்னேற்றங்கள் மறுபுறம் நாகரீகம், ஜெனரேஷன் கேப் என்ற பெயரில் அநாகரீகம்.

காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த ஆதி மனிதன் கூட்டம் கூட்டமாய் வாழ ஆரம்பித்தான், என்பதும் பின்னர் நாகரீகம் அடைந்தான் என்றும் படித்த நாம் இன்று ஆதி மனிதர்களை பின் பற்றி போகிறோம் என்றே நினைக்க தோன்றுகிறது இன்றைய தலை முறையின் பல மாற்றங்கள்.

சிலர் கூறுவது இப்படி " இந்த கால பசங்களோட நாம் தான் நம்மை மாற்றி கொண்டு வாழவேண்டும்" எனபது, மாற்றி கொள்ளவேண்டாம் எனபது என் வாதம் இல்லை, எவற்றை மாற்றி கொள்ள வேண்டும் எனபது தான் கேள்வி.