Author Topic: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)  (Read 14943 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ம. கோ. இராமச்சந்திரன் (MGR)

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்




மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
 


பிறப்பு
 
ஜனவரி 17, 1917
 நாவலப்பிட்டி,  இலங்கை
 


இறப்பு
 
டிசம்பர் 24, 1987
 தமிழ்நாடு,  இந்தியா
 


பணி
 
நடிகர், அரசியல்வாதி
 


வாழ்க்கைத் துணை
 
தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி
 


பிள்ளைகள்
 
கிடையாது


எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்

தனிப்பட்ட வாழ்க்கை
 
இளமைப்பருவம்
 
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.[1][2]
 
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரனும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
 
இல்லறம்
 
எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். அவர் தங்கமணியை மணந்தார். தங்கமணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த இல்லற வாழ்க்கையால் தங்கமணி கற்பமானார். பிரசவத்திற்காக தாய் ஊருக்கு சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் தான் காதலித்து வந்த வி. என். ஜானகியை மணந்துக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.

செல்லப் பிராணிகள்
 
எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரை நியமித்திருந்தார்
 
திரைப்பட வாழ்க்கை
 
முதன்மைக் கட்டுரை: எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை
 
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
 
இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்ஷாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.
 
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #1 on: January 26, 2012, 02:51:29 AM »

அரசியல் வாழ்க்கை

இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடை பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும்,தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988 இல் பிரிந்து 1989ல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அவர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.
 
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியிலிருந்த போதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.இவர் இறந்து, 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.
 
திட்டங்கள்
 
சத்துணவுத் திட்டம் இலவச வேட்டி சேலை திட்டம் வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.[7]
 
 தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு
 
1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
 
எம்.ஜி.ஆர் பற்றி பிரபாகரன்
 
விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையை கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்றே எம்.ஜி.ஆர் தன்நிலையை பற்றி பிரபாகரனிடம் கூறியுள்ளார்.
 
எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம்
 
1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.
 
நெடுமாறனின் நினைவுகள்
 
பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்
 
எழுத்துகள்
 
 நாடோடி மன்னன் புத்தகம்
 
எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.[10] இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார்.
 
சுயசரிதைத் தொடர்
 
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.
 
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
 
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
 
விருதுகள்

 1.பாரத் விருது - இந்திய அரசு
 2.அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
 3.பாரத ரத்னா விருது - இந்திய அரசு
 4.பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
 5.சிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
 6.வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
 
திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்


 1.இதயக்கனி - அறிஞர் அண்ணா
 2.புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
 3.நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
 4.மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
 5.பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
 6.மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
 7.கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
 8.கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
 9.கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
 10.கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
 11.கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
 12.திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
 
பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

 1.கொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
 2.கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
 3.நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
 4.பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
 5.மக்கள் திலகம் - தமிழ்வாணன்
 6.வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
 7.புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள்
 8.இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
 9.மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
 10.ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
 
நினைவிடம்
 
தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவரது நினைவிடமாகப் போற்றி டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன





எம்.ஜி.ஆர் நினைவிடம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #2 on: January 26, 2012, 02:58:17 AM »
எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர்.
அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே !




**எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).


 **பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !
 

**எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !
 

**எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !


** விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !


***சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !
 
 ***முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !
 
 ***‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !
 

***நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார் 
 

***எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !
 

**எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
 

**காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !
 

**நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !
 

**சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

 
***எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !
 
***தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.
 ‘

***பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !
 
**அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !
 

***ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !
 

***ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !
 

***அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
 

***எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !
 
**முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !


 ***அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !


*** ‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #3 on: January 26, 2012, 03:05:17 AM »
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்.
 
1. சதி லீலாவதி -1936
 2. இருசகோதரர்கள் -1936
 3. தட்சயக்ஞம் -1938
 4. வீரஜகதீஷ் -1938
 5. மாயாமச்சேந்திரா -1939
 6. பிரகலாதா-1939
 7. வேதவதி(அ) சீதாஜனனம் -1941
 8. அசோக்குமார் -1941
 9. தமிழறிவும் பெருமாள் -1941
 10. தாசிப்பெண் (அ) ஜோதிமலர் -1943
 11. அரிச்சந்திரா -1944
 12. சாலிவாகணன் -1945
 13. மீரா -1945
 14. ஸ்ரீ முருகன் -1946
 15. ராஜகுமாரி -1947
 16. பைத்தியக்காரன் -1947
 17. அபிமன்யு -1948
 18. மோகினி -1948
 19. ராஜமுக்தி -1948
 20. ரத்னக்குமார் -1949
 21. மருதநாட்டு இளவரசி -1950
 22. மந்திரிகுமாரி -1950
 23. மர்மயோகி -1951
 24. ஏக்தா ராஜா -1951 (இந்தி)
 25. சர்வாதிகாரி -1951
 26. சர்வாதிகாரி -1951 (தெலுங்கு)
 27. அந்தமான் கைதி -1952
 28. குமாரி -1952
 29. என் தங்கை -1952
 30. நாம் -1953
 31. ஜெனோவா -1953(மலையாளம்)
 32. ஜெனோவா -1953
 33. பணக்காரி -1953
 34. மலைக்கள்ளன் -1954
 35. கூண்டுக்கிளி -1954
 36. குலோபகாவலி -1955
 37. அலபாபாவும் 40 திருடர்களும் -1956
 38. மதுரை வீரன் -1956
 39. தாய்க்குப் பின் தாரம் -1956
 40. சக்கரவர்த்தி திருமகள் -1957
 41. ராஜராஜன் -1957
 42. புதுமைப்பித்தன் -1957
 43. மகாதேவி -1957
 44. நாடோடி மன்னன் -1958
 45. தாய் மகளுக்கு கட்டிய தாலி -1959
 46. பாக்தாத்திருடன் -1960
 47. ராஜா தேசிங்கு -1960
 48. மன்னாதி மன்னன் -1960
 49. அரசிளங்குமரி -1961
 50. திருடாதே -1961
 51. சபாஷ் மாப்ளே -1961
 52. நல்லவன் வாழ்வான் -1961
 53. தாய்சொல்லைத் தட்டாதே -1961
 54. ராணி சம்யுக்தா -1962
 55. மாடப்புறா -1962
 56. தாயைகாத்த தனையன் -1962
 57. குடும்பத்தலைவன் -1962
 58. பாசம் -1962
 59. விக்கிரமாதித்தன் -1962
 60. பணத்தோட்டம் -1963
 61. கொடுத்து வைத்தவன் -1963
 62. தர்மம் தலைகாக்கம் -1963
 63. கலை அரசி -1963
 64. பெரிய இடத்துப் பெண் -1963
 65. ஆனந்த ஜோதி -1963
 66. நீதிக்கு பின் பாசம் -1963
 67. காஞசித் தலைவன் -1963
 68. பரிசு -1963
 69. வேட்டைக்காரன் -1964
 70. என் கடமை -1964
 71. பணக்காரக் குடும்பம் -1964
 72. தெய்வத்தாய் -1964
 73. தொழிலாளி -1964
 74. படகோட்டி -1964
 75. தாயின் மடியில் -1964
 76. எங்க வீட்டுப் பிள்ளை -1965
 77. பணம்படைத்தவன் -1965
 78. ஆயிரத்தில் ஒருவன் -1965
 79. கலங்கரை விளக்கம் -1965
 80. கன்னித்தாய் -1965
 81. தாழம்பூ -1965
 82. ஆசைமுகம் -1965
 83. அன்பே வா -1966
 84. நான் ஆணையிட்டால் -1966
 85. முகராசி -1966
 86. நாடோடி -1966
 87. சந்திரோதயம் -1966
 88. தாலி பாக்கியம் -1966
 89. தனிப்பிறவி -1966
 90. பறக்கும் பாவை -1966
 91. பெற்றால் தான் பிள்ளையா? -1966
 92. தாய்க்கு தலை மகன் -1967
 93. அரச கட்டளை -1967
 94; காவல்காரன் -1967
 95. விவசாயி -1967
 96. ரகசிய போலீஸ்115 -1968
 97. தேர்த்திருவிழா -1968
 98. குடியிருந்த கோயில் -1968
 99. கண்ணன் என் காதலன் -1968
 100. ஒளிவிளக்கு -1968
 101. கணவன் -1968
 102. புதிய பூமி -1968
 103. காதல் வாகனம் -1969
 104. அடிமைப் பெண் -1969
 105. நம்நாடு -1969
 106. மாட்டுக்கார வேலன் -1970
 107. என் அண்ணன் -1970
 108. தலைவன் -1970
 109. தேடிவந்த மாப்பிள்ளை -1970
 110. எங்கள் தங்கம் -1970
 111. குமரிக்கோட்டம் -1971
 112. ரிக் ஷாக்காரன் -1971
 113. நீரும் நெருப்பும் -1971
 114. ஒரு தாய் மக்கள் -1971
 115. சங்கே முழங்கு -1972
 116. நல்ல நேரம் -1972
 117. ராமன் தேடிய சீதை -1972
 118. நான் ஏன் பிறந்தேன் -1972
 119. அன்னமிட்டகை -1972
 120. இதய வீணை -1972
 121. உலகம் சுற்றும் வாலிபன் -1973
 122. பட்டிக்காட்டுப் பொன்னையா -1973
 123. நேற்று இன்று நாளை -1974
 124. உரிமைக்குரல் -1974
 125. சிரித்து வாழவேண்டும் -1974
 126. நினைத்ததை முடிப்பவன் -1975
 127. நாளை நமதே -1975
 128;. இதயக்கனி -1975
 129. பல்லாண்டு வாழ்க -1975
 130. நீதிக்கு தலைவணங்கு -1976
 131. உழைக்கும் கரங்கள -1976
 132. ஊருக்கு உழைப்பவன் -1976
 133. நவரத்தினம் -1977
 134. இன்று போல் என்றும் வாழ்க -1977
 135. மீனவ நண்பன் -1977
 136. மதுரை மீட்டிய சுந்தரப்பாண்டியன் -1977
 
தெலுங்கு மொழி மாற்றப்படங்கள்
 
1.அலிபாபா (அலிபாபாவும் 40 திருடர்களும); -1956
 2.சாகச வீருடு (மதுரை வீரன்) -1956
 3.ராஜபுத்திரி ரகசியமு (சக்கரவர்த்தி திருமகள்) -1957
 4.மகாதேவி (மகாதேவி) -1958
 5.வீரகட்கம் (புதுமை பித்தன்) -1958.
 6.அனகா அனகா ஒக ராஜு (நாடோடி மன்னன்) -1959
 7.பாக்தாத் கஜ தொங்கா (பாக்தாத் திருடன்) -1960
 8.தேசிங்கு ராஜூ கதா (ராஜா தேசிங்கு) -1961
 9.ஜெபு தொங்கா (திருடாதே) -1961
 10.கத்திபட்டின தைது(அரசிளங்குமரி)-1961
 11.யேனகக்கா வீருடு (மன்னாதி மன்னன்) -1962
 12.வீர பத்ருடு (தாயைக்காத்த தனையன்) -1962
 13.பாக்கிய வந்தலு (நலலவன் வாழ்வான்) -1962
 14.இத்தரு கொடுக்குலு (தாய்சொல்லை தட்டாதே) -1962
 15.ராஜாதி ராஜூ கதா(ராஜராஜன்) -1963
 16.அதிர்ஷ்டவதி (கொடுத்து வைத்தவள்) -1963
 17.தியாகமூர்த்திலு (மாடப்புறா) -1963
 18.ஆனந்த ஜோதி (ஆனந்த ஜோதி) -1964
 19.ஹந்தரு டெவரு (தர்மம் தலைகாக்கும்) -1954
 20.தொங்கலு பட்டின தொரா (நீதிக்குபின் பாசம்) -1954
 21.தொங்க நோட்டலு (பணத்தோட்டம்) -1964
 22.இன்டி தொங்கா (வேட்டைக்காரன்) -1964
 23.முக்குரமமாயிலு மூடு ஹத்யலு (பரிசு) -1964
 24.வீரமார்த்தாண்டா (விக்கிரமாதித்தன்) -1965
 25.கராணா ஹத்தகுடு (என் கடமை) -1965
 26.சுதா நாயகடு கதா (ஆயிரத்தில் ஒருவன்) -1965
 27.காலம் மாறிந்தி (படகோட்டி) -1966
 28.எவராஸ்ரீ (கலங்கரை விளக்கம்) -1966
 29.தனமே பிரபஞ்ச லீலா (தாய்க்குத் தலைமகன்) -1967
 30.காலச்சக்கதரம் (பணம் படைத்தவன்) -1967
 31.அந்துலேயணி ஹந்துடு (தாயின் மடியில்) -1967
 32.பெண்ளண்டே பயம் (சந்திரோதயம்) -1967
 33.நாமாட்டண்டே (நான் ஆணையிட்டால்) -1967
 34.பொண்டி பில்லா (பறக்கும் பாவை) -1967
 35.சபாஷ் தங்கா (தனிப்பிறவி) -1967
 36.தோப்பிடி தொங்கலு (முகராசி) -1968
 37.விசித்திர சோதரலு (குடியிருந்த கோயில்) -1968
 38.மாங்கல்ய விஜயம் (தாலி பாக்கியம்) -1968
 39.ஸ்ரீமந்தலு (பணக்கார குடும்பம்) -1968
 40.தொப்பகு தொப்பா (ஆசைமுகம்) -1968
 41.ரைவர் மோகன் (காவல்காரன்) -1969
 42.கொண்ட இன்டிசிம்மம் (அடிமைப்பெண்) -1969
 43.பிரேம மனசுலு (அன்பே வா) -1969
 44.எவரிபாப்பாய் (பெற்றால் தான் பிள்ளையா) -1970
 45.விசித்திர விவாகம் (கண்ணன் என் காதலன்) -1970
 46.கூடாச்சாரி 115 (ரகசிய போலீஸ் 115) -1971
 47.செகன்ராபாத் சி.ஐ.டி. (தலைவன்) -1971
 48.பந்திபோட்டு பயங்கர் (புதிய பூமி) -1972
 49.பிராண சினேகிதுலு (நல்ல நேரம்) -1972
 50.சிக் ஷ் ராமுடு (ரிக் ஷாக்காரன்) -1972
 51.லோகம் சுட்டின வீரடு (உலகம் சுற்றும் வாலிபன்) -1973
 52.கைதி பென்ட்ளி (கணவன்) -1975
 53.மஞசிகோசம் (அன்னமிட்டகை) -1975
 54.ரங்கோள ராணி (குமரிக்கோட்டம்) -1975
 55.காஷ்மீர் புல்லோடு (இதய வீணை) -1976
 56.பிரேமா தர்மமா (இதயக்கனி) -1976
 57.வஞ்ரால தொங்கா (நினைத்ததை முடிப்பவன்) -1976
 58.எதுருலேனி கதாநாயகுடு (இன்றுபோல் என்றும் வாழ்க) -1978
 59.தர்மாத்முடு (நேற்று இன்று நாளை) -1978
 60.அண்டம் மூல சபதம் (நீரும் நெருப்பும்) -1978
 
இந்தி மொழி மாற்ற படங்கள்
 
1.குல்-இ-பகாவலி (குலேபகாவலி) -1956
 2.பாக்தாத் (பாக்தாத்திருடன்) -1961
 3.மேரிபஹன் (அரசிளங்குமரி) -1962
 4.ஹமேபிஜேனே (நாடோடி மன்னன்) -1963
 5.நர்த்தகி சித்ரா (மன்னாதி மன்னன்) -1966
 6.கோயி குலாம் நஹீ (அடிமைப் பெண்) -1970
 7.ஆக்ரி நிஷ்ன் (நீரும் நெருப்பும்) -1974
 8.ரங்கீன் துனியா (உலகம் சுற்றும் வாலிபன்) -1975
 9.லவ் இன் காஷ்மீர் (இதயவீணை) -1976
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #4 on: January 26, 2012, 03:11:13 AM »
1. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய தகப்பனார் வழி பூர்வீகம்


மக்கள் திலகம் அவர்களுடைய தந்தை கோபாலன் அவர்களுடைய தந்தை பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்து஡ர் என்ற கிராமம். அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்று சொல்லப்படுகிறது.
 
இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்த காலத்தில் கோபாலன் அவருடைய தாய் தந்தை கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது. எப்படி கோவை மாவட்டம் என்பது என்னுடைய ஆய்வில் தெரிகிறது. எப்படி இருந்தாலும் கோபாலன் அவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது என்னுடைய ஆய்வில் தெரிகிறது. இப்போது என்னுடைய ஆய்வில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜி.ஆர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்விகம் தமிழ்நாடு இவர் பிறந்தது ஈழத்தமிழ்நாடு இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது. செந்தமிழ்நாடு கும்பகோணம் ஆரம்பம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைதான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.
 
இது மக்கள் திலகம் அவர்களுடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை கோபாலன் அவர்கள் கேராளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் கேரளா வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனு஡ர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம் கோபாலன் அவர்கள் பட்ட படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விஷயத்திலும் கோபப்படமாட்டார். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தது இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளது. இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இருந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சொத்து விஷயத்தில் தகராறுகள் ஏற்பட்டு அது ரொம்ப பெரிய விஷயமாக பெரிய தகராறுகள் பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிறீர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும். வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் அவர்கள் மிக ரகசியமாக இந்த விஷயத்தை வைத்து கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.
 
MGRகோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட முனிசிப்பு கோர்ட்டில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள். அதை ஏற்றுக்கொள்ளாத துணை நீதிபதி உங்க்ள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பும் அந்த ஊரில் கோபாலன் அவர்களுக்கு உண்டு. அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துகொண்டு இலங்கைக் செல்கிறார். இலங்கை கண்டிக்கு சென்றவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் அவர்கள் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டி என்பது ஒரு பெரிய நகரம் அங்கு 100க்கு 50 சதவிதம் பேர்கள் தமிழர்கள். இதே போல் இலங்கையில் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாடுதான் ஈழநாடு இலங்கை மறுபெயர் ஈழநாடு என்று சொல்லப்படுகிறது. இது உலகம் அறிந்த விஷயம்.
 
இந்த காலகட்டத்தில் ஈழ தமிழர்கள் வாழும் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர் அவர்கள் 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36க்கு பிறக்கிறார். 5வது குழந்தையாக தாய் தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா அவர்கள் ரசிப்பார்கள். நான்காவது குழந்தையாக சக்கரபாணிக்கும் எம்.ஜிண.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜிண.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் அவர்கள் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டி பிடித்து கொஞ்சுவாராம்.
 
இந்த காலகட்டத்தில் கோபாலன் அவர்களுக்கு ஒரு கல்லூரியில் பேராசியராக வேலை கிடைத்தது. அதில் இருந்த சில வருடங்கள் கழித்து கண்டியின் மாவட்ட நீதி மன்றம் ஆங்கிலத்தில் முனிசிப் போர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலன் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. கோபாலன் அவர்கள் மாரடைப்பால் 1920ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை அவர்கள் ஆறுதல் சொல்லி செல்கிறார்கள். அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா அவர்கள் தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்க பட்ட சொந்த வீடு சேர்த்து வைத்து இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண்குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.
 
MGRஏற்கனவே தன் கணவரை பறிக்கொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமா அவர்களுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் MGR தன் தாயின் கழுத்தை கட்டி பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம். ஐந்தாவது குழுந்தையாக நீ பிறந்த பிறகு தான்னடா. பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று MGRரை கட்டி பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போதும் எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபானியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளை அவர்களின் உதவியை நாடுகிறார்கள். அது சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிக சிறந்தது ஆகும். அது சமயம் சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம். இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. அது சமயம் தான் கும்பகோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவர் இவர் சத்தியபாமா அவர்களுக்கு நெருங்கிய உறவினர் நாராயணனுக்கு சத்திய பாமா அவர்கள் தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார். அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு கும்பபோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்து கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.
 
சத்தியபாமா அவர்கள் நாராயணன் அவர்களுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று திரு. நாராயணன் அவர்களிடம் சத்தியபாமா அவர்கள் சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளி கூடத்தில் சேர்த்து விட்டார்க்ள. மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சனை உண்டாகிறது. இந்த நேரத்தில் சத்தியபாமா அம்மா அவர்கள் மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து தன் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள். MGRஇந்த நிலையில் MGR அவர்களும், சக்கரபானி அவர்களுக்கும் 3வயதுதான் வித்தியாசம். சக்கரபானி, தம்பியை ராமசந்திரா என்று அழைப்பார். பள்ளிகூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம். நேர்மை, நீதி பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர் நீதிபதியாகவம். பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர் அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதை கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதிமொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைகக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். தன் தாயினுடைய உழைப்பாள் நாம் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மனதுக்குள் நாளுக்கு நாள் வளர தொடங்கியது. இந்த இருவருடைய பள்ளி வாழ்க்கையின் சில சம்பவங்களை இங்கே கூறுகிறேன்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #5 on: January 26, 2012, 03:13:06 AM »
2.பத்து வயதில் கணக்கு கேட்டார்!

எம்.ஜி.ஆர் அவர்கள் பள்ளிக்கூடத்தில் மூன்றாவது வகுப்பு படித்து கொண்டு இருக்கும் காலத்தில் ஒரு நாள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் குடிக்க ஒரு மண்பாணையில் தண்ணீரும், பக்கத்தில் ஒரு அலுமினிய டம்பளரும் வைத்து இருப்பார்கள். தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு வருகிற பிள்ளைகள் வரிசை பிரகாரம் இந்த மண்பானை சுத்தமாக கழுவி தண்ணீர் கொண்டு வந்து வைக்கவேண்டும். இதுமுறை. இந்த பள்ளிகூடத்தின் விதிமுறை
 
இப்படி இருக்கும் போது ஒரு நாள் தண்ணீர் கொண்டு வரபோகும்போது பானை உடைந்து விடுகிறது. இதற்கு மறு பானை வாங்கி தண்ணீர் வைக்க வேண்டும். ஆனால் இதற்கு காசு யார் கொடுப்பது என்ற விஷயத்தில் வாத்தியார் தலையிட்டு பிள்ளைகளிடம் ஆளுக்கு 1/4 அணா போட்டு பானையை வாங்கி வரவேண்டும் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். இப்போது வருடம் “1925″ 1/4 அணா என்பது இந்த காலத்தில் 100 பைசா கொண்டது ஒரு ரூபாய். அந்த காலத்தில் 16 அணா கொண்டது ஒரு ரூபாய். இந்த ஒரு ரூபாயை வசூல் செய்து கொண்டு அருகாமையில் உள்ள சந்தைக்கு (மார்க்கெட்) சட்டாம்பிள்ளையும் மூன்று மாணவர்களும் பானை வாங்க செல்கிறார்கள். அதில் ஒருவர் எம்.ஜி.ஆர் பானை 3/4 ரூபாய்க்கு வாங்கியது போக மீதி 1/4 ரூபாய் சட்டாம்பிள்ளை கைவசம் உள்ளது. இந்த பானையை வாங்கி எம்.ஜி.ஆரிடமும் இன்னொரு பையனிடமும் கொடுத்து நீங்கள் முன்னால் போங்கள் நாங்கள் பின்னால் வருகிறோம் என்று சொல்லி அனுப்பிவிட்டு சட்டாம்பிள்ளையும் மற்றொரு பையனும் மீதி 1/4 ரூபாயிற்கு பொறி உருண்டையும், முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருவதை முன் சென்ற எம்.ஜி.ஆரும் மற்றொரு பையனும் மறைவான ஒரு இடத்தில் நின்று அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பார்க்கின்றார்கள்.
 
அந்த நேரத்தில் பின்வரும் சட்டாம்பிள்ளையும் சாப்பிட்டு வருவதை பார்த்து மீதம் உள்ள காசுக்கு இவர்கள் நமக்கு கொடுக்காமல் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறார்கள் என்று எம்.ஜி.ஆரும் நண்பரும் பேசி கொண்டு வருகிறார்கள். அங்கு சட்டாம்பிள்ளையும் கூட வந்த சட்டாம்பிள்ளை நண்பனை பார்த்து எம்.ஜி.ஆர் கேட்கிறார் பானை வாங்கி விட்டு மீதம் உள்ள காசுக்கு நீங்கள் ரெண்டு பேரும் பொறி உருண்டையும் முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்ட வருகிறீர்களே பானை வாங்கியது போக மீதம் உள்ள காசு எவ்வளவு என்று கேட்டு இருவருக்கும் வாதம் நடக்கிறது. அப்போது நீ யார்டா என்று சட்டாம்பிள்ளை வாய் வித்தியாசமாக தகாத வார்த்தைகளை பேசும் போது எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்து சட்டாம்பிள்ளையை அடிக்கின்றார். இதை அறிந்த மற்ற பிள்ளைகள் எல்லோரும் கூக்குரல் போட்டு கொண்டு வாத்தியாரிடம் சென்று இந்த சம்பவத்தை சொல்லுகிறார்கள். உடனே வாத்தியார் வந்து இருவரையும் சமாதனப்படுத்தி நாளை தலைமை வாத்தியாரிடம் சொல்லி ராமச்சந்திரன் நடந்த சம்பவத்தை முழுமையாக சொல்கிறார். இதை கேட்ட தலைமையாசிரியர் சட்டாம்பிள்ளையிடம் கேட்ட போது சரியான பதில்களை சொல்ல முடியவில்லை. அதனால், அந்த நேரத்திலிருந்து சட்டாம்பிள்ளைக்கு பதிலாக எம்.ஜி.ஆரை சட்டாம்பிள்ளையாக தலைமை ஆசிரியர் நியமித்தார். முதல் நாள் பானைக்காக கணக்கு கேட்டு பள்ளிக் கூட வாசலில் சண்டை போட் கொண்டு இருக்கும் போது பள்ளிக்கூட பையன்கள் எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணி அவரிடம் தகவல் சொல்லி அழைத்து வருகின்றார்கள். அப்போது சக்கரபாணி வந்து ஏன் சண்டை போடுகிறாய் என்று சொல்லி தம்பியை கண்டிக்கிறார். அண்ணா உங்களுக்கு ஒன்றும் தெரியாது நான் அப்புறம் சொல்கிறேன் என்ற சொல்லிவிட்டார். பிறகு பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் அண்ணன் சக்கரபாணி அவர்கள் சண்டை நடந்த விபரத்தை பற்றி கேட்கிறார். அண்ணனிடம் தம்பி நடந்த விபரத்தை சொல்லி முடிக்கிறார். உடனே சக்கரபாணி சொல்லுவதும் சரிதாண்டா. நீ சட்டாம்பிள்ளையை அடித்துவிட்டே. நாளைக்கு நம்மல பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள் நாம் என்ன பன்றது இதை அறிந்தால் அம்மாவின் மனநிலமை எப்படி இருக்கும் என்று சொல்லி தம்பியை கோபப்படுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே தயவு செய்து அம்மாவிடம் சொல்லாதீங்க. நாளை என்ன நடக்கும் என்று பார்ப்போம் என்று சொல்லி அண்ணனை சமாதப்படுத்துகிறார் எம்.ஜி.ஆர்.
 
அதன்படி மறுநாள் பள்ளிக்கூடத்துக்கே சட்டாம்பிள்ளையாகிவிட்டார். இதை அறிந்து சக்கரபாணி ஆனந்தப்படுகிறார். அன்று வீட்டுக்கு திரும்பும்போது தம்பி நேற்றுக்கு நடந்த விஷயத்தை பற்றி நான் இரவில் நினைத்து என்க்கு தூக்கம் வரவில்லை. இந்த விசயத்தை உடனே அம்மாவிடம் சொல்லப்போகிறேன் இந்த நல்ல செய்தியை என்று தம்பியிடம் சொல்லுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே எதுவானாலும் நம்ம இருவரோடு இருக்கட்டும். அம்மா இதை நம்பமாட்டார்கள். ஏன், எதற்கு என்று துருவி துருவி கேட்பார்கள்.
 
நடந்த சம்பவத்தை சொல்லி விடுவீர்கள் அது அம்மாவுக்கு தவறாகத்தான் தோந்றும் இது இப்போ நமக்கு தேவையா,
 
இதை போல் இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் லீவுநாள் அன்று காலையில் இவர்களுடைய உடைகளை எல்லாம்எடுத்து கொண்டு காவேரி ஆற்றுக்கு சென்று உடைகளை துவைத்து குளித்து வருவது வழக்கம்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #6 on: January 26, 2012, 03:14:18 AM »
3. அண்ணனிடம் கோபம் கொண்டார்




MGRஇது ஒரு பொதுவான விஷயம். இதே போல் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆற்றுக்கு குளிக்க சென்று இருக்கும் போது அண்ணன் தம்பி இருவருக்கும் வாய் தகராறு வந்து விட்டது. காரணம் இவர்கள் கொண்டு போன ஆடைகளை எல்லாம்துவைத்து காயபோட்டுவிட்டு, ஆற்றில் நீந்தி விளையாடி கொண்டு இருக்கும் போது மற்ற பையன்களோடும் குளித்துவிட்டு கரை ஏறும் போது அண்ணன் சக்கரபாணி கட்டி இருந்த கோமணம் இடுப்பில் இல்லை உடனே சக்கரபாணி தம்பியை பார்த்து ஏய். ராமச்சந்திரா என் கோமணம் தண்ணீர்ல் போயிடுச்சி என்று சொல்லி உன்னுடைய கோமணத்தை கொடுடா என்று தம்பியிடம் கேட்கிறார். அந்த நேரத்தில் கரையில் நின்று கொண்டு சிரித்து துள்ளி குதித்து ஆடி கொண்டு, நான் தரமாட்டேனே என்று சொல்லி சிரிக்கிறார். அந்த நேரத்தில் அண்ணன் தம்பியிடம் கோமணத்தை கேட்டு செஞ்சுகிறார். தம்பியோ தன் கோமணத்தை கொடுக்க மறுக்கிறார்.
 
கோமணம் இல்லாமல் அறிந்த MGR உடன் துவைத்து போட்ட டவுசரே போட்டுகிட்டு தன்னுடைய கோமணத்தை தண்ணீரில் பரிதாபமாக நின்று கொண்டு இருந்த அண்ணன் வசம் கோமணத்தை கொடுக்க, வேறுவழி இல்லாமல் கோபத்தோடு கரைக்கு வந்து துவைத்து போட்டு இருக்கும் டவிசரை எடுத்து மாட்டிக் கொண்டு தம்பியிடம் பேசாமல் கோபமாக வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்தவுடன் அம்மா஡஡விடம் என் கோமணம் தண்ணீரில் போய்விட்டது. தம்பியின் கோமணத்தை கேட்டேன் தர மறுத்துவிட்டான். பிறகு நான் வாதாடிய பிறகு கரையில் காயிந்து கொண்டிருந்த டவுசரை போட்டு கொண்ட பிறகு அந்த கோமணத்தை கேலி செய்து கொண்டு தண்ணீருக்குள் நிற்கும் என்னை பார்த்து தூக்கி போட்டான். நான் அந்த கோமணத்தை எடுத்துக் கட்டிக் கொண்டு கரை வந்தேன். இதை அம்மாவிடம் கோபமாக சொல்லுகிறார் இதை கேட்ட அம்மா MGRரை பார்த்து நீ ஏன்டா இப்படி செய்தாய் என்று கோபப்படுகிறார்.
 
அம்மா கோபமாக பேசி முடித்த உடனேயே MGR பதில் சொல்கிறார். அம்மா ஆற்றிலே நானும் அண்ணனும் மட்டும் குளிக்கவில்லை எங்களை போல் எவ்வளோ பையன்கள் குளிக்கின்றார்கள் அவ்வளவு பேரும் கோமணத்தை கட்டி கொண்டுதான் குளிக்கின்றார்கள். தன்னுடைய கோமணத்தை தண்ணீரிலேயே போயிடிக்சே என்று சொல்லி அடுத்தவங்க கோமணத்தை யாரும் கேட்பதில்லை, அப்படி இருக்கையில் அண்ணன் தன் கோமணம் போவது கூட தெரியாமல் குளித்து இருக்கிறார். கரைக்கு வரும் நேரத்தில் தன்னிடம் கோமணம் இல்லையே என்ற வெட்கப்பட்டு கொண்டு என் கோமணத்தை அவிழ்த்து கொடும்கும்படி கேட்டார். நான் தண்ணீர்லிருந்து கரைக்கு ஏறும் நேரத்தில், ராமசந்திரா என் கோமணத்தை அவிழ்த்து கொடுடா என்று சத்தம் போட்டு கேட்கிறார். நான் உடனே என் கோமணத்தை அவிழ்த்து கொடுத்து விட்டேன். அம்மனகுண்டியோடு துணி காயிக்கின்ற இடத்திற்கு எப்படி போவேன். அதனாலே நான் காயும் என்னுடைய டவுசரை தண்ணீரில் நிற்கும் அண்ணன்கிட்டே கொடுத்தேன். நான் அதை கட்டிகொண்டு தான் கரைக்கு வந்தார். இது அவரோட தவறு இந்த விஷயம் ஆற்றோடு முடிந்து விட்டுது. அம்மா இதை வந்து ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொண்டு உங்களிடம் குறை கூறுகிறாரே இது என்ன நியாயம். சற்று கோபத்தோடு அம்மாவை பார்த்து இந்த நியாத்தை கேட்கும்போது அந்த தாயினுடைய மனநிலை எப்படி இருந்து இருக்கும்? இப்படி இருக்கும் காலத்தில் மகன்கள் இருவரும் நான்காம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் கால கட்டத்தில் தன்னுடைய குழந்தைகள் 10 வயதுக்கு மேற்பட்ட தன் ஒரு மகன்களுக்கும் மூன்று நேரமும் வயிறார சாப்பாடு கொடுக்க முடியவில்லையே என்று அந்த தாய் மனம் வேதனை படுவதை அறிந்து இவர்களோட மன வேதனையே தன் தாயிடம் சொல்லாமல் நாங்கள் இருவரும் படித்தது போதும் என்று கெஞ்சி கேட்கின்றார்கள். இந்த வார்த்தையை கேட்ட தாய் மகன்களிடம் என்ன பதிலை சொல்லுவார்? ஆனாலும் தன் தாய் சத்தியபாமா அவர்கள் தன் மகன்கள் தன்படும் கஷ்டத்தை அறிந்து அவர்களே வேலைக்கு போவதாக சொல்லுகின்றார்களே என்று நினைத்து வேதனை படுகிறார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #7 on: January 26, 2012, 03:15:15 AM »
4.பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார்


இந்த கால கட்டத்தில் சத்தியபாமா அவர்களின் குடும்ப நண்பர் (கேரளா) திரு. நாராயணன் என்பவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் முக்கியஸ்தராக பணிபுரிந்து வருகிறார். தற்செயலாக சத்தியபாமா அவர்கள் வீட்டிற்கு வருகிறார். அது சமயம் சத்தியபாமா அவர்கள் நாராயணனிடம் தன்னுடைய பையன்களை பற்றி விபரமாக சொல்லுகிறார். எல்லா விபரத்தையும் கேட்ட நாராயணன் இவ்வளவு கஷ்டத்தில் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாது. அதனாலே பையன்கள் இருவரும் நல்லா அழகாக இருக்கின்றார்கள். இவர்களை நாடக கம்பெனியில் நான் வேலைக்கு சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி செல்கின்றார். ஒரு வாரம் கழித்து பையன்களை கம்பெனியில் சேர்க்க அழைத்து செல்ல வருகிறார். அது சமயம் சத்தியபாமா அவர்களிடம் கம்பெனியின் விதிமுறைகளை விளக்கமாக எடுத்து செல்லுகிறார். கம்பெனியின் விதிமுறை யார் எந்த வேலைக்கு சேர்ந்தாலும் கம்பெனியிலே அவர்களுக்கு சாப்பாடு, துணிமணிக்ள, தங்குவதற்கு இடம் கொடுப்பார்கள். சம்பளம் உடனே போடமாட்டார்கள். பையன்களுடைய திறமையை அறிந்து அவர்கள் நடப்புக்கு உள்ளவர்களா, அல்லது எடுபடி வேலைக்கு தகுதி உள்ளவர்களா என்பதை அறிந்து கம்பெனியால் சம்பளம் கொடுக்க முடிவுக்கு வருவார்கள். எனவே நீங்கள் எதற்கும் தயங்காமல் பையன்களை உடனே என்னுடன் அனுப்புங்கள், இப்போது அவர்கள் நல்லா சாப்பிட்டு உடல் வளர்ச்சி அடைய கூடியவர்கள் அவர்களுக்கு இப்போது முக்கியம் உணவு தான் எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நாராயணன் பையன்கள் இருவரையும் அழைத்து இந்த விவரத்தை சொல்லுகிறார். இதை கேட்ட பையன்கள் இருவரும் அம்மாவுடைய சம்மதத்தை எதிர்பார்க்கிறார்கள்.
 
உடனே நாராயணன் சத்தியபாமா அவர்களை அழைத்து அம்மா உங்கள் பையன்களை அழைத்து உங்க சம்மதத்தை சொல்லுங்கள் என்கிறார். இதை கேட்ட சத்தியபாமா அவர்கள் பையன்களை அழைத்து மகன்களே நீங்கள் வேலைக்கு போவதாக சொன்னீர்கள் இப்போது உங்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு கிடைத்து இருக்கிறது. உங்களோட அபிப்ராயம் என்ன மகன்களே என்று கேட்கின்றார்கள். அம்மா நாங்கள் வேலைக்கு செல்ல விரும்புகின்றோம். நாராயணன் மாமா சொன்ன விவரங்களை நாங்கள் நன்றாக கேட்டு கொண்டோ ம். ஆனால் நாங்கள் உங்களை தனியாக விட்டு விட்டு எப்படி போவது என்று எங்களுக்கு வருத்தமாக இருக்கின்றது. இந்த வார்த்தையை கேட்ட தாய் இரு மகன்களையும் கட்டி கொண்டு மாறி மாறி முத்தம் கொடுக்கிறார். எதுவுமே சொல்லாமல் பிள்ளைகளும் அம்மாவை கட்டி பிடித்து அழுகின்றார்கள். இதை பார்த்து கொண்டு இருந்த நாராயணன் அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்லி இருவரையும் அழைத்து செல்கின்றார். பாண்டிச்சேரியை சேர்ந்த காரைக்கால் என்ற ஊரில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரின் நாடகங்கள் நடந்து கொண்டு வருகிறது. இந்த கம்பெனியால் நடத்தும் நாடகங்களில் நடிப்பவர்கள் பெரும்பகுதி சிறுவர்கள்தான் இந்நிலையில் நாராயணன் அழைத்துச் சென்ற இந்த இரு சிறுவர்களையும் கம்பெனி முதலாளி பார்த்து விட்டு பையன்கள் நன்றாக நல்ல நிறமாக, அழகாக இருக்கின்றார்கள் இவர்களை நடிக்க வைக்கலாம் என்று சொல்லி நடிகர்களுக்கான பயிற்சி கூடத்திற்கு அனுப்புகிறார்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #8 on: January 26, 2012, 03:16:05 AM »
5.குழப்பத்தில் ஆழ்ந்த சத்திய தாய்

MGRஇதை கேட்ட சத்தியபாமா அவர்களுக்கு மிக குழப்பமாகி விட்டது. மகன்களுடைய வளர்ச்சி முக்கியமா, தன்னுடன் வீட்டில் வந்து தங்கி செல்வது முக்கியமா என்ற குழப்பத்தில் உள்ள போது மீண்டும் நாராயணனை சந்தித்து விபரத்தை சொல்லி இதற்கு என்ன வழி என்று கேட்கும்போது வாரத்தில் நாடகங்கள் இல்லாத நாட்களில் ஒரு நாள் அல்லது இரு நாள் என்னுடன் என் பிள்ளைகள் வந்து தங்கி செல்ல வழி வகுத்து கொடுங்கள் என்று நாராயணனிடம் அவர் மிக அன்போடு கேட்கிறார். அதன்படி நாராயணன் அவர்களும் முதலாளியை சந்தித்து இந்த விவரத்தை தெரிவிக்கிறார். இந்த விஷயத்தை கேட்ட முதலாளி இந்த இரு பையன்களும் நமக்கு முக்கியமாக நாடகத்திற்கு வேண்டும் என்ற நினைப்போடு இந்த பையன்களுக்கு ஒரு சலுகை, நாடகங்கள் இல்லா காலத்திலும் பயிற்சிகள் இல்லாத நாட்களிலும் ஒரு, இரு நாட்களுக்கு தங்கி வரலாம் என்று கம்பெனி முதலாளி சொல்கி஢றார். இதுவே பெரிய தெய்வ வாக்காகக் கொண்டு சத்தியபாமா அவர்களிடம் விவரத்தை சொல்கிறார் திரு. நாராயணன் அவர்கள், அதன்படி MGRக்கும் சக்கரபாணி அவர்களுக்கும் நாடகங்கள் இல்லாத நாட்களில் லீவு நாட்களில் அம்மாவுடன் தங்கியிருந்து கம்பெனி முதலாளி அனுமதித்தை அறிந்து இருவரும் ஆனந்தம் அடைகிறார்கள். அதன் படி அந்த நாட்களில் இருவரும் ஓரிரு நாட்களில் தங்கி இருந்து தன் அம்மா கையினால் சாப்பாடு சாப்பிடுவதை நினைத்து பூரிப்பு அடைகின்றார்கள். அதே நேரத்தில் சத்தியபாமா அவர்கள் தன் இளைய மகன் சாப்பாட்டை மிக குறைத்து சாப்பிடுவதையும் மிக மெலிந்து இருப்பதையும் கவனிக்கிறார்.
 
என்ன மகனே மிகவும் மெலிந்து இருக்கிறாய் சாப்பாடும் சரியாக சாப்பிடவில்லை என்று கேட்கிறார். உடனே செல்ல மகன் MGR அவர்கள் மிகதுடிப் போடு செல்லத்தோடு அம்மாவோட கண்ணத்தை வருடி அம்மா நான் மெலிந்து போனால் நான் என்ன செய்ய முடியும். நான் என்னால் முடிந்த வரைதான் சாப்பிடமுடியும் முன்போல் இப்போது எல்லாம் சாப்பிடமுடியவில்லை அம்மா. அதை கேட்ட தான் மகனை தொட்டு தழுவி மேலும் கீழுமாக பார்க்கிறார். அடுத்த நாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தன் இளைய மகனுடைய உடல் மெலிவை பற்றியும், உணவு குறைவாக உன்னுவதை பற்றியும், இதற்கு ஏதாவது வைத்தியம் உண்டா என்று கேட்கிறார். இதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதில் ஒருவர் பெரியதாக வைத்தியம் செய்ய வேண்டாம் நான் சொல்வது போல் சீரகம், கொஞ்சம் வெந்தயம், தண்ணீர், போட்டு நன்றாக சுடவைத்து அதோடு மேலும் கொஞ்சம் பச்சை தண்ணியை கலந்து ஒரு சொம்பில் குடிப்பது போல் ஊற்றி வைத்து அந்த தண்ணீரை குடிக்க சொல்லு, அதோடு வாரத்திற்கு இரண்டு நாட்கள் பாவாக்காய் சமைத்து கொடு வயிற்றுக்குள் பூச்சி இருந்தால் செத்துவிடும். அப்புறம் அவனுக்கு முடிந்த வரைக்கும் பால், பழங்கள் ஏதாவது கொடுத்து வா இதோடு சேர்த்து முடிந்தால் ஒரு கோழி முட்டை கொடு என்று ஒரு வயதான பாட்டி சொல்லுகிறார். இந்த நிலையில் கம்பெனியில் நாடகம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து நாடகத்தில் நடிப்பவர்கள் அத்தனை பேரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அடுத்து நாடகத்தில் நடிக்கிற முக்கியமானவர்கள் நடனம் பயிற்சியும், சண்டை பயிற்சியும் பாட்டு பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்காக கம்பனெ஢ தனித்தனியாக வாத்தியர்களை நியமித்து உள்ளர்கள். இப்படி இருக்கும்போது MGRக்கும் சக்கரபாணியும் அம்மாவுடன் இருந்தால் எப்படி என்று நாராயணன் அவர்கள் கேட்டு சத்தியபாமா அவர்களிடம் சொல்லி மீண்டும் ஒரு வார காலத்தில் அழைத்து சொல்கிறார். மீண்டும் தொடர்ந்து எல்லா வேலைகளும் நடந்து வருகிறது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #9 on: January 26, 2012, 03:16:52 AM »
6.உடற்பயிற்சி செய்ய கற்றுக்கொள்கிறார்

MGRஇதில் MGR அவர்கள் அண்ணனைவிட எல்லா பயிற்சிகளையும் கற்று கொள்கிறார். இப்படி இருக்கும் போது பாட்டுக்கு குரல் அமைப்பு சரியாக அமையவில்லை. சரி இப்போதைக்கு MGR அவருக்கு என்ன கற்று கொள்ள வருகின்றதோ அதை கற்று கொடுங்கள் என்று சொல்லுகிறார்கள். முதலாளி MGRக்கு உடற்பயிற்சி செய்வதும், அடுத்து சண்டை பயிற்சியையும் செய்வதிலும் மிக வேகமாக, கவனமாகவும் வாத்தியார் அவர்களிடம் பிரம்பு அடி வாங்காமல் செய்வார், நடன பயிற்சியும் சற்று குறைவுதான் ஆயினும் அதை விடாமல் செய்து கொண்டுவந்தார். எப்படியாவது நாம் சொந்த குரலில் பாட வேண்டும் என்று முயற்சி செய்து அதற்கு குரல் வலம் சரியாவரவில்லையே என்று வேதனைப்பட்டு கொண்டார்.
 
இந்த விஷயத்தில் அண்ணனிடம் எனக்கு பாட வரவில்லையே என்ன செய்யலாம் என்று கேட்கிறார். அதற்கு அண்ணன் சொல்கிறார் தம்பி இதை தவிர மற்றதெல்லாம் உனக்கு சரியாக வருகிறது. அவைகளை விடாமல் ஒழுங்காக கற்று கொள். அதோடு அவர் நிறுத்தாமல் இந்த மாதிரி சின்ன விஷயங்களை எல்லாம் நினைத்து வருத்தப்பட கூடாது. எனக்கு எல்லா கலைகளும் சரியாக வரவில்லை அதை பற்றி நான் என்ன கவலைபட்டு கொண்டா இருக்கின்றேன். காலைக்காலில் தொடர்ந்து வாரத்தில் இரண்டு மூன்று விதமான நாடகங்கள் நடந்து கொண்டு வரும், ஒரு நாள் நல்லதங்காள் நாடகம் அன்று முதல் முதலாக நடைபெற இருக்கிறது. அந்த நாடகத்தில் நல்லதங்காலுக்கு 7 பிள்ளை அதில் கடைசி மகனாக MGRக்கு மட்டும் தான் நடிப்பும், வசனமும் உண்டு இது தினமும் MGR அவருக்கு பயிற்சி அளித்து வந்தார்கள்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #10 on: January 26, 2012, 03:33:26 AM »
7.ஏழாவது மகனாக நாடகத்தில்


இந்த நாடகம் இந்த தேதியில் இந்த கிழமையில் நடைபெறும் விளம்பரம் செய்யபட்டு வந்தது. அந்த காலத்தில் சினிமாவைவிட நாடகங்கள் தான் அதிகம், ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு நாடகங்கள் நடத்தி வந்தார்கள். சில ஊர்களில் சில கிராமங்களில் இம்மாதிரி நாடகங்கள் நடக்கும்போது, நாடக கொட்டைகளில் மின்சார வசதி இருக்காது, மைக் இருக்காது பெட்ரோமாஸ் லைட்களும் மண்ணென்யை லைட்களும் தான் எங்கும் இருக்கும் நாடகத்தில் நடிப்பவர்கள் வசனங்களையும் பாடல்களையும் மிக சத்தமாக பேச வேண்டும் நாடகம் நடக்கின்ற அன்று நாடகத்தை பார்க்க வந்த மக்கள் கூட்டம் மிக மிக அதிகம், நாடகம் நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் நல்லதங்காள் தன் குழந்தைகளை கிணற்றில் தூக்கி போட்டு கொள்ளும் காட்சி மேடைக்கு வருகிறது. ஏழு குழந்தைகளையும் மேடையில் அமைக்கப்பட்ட கிணற்று பக்கத்தில் நிற்க வைத்து விட்டு கிணற்றில் தண்ணீர் இருக்கின்றதா கிணற்றில் போட்டால் குழந்தைகள் செத்து போய்விடுமா என்று கிணற்றை நோக்கி பார்க்கிறார்.
 
கதையில் அமைப்பின் படி வாழ்க்கையில் தோல்வி அடைந்த நல்லதங்காள் தான் பெற்ற மனம் வெறுத்து 7 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் சாக வேண்டும் என்ற முடிவோடு கிணற்றை பார்க்கின்றார் அதன் படி தன்னுடைய குழந்தைகளை கட்டி அழுகிறார். இந்த நேரத்தில் நாடகத்தை பார்க்கின்ற பொது மக்களிடமிருந்து ஒரு சிறிய சத்தம்கூட கேட்கவில்லை. இது ஒரு முக்கியமான பெரிய அம்சமான காட்சி, மேடையின் திரையின் உள்பகுதியில் நாடகத்தில் அமைப்பாளரும் முதலாளியும் மற்ற திரைகளை ஏற்றி இறக்கும் தொழிலாளிகளும் மிக கவனத்தோடு தயாராக இருக்கிறார்கள், இப்போது நல்லதங்காள் ஒவ்வொரு குழந்தையாக கிணற்றில் தூக்கி போடுகிறார். 7வது குழந்தையாக MGR தூக்கி கிணற்றில் போட வேண்டும். தனக்கு முன் 6 குழந்தை கிணற்றில் போட்டு கொண்டு இருக்கும் காட்சியை பார்த்த MGR தன்னிடம் அந்த தாய் வரும் போது தாயின் பிடியில் அகப்படாமல் அங்கம் இங்கும் ஓட ஆரம்பித்து விட்டார் இதை அறிந்த கம்பெனி முதலாளியும் நாடக இயக்குனரும் திரைக்கு மறைவில் நின்று கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து போய் பையனை எப்படியாவதும் அழ வைக்க வேண்டும் என்ற என்னத்தோடு பையன் ஓடி திரை அருகே வரும் போது தன் கையில் இருந்த பிரம்பால் தலையில் ஓங்கி அடித்து விடுகிறார்கள். அந்த அடியில் பலி தாங்க முடியாமல் MGR அம்மா, அம்மா என்று பலத்த குரலில் கிணற்றை சுற்றி சுற்றி வரும்போது தன் தாயான நல்லதங்காள் இவனை பிடித்து விடுகிறாள். பிடித்தவுடனே அந்த பையன் அம்மா என்னை கொன்றுவிடாதீர்கள் என்னை கொன்று விடாதீர்கள் என்று பலத்த குரலில் கத்துகிறான்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #11 on: January 26, 2012, 03:35:15 AM »
8.பிரம்பால் தலையில் அடித்த வாத்தியார்


MGRஇந்த காட்சியை பார்த்து கொண்டு இருந்த பொதுமக்கள் மிக ஆரவாரத்தோடு கை தட்டினார்கள். அதில் சில பெண்கள் மிக உணர்ச்சி வசப்பட்டு இந்த பையனை கொன்றுவிடாதேடி என்று உணர்ச்சிவசபட்டு கதறினார்கள். பிரம்பால் தலையில் அடித்த வாத்தியார் உடனே MGRரை அழைத்து கொண்டு உள்ளே சென்று செல்லமாக கட்டி அனைத்து கொண்டு ராமசந்திரா நீ ரொம்ப நன்றாக நடித்து விட்டாய் என்று தான் பிரம்பால் அடித்த இடத்தை கையில் தடவி கொண்டு மிக மிக சந்தோஷபடுகின்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் மிக அற்புதமாக நடித்து பொதுமக்களிடம் நல் மதிப்பை பெற்று கம்பெனிக்கு ஒரு நல்ல பெயரை எடுத்தது கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு ஒரு பெரிய மதிப்பு ஏற்பட்டது.
 
இலங்கை சிங்கள நாட்டிலே பிறந்து இந்திய நாட்டிற்கு தமிழ்நாட்டிற்கு வந்து கல்வி பயின்று (ஆங்கிலேயர் காலத்தில்) பிரான்சு நாட்டைச் சேர்ந்த பாண்டிச்சேரி, காரைக்காலில் மிக அருமையாக நடித்த எம்.ஜி.ஆருக்கு பொதுமக்களின் கைதட்டலும், ஆசியும் கிடைத்தது. அதோடு மதுரை பாய்ஸ் ஒரிஜினல் நாடக கம்பெனியாரின் பாராட்டும் கிடைத்தது. இந்த செய்தியை கேட்ட தாய் சத்தியபாமா அவர்கள் தன் மகனின் வளர்ச்சியை பார்த்து அளவற்ற அளவுக்கு சந்தோஷப்பட்டு தான் 10 மாதம் சுமந்த பெற்ற தாய் அந்த மகனின் வளர்ச்சி நினைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி மிக பெருமைபடுகிறார். இப்படி இருக்கையில் ஒரு நாள் நாராயணன் வழியாக தான் இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு அழைக்கின்றார். வீட்டிற்கு வந்த மகன்களை பார்த்து சத்திய தாய் மகன்களை அனைத்து கட்டி பிடித்து ஆனந்தப்படுகிறார். அடுத்த நாள் தன் இளைய மகன் ராமச்சந்திரனை பார்த்து ஏன் அப்பா இன்னும் மெலிந்து போய்
இருக்கிறாய் என்று சொல்லி கவலைப்படுகிறார், இதை எம்.ஜி.ஆர் பொருட்படுத்தவில்லை.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #12 on: January 27, 2012, 02:22:23 AM »
9.ஒரு மாதம் வைத்தியம் செய்ய வேண்டும்

MGRஇந்த நேரத்தில் இவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரரும், அவரது மனைவி மக்களும் நாங்கள் இதுவரைக்கும் எம்.ஜி.ஆரை பார்க்கவில்லை என்று சொல்லி பார்க்க வருகின்றார்கள். வீட்டுமுதலாளி பெயர் ஆறுமுக நாடார் இவர் வயதானவர் அந்த ஊரிலேயே நல்லவர் என்று பெயர் உள்ளவர். இவருக்கு பல கள்ளுகடைகள் இருந்தன. சொந்தத்தில் தோப்புகளும் இருந்தன. இவர் ஒரு நாட்டு வைத்தியர். இவர் எம்.ஜி.ஆரை பார்த்து கொண்டே இருந்தவர் உடனே அவரே, அழைத்து கைபிடித்து நாடியை பார்த்தார். உடனே சத்தியதாயை பார்த்து உங்க மகன் ராமச்சந்திரனுக்கு வியாதி ஏதும் இல்லை. உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. அதனாலே குடல்புண், குடல் பூச்சி ஏற்பட்டு உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். இதை குணப்படுத்தி விடலாம். நீங்கள் கவலைபடாதீர்கள் இதற்கு மருந்து கொடுத்து சரி செய்யலாம் என்று சொல்லி விட்டு பிறகு சத்தியபாமா அம்மாவை தனியாக அழைத்து அம்மா நாளை முதல்வைத்தியம் ஆரம்பிக்க வேண்டும். எப்படியாவது கம்பெனி முதலாளியிடம் சொல்லி 1 மாதம் லீவு வாங்கனும், இது எல்லாம் ரெடி செய்து கொண்டு என்னிடம் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்கள். இந்த விஷயத்தை சத்தியதாய் எம்.ஜி.ஆரிடம் சொல்லுகிறார். எம்.ஜி.ஆர் அதை கேட்டு நான் நல்லாதான் இருக்கேன். என்னை எதற்காக தொந்தரவு செய்கின்றீர்கள் என்று சொல்லி வருத்தப்படுகிறார். எனக்கு 1 மாதம் லீவு எல்லாம் கிடைக்காது வேண்டாம். விட்டுறும்மா என்று சொல்லி இவர்கள் இருவரும் கம்பெனிக்கு சென்று விடுகிறார்கள்.
 
சத்தியபாமா அம்மா அவர்கள் கம்பெனிக்கு சென்று நாராயணனை சந்தித்து அவர்களிடம்தன் மகன் எம்.ஜி.ஆர் உடல்நிலையைப் பற்றி சொல்லுகிறார்கள். எல்லாவற்றையும் கேட்ட நாராயணன் நீங்கள் இருங்க முதலாளியே பார்த்து பேசலாம் என்று நாராயணன் சொல்லுகீறார். அதன்படி கம்பெனி முதலாளியிடம் சென்று ராமச்சந்திரன், சக்கரபாணி தாயார் வந்து இருக்கிறார். ராமச்சந்திரனின் உடல் நிலையை பற்றி தங்களிடம் பேச வேண்டும் என்று அதன்படி கம்பெனி முதலாளியிடம் சத்தியபாமா அம்மா அவர்களை அழைத்து சென்று பேச வைக்கிறார். முதலாளியை பார்த்த சத்தியபாமா அவர்கள் பயபக்தியோடு வணக்கத்துடன் தன்னுடைய இளைய மகனை பற்றி சுருக்கமாக, விவரமாக சொல்லுகின்றார். எல்லாவற்றையும் கேட்டு கம்பெனி முதலாளி சற்று யோசிக்கிறார்.
 
பிறகு, சத்தியபாமா அம்மாவை பார்த்து, அம்மா நீங்க சொல்கிறபடி ராமச்சந்திரன் அவனுக்க உள்ள வேகமான செயலுக்கும், விவேகமான அறிவுக்கும் அழகுக்கும் அவனுக்கு தகுந்த உடம்பு இல்லையே என்பதை இப்போது தான் நான் யோசிக்கிறேன். நீங்கள் சொல்லுகிறபடி இந்த ஒரு மாதத்தில் ராமச்சந்திரனுடைய உடல் ஆரோக்கியத்தை சரியா கொண்டு வரலாம் என்றால், உடனே ராமச்சந்திரனிடம் சொல்லி உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். அம்மா, பெற்ற தாய் நான் எப்படியும் என் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்று நினைத்து செயல்களின் நான் ஈடுபடும்போது கடவுளுடைய கிருபையும் உங்களை போன்ற பெரிய மனிதர்களுடைய ஆசிர்வாதமும், உதவியும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். உடனே கம்பெனி முதலாளி உள்ளே சென்று சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் அழைத்து வர சொல்லுகிறார். அழைத்து வரச் சொன்னதும், முதலாளி ஏன் அழைக்கின்றார் நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்து கொண்டு இருவரும் முதலாளியிடம் வருகின்றார்கள். அந்த இடத்தில் தன்னுடைய தாயை இருவரும் பார்க்கின்றார்கள். பார்த்து அம்மா எதற்கு கம்பெனிக்கு வந்து இருக்கிறார்கள்.
 
முதலாளியை பார்த்து கொண்டு அந்த நேரத்தில் பையன்கள் தாயாரை பார்க்காமல் கை கட்டி கொண்டு நிற்கிறார்கள். முதலாளி பிறகு இருவரையும் பார்த்து கொண்டு ராமசந்திரா உனக்கு உடல் மிகவும் மெலிந்த உள்ளது. இன்னும் கொஞ்சம் உடல் பொருத்தால் நல்லா இருக்கும். உன் அழகுக்கும். உன் திறமைக்கும் உன் புத்தி கூர்மைக்கும் உடல் பொருத்து இருப்பது நல்லது. அதனாலே நீ இப்போ உங்க அம்மா கூடபோய் இருந்து 1 மாதத்திற்கு நீ உன் உடல்நிலையை சரிபார்த்துக்கொண்டு வா, அதோடு காலையில் உன் வழிபடி எப்போதும் எடுக்கும் என் உடல் பயிற்சியை செய்ய தவறிவிடாதே இடையிலே உனக்கு முடிந்தவரையில் கம்பெனிக்கு வந்து போகலாம் என்பதை கூறி தாயார் அவர்கள் வசம் அனுப்பி வைக்கிறார். இதை எல்லாம் பார்த்து கொண்ட இருந்த சக்கரபாணி அவருக்கு மனதில் தம்பி எப்படியாவது நல்ல குணமாகி வரவேண்டும் என்று ஆண்டவனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு வெளியே சென்று தாயாருடன் வழி அனுப்பி வைக்கிறார்.
 
போகின்ற வழியிலே தன் தாயை பார்த்து என்னம்மா இதெல்லாம் நான் ஒரு மாதம் வீட்டில் வந்து என்னுடைய உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தேவையா, நம் குடும்பம் இருக்கும் நிலவரம் என்ன வீட்டுக்குப் போய் சென்ற பிறகு மறுநாள் காலையில் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் ஆன ஆறுமுகம்நாடார் சத்தியபாமா வீட்டிற்கு வந்து ராமச்சந்திரனை அழைத்து நாடி பார்க்கின்றார். நாடி பார்த்த பிறகு எதுவும் சொல்லாமல் நாளை காலையில் 7 மணிக்கு அம்மா நான் உங்களிடம் சொன்னபடி அந்த மருந்தை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி முடிந்தவரை 1/2 லிட்டருக்கு குறையாமல் கொடுக்க வேண்டும். மருந்து கொடுத்த பிறகு கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. நடக்கலாம், ஓடலாம், பசி எடுத்தால் நல்ல உணவுகளை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #13 on: January 27, 2012, 02:25:24 AM »
10.தினமும் பனங்கள்ளை சாப்பிட வேண்டும்



இது வரையிலும் எம்.ஜி.ஆருக்கு தன் உடம்பு என்ன செய்கிறது, எதற்தாக தனக்கு மருந்து கொடுக்கின்றார்கள். அதுவும் ஒரு மாத காலத்திற்கு என்று நினைத்து கொண்டு இருக்கிறார், ஆறுமுக நாடார் நேராக கல் இறக்கும்தோப்புக்கு செல்கிறார். அங்கு முக்கியமான ஒரு நபரை அழைத்து தினமும் காலையில் 7 மணிக்கு ஒரு மரத்து பணமரத்து கள் ஒரு முட்டியோடு (சிறிய மண் குடுவை) பனங்கள்ளை, சத்தியபாமா அவர்கள் வீட்டில் இது மருந்துக்காக மிக கவனமாக எச்சரிக்கையாக எடுத்து சென்று கொடுக்கவேண்டும். அதன்படி மறுநாள் காலையில் 7 மணிக்கு ஒரு மண் குடுவையுடன் சத்தியபாமா வீட்டில் கதவை தட்டி அம்மாவை அழைத்து அம்மா தோப்புக்கார அய்யா அவர்கள் இதை தங்களிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார். இது போல் தினமும் காலை 7 மணிக்கு கொண்டு வருவேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அடுத்து குடுவையில் கொண்டு வந்த பனங்கள்ளை சுத்தமாக ஒரு துணியில் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து கொண்டு காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும்போது தன் மகனை அழைத்து ராமச்சந்திரா வைத்தியற் கொடுத்து அனுப்பிய மருந்த ரெடி. இதை உடனடியாக வந்து சாப்பிட்டு விடு தன்மகனை அழைக்கிறார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் முகபாவம் கசப்பு அடைந்து போய் வேண்டா வெறுப்போடு, இதை வாங்கி குடித்த எம்.ஜி.ஆர் சற்று நேரத்தில் என்ன இனிப்பாக இருக்கிறதே இது என்ன மருந்து என்று தாயிடம் கேட்கிறார்.
 
உடனே தாய், நீ சாப்பிடுவது மருந்து அது இனிப்பா இருக்கா கசப்பா இருக்கா என்று கேட்க கூடாது. கொடுத்ததை குடித்து விடவேண்டும். இதே போல் தினம் 7 மணிக்கு குடிக்க வேண்டும். இதை கேட்ட MGR அவர்கள் அம்மா சொல்லை தட்டாமல் பயபக்தியோடு நடந்து கொள்ளுபவர். ஒரு நாள் காலையில் உடற்பயிற்சிக்கு செல்லாமல் வீட்டு வாசலிலே வெளியே நின்று கொண்டு மருந்து எடுத்து கொண்டு வரும் நபரை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் மருந்து கொண்டு வரும் அவரும் ஒரு துணி பையில் ஒரு சிறிய மண் குடுவையில் நிறைந்த பனை மரத்து கள்ளை கொண்டு வருகிறார். இதை MGR அவர்கள் அம்மா உள்ளே வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் இதை என்னிடம் கொடுங்கள் கொடுத்து விடுகிறேன் என்று கேட்டு வாங்கி கொண்டார், குடுவையே பிரித்து பார்க்கிறார். அந்த குடுவையில் உள்ள கல்லில் தேன் ஈக்கள் செத்து மிதப்பதோடு நூங்கு நொறையோடு இருப்பதை பார்க்கிறார். இது என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும்போது, வீட்டில் உள்ளிருந்துகள் குடுவை இன்னும் வரவில்லையே என்று நினைத்து கொண்டு வெளியே வருகிறார்கள் சத்தியபாமா அம்மா அவர்கள். கள் குடுவை MGR கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியோடு மண் குடுவையை கையில் வாங்கி கொள்கிறார். உடனே MGR அம்மாவை பார்த்து அம்மா இது என்ன இதிலே பூச்சி புழுவும் பொங்கும் நுறையாக இருக்கிறதே இது என்ன என்று அம்மாவிடம் சற்று கோபத்தோடு கேட்கிறார். உடனே அம்மா! ராமசந்திரா இது உனக்கு தேவையில்லை, நான் இதை சுத்தம் செய்து கொண்டு வருகிறேன். நீ குடித்துவிட வேண்டும் என்று அம்மா சொன்னவுடன் அவர் குடித்து விட்டார்.
 
இருந்தாலும் MGRக்கு குடிப்பதற்கு சுவையாக இருக்கிறது. அன்னைக்கு குடுவையைப் பார்க்கும்போது பூச்சி புழுவும்இ பொங்கும் நுறையாக இருந்தது இது என்ன மருந்து என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணத்தோடு MGR அவர்கள் இந்த பிரச்சனையை விட்டு விட்டு ஒரு நாளைந்து நாள் கழித்து அந்தகல் குடுவை கொண்டு வரும் நபரிடம் ஐயா, இந்த மருந்து குடிப்பதற்கு நல்ல சுவையாக இருக்கிறது. முன்னைவிட என் உடம்பு நல்ல தெம்பாக, வலுவாக இருக்கின்றது. இது என்ன மருந்து எங்கே இருந்து எடுத்து வருகிறீர்கள். பொங்கும் நுறையாக இருக்கிறது என்று அவரிடம் அன்போடு கேட்கின்றார். உடனே கள் குடுவையை கொண்டு வந்தவர் இந்த கள்ளுடைய விவரத்தையும் மகிமையையும் விவரமாக சொல்லி விடுகிறார். இதை அறிந்து கொண்ட MGR அடுத்து ஒரு இரண்டு நாளில் மதிய நேரத்தில் சாப்பாட்டு நேரத்தில் தன் தாயிடம் அம்மா எனக்கு கொடுத்து வருகிறீர்களே அதற்கு பெயர் என்ன என்று அம்மாவிடம் கேட்கிறார். அம்மா நீங்கள் சொன்னால்தான் மருந்தை சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கிறார். ராமசந்திரா இதற்கு பெயர் பனங்கல் வைத்திய முறைபடி இதை வைத்தியர் ஆறுமுக நாடார் ஏற்பாட்டில் நான் உனக்கு தினமும் நான் கொடுக்கின்றேன் என்று சொல்கிறார். இதை கேட்ட MGR சற்று யோசிக்கிறார். கம்பெனியில் வேலை செய்கின்ற வாத்தியார்கள் மற்றும் பெரிய ஆட்கள் கள் குடிப்பதை பற்றி பேசி கொண்டு இருப்பதை MGR சில நேரங்களில் கேட்டு இருக்கிறார்.
 
அந்த கள்ளுதானே இது என்ற முடிவோடு தன் தாயிடம் அம்மா நீ இதை மருந்து என்று நினைக்கிறாய். அம்மா இது மருந்து அல்ல இது போதை பொருள் இதை இப்போ குடிப்பவர்கள் நாளடைவில் ஒரு பெரிய குடிகாரனாக ஆகிவிடுவார்கள். இப்படிப்பட்ட பொருளை எனக்கு கொடுத்து என்னை ஒரு குடிகாரனாக்கி விடாதே நாளையிலிருந்து குடிக்கமாட்டேன் என்று கடுமையாக சற்று கோபத்தோடு சொல்கிறார். உடனே சற்றும் தயங்காமல் அம்மா படபடவென்று மகனே என்ற பொருள் நாம் எப்படி எடுத்து கொள்கிறோம் என்பது நமது மனநிலையை பொருத்தது. நீ சொல்வது போல் மற்றவர்களுக்கு போதை பொருளாக இருக்கலாம், ஆனால் இது உனக்கு மருந்து, எனவே நீ இதை மருந்தாக நினைத்து 30 நாட்களுக்கு குடித்தாக வேண்டும். இது மாதிரி குடிபொருள்களையோ, போதை பொருள்களையோ, குடிப்பர்களை என் வீட்டுக்குள் கூட நுழையவிடமாட்டேன் இதை மிக கண்டிப்பாக சொல்கிறார். இது உங்களுக்கும் தான் என்று சொன்னவுடனே இதை கேட்ட MGR அவர்கள் தாயின் அறிவுரைகளை கேட்டு மெளனமாக இருந்து விட்டார். அதோடு சத்திய தாய் சில அறிவுரைகளை கூறினார்க்ள. கம்பெனியில் உடல்நிலை வளர்ச்சிக்காக பனங்கல் வாங்கி கொடுத்தார்கள் என்று அண்ணன் சக்கரபாணி உள்பட யாருக்கும் தெரியகூடாது. அதற்கு பதிலாக ஏதோ கசாயம் கொடுத்தார்க்ள என்றுதான் நீ சொல்ல வேண்டும். இப்படி ஒரு மாதத்திற்குள் ஓர் அளவு உடல் சற்று, உடல் வளர்ச்சியடைந்து இருந்தது. ஒரு மாதம் ஆகிவிட்டது, நான் வரும்போது இருந்த உடல் நிலை எனக்கே கொஞ்ச நல்லா வந்து இருக்கிற மாதிரி தெரியுது, நல்லா பசிக்குது நல்லா சாப்பிடுகிறேன். கம்பெனிக்கு சென்ற பிறகு கம்பெனியில் எல்லோருக்கும் கொடுக்கும் உணவைதான் உண்ணமுடியும் எனக்கு என்று தனியாக கேட்க முடியாது.
 
மேலும், காலையிலேயே உடற்பயிற்சி, சண்டை பயிற்சி, மாலையில் நடன பயிற்சி, நடிப்பு பயிற்சி இப்படி எனக்கு தினமும் பயிற்சிகள் இருக்கும் இந்த மாதிரி பயிற்சி எடுத்து கொள்ளும் காலத்திலே உடல் சற்று மெலியலாம் அதை பார்த்துவிட்டு மகனை சரியாக சாப்பிடுவது இல்லையா என்று கேட்க கூடாது. அம்மா எனக்கு உடல் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசையில்லை. அதற்கு பதிலாக உடல் வளர்ச்சியை மன வளர்ச்சி, திடம் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, நான் தொழிலில் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும், அதோடு அண்ணனும் தொழிலில் வளர்ச்சி அடையவேண்டும் என்பது என்னுடைய நோக்கம், என்று சொல்லி முடித்தவுடனே சத்தியதாய் தன்மகனை கட்டி பிடித்து, உச்சி முகர்ந்து மிக ஆனந்தப்படுகிறார். மகனே உங்கள் தொழிலில் மேலும் மேலும் உயரவேண்டும் எந்த குறையும் இல்லாமல் வளர்ச்சி அடையவேண்டும் என்று கடவுளை நான் வணங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி மகனை கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறார்கள். கம்பெனி சென்ற MGRரை பார்த்து எல்லோரும் இப்போது உன் உடல்நிலை நல்லா இருக்கு, ஓரளவு உன் உடம்பு நன்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று சொல்லி அண்ணன் சக்கரபாணி உள்பட எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள்.
 
அவர்களிடம் விடைபெற்று கம்பெனி முதலாளியைப் பார்த்து வணங்குகிறார். என்னாடா ராமசந்திரா மருந்துகளை எல்லாம் ஒழுங்காக சாப்பிட்டியா இப்போ உன் உடம்பு எப்படி இருக்கு என்று கேட்கி஢றார். உடனே MGR ஐயா எங்க அம்மா கொடுத்த மருந்துகளையும், உணவுகளையும் ஒழுங்காக சாப்பிட்டேன், இப்போ என் உடம்பு எப்படி இருக்குது நீங்கள் சொல்லுங்கள், இதை கேட்ட முதலாளி இவன் அழகன் மட்டுமல்ல, மிக அறிவிலும் கூட என்று நினைத்து கொண்டு ராமசந்திரா நீ முன்னைவிட நல்லாதான் இருக்கிறாய் என்று கம்பெனி முதலாளி வாழ்த்துகிறார். பிறகு MGR அவர்கள் தொடர்ந்து தன் பணிகள் எந்த குறைகளும் ஏற்படகூடாது என்ற எண்ணத்துடன், அடுத்து நமக்கு என்ற வேஷத்தில் நடிப்பு பாத்திரம் கி஢டைக்கும் அதில் நாம் எப்படி புகழ் அடைய வேண்டும் என்று நினைத்து கொண்டு தன் பணிகளை தொடர்கிறார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணத்துடன் கம்பெனியில் பல நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும்போது ஒரு நாள் தனக்கும் அண்ணன் சக்கரபாணிக்கும் சரியான சம்பளம் போடவில்லை. ஏதோ அப்போ அப்போ அம்மாவிக்கு அனுப்பி வைப்பதற்கு பணம் கொடுக்கிறார்கள் தனக்கு சம்பளம் நிர்ணயிக்கவில்லையே என்பதை பற்றி யோசிக்கிறார்கள்.
 
நாடக கம்பெனியில் சேர்ந்து கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் பணியாற்றியும் நமக்கு சம்பளம் நிர்ணயிக்கவில்லையே என்று நினைத்து கவலைபடுகிறார்கள். இவர்கள் இருவரும் நாடக கம்பெனியில் பயிற்சி கற்றுக் கொள்ளும்போது முக்கிய நாடக நடிகர்கள் P.U. சின்னப்பா, காளி.என். ரத்தினம், மற்றும் பல முக்கிய நடிகர்கள், நாடக வாத்தியர் T.S. பாலையா, M.கந்தசாமிபிள்ளை, MGR, சக்கரபாணிக்கும் நாடக பயிற்சியாளராக இந்த நாடக கம்பெனியில், MGRக்கும் MGCக்கும் தினம் பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. அந்த கால கட்டத்தில் MGRக்கு சண்டை பயிற்சி மிக கடுமையாக இருக்கும், MGR மிக சுறு சுறுப்பாகவும் கற்றுக் கொண்டார். கம்பெனியின் முதலாளி பெயர் சச்சிதானம் பிள்ளைக்கு MGR இவ்வளவு சிறிய வயதில் புத்தி கூர்மையுடன் பயிற்சிகளை இவ்வளவு பெரிய அறிவுள்ளவனாக இருக்கிறானே என்று பெருமை அடைந்தார்.

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #14 on: January 27, 2012, 02:30:48 AM »
11.முதன் முதலில் பேசிய வசனம்


இந்த பயிற்சிகளை தனக்கு சொல்லி தரும் வாத்தியார்களிடம் MGR மிகவும் பயபக்தியாக இருப்பார், இவைகளில் MGRக்கு நடனம் கற்று கொள்வதில் சற்று கடினமாக இருந்தது. அந்த காலத்தில் நாடகங்களில் ஆண்கள் தான் பெண் வேடம் போட வேண்டும். ஆகவே நாடகத்தில் நடிக்க வசனம் பேச பாட தெரியனும். MGRக்கு பாட்டும் நடனமும் சரியாக வரவில்லை நடன ஆசிரியர் ஸ்ரீராமுலு என்பவர் மிக கோபக்காரர் இவரிடம் நடனம் கற்றுக் கொள்ளும்போது அடியும் வாங்குவாராம் எப்படியோ மிக சிரமப்பட்டு நடனத்தை கற்று கொண்டார். இந்த நடன கலை பிற்காலத்தில் சினிமாவுக்கு ரொம்ப உதவியாக இருந்தது. MGR சிறு சிறு வேடங்கள்தான் கம்பெனியில் கிடைத்தது, இந்த கம்பெனியில் ஏற்கனவே எல்லா வேடங்களுக்கும் ஆண்கள் உள்ளனர். கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் நடிகர்களுக்கு சாப்பாடு தங்கும் இடம், உடை, சம்பளம், இவைகள் அதிகமாக இருக்கும். இப்படி முக்கிய வேடங்களில் நடிப்பவர்கள் மற்ற சக நடிகர்களுடன் அதிகமாக பேசமாட்டார்கள். இப்படிபட்ட பெரிய நடிகர்களுடன் நல்லா பேசவேண்டும் என்ற ஆசை MGRக்கு உண்டு. என்ன செய்வது MGR சின்னபையன் கம்பெனிக்கு புதுசு ஆயினும் அந்த ஆசையை அவர் விடவில்லை. அதோடுதான் நாமும் இவர்களைபோல் நடித்து பெரிய அளவில் புகழ் பெறவேண்டும் அப்போதுதான் நாம் அம்மாவுக்கு அதிகமாக பணம் அனுப்பமுடியும் என்ற எண்ணமும் உண்டு. அவர் நடித்த முதல் நாடகம் “மகாபாரதம்” முதல் நாடக மேடையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த ஆண்டு 1924. MGRக்கு முதல் வசனம் அய்யயோ பாம்பு காப்பாற்றுங்கள் என்று பலமுறை அலறி அடித்துக்கொண்டு ஓடும்போது அர்சுணன் மீது மோதி கீழே விழுந்து விட்டார் தவறுதளாக, ஆனால் அது பொது மக்களிடம் இருந்து பெரிய அளவில் கை தட்டல் கிடைத்தது.
 
MGRக்கு எதிர்பாராமல் இப்படியொரு கைதட்டல் கிடைத்தது. அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் மற்ற நடிகர்களுக்கு இந்த சின்னபையன் ராமசந்திரனுக்கு முதல் நாடகம் முதல் நாளிலேயே இப்படி ஒரு கை தட்டலா என்று ஒரே ஆச்சரியம் ஏற்பட்டது. இப்படியாக பல நாடகங்களில், பல சிரமமான காட்சிகளில்நடித்து வந்தார். MGRக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இந்த கம்பெனியில் P.U. சின்னபா, காளி.என், ரத்தினம் இவர்களுடன் மிக சிரமபட்டு MGR தொடர்பு வைத்துக் கொண்டார். அவர்களும் MGR மீது அன்பாக இருந்தார்கள். நாடகமும் பல ஊர்களுக்கு சென்று கொண்டு இருந்தது. கோயம்பத்தூரில் நாடகம் அமைக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில், ஒரு நாள் MGR, P.U. சின்னப்பாவிடம் தன் விருப்பத்தை சொன்னார், சின்னப்பாவும் MGRக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டும் பிறகு சினிமாவில் நடிக்கலாம் என்று சொல்லி நாடகத்திலேயே நடித்து நல்ல தேர்ச்சி பெறு என்று சொல்லிவிட்டார்.
 
ஒரு நாள் தசவதாரம் நாடகம் இதில் P.U. சின்னப்பாவுக்கு தொண்டை சரியில்லை, உடல்நிலை சரியில்லை, அவருக்கு பதிலாக MGRரை அந்த வேடத்தில் போட்டு பரதனாக நடிக்க சொன்னார் முதலாளி, MGRக்கு மிகபெரிய சங்கடமாக ஆகிவிட்டது. காரணம் அது பெரிய சீன் எப்படியோ தைரியத்துடன் மேக்கப் முடித்து MGR அவர்கள் மேடைக்கு வந்தார். அன்று இந்த நாடகத்தை பார்க்க கிட்டப்பா வந்து முன் வரிசையில் அமர்ந்து இருந்தார். இதை MGR பார்த்துவிட்டார். MGRக்கு ஒரே சந்தோஷம் ஒரு பிரபல நடிகர் நம்ப நாடகத்தை பார்க்க வந்து இருக்கிறார், அதுவும் நாம் இந்த சின்னப்பாவுக்கு பதிலாக இந்த பையன் நடிக்கிறானே என்று ஆச்சரியப்பட்டார். அன்று MGR முடிந்தவரை சிரமப்பட்டு நல்லாவே நடித்து விட்டார். MGR நடித்த சீன் இடைவேளையோடு முடிந்துவிட்டது. கம்பெனியில் மற்ற நடிகர்களும், முதலாளியும் ஆழுசு P.U. சின்னப்பாவை போல் எதுவும் குறையும் இல்லாமல் வசனம் பேசி நடித்து விட்டான் என்று சந்தோஷப்பட்டார்கள். நாடக இடைவேளையில் கிட்டப்பா மேடை கொட்டைக்குள் வந்து காளி.என். ரத்தினத்தை அழைத்து எங்கே P.U. சின்னப்பா என்று கேட்டார். அவருக்கு தொண்டை கட்டி போச்சு அதனாலே அவர் வரவில்லை என்று சொன்னார்கள். அடுத்து கிட்டப்பா உள்ள வந்ததை அறிந்த MGR மிகவும் பதட்டம் அடைந்துவிட்டார்.
 
தன்னை பற்றி எதுவும் குறை சொல்ல வந்து இருப்பாரோ என்று நினைத்து கிட்டப்பா காளியிடம் P.U. சின்னப்பாவுக்கு பதிலாக நடித்த பையன் யார், பெயர் என்ன என்று கேட்டார், காளி இவன் பெயர் ராமசந்திரன் நல்ல பையன், நல்ல குணம் உள்ளவன், அறிவாளி கொடுத்த வேளையை சரியாக செய்வான் என்றார் காளி உடனே கிட்டப்பா MGRரை பார்த்து, கிட்ட வரும்படி அழைத்தார் MGR தயங்கினார். உடனே காளி அடவாப்பா அண்ணன் கூப்பிடுராங்க வந்து அண்ணன் கிட்ட ஆசிர்வாதம் பெற்றுக்கொள் என்று சொன்னதும் MGR ஆனந்த கண்ணீருடன் கிட்டப்பாவின் காலை தொட்டு வணங்கினார். கிட்டப்பாவும் MGRரை கட்டி தழுவி முதுகில்தட்டிக் கொடுத்தார். வளரும் பயிர் முளையிலேயே தெரியும் நீ நல்லா முன்னுக்கு வருவாய் என்று வாழ்த்தி சென்றார். இப்படியாக ஊர் ஊராக சென்று நாடகங்களை நடத்தி வந்த அந்த கம்பெனிக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்து. இதில் சிங்கப்பூர் மலேசியா, ரங்கூன், பர்மா போன்ற ஊர்களுக்கு சென்று நாடக கம்பெனி நல்ல பெயரை எடுத்தது, முதலில் பர்மா தமிழ்ர்கள் சார்பில் நாடக கம்பெனியை அழைக்கப்பட்டது. அதில் பெரிய நடிகர்களோடு MGRருக்கும், சக்கரபாணிக்கும் பர்மாவுக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து கப்பல் வழியாக பர்மாவுக்கு புறப்பட்டார்கள். கப்பலில் MGR அவர்களுக்கு தாயாரை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றோமே இனி எப்போ தமிழ்நாட்டிற்கு திரும்புவோம் எப்போ நம் தாயை பார்ப்போம் என்ற பெரும் கவலை அண்ணனிடம் இதை சொல்லி அழ ஆரம்பித்துவிட்டார். அண்ணனும் மற்ற நடிகர்களும் MGRரை சமாதானப்படுத்தினார்கள். கப்பலில் 3வது நாள் MGRக்கு குமட்டல், வாந்தி, ஏற்பட்டது, மிகவும் சிரமப்பட்டார். இது முதலாளிக்கும் மற்ற பெரிய நடிகர்களுக்கும் தெரிந்தது கம்பெனியில் நிர்வாக பொறுப்பில் உள்ள கந்தசாமியின் மகன் M.K. ராதா அவர்களும் MGRக்கு மாத்திரை மருந்துகளை கொடுத்து சமாதானப்படுதினார்கள்.
 
முதன் முதல் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இப்படிதான் சில கோளாறுகள் வரும் என்று சொல்லி சென்றார்கள். கப்பல் பர்மா ரங்கோன் சென்று அடைய 7 நாட்கள் ஆச்சு, பர்மா ரங்கோன் சென்று அடைந்ததும் இவர்களை வரவேற்று அழைத்து சென்று ஒரு பெரிய பள்ளிகூடத்தில் தங்க வைத்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் ரங்கோன் தமிழ் சங்க தலைவர். ரங்கோன் பர்மா தமிழர்களின் வரவேற்யும், உபசரிப்பும் MGR அவர்களுக்கு இதை எல்லாம் பார்த்து மிக சந்தோஷமும் ஆனந்தமும் அடைந்தார். பர்மா ரங்கோனில் 15 நாட்கள் மிக சிறப்பாக நாடகம் நடந்தது. 15 நாட்கள் இதில் MGR நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிகவும் வரவேற்பும் கை தட்டலும் கிடைத்தது. மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. சில சமயங்களில் ஆங்கிலம் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது சக்கரபாணி சொல்லி பேச சொல்லுவார்கள். அவர் ஏற்கனவே ஆங்கிலம் நன்கு கற்று கொண்டவர் இந்த விசயத்தில் சக்கரபாணிக்கு கம்பெனியில் நல்ல மதிப்பும் இருந்தது. 15 நாள் கழித்து சென்னைக்கு திரும்புகின்ற நேரத்தில் எல்லோருக்கும் வெளிநாடு நாடகங்களை மிக சிறப்பாக முடித்து வெற்றி நடைபோட்டு கொண்டு தாய்நாட்டிற்கு போகிறோமே என்ற மகிழ்ச்சியோடு கப்பலில் வாந்தி, மயக்கம், கவலைஇன்றி சந்தோஷமாக சென்னை வந்து சேருகிறார்கள். சென்னையிலிருந்து தாயை சந்திக்க கும்பகோணம் சென்று தாயை சந்தித்து பர்மா ரங்கோனில் தனக்கு கிடைத்த மரியாதையை பர்மா தமிழர்களின் வாழ்த்துக்கள், ரங்கோனில் கிடைத்த அதிக சம்பளம் இவை அனைத்தும் சொல்லி இருவருடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்து அம்மாவின் காலில் வழிந்து ஆசிர்வாதம் பெற்றார்கள்.
 
வெளிநாடு சென்று வந்த மகன்களை கண்ட அந்த தாய் அளவற்ற அளவிற்கு ஆனந்தம் அடைந்தார். அப்போது MGRக்கு 14 வயது ஆகிவிட்டது பிறகு தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியிலே இருக்க வேண்டியதாகியது.
 
MGR அவர்களும் P.U. சின்னப்பாவும், காளியும் மிக மிக உதவியாக நாடக கம்பெனியில் இருந்தார்கள். அண்ணன், தம்பி இருவருக்கும் சினிமாவில் நடிக்க ஆசை எப்படியும் இந்த கம்பெனியில் இருந்து வெளியே போக வேண்டும். அப்போதுதான் நாம் முன்னுக்கு வரமுடியும் என்ற முடிவுக்கு வந்த MGR, அவர்களும் சக்கரபாணி அவர்களும் இந்த யோசனையை, P.U. சின்னப்பாவிடம் சொன்னார்கள்.
 
P.U.C. கம்பெனியை விட்டு ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் சக்கரபாணிக்கு மட்டும் எல்லா விபரங்களையும் சொல்லிவிட்டு, பெட்டி, சில உடைகளை மட்டும் விட்டுவிட்டு பணம் நகைகள் மற்றும் சில பொருள்களோடு வெளியேறி விட்டார்.