Author Topic: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)  (Read 14950 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #15 on: January 27, 2012, 02:34:12 AM »
12.நாடக கம்பெனி சென்னை விஜயம

பாய்ஸ் நாடக கம்பெனி சென்னைக்கு வந்து தேசம்காக்கும் என்ற நாடகத்தை ஆரம்பித்து (நடத்த) ஏற்பாடு செய்தது. நடிகர்கள் தேர்வு நடந்தது. இந்த நாடகம் காந்தியவாதி, சுதந்திர போராட்ட கதை பெரிய நாடகம் 1930ல் இதில் நடிக்க MGR, MGCக்கும் முக்கிய வேடங்கள் கொடுக்கப்பட்டது. நாடகம் நடத்த அன்றைய வெள்ளையர் ஆட்சி காலத்தில் போலீஸ் தடை விதித்தது. தடையை மீறி நாடகம் நடத்தப்பட்டது. போலீஸ் தடியடி நடத்தியது. இந்த செய்தி சென்னை நகரில் மற்றும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை உண்டாக்கியது தேசபக்தி என்றதும் இந்த நாடகத்திற்கு பொதுமக்கள், காங்கிரஸ்காரர்களும் பெரும் அளவில் ஆதரவு ஏற்பட்டது. இந்த நாடகத்தில் MGRக்கு தேசபக்தர் ஒரு சாமியார் வேசம். 17 வயது பையன் சாமியார் வேசத்தில் நடிக்கிறான் என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது. இந்த நாடகம் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஒற்றவாடை என்ற நாடகக் கொட்டகையில் நடந்தது.
 
17 வயது பையன் பழுத்தபழம் போல் சாமியார் வேடத்தில் MGR மிக சிறப்பாக நடித்து இருந்தார். இந்த நாடக கம்பெனி பல ஊர்களுக்கு சென்று கடைசியாக சென்னைக்கு வந்தது. இதில் இந்த நாடகத்தில் அரசியல் காங்கிரஸ் இருந்தது. MGR 17 வயதில் அரசியலில் (காங்கிரஸில்) சுபாஷ்சந்திரபோஸ் பக்தன் ஆகிவிட்டார். இந்த நிலையில் சென்னையில் எப்படியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஆர்வம் ஏற்பட்டு விடவே அம்மா அண்ணன் இவர்களிடம் தெரியபடுத்தினார். அவர்களும் சினிமாவில் நடிக்க எப்படி சான்ஸ் கிடைக்கும் யாரை போய் பார்த்து, எப்படி பார்ப்பது நமக்கு சினிமா ஆசை வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் எம்.ஜி.ஆர். சினிமா மோகத்தை விடவில்லை. சென்னை வால்டாக்ஸ்ரோடு நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ரோடு சந்திப்பில் பழைய நண்பர் உதவியுடன் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து கொண்டு சென்னையில் ஏற்கனவே தங்கி இருந்து சினிமாவில் நடிக்கும் நாடக கம்பெனி முதலாளி கந்தசாமியும் P.U. சின்னப்பா, M.K. ராதா போன்றவர்களிடம் தினமும் அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தார். 18வது வயதில் நல்ல உடல் கட்டு, கதர் வேட்டி, ஜிப்பா, சாப்பாடு இவைகளைப்பற்றி கவலைபடுவதில்லை, உடை மிக சுத்தமாக இருக்கணும், உள்ளமும் சுத்தமாக இருக்கணும் என்று நினைத்து கொண்டு காலையும் மாலையும் அவர்களை சென்று பார்த்து வந்தார்.
 
மேலும், இந்திய சுதந்திர போராட்டம் மிகவும் வலுவாக இருந்தது மகாத்மா காந்தியின் தலைமையில் இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ஆங்கிலேயேருடைய முதல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. இந்த மாதிரி விஷயங்களை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள், தானும் ஏன் அரசியலில் ஈடுபடகூடாது. நம் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் பல விதமான போராட்டங்களை நடத்தித் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் ஏன் காந்தியவாதியாக இருக்கக்கூடாது என்று நினைத்து இவரை ஒரு கதர் ஜிப்பா ஒரு கதர் பைஜாம்மா யாருக்கும் தெரியாமல் வாங்கி தைத்து போட்டு கொண்டார்.
 
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாள் கம்பெனி முதலாளியைப் பார்த்து இத்தனை வருடங்களாக எனக்கும் என் அண்ணனுக்கும் நாடகங்களில் நடிக்க எங்களுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்து எங்களுக்கு பல வேஷங்களை கொடுத்து நடிக்க வைத்து நாடகத்தில் எங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்படி எங்களை ஒரு நல்ல நாடக நடிகனாக வளர்த்துவிட்ட உங்களை நாங்கள் எங்கள் உயிர் உள்ளவரை என்றென்றும் மறக்க மாட்டோ ம். ஐயா நானும் என் அண்ணனும் சினிமாவில் நடிக்க ஆசைபடுகிறோம். எங்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புங்கள் என்று சொன்னவுடன், கம்பெனி முதலாளி இதற்கு ஏதும் பதில் சொல்லமுடியாமல் சற்று மெளவுனமாக இருந்தார். உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் காலில் விழுந்து, என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள். கோபம் இல்லாமல் என்னை சந்தோஷமாக அனுப்பி வையுங்கள் என்று சொன்னதும் இந்த சொல்லை கேட்ட முதலாளி பதில் ஏதும் சொல்ல முடியாமல் எம்.ஜி.ஆரின் தோள்பட்டையும் தட்டிகொடுத்து நீ, சினிமாவில் சேர்ந்து முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன். இந்த செய்தியை கேட்ட எம்.ஜி.ஆர் மிகுந்த மன மகிழ்ச்சியோடு தன் பெட்டிகளை எடுத்துகொண்டு தன்னுடைய சக நடிகர்களிடம் பிரியாவிடை சொல்லி ஆனந்த கண்ணீரோடு வெளியே வரும்போது அந்த இடத்தில் கம்பெனி முதலாளி நின்று கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே, முதலாளி எம்.ஜி.ஆரிடம் வந்து கைபிடித்து எம்.ஜி.ஆரிடம் ரூ. 100/- பணத்தை கொடுத்து வழி அனுப்பிவைக்கிறார்.
 
அடுத்த நாள் சென்னையில் இருக்கும் பி.யு. சின்னப்பா, எம். கே. ராதா இவர்களைப் பார்க்க செல்கிறார். அப்போது என்னடா ராமசந்திரா, ஏதோ வேசத்தில் வந்திருக்கே ஏதாவது சினிமாவில் நடித்துவிட்டு வருகிறாயா என்று ஆச்சரியத்தோடும், சிரிப்போடும் கேட்கிறார்கள். உடனே எம்.ஜி.ஆர் அது எல்லாம் ஒன்றும் இல்லை நானாகவே ஒரு உடையை மாட்டிகொண்டேன் வேண்டாம் என்று சொன்னால் நான் கழற்றிவிடுகிறேன். ஐய்யயோ வேண்டாம் உடை உனக்கு மிக பிரமாதம்மா இருக்கு நீ ஒரு காந்தியவாதி மாதிரி இருக்கிறே. ஆனால் உத்திராட்ச கொட்டையும் நெற்றியில் விபூதியும் தான் பொருத்தமில்லாமல் இருக்கு என்று சொல்லுகின்றார்கள். இதை கேட்ட எம்ஜிஆர் சற்று மனவருத்தத்தோடு பதில் சொல்லுகிறார், இந்த உடையையும், உத்திராட்சகொட்டையும் நேற்றுதான் அணிந்தேன். இதை அணிந்ததிலிருந்து எனக்கு ஏதோ ஒரு பெரிய மனமகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால் எனக்கு சினிமாவில் நடிப்பு சான்ஸ் கிடைக்கும் வரையில் இந்த உத்திராட்சகொட்டை வெளியில் தெரியாமல் சட்டைக்குள் போட்டு கொள்கிறேன் என்று சொல்லுகிறார். அதற்கு அவர்கள் ராமசந்திரா நாங்கள் இப்படி சொல்லிவிட்டோ மே என்று வருத்தப்படக்கூடாது என்று சொல்லி முடிக்கிறார்கள்.
 
பிறகு, மறுநாள் கும்பகோணத்திலிருக்கும் அம்மாவுக்கு நீங்கள் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்னைக்கு தாமதப்படாமல் உடனே வாருங்கள் என்று கடிதம் எழுதுகிறார். அதோடு நாராயணனுக்கும் கடிதம் எழுதுகிறார். அம்மாவையும் அண்ணனையும் சென்னைக்கு அனுப்பி வையுங்கள் நான் தனியாக ரூம் எடுத்து ஒட்டலில் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்று கடிதம் எழுதுகிறார். நான் சினிமாவில் சேர்ந்தவுடன் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று கடிதம் எழுதுகிறார். எம்.ஜி.ஆர் சலிப்பு இல்லாமல் சாப்பாட்டை பற்றி கவலைபடுவதில்லை, உடையை மட்டும் வெள்ளையாக வைத்து கொண்டு தினமும் காலை நீட்டா உடை உடுத்திக் கொண்டு சினிமா கம்பெனிகளுக்கும் நாடக வாத்தியார் கந்தசாமி முதலியார் வீட்டிற்கும் சென்று விடுவார். இப்படியே மாதங்கள் பல கடந்தன இவரது நிலைமை நன்கு புரிந்து கந்தசாமி முதலியார். ராமசந்திரனுடைய திறமைக்கும் நல்ல அழகுக்கும், கட்டான உடலமைப்புக்கும் இவை அனைத்தையும் நன்கு அறிந்த கந்தசாமி முதலியார், எம்.ஜி.ஆருக்கு எப்படியாவது சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தரவேண்டும் என்று ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் சென்று முயற்சி செய்தார் வாத்தியார் கந்தசாமி முதலியாரின் முயற்சி வீண் போகவில்லை. ஒரே வாரத்தில் ஒரு சினிமா கம்பெனியில் “சதிலீலாவதி” என்ற படத்தில் நடிக்க 1936ல் வாய்ப்பு கிடைத்தது. வேசம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சம்பளம் ரூ. 100/- அப்பொழுது எம்.ஜி.ஆருக்கு வயது 19 இதற்கு இடையில் கும்பகோணத்தில் இருக்கும் அன்னையும், சக்கரபாணியும் சென்னைக்கு வந்து வால்டாக்ஸ் ரோட்டில் ஒரு சிறிய வீட்டில் இருந்தார்கள்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #16 on: January 27, 2012, 02:47:14 AM »
13.சதிலீலாவதியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் ஆகிறது. இந்த செய்தியை கேட்ட தாயும் அண்ணனும் அளவு கடந்த ஆனந்தம் அடைகிறார்கள். பிறகு, முதல் முதலில் சினிமா கம்பெனி ஒப்பந்தத்துக்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள். அப்போதுகூட அண்ணனையும் அழைத்துச் செல்கிறார் எம்.ஜி.ஆர். அடுத்து அவருக்கு மேக்கப் நடைகிறது போலீஸ் அதிகாரியாக வேடத்தில் நடிக்க. இது முடிந்து சூட்டிங் நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு இருந்த பல கம்பெனி முதலாளிகளும், டைரக்டரும் எம்ஜிஆரை பார்த்து மேக்கப் ஓகே என்று சொல்லுகிறார்கள். இந்த படத்துக்கு டைரக்டர் ஒரு வெள்ளைகாரர் அவர் பெயர் எல்லீஸ்டங்கன். எம்.ஜி.ஆர் அவர்கள் டைரக்டர் காலை தொட்டு வணங்குகிறார் பக்கத்தில் நின்ற தன் அண்ணன் பெயரை சொல்லி அறிமுகப்படுத்துகிறார். உடனே டைரக்டர் சக்கரபாணி அவர்களை உற்று கவனிக்கிறார். உடனே டைரக்டர் டங்கன் அவர்கள் சக்கரபாணியை பார்த்து நீ என்ன படித்து இருக்கிறாய் என்று ஆங்கிலத்தில் கேட்கிறார் அதற்கு சற்றம் தயங்காமல் ஆங்கிலத்தில் பதில் சொல்லுகிறார், இதை கேட்ட டைரக்டர் What man you are study only 7th standard. Yes sir, Why, sir I am very poor family இப்படி சக்கரபாணி ஆங்கிலத்தில் சரியாக பதில் சொன்னதால் டைக்ரடர் டங்கன் மனதில் இடம் பெற்றுவிட்டார். டங்கன் இந்த படத்திலே நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தார். இதை அறிந்த சத்தியதாய் அவர்கள் இந்த படம் என்று தியேட்டருக்கு வருமோ என்று ஏங்கி கொண்டு இருந்தார். மேலும் இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் NSK. T.S. பாலையா, M.K. ராதா. முதல் முதலாக இந்த படத்தில் முன்பணமாக ரூ. 100/- பெற்றுக் கொள்கிறார் எம்.ஜி.ஆர். சதிலீலாவதி 1937 ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆனது. அதற்கு முன் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எதிர்ப்பார்த்து கொண்டு இருந்த சத்தியபாமா அவர்களும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் ரிலீஸ் ஆன அன்று முதல் காட்சிக்கே தியேட்டருக்கு மகன்களை கூட எதிர்ப்பார்க்காமல் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு சென்று படத்தை பார்த்து பூரித்து போனார்கள்.
 
அடுத்த படம் என்ன செய்வது என்று நினைத்து பெரிய கம்பெனிகளுக்கும் நடிகர்கள் வீட்டிற்கும் சென்று வரும்போது வழியில் முன்னால் அவர்களுடன் நாடகத்தில் நடித்த நண்பர் கேசவன் என்பவரை திடீர் என்று வழியில் சந்திக்கிறார். அந்த நேரத்தில் நான் பாம்பேக்கு போகிறேன். எனக்கு படம் ஒன்று புக் ஆகியிருக்கு நீ வேண்டுமானால் என் கூடவா அந்த படத்தில் உனக்கு சான்ஸ் கிடைக்குமா என்று கேட்டு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னவுடன் தன் வீட்டுக்கு வந்து அம்மாவிடமும் அண்ணனிடமும் இந்த விவரத்தை சொல்கிறார். இதை கேட்ட இருவரும் சென்னையில் சினிமா சான்ஸ் கேட்டு அலைவதை விட கேசவன் அவர்களுடன் நீ பம்பாய்க்கு சென்று வருவதுதான் நல்லது, ஆனால் மகனே பம்பாய்க்கு சென்று ஒரு வாரம் 10 நாட்கள் நடிப்பு சான்ஸ்க்குகாக காத்து கொண்டு இருக்க வேண்டுமே இதற்கு பணம் அதிகம் தேவைப்படுமே என்று சொல்லும்போது உடனே சக்கரபாணி குறுக்கிட்டு அம்மா நானும் தம்பியும் கேசவன் அவர்களை சந்தித்து விவரத்தை பேசி வருகிறோம் என்று சொல்லி கேசவன் அவர்களை சந்திக்க செல்கிறார்கள். அவருடைய வீட்டில் அவரை சந்தித்து பணச் செலவை பற்றி பேசுகிறார்கள். இவர்கள் சொல்வதை கேட்ட கேசவன் அவர்கள் சற்று யோசித்து பிறகு நீங்கள் சொல்வது சரியான விஷயம்தான். ராமசந்திரனுக்கு என் கூட பம்பாய்க்கு வருவதற்கு டிக்கெட்டுக்கு மட்டும் பணம் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்புங்கள் மீதி செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன உடன் இருவரும் அம்மாவிடம் வந்து இந்த விஷயத்தை சொல்லுகிறார்கள்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #17 on: January 27, 2012, 02:49:02 AM »
14.பம்பாய் சென்றார் எம்.ஜி.ஆர்

அம்மாவும் சற்றும் யோசிக்காமல் மகனே நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீ புறப்படுவதற்கு தயாராகு என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் சக்கரபாணியை அழைத்து மகனே நீ சென்று கேசவன் அவர்களிடம் ராமசந்திரனை எப்போ அனுப்ப வேண்டும் என்று கேட்டறிந்து வா என்று சொல்லி அனுப்பிவிட்ட பிறகு சத்தியதாய் அவர்கள் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். கேசவன் அவர்களை சந்திக்க போன சக்கரபாணி அவர்கள் நாளை காலையில் ராமசந்திரனை பெட்டியோடு என் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும் என்று சக்கரபாணி அவர்களிடம் கேசவன் சொல்கிறார். அதன்படி மறுநாள் காலையில் சக்கரபாணி தம்பியை அழைத்துக் கொண்டு கேசவன் வீட்டிற்கு செல்கிறார். சென்ற உடன் நமக்கு மதியம் தான் பம்பாய்க்கு ரயில் அதனால் நீங்கள் இங்கேயே இருங்கள் என்று சொன்னார். அதன்படி அவர்களும் அங்கு தங்கி இருந்து மதியம் ரயிலுக்கு சென்று பம்பாய் ரயிலில் தம்பியை வழி அனுப்பிவிட்டு சக்கரபாணி வீட்டிற்கு வந்து, தம்பியை பாம்பேக்கு வழி அனுப்பிவிட்டு வருகிறேன் என்று அம்மாவிடம் சொல்லுகிறார். அன்று முழுவதும் அம்மா அவர்கள் சற்று மனவருத்தத்துடன் இருப்பதை கண்டு அம்மா என்ன ஒரு மாதிரியாக இருக்கிறாய் தம்பி நடித்த முதல் படம் ஜெ ஜெ என்று ஓடி கொண்டு இருக்கிறது. 2வது படத்தில் நடிக்க தம்பி வட இந்தியாவுக்கு செல்கிறான். அதை நினைத்து நீங்க ஏன் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள். அடுத்த நாள் சக்கரபாணி தனக்கு சினிமா தொழிலை தேடி கம்பெனிகளுக்கு செல்கிறார். அந்த நேரத்தில் “சதிலீலாவதி” டைரக்டர் எல்லீஸ் டங்கனை பார்க்கிறார். டங்கன் யோசிக்கிறார் அப்போது ஐயா நான் ராமசந்திரன் அண்ணன் My name is சக்கரபாணி என்று சரளமாக அடுத்து பேச வேண்டிய வார்த்தைகளை ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்.
 
அவரும் சக்கரபாணியை அடிக்கடி நீ என்னை வந்து பார்த்து செல் சக்கரபாணி அவர்கள் ஒரு வெள்ளைக்காரர் சினிமா பட டைரக்டர் அவரிடம் இவர் எப்படி சரளமாக ஆங்கிலத்தில் பேச முடிந்தது? தன் தகப்பனார் கோபாலன் அவர்கள் நன்றாக ஆங்கிலம் படித்தவர் பெரும்பாலும் இவர் கண்டியில் ஆங்கிலத்தில்தான் பேசுவார் (ஆங்கில ஆட்கிக்காலம்) சில சமயங்களில் கோபாலன் அவர்கள் தன் மூத்த குழந்தைகளுக்கு ஆங்கிலம் படங்களை சொல்லி கொடுப்பார். அப்போது சக்ரபாணி அவர்கள் சிறு குழந்தையாக இருந்தாலும் அவருக்கு வயது 4 அவரும் மற்ற குழந்தை அண்ணன், அக்காவுடன் அமர்ந்து ஆங்கில உச்சரிப்புகளை கவனிப்பார் அதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் சகோதர சகோதரிகளிடம் அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவர்கள். அப்போது எனக்கு ஆங்கிலம் சொல்லி கொடுங்கல் என்று கேட்பாராம் இப்படி சக்கரபாணி ஆங்கிலத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதுதான் இப்போது பயன் அளித்தது. பாம்பேக்கு வந்து பட முதலாளியை சந்தித்து எம்.ஜி.ஆருக்கு ஏதாவது ஒரு நல்ல சான்ஸ் கொடுங்கள் என்று சொல்லுகிறார். பட முதலாளியும், டைரக்டரும் எம்ஜிஆரை ஏற இறங்க பார்க்கிறார்கள் அந்த சமயம் எம்ஜிஆர் அவர்கள் ஜிப்பா, பைஜாமா அணிந்து இந்தி நடிகர் போல் நல்ல வாட்ட சாட்டமாக நிற்பதை கண்டு எம்ஜிஆரிடம் உனக்கு என்ன என்ன தொழில் தெரியும் என்று கேட்கிறார். உடனே எம்ஜிஆர் கடகட என தனக்கு தெரிந்த நடிப்புகளையெல்லாம் வரிசையாக சொல்கிறார்.
 
இதை கேட்ட அந்த இருவரும் எம்ஜிஆருக்கு அருகாமையில் நின்று கொண்டு இருந்த கேசவனை பார்க்கிறார்கள் இதை புரிந்து கொண்ட கேசவன் அவர்கள் பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் புரிந்து கொண்டு பையன் ஏற்கனவே நாடக கம்பெனியில் எல்லா நடிப்பிலும் தேர்ச்சி பெற்றவன் என்று சொல்லுகிறார். ஓ, அப்படியா சரி, பையன் ஒரு லாட்ஜியில் தங்க வையுங்கள். சாப்பாடு, லாட்ஜ் வாடகை எல்லாம் கம்பெனி கொடுத்துவிடும். பிறகு இந்த படத்தில் பையனுக்கு என்ன வேசம் கொடுக்கலாம் என்பதை பார்த்து முடிவு எடுக்கலாம். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு வயது 20 ஆகிறது. நேரத்துக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு லாட்ஜில் தங்கி இருக்கிறார். அதிகாலையில் எழுந்து எப்போதும் செய்வது போல் உடற்பயிற்சிகளை செய்வதில் தவறுவதில்லை (யோகாசனம்) படபிடிப்பு ஆரம்பமாகி நடந்து கொண்டு இருக்கிறது இடையில் எம்.ஜி.ஆர். டைரக்டர், பட முதலாளி, கேசவன் இவர்களை சந்திப்பதிலும் தவறுவதில்லை. எம்.ஜி.ஆர். இந்த படத்தில் சி.ஐ.டி. ஆபீசராக வேடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள். பிறகு அந்த வேடம் வேர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. பிறகு எம்.ஜி.ஆருக்கு ஜெமீன்தார் வேடம் கொடுக்க முடிவு ஆனது. பிறகு அதுவும் அந்த வேடத்திற்கு T.S. பாலையாதான் மிக பொருத்தமானவர் என்று ஜெமீன்தார் வேடத்தை T.S. பாலையாவுக்கு கொடுத்துவிட்டார்கள். எம்.ஜி.ஆருக்கு இந்த படத்தில் சரியான கதாபாத்திரம் கொடுக்க முடியவில்லை. ஆதலால் கம்பெனி முதலாளி மிக சிரமப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ரூ. 500/- கொடுத்து ஆறுதல் கூறி அடுத்த படத்தில் கண்டிப்பாக உனக்கு நல்ல கதாபாத்திரம் தருகிறேன் என்று சொல்லி எம்.ஜி.ஆரை கேசவனிடம் சென்னைக்கு அனுப்பிவிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் படமுதலாளி.
 
அதன்படி கேசவன் எம்.ஜி.ஆருக்கு சமாதானம் சொல்லி சென்னைக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கிறார். பாம்பேயில் புறப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் சென்னை ரயிலில் இறங்கி காலை வீட்டிற்கு வரும் வழியில் அம்மாவையும், அண்ணணையும் எதிர்பாராமல் பார்க்கிறார் எம்.ஜி.ஆரை பார்த்தவுடன் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் அதிர்ச்சி ஆகிறது. அம்மா மகனை என்ன திடீர் என்று வந்து விட்டாய், அம்மா எங்க நீங்க போயிட்டு வருகிறீர்கள் என்று அம்மாவிடம் எம்.ஜி.ஆர் கேட்கிறார். அம்மா உடனே நானும் அண்ணனம் கோயிலுக்கு சென்று அன்று வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை அம்மனுக்கு செய்து விட்டு வந்து கொண்டு இருக்கிறோம் நான் வேலை கிடைக்காமல் ஊர் ஊராக அலைந்து கொண்டு இருக்கிறேன். இந்த சமயத்தில் நீங்கள் தேவையில்லாமல் அனாவசிய செலவுகள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் சிறப்பு பூஜை என்றும் தெய்வம் என்று அனாவசிய செலவு செய்தால் அந்த கல்லா எனக்கு வேலை வாங்கி தரப்போகிறது கோபமாக ரோட்டில் நடந்து கொண்டே அம்மாவிடம் சற்ற கோபமாக பேசுகிறார். அம்மா மகனை வீட்டில் சென்று பேசி கொள்ளலாம் என்று மூவரும் வீட்டிற்கு வருகிறார்கள் முதலில் நீ குளித்து விட்டு வா, மெதுவாக உட்கார்ந்து பேசலாம் என்று அன்போடு சொல்கிறார்.
 
அவரும் அதன்படி குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு அம்மாவிடமும் அண்ணனிடமும் தானாகவே பாம்பேயில் நடந்த சம்பவங்களை சொல்கிறார். அதன் பிறகு உள்ளே என்று பெட்டியை திறந்து அவர்கள் கொடுத்த ரூபாய் 500/- வழியில் சாப்பிட்டு செலவு பேக மீதியை அம்மாவிடம் கொடுக்கிறார். அடுத்த நாள் மீண்டும் சென்னையில் உள்ள சினிமா கம்பெனிகளுக்கு ஸ்டுடியோக்களுக்கு வேலை தேடி நடக்கிறார் (இது ஒரு சுருக்கம்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #18 on: January 27, 2012, 02:53:32 AM »
16.மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது

தன் மகன்களுக்கு எப்படியாவது படத்தில் நடிக்க சீக்கீரமாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து அந்த அம்மன் கோயிலுக்கு மகன்களுக்கு தெரியாமல் சென்று பூஜை செய்து வருகிறார். இப்படி இருக்கிற காலகட்டத்தில் இருவருக்கும் சில படங்களில் நடிக்க சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தன்னுடைய விடா முயற்சியால் இம்மாதிரி வாய்ப்புக்கள் கிடைப்பதில் குறைவு ஒன்றும் இல்லை ஆனாலும் அவர் மனதிற்குள் நாம் எப்போது கதாநாயகனாக நடிக்க போகிறோம் என்ற ஏக்கம் இருந்து கொண்டு இருந்தது. இப்படியொரு காலகட்டத்தில் ஒரு சிலருடைய முக்கிய சிபாரிசின்படி டைரக்டர் A.S.A. சாமி பட தயாரிப்பாளர் சோமசுந்தரம் இவர்கள் இருவரும் இணைந்து ராஜகுமாரி என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்க எல்லா ஏற்பாடுகளையும் முடித்து கொண்டு கதாநாயகன் தேர்வு நடத்தப்பட்டது. அப்பொழுது எம்.ஜி.ஆர் அவர்களும் இந்த தேர்வில் கலந்துகொண்டார். தேர்வை டைரக்டர் A.S.A. சாமி அவர்கள் மிக கவனமாக தெளிவாக நடத்தினார். இதில் எம்.ஜி.ஆர் ஆள் வாட்டசாட்டம், அழகு, நிறம் மற்றும் பயிற்சிகள் இலைகள் எல்லாமே சரியாக இருந்தது. உடனே எம்.ஜி.ஆரிடம் ஏதும் சொல்லாமல் உன் வீட்டு விலாசத்தை கொடுத்து செல் நாங்கள் உன் வீட்டிற்கு தகவல் அனுப்புகிறோம் என்று சொல்லி எம்.ஜி.ஆரை அனுப்பி வைத்தார்கள். எம்.ஜி.ஆர் மன திருப்தி இல்லாமல் வீட்டிற்கு சென்றவர் அம்மாவிடமும், அண்ணனிடமும் நான் கதாநாயகனாக நடிக்க தேர்வு ஒரு கம்பெனியில் நடந்தது என்ற விவரத்தை சொல்கிறார். இதை கேட்ட அம்மாவுக்கும் அண்ணனுக்கும் மகிழ்ச்சி அடைந்து மகனே நீ கவலைப்படாதே இந்த தேர்வில் நீதான் வெற்றி அடைவாய் என்று அம்மா சொல்கிறார். (இது சுருக்கம்)
 
மறு நாள் தொடர்ந்து வேலை தேடும்படலம் தொடர்கிறது. ஒரு வார காலத்தில் மேற்படி டைரக்டர் A.S.A. சாமி அவர்கள் எம்.ஜி.ஆரை அழைத்து வரும்படி ஒரு ஆளை அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் வீட்டில் வேறு ஒரு படப்பிடிப்புக்கு சென்று உள்ளார் அம்மா அந்த ஆளிடம் மகன் வந்தால் அனுப்பி வைக்கிறேன் நேரம் (மதியம்)
 
எம்.ஜி.ஆர் இரவு வீட்டிற்கு வருகிறார். மகன் எப்போது வருவான் எனற் காத்துக்கொண்டு இருந்த தாய் ஏண்டா மகனே இவ்வளவு நேரம் உடனே மகன் சொல்கிறார் நான் ஊர் சுற்றி கொண்டா வருகிறேன். எனக்கு கிடைத்த ஒரு சின்ன வாய்ப்பு நடித்து முடித்தவுடன் நேராக வீட்டிற்கு வருகிற஧ன் என்று சொல்லி பாத்ரூமூக்கு சென்று குளித்து விட்டு வந்தவுடன் சாப்பாடு தயார். மகன் சாப்பாடு சாப்பிடும்போது டைரக்டர் A.S.A. சாமி ஆள் அனுப்பி வைத்த விவரத்தை சொல்கிறார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #19 on: January 27, 2012, 03:00:26 AM »
15.திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது


தன் அண்ணனுக்கு திருமணம் நடந்து விட்டு, ஒரு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இவர்கள் குடும்பத்தில் ஏகபோக சந்தோஷமாக இருந்து வருகிறார். இந்தநிலையில் தன்னை பெற்று எடுத்த தாய் தன் மூத்த மகனுக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்துவிட்டது. இனி இளைய மகனுக்கும் கல்யாணம் செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தோடு தன் மூத்த மகன் சக்கரபாணியிடமும் தன் மருமகளிடமும் தன் எண்ணத்தை சொல்கிறார். அவர்களும் ஆமாம் கல்யாணம் செய்து விடவேண்டியது தான் என்று மூவரும் கலந்து பேசி தன் மூத்த மருமகள் வழியாக எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்ய கடிதம் மூலமாக பெண் தேடும் படலம் தொடர்கிறது. விரைவிலேயே, சத்தியதாய் அவர்களின் பாரம்பரிய வழியிலேயே பெண் கிடைத்துவிட்டது. இந்த விஷயத்தை படப்பிடிப்பு முடிந்து இரவில் வீட்டிற்கு வந்த உடனே கல்யாண விஷயத்தை மகனிடம் தாய் சொல்கிறார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் அம்மா தயவு செய்து எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம். இதை பற்றி என் கிட்ட எதுவும் பேசாதீர்கள் என்று சொல்லிவிடுகிறார். அவர் சொல்லி விட்டு படுக்கைக்கு சென்று விட்டார். அடுத்து மகன் இப்படி சொல்லிவிட்டானே என்று மூவரும் யோசிக்கிறார்கள். சக்கரபாணியும், மருமகளும் அம்மாவிடம் இன்னும் ஒருவாரம் சென்ற பிறகு பேசுவோம். அடுத்து ஒரு வாரத்தில் படப்பிடிப்பு சீக்கிரமாக முடித்து வீட்டுக்கு வந்து விடுகிறார். வீட்டிற்குள் விளையாடி கொண்டு இருந்த தன் அண்ணன் குழந்தையை எம்.ஜி.ஆர் அவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொஞ்சி கொண்டு இருந்தார். அப்பொழுது தனது அண்ணி தன் கொழந்தனாருக்கு குடிக்க பால் கொண்டு வருகிறார். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு காபி, டீ எப்போதும் பிடிக்காது அண்ணி கொண்டு வந்த பாலை தான் குடித்து விட்டு அண்ணன் குழந்தையை கொஞ்சி விளையாடுகிறார்.
 
அது சமயம் இவர் மிக சந்தோசமாக நல்ல மூடுடன் இருக்கிறார் இந்த நேரத்தை பார்த்த சத்தியதாய் தன் மகன் எம்.ஜி.ஆரிடம் கல்யாணத்தைப் பற்றி மீண்டும் தொடர்கிறார். உடனே எம்.ஜி.ஆர் அம்மா நான் அன்னைக்கே சொல்லி விட்டேன் எனக்கு கல்யாணம் ஒன்றும்வேண்டாம் இன்னும் கொஞ்சகாலம் போகட்டும் நீங்கள் அவசரப்படாதீர்கள் என்று சொல்கிறார். இந்த சமயம் வெளியே சென்று இருந்த தன் அண்ணன் சக்கரபாணி வீட்டிற்குள் நுழைகிறார். வீட்டிற்குள் நுழையும்போது தன் தம்பி வீட்டிற்குள் இருப்பதை அறிந்து என்னடா ராமசந்திரா இன்றைக்கு இவ்வளவு சீக்கிரமாக வந்துட்டே என்று கேட்ட உடனே ஆமாங்க அண்ணே இன்னிக்கு பட பிடிப்பு சீக்கிரமாக முடிந்துவிட்டது. நாளைக்கு கூட எனக்கு படபிடிப்பு இல்லை நாளை மறுநாள் தான் படபிடிப்பு உள்ளது என்று சொல்லி முடிக்கிறார். அப்படியா நான் பாத்ரூம் சென்று வருகிறேன் என்று சொல்லி செல்கிறார். அவர் பாத்ரூம்சென்று வருவதற்குள் அவருடைய மனைவி காப்பியோடு வந்து நிற்கிறார். காப்பியை கையில் வாங்கி கொண்டு தம்பிக்கு பால் கொடுத்தியா என்று கேட்கும்போது எம்.ஜி.ஆர். இப்போதான் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க அவரும் பக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு அருகில் அமர்ந்து கொண்டு இருந்த அம்மாவை பார்த்து என்னம்மா ஓர் மாதிரியாக இருக்கே, உனக்கு அடிக்கடி தலைவலி வருமே அது வந்திருச்சோ என்று அம்மாவை பார்த்து கேட்கிறார். அம்மா சிரித்துக்கொண்டே இல்லையடா மகனே மனம் தான் சரியில்லை எனக்கு என்று சொல்கிறார்.
 
உடனே, அம்மா! தம்பி ஏதாவது கோபித்துக் கொண்டானா நீ அவன் கிட்ட ஏதாவது ஏடாகோடமாக பேசினியா என்று கேட்கிறார். இதை சொல்லி முடிவதற்குள் எம்.ஜி.ஆர் பேச தொடங்கினார். அண்ணனிடம், அண்ணே அம்மா எனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக பேசுறாங்க, இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம், ஏன் வேண்டாம் என்று சொல்கிறேன். அதையும் சொல்கிறேன் நாமோ எவ்வளவோ கஷ்டத்திற்கு இடையிலே கொஞ்ச கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இதற்கு உங்களுக்கு ஒரு கல்பாணம் பண்ணி ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. இவ்வளவு நாளாக மூன்றுபேராக இருந்த நாம் 5 பேர்களாகி விட்டோ ம் இதற்கு எல்லாம் வருமானம் முக்கியம். நாம் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த பிறகு என் கல்யாணத்தைப் பற்றி பேசுவோம். அதுவரைக்கும் இனி மேல் என்கிட்ட கல்யாணத்தைப் பற்றி பேசாதீங்க. சரிடா ராமச்சந்திரா நீ சொல்வது சரிதான். இதையெல்லாம் கேட்டு கொண்டு இருந்த சத்தியதாய்க்கு சற்று மனம் வருத்தம் அதிகமாகிவிட்டது.
 
உடனே சத்தியதாய் சமையல் அறைக்கு சென்று விட்டார். காலங்கள் ஒருமாதம் கடந்து விட்டது. எம்.ஜி.ஆர் அவர்கள் சில படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகிஉள்ளது. முன்பை விட எம்.ஜி.ஆர் அவர்கள் பிஸியாகி விட்டார். சக்கரபாணி அவர்களும் அதற்காக வீட்டிலேயே சும்மா உட்கார்ந்து இருக்காமல் படகம்பெனிகளுக்கு சென்று சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். மீண்டும் ஒரு நாள் எம்.ஜி.ஆர் அவர்களின் திருமணம் பேச்சு தொடங்குகிறது. அன்று திருமணம் பேச்சு மிக சூடுபிடிக்கிறது. அம்மாவும், அண்ணனும் கல்யாணம் முடித்தே ஆகவேண்டும் என்று திரும்ப, திரும்ப சொல்கிறார்கள். இதை எல்லாத்தையும் கேட்டு கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் சற்று எதிர்பார்க்காமல் சமையல் கட்டுக்குள் இருந்த அண்ணியை சத்தம் போட்டு அழைக்கிறார். தன் கொழுந்தன் ஏதோ சத்தம் போட்டு கூப்பிடுகிறாரே என்ன தம்பி என்று கேட்கிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணி நம் குடும்ப விஷயம் எல்லாம் நல்லா தெரியும் உங்களுக்கு நான் ஆரம்பத்திலிருந்து எனக்கு இப்போ திருமணம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன். இவர்கள் மீண்டும் மீண்டும் நீ இப்போ திருமணம் செய்து கொள் என்று சொல்கிறார்களே இது என்ன நியாயம் என் மனதில் எவ்வளவோ லட்சியங்கள் இருக்கிறது.
 
அவைகளைவிட எனக்கு இப்போது திருமணம் தான் முக்கியமா என்று அண்ணியைப் பார்த்து கேட்கிறார். உடனே அண்ணி தம்பி நீங்க பேசுவது எல்லாமே நியாயம் தான். நீங்கள் நினைக்கிறபடி நீங்க ஒரு லட்சாதிபதியா ஆகுவிங்க அதற்கு உங்களுடைய திருமணம் தடையாக இருக்காது. அம்மாவுக்கு உங்களுக்கு திருமணம் செய்து பார்ப்பதில் மிக ஆசையோடு இருக்காங்க. உங்களுக்கும் திருமண வயது வந்து விட்டது. இப்போ நாங்க உங்களுடைய சம்மதம் பெறாமலேயே பெண் வீட்டாரிடம் பெண்பார்க்க வருகிறோம் என்று சொல்லி விட்டோ ம். அதனாலே ஒரு இரண்டு நாளைக்கு நீ படப்பிடிப்பிலிருந்து அம்மாவுடன் ஊருக்கு சென்று அந்த பெண் உங்களுக்கு பிடிக்குதா இல்லையா என்பதை என்ற விவரத்தை சொல்லிவிடுங்கள். இது நீங்கள் உங்கள் தாய்க்கு செய்யும் கடமையாகும் என்று சொல்லிவிட்டார்கள். இதை கேட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் சற்று நேரம் எதுவும் பேசாமல் யோசித்து கொண்டு இருந்த எம்ஜிஆர் அவர்கள் கோபமாக சமையல் அறையில் இருந்த தன் தாயை அம்மா என்று சத்தம் போட்டு அழைக்கிறார். உடனே தாய் என்னடா மகனே என்று அருகில் வந்து நிற்கிறார். தாயிடம் உடனே எம்.ஜி.ஆர் உங்களுடைய மணம் நோகாமல் நடந்து கொள்வது தான் எனக்கு முக்கியம். முதலில் உங்கள் எண்ணங்கள் பிறகு தான் என் எண்ணங்கள். அந்த பெண் எனக்கு தகுந்த மாதிரி இருக்குமா என்பதை எல்லாம் அறிந்து கொண்டு வாருங்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளை எப்படி இருப்பார் என்று கேட்டால், இங்கிருந்து நீங்கள் போகும் போது என் போட்டோ வை ஒன்றை எடுத்து பெண் வீட்டாரிடம் காண்பிங்கள் என்று பட பட என்று சொல்லி பேச்சை முடித்து கொண்டார்.
 
பிறகு இரண்டு மூன்று நாட்களில் சென்னையிலிருந்து கேரளாவுக்கு தானும் தன் மருமகளும் குழந்தையும் தூக்கிகொண்டு போகிறார்கள். அங்கு தன் மருமகள் வீட்டில் தங்கி கொண்டு பெண் வீட்டார்க்கு தகவல் கொடுத்துவிட்டு தானும் தன் மருமகளும் மருமகள் வீட்டை சேர்ந்தவர்கள் பெண் பார்க்க செல்கிறார்கள். அங்கு என்ன என்ன விஷயம் பேச வேண்டுமோ பேசி விட்டு பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளையோட போட்டோ வை காண்பித்து பேசுகிறார்கள். பெண் வீட்டாருக்கும் சம்மதம் தெரிவிக்கிறார்கள். எப்போது திருமணம் வைத்து கொள்ளலாம் என்று பெண் வீட்டு சம்மதத்தோடு தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டிலிருந்து புறப்படும் சமயத்தில் சக்கரபாணி அவர்களின் மனைவி பெண் வீட்டாரிடம் பெண் போட்டோ இருந்தால் ஒன்று கொடுங்கள் நாங்கள் மாப்பிள்ளைக்கு காண்பிக்க வேண்டும் என்று கேட்கிறார். அவர்களிடத்தில் போட்டோ இல்லை உங்களுக்கு பெண் பிடித்து இருக்கும் போது அப்படியே மாப்பிள்ளையிடம் சொல்லுங்கள். எல்லாத்தையும் முடித்துவிட்டு சென்னைக்கு வருகிறார்கள். பெண் வீட்டில் நடந்த சம்பவத்தைபற்றியும் பெண்ணின் அழகை பற்றியும் சக்கரபாணி அவர்களிடம் சொல்லுகிறார்கள். சரியம்மா தம்பி வரட்டும் பேசுவோம். இரவு படபிடிப்பு முடிந்து கொண்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்கு நுழைந்த உடனே அம்மாவை பார்த்தவுடன் என்ன அம்மா பெண்ணை எல்லாம் பார்த்து விட்டு வந்துட்டீங்களா என்று சிரித்த முகத்தோடு கேட்கிறார். மகனே நீ குளித்து விட்டு வந்து சாப்பிடு என்று அம்மா சொல்லுகிறார்கள். எம்.ஜி.ஆரும் குளித்து விட்டு வந்து சாப்பிட்டு விட்டு அண்ணனுடன் அமர்ந்து கொண்டு அண்ணியையும் உட்கார சொல்லி ஊருக்கு சென்று வந்த விஷயத்தை சுறுக்கமாக சொல்ல சொல்கிறார். உடனே அம்மா தன் மருமகளைப் பார்த்து சைகை காண்பிக்கிறார். நீ சொல்லு, என்று உடனே எம்.ஜி.ஆரிடம் தம்பி எங்களுக்கு பெண் பிடித்து இருக்கிறது. பெண் உனக்கு மிக பொருத்தமானவள், பெண் வீட்டாரும் மிகவும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதை நான் உங்களுக்கு மிக சுருக்கமாக சொல்கிறேன். இதற்கு மேல் உங்கள் உடைய முடிவுதான் என்று சொன்னதும் இதை கேட்ட எம்.ஜி.ஆர் சற்று மெளனமாக இருந்து விட்டு அம்மாவையும், அண்ணியையும் பார்த்துவிட்டு இருக்கிற பண வசதிப்படி எப்போ எங்கே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு பத்திரிகை அடித்து எல்லோரையும் அழைத்து பிரபலியம் செய்யாமல் மிக சுருக்கமாக செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு அம்மாவையும், அண்ணியையும் பார்த்து அம்மா பெண் உங்களுக்கு பிடித்து போச்சி, ரொம்ப அழகாக இருக்கிறாள் என்று இருவரும் வர்ணித்து விட்டீர்கள். பெண் வீட்டாருக்கும் என்னை பிடித்து இருக்கா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது. உடனே அம்மா மகனே நாங்கள் அங்கு போகும் போது உன்னுடைய சினிமா போட்டோ க்களை எடுத்து போயிருந்தோம்.
 
அதை அவர்களிடம் காண்பித்தோம். அந்த போட்டோ வை வாங்கி பார்த்த அவர்கள் நீ பாரு, நான் பாரு என்று ஆளுளுக்கு அந்த போட்டோ வைப் பார்த்து கொண்டே உன்னை வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுவரைக்கும் அந்த போட்டோ வை அந்த பெண்ணிடம் காண்பிக்கவில்லை. இதை எல்லாம் கவனித்து கொண்டிருந்த அண்ணி உடனே அந்த இரண்டு போட்டோ வை வாங்கி பெண்ணை அழைத்து இந்த இரு போட்டோ வையும் பெண் கையில் கொடுத்து உனக்கு பிடித்து இருக்குதா என்று தனியாக அந்த பக்கம் போய் பார்த்து உனக்கு பிடித்து இருக்கிறதா என்று சொல், போட்டோ வை பார்த்த பிறகு வெட்கப்பட்டு கொண்டு போட்டோ வை தன் கையில் வைத்து கொண்டு சிரித்த முகத்தோடு எனக்கு பிடித்து இருக்கு என்று சிரித்த முகத்தோடு சொன்னார். இந்த விபரத்தை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் அண்ணி இந்த போட்டோ வை சினிமா மேக்கப் போட்டோ அதை பார்த்து நல்லா இருக்கேன்று சொன்னா அது எப்படி நான் மேக்கப் இல்லாமல் நான் அசிங்கமா இருந்தால் அவுங்க என்ன செய்வாங்க என்று முடித்து உடனே அம்மா மகனே அசிங்கம் என்ற வார்த்தைக்கே நம் இடத்தில் இடம் இல்லை. நான் பெற்ற பிள்ளைகள் அத்தனைபேரும் தங்கம், வைரம், மாணிக்கம், முத்து என்று வர்ணிக்க கூடிய வகையில் எல்லோரும் அழகா இருப்பீங்க. இதிலே நான் பெற்ற கடைசி செல்ல மகன் நீ எவ்வளவு அழகு எவ்வளவு திறமையை பற்றி மற்றவர்களுக்கு தான் தெரியும் உனக்கு தெரியாது.
 
இப்படி எல்லாம் விதண்டா வாதம் பேசாதே எல்லாம் நல்ல படியாக நடக்கும் கவலைபடாதே என்று அம்மா சொல்லி ஒரு வழியாக தன் இளைய மகனிடம் சொல்லி முடிக்கிறார். இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அண்ணன் மனதிற்குள்ளேயே இவன் ஒரு முரண்டு பிடித்தவன். கல்யாணம் எப்படியும் நல்ல விதமாக முடியனும் என்று மனதிற்குள் ஆண்டவனை நினைத்து கொள்கிறார். அடுத்த நாள் காலையில் எழுந்து “ஜோதிமலர்” என்ற படபிடிப்புக்காக (1941)ல் ஸ்டுடியோவுக்கு சென்று விட்டார். இதே போல் எம்.ஜி.சியும் வேறு ஒருபடத்தில் வாய்ப்பு கிடைத்து விட்டது. அதைப்பற்றி தெரிந்து கொள்ள கம்பெனிக்கு சென்றுவிட்டார். இதற்கிடையில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக நெருக்கமான மூத்த நடிகருமான பி.யு. சின்னப்பா, எம்.கே. ராதா இவர்கள் இருவரையும் சந்தித்து இவருடைய கல்யாண விஷயத்தை அவர்களிடம் சுருக்கமாக சொல்கிறார்.
 
உடனே அவர்கள் சந்தோச முகத்தோடு சிரித்து கொண்டு சரி கல்யாணம் எங்கே வைக்க போகிறீர்கள் முதலில் தான் உன் அண்ணன் சக்கரபாணி கல்யாணத்தை எங்களுக்கு எல்லாம் சொல்லாமல் நடத்தி விட்டீர்கள். அப்படி இல்லாமல் உன் கல்யாணத்திற்கு நாங்கள் வரவேண்டும். நாங்கள் வருவோம் நீ உன் கல்யாணத்தை சொல்லு. அல்லது கல்யாண பத்திரிகை கொடு. ஒரு நிமிஷம் மவுணமாக இருந்து விட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் பேச தொடங்குகிறார். அண்ணே நான் ஒரு நியாயத்தை இப்போ பேச போகிறனே. நீங்கள் இருவரும் சரியான பதிலை சொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு பேச தொடங்குகிறார்.
 
அண்ணே, என்னுடைய பாட்டனார் பாரம்பரியம் கோவை மாவட்டத்தை அடுத்து உள்ள காங்கேயம் என்ற ஊருக்கு பக்கத்தில் ஒருகிராமம். அது ஒரு சிறிய ஜமீன் போல் மன்றாடியார் என்று சொல்லுவார்கள். எங்கள் பாட்டனார் வம்சத்தை கொங்குவெள்ளாலர் என்று சொல்வார்கள். நான் ஈழதமிழ் நாட்டில் இலங்கை கண்டியிலே எனது தாய் தந்தையாருக்கு நான் 5வது குழந்தையாக பிறந்தவன் என் உடன்பிறந்த சிலரும், என் தந்தையும் இறந்த பிறகு, என் தாய் என்னையும், என் அண்ணன் எம்.ஜி.சியையும் அவர்களையும் அழைத்து கொண்டு செந்தமிழ்நாடு என்று இப்போ சொல்லப்படும் கவிஞர்களும், புலவர்களும் நிறைந்த சோழ மன்னர் நாட்டிலேயே தஞ்சையை சேர்ந்த கும்பகோணத்திற்கு என் தாய் எங்களை அழைத்து கொண்டு வந்து பள்ளிக்கூடத்தில் சேர்த்து 4ஆம் வகுப்பு வரை படிக்க வைத்து பிறகு நாடககம்பெனியில் எங்களை சேர்த்து விட்டு நாடகத்திலே நானும் எனது அண்ணனும் எப்படி வளர்ந்தோம் என்பது உங்களுக்குத் தெரியும், பிறகு நாங்கள் சினிமாவில் எப்படி இருக்கிறோம் என்பதும் தெரியும்.
 
அண்ணே நான் தமிழ் ஈழத்திலேயே பிறந்து தமிழ் இலக்கியமான இந்த நாட்டில் படித்து வளர்ந்து கலை தொழிலிலே முன்னேற்றம் அடைந்து வரும் நான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என் உடல் முழுவதும் தமிழ். இப்படி பட்ட எனக்கு இந்த தமிழ் நாட்டிலேயே இருந்து ஒரு பெண்ணை தேர்வு செய்து கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாதா, என் வாழ்நாளிலே நான் தெரிந்தோ தெரியாமலோ சமீப காலத்தில் நான் ஒரு தவறை விளையாட்டு பிள்ளை போல் செய்து கொண்டு வந்தேன். அதாவது நாங்கள் குடி இருந்த வீட்டில் எதிர்வீட்டில் ஒரு 17,18 வயது மதிக்கத்தக்க நல்ல ஒரு அழகான பெண் என்னை போல் அவளும் சுறுசுறுப்பாக இருப்பாள். அந்த பெண் நான் வீட்டிற்கு வந்த பிறகு என்னை பார்க்க தவற மாட்டாள். நான் தற்செயலாக இந்த பெண் என்னை பார்த்து சிரிப்பாள், நான் காலையில் வெளியே செல்லும் போது மெளனமாக சிரிப்பாள். இது நாள் அடைவில் என் மனதில் அவளுடைய அன்பார்ந்த சிரிப்பு முகமும், அவளுடைய உருவமும் என் மனதில் புகுவதை உணர்ந்தேன். பிறகு நான் எப்போதும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். உடற்பயிற்சி, யோகா என்னுடைய உள்ள பழைய ஆர்மோனிய பெட்டியை வைத்து குரல் சரியாக வரவேண்டும் என்பதற்காக நான் பாடுவேன். இதில் சில நேரங்களில் சத்தமாக பாட ஆரம்பித்தேன். இந்த சத்தத்தை கேட்ட எதிர்வீட்டு பெண் நான் எழுந்து விட்டேன். தயாராகிவிட்டேன் என்று அறிந்து கொண்டு அவுங்க வீட்டிலே குடி தண்ணீர் வசதி இல்லாததால் எங்கள் வீட்டில் குழாய் தண்ணீர் பிடித்து செல்ல இரண்டு குடங்களை எடுத்துக்கொண்டு குழாய் அடிக்கு வந்து விடுவாள். இதை அறிந்த நான் பல்பொடியை கையில் கொட்டி கொண்டு குழாய் அடிக்கு வந்து விடுவேன். இப்படி ஒரு சில மாதங்கள் இருவரும் கண் நோக்கினோம் என்று சொல்லுக்கு இணங்க நாங்கள் இருவரும் பேசினதே இல்லை. ஆனால் என் மனதிலே அந்த பெண் மீது கொஞ்சம் ஆசை ஏற்பட்டது. இவைகளை அறிந்த என் தாயும், அண்ணியும் சரி மகனுக்கு கல்யாண வயது ஆகிவிட்டது. எதிர் வீட்டு பெண்ணை இவன் காதலிக்கிறான் என்ற எண்ணத்தோடு கேளராவுக்கு சென்று என் தாயும், அண்ணியும் என்னை கட்டாயப்படுத்தி என் சம்மதத்தோடு கேரளாவுக்கு சென்று ஒரு பெண்ணை பார்த்து கல்யாணத்திற்கு பேசி முடித்துவிட்டு வந்துவிட்டார்கள். எப்போதுமே அம்மா சொல்லை தட்டாதவன் நான். நான் தமிழ்பெண்ணை தான் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று மிக மிக ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் என் ஆசை நிறாசையாகிவிட்டது. இந்த செய்திகளை கேட்டு கொண்டு இருந்த பி.யு. சின்னப்பாவும் எம்.கே. ராதாவும் சற்று நேரம் பதில் ஏதும் சொல்லாமல் மெளனமாக இருந்தார்கள். பிறகு பி.யு. சின்னப்பா சரி நீ தாய் சொல்லை தட்டாதவன் நீ உன் அண்ணன் எம்.ஜி.சியிடம் சொல்லி இருக்கலாமே ஏன் சொல்லவில்லை. சரி உன்மனதில் உள்ள எண்ணங்களை உன் உடன் பிறவா சகோதரனாக நினைத்து கொண்டு இந்த விஷயத்தை சொல்லிவிட்டாய். ஆனாலும் இது உன்னுடைய வாழ்க்கை பிரச்சனை நாங்கள் உனக்கு ஆறுதல்தான் சொல்லமுடியுமே தவிர, மாற்று யோசனைகள் எதுவும் சொல்லமுடியாது. ராமச்சந்திரா என்று எம்.கே. ராதா ஆரம்பிக்கிறார். நீ நாடகத்தில் நடிக்கிற காலத்திலிருந்தே நீ ஒரு பெரிய திறமைசாலியாக, அறிவு உடையவனாகவும், அன்பு, பாசம், நேசம் கொண்டவனாகவும் நீ இருக்கிறாய் என்பதை நான் நன்கு அறிவேன். தாய்க்கு மிஞ்சிய கோயிலும் இல்லை. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை அறிந்தே நீ இனிமேல் தாய் சொல்லை தட்டாமல் நடந்து கொள்வது தான் நல்லது என்று நினைக்கிறேன். உனக்கு எப்போதுமே உதவி செய்ய நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம். கவலைபடாதே என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
 
இந்த ஆறுதலைக் கேட்ட எம்.ஜி.ஆருக்கு மனதிலேயே உள்ள குழப்பங்கள் ஓரளவுக்கு தெளிவாகிவிட்டது. அடுத்த மாதம் கல்யாணம் நடைபெற இருக்கிறது. கேரளாவில் ஏதோ ஒரு கோயிலில் சென்னையில் இருந்து இவர்கள் ஐந்து பேர்கள் தாய், அண்ணன், அண்ணி, எம்.ஜி.ஆர் பிறகு குடும்ப நண்பர் நாராயணன் அவர்களும் எம்.ஜி.ஆருக்குக் கல்யாணம் செய்து வைக்க கேரளா போகிறார்கள். கல்யாணம் முடிந்து சென்னைக்கு பெண் வீட்டாருடன் எல்லோரும் வருகிறார்கள். இதை அறிந்த தெருவில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் எல்லோரும் வந்து பெண் மாப்பிள்ளை எல்லோருக்கும் வரவேற்பு கொடுத்து வாழ்த்தினார்கள்.
 
இதற்கு இடையில் சத்திய தாய் அவர்கள் மிக சாமார்த்தியமாய், புத்திசாலித்தனமாக மிக வேகமாக இந்த ஏரியாவே விட்டு காலி செய்து விட்டு யானைகவுனியிலிருந்து தென் சென்னை அடையாருக்கு ஒரு சுமாரான வீட்டை பார்த்து மூத்த மகன் எம்.ஜி.சி. மூலமாக வைத்து இருந்தார்தள். உடனே நல்ல நாள் பார்த்து அடையாறு வீட்டுக்கு குடியோய்விட்டார்கள். சுமார் 10 ஆண்டு காலமாக வால்டாக்ஸ் பகுதியிலேயே இவர்கள் குடி இருந்த தெருவில் இருந்த அத்தனை பேர்களையும் விட்டு பிரிய மனம் இல்லாமல் சென்றது ஒரு பெரிய விஷயமாகும். (இது ஒரு சுருக்கம்)
 
இப்படி ஒரு சுருக்கத்திற்கு ஒரு அர்த்தம் தருகிறேன். முடிவில் இது நாள் வரையிலும் சென்னை வால்டாக்ஸ் ரோட்டிலிருந்து ஸ்டூடியோவுக்குபோய் வந்து கொண்டு இருந்த எம்.ஜி.ஆருக்கும், எம்.ஜி.சிக்கும் இப்போ அடையாரிலிருந்து ஒரு புது இடம் அடையாரிலிருந்து ஸ்டுயோவுக்கு போய் வர இவர்கள் இருவருக்கும் இது ஒரு புதிய வழியாகவும், புரியாத ஒரு விஷயமாக தோன்றியது. எது எப்படி இருந்தாலும் தினம் குடும்ப செலவுக்கு வீட்டு வாடகைக்கும் அண்ணன் குழந்தைகள் மற்றும் இதர செலவுகளுக்கும் மாத வருமானத்தை பற்றி எம்.ஜி.ஆரும், எம்.ஜி.சியும் யோசித்தார்கள். இதுவரையிலும் தொழிலுக்கான எடுத்த முயற்சியை விட இனிமேல் சற்று கடுமையாக உழைத்து ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு மன உறுதியோடு தன் மனைவியையும், தாயையும் உடன்பிறந்த அண்ணன் மனைவி மக்களையும் எந்த சிரமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று தன் உழைப்பில் எம்.ஜி.ஆர். அவர்கள் தீவிர முயற்சி எடுத்து கொண்டார்கள். தன் உழைப்பு அண்ணனுடைய உழைப்பு இதை தவிர தன் குடும்பத்திற்கு வேறு யாரும் உதவி செய்கின்ற நிலைமையில் இல்லை. பொதுவாக திருமணம் ஆன பிறகு பெண் வீட்டார் வழியிலிருந்து உதவிகள் கிடைக்க வேண்டும் அல்லது பையன் வீட்டார் வழியிலிருந்து பெண் வீட்டாருக்கு உதவி கிடைக்க வேண்டும். இது இரண்டும் சரியில்லை என்றால் அந்த குடும்பம் எப்படி இருக்கும்? ஆனால் இவர்கள் இரு வீட்டிலும் ஏழைகள். ஒருவருக்கு ஒருவர் பொருள் உதவி பணம் உதவி செய்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள்.
 
இதை எல்லாம் யோசிக்காமல் தன் மகன்களுக்கு தன்னுடைய சொந்த ஊரிலேயே பெண் பார்த்து கல்யாணம் செய்து விட்டார். இதை எல்லாம் சிந்தித்த எம்.ஜி.ஆர். அவர்கள் மனம் எப்படி இருந்து இருக்கும். இதோடு இன்னொரு விஷயமும் சொல்கிறேன் எம்.ஜி.ஆர் அவர்களுடைய சிந்தனையில் கல்யாணம் செய்த உடனேயே சென்னை வால்டாக்ஸ் ரோட்டிலிருந்து வடசென்னை பகுதியிலிருந்து தென் சென்னை பகுதிக்கு ஏன் வீடு மாற்ற வேண்டும் என்ன இதற்கு காரணம் என்று யோசிக்கிறார். இதற்கு ஒரு முடிவு கிடைக்காமல் தன் அண்ணியிடம் ஒரு நாள் தனியாக இந்த விஷயத்தை சொல்லி கேட்கிறார். அம்மா எதுவுமே காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள். இதற்கு என்ன காரணம் தயவு செய்து சொல்லுங்கள் என்று கேட்ட உடனேயே தன் கொழந்தனாருடைய பரிதாப நிலையை கேட்டவுடன் அந்த அம்மாவால் தன் மனதிற்குள் மறைத்து வைத்து உள்ள ஒரு முக்கியமான விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் தம்பி நான் இப்போ சொல்லுகிறேன். இந்த விஷயம் யாருக்கும் நான் சொன்னேன் என்று தெரிய கூடாது. நான் உங்களிடம் சொல்லுகின்ற விஷயம் யாருக்குமே தெரிய கூடாது. உங்கள் மனதிற்குள் இருக்கவேண்டும். தம்பி நம்ம வால்டாக்ஸ் ரோட்டில் இருக்கும்போது நம்ம வீட்டிற்கு எதிர் வீட்டிலிருந்து அந்த பெண்ணின் பெயரை சொல்லி நம் வீட்டு வாசலுக்கு தினமும் காலையில் தண்ணீர் பிடிக்க வருவாள். அந்த பெண்ணை நீங்கள் காதல் செய்வதாக நினைத்து அத்தை அவர்கள் உங்களுக்கு உடனே கல்யாணம் செய்யவேண்டும் சொந்த ஊரிலேயே, சொந்தத்திலேயே கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்று நினைத்து உங்களுக்கு கல்யாணத்தை செய்தார்கள். அதனால் எடுத்த முடிவுகள் தான் இது எல்லாம். தம்பி அம்மா மேலே வைத்து இருக்கிற அன்பும், பாசமும் தான் இதற்கு காரணம். எனவே, நடந்தது எல்லாவற்றையும் மறந்து நம் குடும்பம் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டிய வளர்ச்சியும் முழுபொறுப்பும் உங்களிடம் தான் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் முயற்சியை கைவிடாமல் மனம் தளராமல், எந்த குறைபாடுகளும் இல்லாமல் உங்கள் மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லாம் எவ்வளவு பேர்கள் இருந்தாலும், பேசினாலும் தன் கணவர் வந்து தன்னிடம் பேசினால்தான் அவளுக்கு ஒருமன நிம்மதி கிடைக்கும் தங்கை பார்க்கவியை மனம் நோகாமல் பார்த்து கொள்ளுங்கள் இதைகேட்ட எம்.ஜி.ஆர் உடனே வெளியே சென்று நடமாடுவது போல் இவைகளை எல்லாம் யோசித்தார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #20 on: January 27, 2012, 03:04:10 AM »
17.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு குழந்தைக்கு தந்தை ஆனார்



யோசித்து இனிமேல் அவர் எப்படி இந்த குடும்பத்தை நடத்தி செல்லவேண்டும் என்று அடுத்த நாளில் இருந்த எந்த விதமான குடும்ப சிந்தனையும் இல்லாமல் ஒரு புதுமனிதன் போல் வெளியே தன் தொழிலுக்காக செல்கிறார். காலையில் எழுந்து எப்போதும் போல் காலை 5 மணிக்கு எழுந்து தன் காலை கடன்களை முடித்து கொண்டு வெளியில் செல்லும் போது தன் மனைவியை அவர்களுடைய அறையில் செல்லமாக மனைவியின் கன்னத்தை கிள்ளிவிட்டு அடுத்து ஒரு பொன் சிரிப்போடு சிரித்து விடைபெற்று அடுத்து அம்மாவுடைய ஆசிரிவாதத்தோடு வெளியே செல்லும் பழக்கத்தை வைத்து கொண்டார். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு காலம் ஆகிவிட்டது ஒருவருடம் ஆகிவிட்டதா என்று யோசித்து காலங்கள் இவ்வளவு வேகமாக போகிறதே அம்மா என்று நினைத்து கொண்டு இருக்கும்போது இன்று மகனே உன் மனைவியை அழைத்து கொண்டு எங்கேயோவது கோயிலுக்கு சென்று விட்டு வாருங்கள். உடனே மகன் எம்.ஜி.ஆர் எனக்கு எப்போதுமே கோயில், குளம் சினிமா கடைவீதி கடற்கறை அங்கு இங்கு சென்று போய் பழக்கம் உண்டா, அதனாலே நீயே அழைத்துபோய் கோயில், குளம் என்று சிரித்து கொண்டு சொல்கிறார்.
 
எந்த படத்தில் எந்த வேஷத்தில் கிடைத்தாலும் நடிப்போம் என்ற முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது ஒரு நாள் தன் தாய் எம்.ஜி.ஆர் சூட்டிங் முடித்து வீட்டிற்கு வந்த பிறகு சந்தர்ப்பம் பார்த்து மகனே என்று அழைத்து உனக்கு நான் ஒரு சந்தோஷமான செய்தியை சொல்ல போகிறேன். அப்படியா என்னங்கம்மா சொல்லுங்கம்மா என்கிறார் எம்.ஜி.ஆர் மகனே நீ ஒரு குழந்தைக்கு தகப்பனராக ஆகிவிட்டாய் என்று தாய் மிக மன மகிழ்ச்சியோடு சொல்கிறார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் முகத்தில் எந்த விதமான ஒரு சந்தோஷமும் இல்லை. ஆனாலும் அதை அம்மாவிடம் காட்டி கொள்ளாமல் அம்மா ரொம்ப சந்தோஷம் என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார். அண்ணனுக்கு இரண்டு குழந்தைகள் ஒரு பெண், ஒரு ஆண் இந்த நிலையில் இவ்வளவு சீக்கிரம் நமக்கும் குழந்தையா என்று நினைத்து வேதனைப்பட்டார்
. என்ன செய்வது, எல்லாம் கடவுள் செயல். உழைப்பில் கவனமாகவும், உறுதியாகவும் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மீண்டும் ஒரு கடுமையான சோதனை ஏற்பட்டது[/b]
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #21 on: January 27, 2012, 03:10:52 AM »
18.முதல் மனைவி மறைவு


கர்ப்பமாக இருந்த தன் மனைவியை 7வது மாதத்திலேயே ஊருக்கு தாய் வீட்டுக்கு கடிதம் போட்டு தங்கள் மகள் இப்போது 7 மாதமாக இருக்கிறாள். நீங்கள் வந்து முறை பிரகாரமாக அழைத்து செல்லுங்கள் என்று சொன்னவுடன் தன் மாமியார் வீட்டார் முறைபிரகாரம் செய்ய வேண்டிய முறைகளை செய்து தன் ஊருக்கு தன் மகளை அழைத்து சென்றார்கள். பிறகு ஒரு மாதம் கழித்து மாமனார் வீட்டிலிருந்து சத்திய தாய்க்கு ஒரு கடிதம் வந்தது. உங்களது மருமகள் பார்க்கவி உடல் நலம் சரியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறாள். தன் கணவரை பார்க்கவேண்டும் கடிதம் போட்டு என் கணவரை உடனடியாக வரசொல்லுங்க என்று சொல்கிறார். எனவே உடனடியா தாங்கள் உங்கள் மகனை அழைத்து கொண்டு வரவேண்டும். இந்த கடிதத்தை பார்த்த சத்திய தாய் தன் மூத்த மருமகளுடன் ஆலோசனை நடத்தி தன் மகன்கள் படபிடிப்புக்கு சென்றவர்கள் வீட்டிற்கு வந்தவுடனே ஊருக்கு புறப்படலாம் என்று முடிவுடன் இருந்தார்கள். அன்று இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்த தன் மகன்களிடம் இந்த கடிதத்தை காண்பித்து மகனை என்னுடன் உடனே புறப்படு என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லுகிறார். அவர் படித்து பார்த்து விட்டு அம்மா நாங்கள் தினமும் இரண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து சூட்டிங் போய் கொண்டு இருக்கிறோம். உடனே நீ ஊருக்கு போகவேண்டும் புறப்படு என்றால் எப்படி தொடர்ந்து ஒரே படத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு போக வேண்டும். நீ உடனே புறப்படு என்றால் எப்படி இந்த படப்பிடிப்பு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடிந்து விடும் பிறகு நான் வருகிறேன் என்று உடனே சொல்லி அண்ணே உடனே அம்மாவை ரயில் ஏற்றி அனுப்பிவிட்டு வாங்க என்ற சொன்ன உடனே சத்தியதாய் ஏதும் மறுப்பு சொல்ல முடியாமல் புறப்பட்டு விட்டார். கடிதத்தை படித்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இது ஒரு பெரிய வேதனையாக இருந்தது.
 
இருந்தாலும் வாழ்க்கையில்தான் எடுத்த லட்சியத்தை மனதில் மிகவும் உறுதியுடன் வைத்து கொண்டார். இங்கு இருந்து பாலக்காடு சென்ற தன் தாய் பாலக்காட்டிலிருந்து 20 மைல் உள்ள மருதூர் என்ற ஒரு சிறிய ஊர் அங்கு செல்லவேண்டும். இங்கிருந்து இரவு 9 மணிக்கு ரயிலில் புறப்பட்டவர், அடுத்த நாள்மதியம் சம்பந்தி வீட்டிற்கு போய்சேருகிறார். அந்த நேரம் தன் மருமகளுக்கு இன்னும் மிக மோசமான நிலையில் வைத்தியர்கள் வைத்தியம் செய்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
 
இந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த சத்தியதாயை கண்டவுடன் உங்கள் மகன் வரவில்லையா என்ற ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். உடனே சத்தியதாய் மகன் நாளைக்கு புறப்படுவார் என்று சொல்லிவிட்டு தன் மருமகளை பார்த்து என்ன செய்கிறது உனக்கு என்று ஆவலோடு மருமகள் கன்னத்தை தொட்டு பார்த்து கேட்கிறார். உடனே மருமகள் அறையும், குறையுமாக அந்த பக்கம், இந்த பக்கம் பார்த்து விட்டு ஏக்கத்துடன் தன் கணவர் வரவில்லையா என்று மாமியாரை மீண்டும் பார்த்து கேட்கிறார். உடனே அவர் நாளைக்கு வருவான் என்று ஆறுதல் சொல்கிறார். அதை கேட்டவுடன் மருமகள் தங்கமணியின் முகத்தில் ஆறுதல் இல்லை. பார்கவி என்ற தன் மருமகளுக்கு தங்கமணி என்ற பெயர் எப்படி வந்தது. சத்திய தாய்க்கு பிறந்த குழந்தைகளில் மூத்த மகளின் பெயர் தங்கமணி, அந்த குழந்தை மிகவும் அழகாக இருப்பார். அந்த இளைய மருமகளின் ஜாடை இருந்ததால் தன் மகளின் ஞாபகமாக தங்கமணி என்று வீட்டில் எல்லோரும் அழைக்க ஆரம்பித்தார்கள். இப்போ தங்கமணிக்கு திடீர் என்று பிரசவ வேதனை ஏற்பட்டது. மூன்று நாட்களாக காய்ச்சலில் படுத்து இருந்த தங்கமணிக்கு திடீர் என்று பிரசவ வலி வந்தது. உடனே வைத்தியரை அழைத்து பார்க்கும்போது சற்று நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று சொல்லி வைத்தியத்தை பார்க்கிறார்கள். இதை பார்த்து கொண்டு இருந்த சத்திய தாய்க்கு மிகவும் கவலை அதிகமாகிவிட்டது. இருந்தாலும் சத்தியதாயின் மன தைரியத்தை விடாமல் நடப்பது நடக்கட்டும் என்று எல்லாம் அந்த மகாகாளி கிருபை என்று நினைத்து கொண்டு 5 பிள்ளைகளை பெற்ற இந்த தாய் தன் மருமகளுடைய பிரசவ வேதனையால் துடித்து கொண்டு இருக்கும் தன் இளைய மருமகளின் நிலைமை என்ன ஆகும் என்பதை கூர்மையாக கவனிக்கிறார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து வைத்தியருடைய விடா முயற்சியால், குழந்தையை பிறக்க செய்கிறார்கள். ஆனால் குழந்தை உயிருடன் இல்லை. எப்படியோ குழந்தை வயிற்றுக்குள்ளே இருந்து வெளியே வந்தது போதும் என்ற நிலை இருந்தது. எல்லோருக்கும் குழந்தை ஆண் குழந்தை என்று தெரிந்து கொண்டார்கள். அடுத்து தங்கமணியுடைய நிலை எப்படி இருக்கிறது என்று கவனிக்கும் போது முன்பை இருந்ததை விட மிக மோசமாக இருப்பதை வைத்தியர்கள் அறிந்தார்கள். தங்கமணிக்கு மூளை காய்ச்சல் அதிகமாகிவிட்டது. வைத்தியர்களும் தங்கமணி உடைய தாய், தந்தையர்களும், சம்பந்தி அவர்களும் பக்கத்தில் உள்ள கொல்லம் கோடு என்ற ஊரில் மருத்துவமனை இருக்கிறது. 10 மைல் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போக ஏற்பாடு செய்தார்கள்.
 
இது சத்திய தாயின் தூண்டுதலின் பெயரில் அப்படி இருந்தும் தங்கமணி நாடி துடிப்பு மிக மோசமாக இருப்பதை வைத்தியர் அறிந்தார். இதற்கிடையில் தங்கமணியை அந்தகாலத்தில் கார், டாக்சி இந்த ஊரில் இல்லை. ஆஸ்பத்திரிக்கு மாட்டு வண்டியின் மூலமாக கொண்டு போக ஏற்பாடுகளும் ஆகிவிட்டது. வைத்தியர் சத்திய தாய் அவர்களை தனியாக அழைத்து, இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம் என்று சொல்கிறார். இதற்கிடையில் தன் மகன்களுக்கு இந்த செய்தியை எப்படியாவது மிக மோசமாக இருக்கிறாள். உடனடியாக புறப்பட்டு வா, என் தந்தி மூலமாக தெரியபடுத்த வேண்டும் என்று வேண்டிய ஏற்பாடுகளை உடனடியாக செய்தார். தந்தி கொடுக்கவேண்டும் என்றால் பாலகாட்டிற்குத் தான் செல்லவேண்டும். சென்னைக்கு தந்தி கொடுக்க சென்றவர் திரும்பி வருவதற்குள் எம்.ஜி.ஆர். அவர்களுடைய மனைவி பார்கவி என்ற தங்கமணி இறந்துவிட்டார். அடுத்த நாள் சென்னையில் தந்தியை பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள் எம்.ஜி.சியுடன் உடனே புறப்படுகிறார்கள். புறப்பட்டு தங்கமணியுடைய ஊருக்கு வருகிறார்கள். மூன்றாவது நாள் தன் மனைவி தங்கமணி வீட்டிற்கு அண்ணனும் தம்பியும் வருகிறார்கள். தங்கமணி இறந்து போன இரண்டாவது நாள் வருகிறார்கள், தங்கமணி வீடு மிக அமைதியாக இருக்கிறது. எம்.ஜி.ஆரும், எம்.ஜி.சியும் பார்த்தவுடன் அங்கு இருந்த அனைவரும் தன் தாயும் சேர்ந்து தன் மகன் எம்.ஜி.ஆரை கட்டி பிடித்து ஓ…. என்று கதறி அழுகிறாள். இதை அறிந்த எம்.ஜி.ஆரும் என் தங்ககுட்டிக்கு என்னவாயிற்று எங்கே என் தங்ககுட்டி என்று உடனே வீட்டிற்குள் செல்கிறார். தங்ககுட்டி இறந்து விட்டாள். நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவளை கொன்றுவிட்டீர்கள். ஓ! என்று கத்துகிறார். இதை பார்த்த அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் தங்கமணிக்கு வீட்டிக்கு வந்து ஆறுதல் சொன்னார்கள். தங்கமணி எப்படி இறந்தார் என்ற விளக்கத்தையும் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்டு அறிந்த எம்.ஜி.ஆர் மெளனம் அடைந்து வாய் திறந்து பேச முடியாத அளவிற்கு துக்கம் கொண்ட எம்.ஜி.ஆர். யாரிடமும் பேசாமல் மெளனமாக அமர்ந்து விடுகிறார்.
 
சிறிது நேரம் கழித்து தன் மகன் கண்ணீரும், கவலையுமாக அமர்ந்து இருப்பதை பார்த்து தன் மகனிடம் வந்து மகனே, நீ, அழுகாதே என்று ஆறுதல் சொல்கிறார். இதை கேட்ட மகன் தாயை பார்த்து எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். அதை கேட்காமல் உன் இஷ்டத்திற்கு எனக்கு கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்து ஒரு வருடத்தில் அந்த அன்பு மனைவியை இழந்து என்னை இப்படி ஒரு விதவையாகிவிட்டாயே என்று தாயிடம் உங்களுடைய சமாதானம் தேவையில்லை என்று சொல்கிறார். இந்த வார்த்தைகளை கேட்ட தாய் வாய் அடைத்து போய் விட்டார். இதை பார்த்த எம்.ஜி.சி. அவர்கள் இப்போது தாயிடம் எதுவும் பேச கூடாது என்று மெளனமாக இருந்து கொண்டார். கொஞ்ச நேரத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் தன் அண்ணனை அழைத்து அண்ணே அம்மாகிட்ட செலவுக்கு பணத்தை கொடுத்து எல்லா விஷயத்தையும் முடித்துவிட்டு சென்னைக்கு வர சொல்லுங்கள் நாம இப்போ புறப்படுவோம். தன் மகளை பறிகொடுத்த மாமனாரும் மாமியாரம் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆரை பார்த்து என்னய்யா வந்தவுடன் புறப்படுகிறீங்க? உடனே எம்.ஜி.ஆர் நான் என் தங்ககுட்டியை கல்யாணம் செய்து கொள்ளும் போது இந்த ஊருக்கு வந்தவன் அதற்கு பிறகு எனது தங்ககுட்டியை இறந்து போன பிறகு வந்து இந்த வீட்டில் இருக்க எனக்கு மனம் இல்லை என்று சொல்லிவிட்டு வாங்க அண்ணே போகலாம் என்று புறப்படுகிறார்கள். சென்னைக்கு வந்த சேரும் வரை எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்கவில்லை. அடுத்த நாள் சென்னைக்கு வந்த பிறகு, வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே படுத்துவிட்டார். இதற்கிடையில் எம்.ஜி.சியுடைய மனைவி தன் கணவருடன் தங்கமணியின் வீட்டில் நடந்த விஷயங்களை கேட்டு அறிக்கிறார்கள். எம்.ஜி.சி. தன் தம்பி உடைய வாழ்க்கை நிலையை நினைத்து வேதனை பட்டாலும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற யோசனையில் தானும் வீட்டுக்குள் இருக்காமல் தம்பிக்கு அடுத்து எந்த கம்பெனியில் என்ன சூட்டிங் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு தம்பியின் நிலைமைகளை சொல்கிறார். தம்பி இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் சூட்டிங் வர முடியும் என்பதை தெரியபடுத்துகிறார். இதற்கிடையில் அண்ணி அவர்கள் எம்.ஜி.ஆரை பார்த்து தம்பி நடந்தது நடந்துவிட்டது நீங்கள் கவலைபட்டு கொண்டு வீட்டிற்குள் இருப்பதால் இறந்து போன உங்களுடைய தங்ககுட்டி திரும்ப வரவா போகிறாள், மூன்று நாள் எங்களிடம் யாரிடமும் பேசாமல் எதுவும் சாப்பிடாமல் இப்படி படுத்து கிடப்பது உங்களுடைய உடம்பு என்னவாகும். நீங்கள் இப்படி படுத்து கிடப்பது, மணியும் ராமும் ஏன் சித்தப்பா சாப்பிடாமல் படுத்து கிடக்கிறார்கள் என்று கேட்கிறார்கள்.
 
நீங்கள் வீட்டிற்குள் நுழைந்த உடனே அவர்கள் இருவரையும் அழைத்து செல்லமாக கொஞ்சுவீர்களே. அந்த சின்ன சிறு குழந்தைகள் உங்களை நினைத்து உங்களிடம் வருவதற்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள். தயவு செய்து எழுந்து குளித்து வந்து சாப்பிடுங்க, எந்த விஷயத்தையும் எப்படிபட்டதாக இருந்தாலும் கவலைபடாமல் உங்களுடைய முயற்சியே வீண்போகாமல் நடந்து கொள்ள கூடிய நீங்கள் இப்படி படுத்து கொண்டு இருக்கலாமா, உங்களுடைய வெற்றி பாதையை இடையிலேயே விட்டு விடலாமா என்று சொல்லிவிட்டு அவர் அந்த அறையை விட்டு போய்விடுகிறார். இவைகளையெல்லாம் நினைத்து பார்த்த எம்.ஜி.ஆர். எழுந்து அவருடைய பணிகளை தொடங்க முயற்சி செய்கிறார்.
 
ஆனாலும், அவர் அடையாரில் அவர் தங்கி இருக்கும் வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று ஒரு உத்திராட்சை கொட்டை வாங்கி கழுத்தில் கட்டி கொண்டு நெற்றியில் விபூதிபட்டை அடித்து கொண்டு, கதர்சட்டை கதர்ஜிப்பா அணிந்து கொண்டு நேராக அவர் நடித்து வரும் பட கம்பெனிகளுக்கு சென்றார். அங்கு எம்.ஜி.ஆரை மிக ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். ஏற்கனவே எம்.ஜி.சி அவர்கள் சொன்ன தகவலை மனதில் நினைத்து கொண்டு வாங்க எம்.ஜி.ஆர் உங்க அண்ணன் எம்.ஜி.சி அவர்கள் ஏற்கனவே எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார். நடப்பது எல்லாம் நம்ம கையிலா இருக்குது எல்லாம் அவன் செயல் கவலை படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார்கள். இதை கேட்ட எம்.ஜி.ஆர் சற்று சிரித்தமுகத்தோடு அவர்களை பார்த்து கடவுளே நான் ஏற்கனவே இந்த முடிவுக்கு வந்து விட்டேன். என் கடன் பணி செய்து கிடப்பதே, நான் கழுத்தில் உத்திராட்சை கொட்டையும், நெற்றியில் விபூதி பட்டையும் போட்டு இருப்பதை பார்த்து என்னை ஒரு சாமியார் என்று நினைத்து விடாதீர்கள். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உள்ள விரதம் என்று சொல்லி விட்டு மற்ற கம்பெனிகளுக்கும் இவர் செல்லும் இடம் எல்லாம் இதே கேள்வி இதே பதில் எந்த எந்த கம்பெனியில் சூட்டிங் இருக்குது என்று அறிந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வரும் போது தன்னுடைய அண்ணன் குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொண்டு வருகிறார். வீட்டிற்குள் நுழையும்போது மணி, ராமு என்று அண்ணன் குழந்தைகளை அழைக்கிறார். சித்தப்பாவின் குரலை கேட்ட அந்த குழந்தைகள் ஓடோ டி வந்த கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் இட்டு கொஞ்சுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருந்த அண்ணனும், அண்ணியும் கண்ணீர் விடுகிறார்கள். காரணம் எம்.ஜி.ஆர் கழுத்தில் இருக்கும் உத்திராட்ச கொட்டையும் நெற்றியில் உள்ள விபூதி பட்டையும் அடுத்து எம்.ஜி.ஆர் அவர்கள் எப்போதும் போல் படப்பிடிப்புக்கு செல்ல ஆரம்பித்தார். தன் மனைவி ஊருக்கு செல்லும்போது குழந்தையை பெற்று நீ குழந்தையுடன் நீ வரும் போது நான் ஒரு கதாநாயகனாக சினிமாவில் நடித்து கொண்டு இருப்பேன், என்று சொன்னதை நினைத்து பார்க்கிறார். அதன்படி தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற முயற்சியை இன்னம் தீவிர படுத்துகிறார். இந்த முயற்சியில் தான் பிரபல பட தயாரிப்பாளர் ஆன நாராயணன் கம்பெனியாரால் A.S.A. சாமி அவர்கள் டைரக்ஷனில் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய கதை வசனத்தில் உருவாக இருக்கும் “ராஜகுமாரி” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிற்று. ஒரு வருடத்தில் இந்த படபிடிப்பு முடிந்து வெளியே வந்தது. அதே நேரத்தில் ஜெமினி ஸ்டூடியோவினால் டைரக்ஷன் ஜெமினி வாசன் அவர்களால் பல லட்சக்கணக்கான ரூபாயால் தயாரிக்கப்பட்ட படம் பெயர் “சந்திரலேகா” இதில் நடித்தவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக வேண்டிய நண்பராகிய எம்.கே. ராதா, டி.ஆர். ராஜகுமாரி, ரஞ்சன், என்.எஸ்.கே, டி.ஏ. மதுரம் அவர்கள் நடித்த படம் ஓ ஓ என்று ஓடிக்கொண்டு இருக்கும் போது எம்.ஜி.ஆர் நடித்து “ராஜகுமாரி”யும் ஓடிக்கொண்டு இருந்தது. இதற்கு முன்னாடி எம்.கே. தியாகராஜபாகவதர், டி.ஆர். ராஜகுமாரி நடித்த படம் “அரிதாஸ்” என்ற இந்த படம் ஒரே தியேட்டரில் மதுரையில் ஒருவருடத்திற்குமேல் ஓடியது. சென்னையில் இதே போல் பி.யு. சின்னப்பா, பி.கண்ணாம்பாள், இருவரும் நடித்த கண்ணகி என்ற சரித்திர படம் இதைவிட பிரமாதமான பெண்களுக்கு உரிய கதை அம்ஸம் கொண்ட படம். இந்த மூன்று படத்துக்கும் இடையிலே புதுமுகமாக நடித்த எம்.ஜி.ஆர். அவர்களின் முதல்படம் நான்காவது இடத்தில் ஓடி கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டு இருக்கும் போது ஒரு நாள் இவர்களையெல்லாம் சந்தித்து பேசி கொண்டு வரும் நேரத்தில் என்.எஸ்.கே. அவர்களை சந்திக்கிறார்.
 
அவரிடம் தன் நிலைமைகளை தெரிவிக்கிறார் என்.எஸ்.கே. அவர்கள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தம்பி நீ எதற்கும் கவலைபடாதே அவசரபடாதே உன் முயற்சியிலிருந்து தவறாதே காலங்கள் கடந்தாலும் உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரும் காலங்கள் இருக்கிறது. உன்னுடைய அழகுக்கும், திறமைக்கும் வாய்ப்புகள் உன்னை தேடிவரும். முதலில் இந்த வேஷத்தைக் கலைத்துவிடு, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் என்னை வந்து பார்த்து பேசி செல்லு என்று வாழ்த்தி அனுப்புகிறார்.
 
அங்கிருந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் கேரளாவுக்கு சென்று இருந்த தன் தாய் வீட்டிற்குள் இருப்பதை கண்டார். தன் மகன் வீட்டிற்குள் நுழைந்த உடன் தாய் ஓடோ டி வந்து தன் மகனை பார்த்து, மகனே என்று சொல்லி கட்டி பிடித்து அழுகிறார். மகனே என்னடா வேஷம் என்று சொல்லி கொண்டு அழுகிறாள். மகன் ஒன்றும் சொல்லாமல் தன் ரூமுக்குள் சென்று விட்டார். அடுத்தநாள் காலையில் என்.எஸ்.கே. அவர்கள் சொன்ன அறிவுரைப்படி எப்போதும் போல் ஜிப்பாவும், வேஷ்டியும் அணிந்து செல்கிறார்.
 
இதை பார்த்த அம்மாவும், அண்ணனும் அண்ணியும் மூவரும் மன சந்தோஷப்படுகிறார்கள். முதல்நாள் இரவு எம்.ஜி.ஆர் கட்டிபிடித்து இது என்ன கோலம் என்று தாய் கட்டி அழுததால்தான் எம்.ஜி.ஆர் உடுத்தியிருந்த உடைகளை கழற்றிவிட்டார் என்று மூவரும் நினைத்து கொள்கிறார்கள். வெளியே சென்ற பிறகு எம்.ஜி.ஆர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்தபடி படங்களில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் சில படங்களும் ஒப்பந்தம் ஆகிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய முன்னேற்றப் பாதையில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறார். உலகில் முதல் யுத்தம் 1938, நடந்து கொண்டு இருந்த சமயத்தில் இந்தியாவில் இந்தியாவுக்கும் ஆங்கிலேயர்க்கும் கடும்போர் நடக்கிறது. சென்னையில் ஆங்கிலேயர்கள் குண்டு வீசப்படும் அபாயகட்டத்தில் இருந்தது. இந்த சூழ்நிலையில் கூட எம்.ஜி.ஆர் எதற்கும் அஞ்சாமல் படப்பிடிப்புக்கு போனார். சென்னையைதாக்க வந்த எதிரிகளின் விமானங்களை இந்திய படை விரட்டி அடிக்கின்றது. இந்த மாதிரி ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் சென்னையை போன்ற பெரிய நகரங்களில் உள்ள 18 வயது நிரம்பிய வாலிபர்களை கட்டாயமாக ராணுவத்திற்கு அழைத்தார்கள். இதை அறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமாவில் நடிக்க ஸ்டூடியோக்களுக்கும், கம்பெனிகளுக்கும் அலைவதை விட பேசாமல் ராணுவத்தில் சேர்ந்து ஒரு வீரனாகி விடலாம் என்று நினைத்தது உண்டு. பிறகு ஒரு நாள் அம்மாவிடமும், அண்ணனிடமும் இதை பற்றி பேசும் போது அம்மாவும், அண்ணனும் இந்த யோசனை ஏற்றுகொள்ளவில்லை. இதற்கு பதிலாக எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் தம்பி நீ குதிரை, ஒட்டகம், கத்தி சண்டை, கம்பு சண்டை, குத்து சண்டை இவைகளை எல்லாம் நீ சரளமாக செய்கிற மாதிரி வரனும், இதோடு கொஞ்சம் ஆங்கிலமும் எழுத படிக்கிற மாதிரி கத்து கொள்ளனும். நீ ஏற்கனவே பல தமிழ் புத்தகங்களை வாங்கி, தமிழ் பேப்பர்களையும் படித்து நல்ல அனுபவசாலியாகி விட்டாய். இப்போ நீ தமிழை சரளமாக எழுதுகிறாய், படிக்கிறாய், நீ எப்படியும் ஒரு பெரிய ஆளாய் ஆகனும், ஆவாய் இனிமேல் இந்த மாதிரி மிலிட்டரி ராணுவம் என்று பேசாதே என்று சொல்லுகிறார். 1942ல் தந்தி பேப்பர் விலை ஒரு அணா, இதை வாங்கி படிக்க தவறுவது இல்லை எம்.ஜி.ஆர். அவர்கள்.
 
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்படுகிறது. தன் தாய் சொல்லை தட்டாத இவருக்கு அந்த தாய் வழியாக இரண்டாம் கல்யாணம் ஏற்பாடு ஆகிறது. பெண்ணின் பெயர் சதானந்தவதி சுமாரான அழகு, நல்ல அன்புகுணமுள்ளவர், சத்தியதாயுடன் வழி வம்சத்தை சேர்ந்தவர், இந்த பெண் வீட்டார் எம்.ஜி.ஆருக்கு பெண் கொடுக்க முழு சம்மதத்தையும் தெரிவித்து விட்டார்கள். இந்த விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் எப்படி பேசுவது யார் பேசுவது என்ற சிக்கல் ஏற்பட்டது. சக்கரபாணி அவர்களும் அவரது மனைவியும் எம்.ஜி.ஆரிடம் பேச மறத்துவிட்டார்கள். தங்கமணி இறந்து ஒரு வருடம் ஆச்சு மகன் இன்னும் அவளையே நினைத்து கொண்டு இருக்கிறான். அவனுக்கு எப்படியும் இந்த திருமணத்தை செய்து வைக்கனும் அவனிடம் நாமே பேசிவிடலாம் என்ற எண்ணத்தோடு ஒரு நாள் இந்த விஷயத்தை பற்றி எம்.ஜி.ஆர் அவர்களிடம் தாய் பேசுகிறார். தாய் சொன்னதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த எம்.ஜி.ஆர் உடனே அம்மா இப்போது தான் நான் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இனி அடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு தேட வேண்டும். நான் எப்படியாவது ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையே எனக்கு கல்யாணம் தான் முக்கியமா, நான் என் வாழ்க்கையில் முன்னேறுவது முக்கியமா, தயவு செய்து இனிமேல் என்னிடம் இந்த கல்யாண பேச்சை பேசாதீர்கள் என்று சற்று கோபத்தோடு பேசியதும் சத்தியதாய் வாய் அடைத்து போய் இருந்துவிட்டார். எப்படி இருந்தாலும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகன்று கொடுக்கும் இந்த விஷயத்தை சத்தியதாய் விடவில்லை கொஞ்சநாள் கழித்து மீண்டும் மீண்டும் தன் மகனுடைய மூடுபொறுத்து இந்த திருமண விஷயத்தை மீண்டும் பேசுகிறார்.
 
எம்.ஜி.ஆருக்கு தன் அன்பு தாயின் வேண்டுதலை உதரிதல்ல முடியவில்லை. தாயிடம் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். வேறுவழி இல்லாமல் இந்த திருமணம் பெண் வீட்டிலேயே நடந்தது இதை சினிமா வட்டாரத்திற்கு தெரியப்படுத்தவில்லை. ஆனால் தனக்கு வேண்டிய மூத்த நடிகர்களிடம் மட்டும் சொன்னார். முதல் திருமணம் போல் இந்த திருமணத்திற்கும் யாரையும் அழைக்கவில்லை. கேரளாவில் திருமணம் நடந்தது சென்னைக்கு வந்து விட்டார்கள். பிறகு எப்போதும் போல் எம்.ஜி.ஆர். அவர்கள் தினமும் தவறாமல் படப்பிடிப்புக்கு செல்வார். வருடத்திற்கு வருடம், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புதிய படங்கள் ஒப்பந்தம் ஆகியது. சிரமங்கள் இல்லாமல் குடும்பம் நடந்து கொண்டு இருந்தது. சதானந்தவதி அவர்கள் கர்ப்பம் அடைந்தார். குடும்பத்தில் மிகவும் சந்தோச நிலை ஏற்பட்டது. ஆனால் விதி விடவில்லை. சதானந்தவதிக்கும் மூன்றாவது மாதம் கர்ப்ப சிதைவு ஏற்பட்டது. இதனால் சதானந்தவதி அவர்கள் சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பிறகு உடல் நலம் குணம்பெற்று சுப வாழ்வுக்குள்ளானார். எம்.ஜி.ஆர் அவர்கள் குடும்ப பொறுப்பை தாயிடமும், அண்ணி இடமும் விட்டு விட்டு அண்ணனும், தம்பியும் முழுக்க, முழுக்க படப்பிடிப்பில் ஈடுபட்டார்கள். இவர்களுடைய கடும் உழைப்பு வருவாய்க்கு தகுந்தாற் போல் செலவுகள் இருக்கணும். இது போல் கொஞ்சம் வசதியான வீடு பார்க்கனும், இந்த விஷயத்தில் எம்.ஜி.சி. அவர்கள் ரொம்பவும் ஈடுபாடு கொண்டு இருந்தார். இதில் சென்னை ராயப்பேட்டை என்ற இடத்தில் நாடக நடிகர்கள் சில சினிமா நடிகர்களும் வசிக்கிறார்கள். இதனால் இந்த ஏரியாவில் ஒரு நல்ல வீடு பார்க்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் அவர்களிடம் சொன்னார் நல்லவர்கள் மனதிற்கு நல்லதே நடக்கும் என்றது போல ராயப்பேட்டை லாயஸ்ரோட்டில் ஒரு வீடு அமைந்தது வீடு பழையதாக இருந்தாலும் சற்று பெரிய வீடு எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் சத்தியதாய்க்கும் மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் வாடகை சற்று அதிகம் என்ன செய்வது என்ற பிரச்சனை ஏற்பட்டது. சரி நாம் மற்ற செலவுகளை எல்லாம் குறைத்து கொள்வோம் எப்படியும் இந்த வீட்டை அமைத்து விடுங்கள் என்று சத்தியதாய் சொல்லின்படி அந்த வீட்டை வாடகைக்கு அமைத்து குடியும் வந்து விட்டார்கள். இந்த வீடு ஏற்கனவே குடி இருந்த வால்டாக்ஸ்ரோடு, அடையாறு வீட்டை விட நல்ல வசதியாக இருந்ததோ இல்லையோ பெரியவர் எம்.ஜி.சி அவர்களுடைய குழந்தைகளுக்கு மிக மிக வசதியாக இருந்தது.
 
இந்த வீட்டின் வசதியை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் எம்.ஜி.சிக்கு ஏதோ ஒரு அளவுக்கு முன்னேறி வருகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த வீட்டிற்கு குடி வந்த பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னை விட சூட்டிங்கில் பிசியாக இருந்தார். அவர் சூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு அவரிடம் எந்த விதமான குடும்ப பிரச்சனைகளை பற்றி பேசக்கூடாது. அவரும் சாமியார்போல் இருக்காமல் தான் சினிமாவில் வாங்கும் சம்பளத்தை அப்படியே அம்மாவிடம் கொடுத்துவிடுவார். முன்பெல்லாம் மகன்கள் கொண்டு வந்து கொடுக்கின்ற பணத்தை சுருக்கு பையில் போட்டு மடியில் சொருகி வைத்து கொள்ளும் காலம் போய் இப்போ காட்ரேஜ் பிரோவில் வைத்து அந்த பீரோவின் சாவியை தான் தன் இடுப்பில் சொருகி வைத்து இருப்பதை பார்த்த மகன்கள் ஆனந்தமடைந்தார்கள். குடும்பம் ஓர் அளவிற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் சமயத்தில் 1949ல் மீண்டும் சதானந்தவதிக்கு கர்ப்பம் உண்டாகி பிறகு அது முன்போல் கருசிதையு ஏற்பட்டு உடல்நலம் சரி இல்லாமல் படுக்கையில் கிடந்து விட்டார். இதை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் தன் மனைவி சதானந்தவதிக்கு உடலில் ஏதோ ஒரு வியாதி இருக்கிறது. அது என்ன வியாதி என்பதை அறிந்து கொள்ள விரும்பினார். இதற்காக சில டாக்டர்களை எம்.ஜி.ஆர் அவர்கள் நேரில் சென்று அனுகினார் அதன்படி சதானந்தவதிக்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் எம்.ஜி.ஆரிடம் வியாதியின் விபரத்தை சொன்னார்கள். இருதய நோய் மற்றும் கர்பப்பையில் கோளாறு இப்படி பல விஷயங்களை எம்.ஜி.ஆர். அவர்களிடம் சொன்னார்கள். சதானந்தவதி அவர்கள் இனிமேல் எந்த வேலைகளையும் செய்யக்கூடாது என்று சொன்னார்கள். இந்த விஷயத்தை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய இடி விழுந்தது போல் இருந்தது. தனக்கு இந்த மாதிரி சோதனைகள் ஏற்பட்டால் எதையும் சமாளிக்கும் தைரியத்தையும் மனத்திடத்தையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு மேலும் சற்று வேகமாக சினிமா வட்டாரத்தில் வீர நடை போட ஆரம்பித்தார்.
 
இவர் வீர நடை நடந்தாலும் வீட்டில் தன் மனைவி, தாய், அண்ணன், அண்ணி மிகவும் சோர்ந்து விட்டார்கள். தன்னுடைய இளைய செல்லமகனுக்கு வாழ்க்கையில் இப்படி கடுமையான சோதனைகள் ஏற்படுகிறதே என்று ஆண்டவனையும் அந்த அம்மனையும் நினைத்து வேதனை பட ஆரம்பித்து விட்டார்கள். தன் மகனுடைய சம்மதம் இல்லாமல் அவனுக்கு கல்யாணம் செய்தது ஒன்றுக்கு இரண்டும் சரியாக அமையவில்லையே இதற்கு காரணம் என்னவாக இருக்கும். மகனுடைய இல்லற வாழ்க்கையை நாம் கெடுத்து விட்டோ மோ இப்படி சத்தியதாய் பலவாறு தன் மனதை குழப்பி கொண்டே இருந்தார்.
 
இந்த சமயத்தில் வால்டாக்ஸ் ரோட்டில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு தனியாக சென்று அந்த கோயில் பூசாரியிடம் தன்னுடைய இளைய மகனுக்கு இல்லற வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களைப் பற்றி விவரமாக சொன்னார். அந்த காளி கோயில் பூசாரி இவைகளை எல்லாம் கேட்டுவிட்டு அம்மா நீங்க அடுத்த வெள்ளிக்கிழமை வாருங்கள். விபரம் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார். அதன்படி அடுத்த வெள்ளிக்கிழமை அன்று அந்த கோயிலுக்கு சென்று பூசாரியை பார்த்து விபரம் கேட்டார். பூசாரி சொன்ன பதில் அம்மா உங்கள் இளைய மகனுக்கு 27 வயது வரை இல்லற வாழ்க்கை அதாவது திருமணம் பாக்கியம் இல்லை.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #22 on: January 27, 2012, 03:51:23 AM »
19.இரண்டாவது மனைவியும் இறந்து விட்டார்


இதை அறியாமல் நீங்கள் அவனுக்கு உங்கள் இஷ்டப்படி திருமணம் செய்து வைத்துவிட்டீர்கள். அது உங்கள் தவறு. இப்போ இரண்டாவது திருமணம் செய்து வைத்த அந்த பெண்ணும் இறந்து விடுவாள். எனவே இனிமேலாவது அம்மா அவனுடைய சொந்த வாழ்க்கையில் நீங்கள் தலையிடாதீர்கள். எந்த விஷயத்தையும் உங்கள் மகன் இஷ்டத்திற்கு விட்டு விடுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும். இதைகேட்ட சத்தியதாய்க்கு தான் மிக பெரிய தவறு செய்து விட்டோ ம் என்று நினைத்து மிகவும் வேதனைப்பட்டார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் தன் மனதிற்குள்ளே வைத்து கொண்டார். பிறகு உடல் நலம் இல்லாமல் படுக்கையில் கிடக்கும் சதானந்தவதிக்கு தினமும் வீட்டிற்கு வந்து நோயை பார்த்து கவனித்துச்செல்லும்படி ஒரு நல்ல டாக்டரை அமைத்தார் எம்.ஜி.ஆர் அவர் தன் தன்னுடைய குடும்ப டாக்டர் B.R. சுப்பிரமணி (BRS) இவர் நிரந்தரமாக எம்.ஜி.ஆர் குடும்ப டாக்டராகிவிட்டார். 1950 முதல் 1976 வரை அவர் நடித்த படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. எம்.ஜி.ஆர் என்ற பெயருடன் புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்ற பெயர்களும் மக்களால் சூட்டப்பட்டது.
 
இவருடைய மூத்த நடிகர்கள் ஆசான்கள், பாராட்டும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்து வந்தார். இதற்கு இடையில் தற்போது குடி இருக்கும் வீட்டை நமக்கு சொந்தமாக வாங்கனும் இதைபற்றி வீட்டுக்காரரிடம் பேசுங்கள் என்று எம்.ஜி.சி. அவர்களிடமும் தன் தாயாரிடமும் சொன்னார். அதன்படி அவர்களும் அதை பற்றி மிகவும் முயற்சி எடுத்துமிக குறைந்த விலைக்கு பேசி முடித்தார்கள். இந்த விஷயத்தை தன் அண்ணனிடம் சொல்லி மகனே நீ போய் வீட்டு ஓனரைப் பார்த்து பேசினால் இந்த வீடு நமக்கு சொந்தமாகி விடும். அதன்படி எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நாள் சூட்டிங் இல்லாத நாள் அன்று வீட்டுக்காரர் வீட்டிற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சென்றார். அங்கு அந்த நேரம் வீட்டில் வீட்டுக்காரரும் இருந்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை அவரிடம் நான் தான் எம்.ஜி.ஆர் தங்களிடம் ஒரு 5 நிமிடம் பேசனும் அடியேனுக்கு அனுமதி கிடைக்குமா என்றார். உடனே அவர் வாங்க, வாங்க 5 நிமிடம் என்ன 10 நிமிடமே பேசலாமே என்ன விஷயம் சொல்லுங்க எம்.ஜி.ஆர் அய்யா நான் பேசப்போவதை கேட்டு கோபப்படக்கூடாது (தவறாக நினைத்து) நாங்கள் குடி இருக்கும் தங்களுடைய வீட்டை விற்க போவதாக கேள்விபட்டோ ம். அப்படி அந்த வீட்டை விற்பதாக இருந்தால் அதை எங்களுக்கே விலைக்கு கொடுத்து உதவுங்கள் என்று மிக பணிவோடு கேட்டார். வீட்டுக்காரர் சற்று யோசனை செய்து விட்டு அதை நான் இப்போதைக்கு விற்பதாக இல்லை என்று அவர் சொன்னதும் உடனே எம்.ஜி.ஆர் அவர்கள் ரொம்ப நல்லது. வணக்கம் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்ததும் அம்மாவும், அண்ணனும் மிக ஆவலோடு விவரத்தை கேட்டார்கள். எம்.ஜி.ஆர் விவரத்தை சொன்னார். கடவுள் செயல் நமக்கு இந்த வீடு கிடைக்கனும் என்றால் கண்டிப்பாக கிடைக்கும். அது போல் அந்த வீடு இவங்களுக்கே கிடைத்தது குறைந்த விலைக்கு நிறைந்த மனதோடு அந்த வீட்டுக்காரர் அட்வகேட் ஐயர் பெயர் ராமன் நல்ல குணமுள்ளவர். இந்தவீடு தான் எம்.ஜி.ஆர் அவர்களுடைய கடும் உழைப்பால் பெரும் முயற்சியால் முதல் முதலாக சொந்தமாக வாங்கப்பட்ட சொத்து.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #23 on: January 27, 2012, 03:55:05 AM »
20.முதன் முதலில் சொந்தமாக வீடு


அந்த வீடுசற்று சிறியதாக இருந்தாலும் வீட்டிற்கும் முன்னும் பின்னும் காலி இடம் இருந்தது. சென்னை நகரில் ராயப்பேட்டை என்பது ஒரு முக்கியமான இடம். மேலும் இந்த வீடு இருக்கும் நல்ல பெரிய ரோடு பெயர் லாயட்ஸ்சாலை இப்போ அவ்வை சண்முகம் சாலை ஐகிளாஸ் ஏரியா இந்த வீட்டின் கதவு எண் 160 கூட்டு எண் 7 எம்.ஜி.ஆர். அவர்களுடைய ராசி நம்பர் 7 நாளடைவில் அந்த வீட்டில் உள்ள காலி இடங்களில் வசதிக்குத் தகுந்தார் போல் கட்டிடங்கள் கட்டி பழைய கட்டிடத்தை புதுப்பித்து, புதுசையும், பழசையும் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய வீடாக்கி விட்டார்கள். அந்த வீட்டிற்கு “தாய் வீடு” என்று பெயர் வைத்தார் எம்.ஜி.ஆர் பிறகு அந்த வீட்டை ஒரு புதிய வீடாக கட்டியதை அந்த வீட்டை விற்ற அட்வகேட் ராமன் அவர்களிடம் விவரங்களை சொல்லி அந்த வீட்டின் திறப்பு விழாவில் விளக்கேற்றி வைத்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொண்டார் எம்.ஜி.ஆர். அதன்படி அட்வகேட் ராமன் அவர்களும் வந்து விளக்கேற்றி வைத்து ஆசிர்வாதம் செய்தார். இதை போல் இன்னும் பல சொத்துக்களை வாங்கிநல்ல பெயரும் புகழுமாக வாழவேண்டும் எம்.ஜி.ஆரை பார்த்து சொல்லிக் கொண்டு இருக்கும் போதே எம்.ஜி.ஆர் அவர்கள் அந்த அட்வகேட் காலை தொட்டு வணங்கினார். அவர் எம்.ஜி.ஆரை தூக்கி தோள்பட்டை தட்டி கொடுத்து வாழ்த்தினார். அவருக்கு அப்போது வயது 60க்கு மேல் இருக்கும். ஒரு வக்கீல் அதிலும் பிராமின் இவர் நம்ம குடும்பத்தில் இவ்வளவு அன்பு பாசம் வைத்து இருக்கிறாதே மகன்களே இவரை என்றும் மறக்கக்கூடாது என்று சத்தியதாய் மிக உணர்ச்சி வசத்தோடு மகன்களிடம் சொன்னார். வருடத்திற்கு வருடம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் அதிகமாக புக்கானது இவர் நடித்த படங்கள் நல்ல வருமானத்தை பட தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது.
 
1950க்கு மேல் இவருடைய வீட்டிற்கு முன் எம்.ஜி.ஆர் அவர்களை பார்க்க காலையிலும் மாலையிலும் ரசிகர்கள் கூட்டமாக வீட்டுக்கு வெளியே ரோட்டில் நின்று கொண்டு இருப்பார்கள். எம்.ஜி.ஆர். அவர்களும் சூட்டிங்குக்கு போகும் போதும் திரும்பி வீட்டிற்கு வரும் போதெல்லாம் ரசிகர்களை பார்க்காமல் போவதில்லை. இதை கண்ட சத்தியதாய் மிகவும் பெருமை அடைந்தார். இந்த நிலை மாதம் வருடம் என்ற முறையில் தமிழ்நாடு எங்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். பிறகு 1954க்கு மேல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தமிழ்நாடு எங்கும் ரசிகர் மன்றங்கள் பெருகிவந்தது. இவர் D.M.K.யில் சேர்ந்த பிறகு சென்னையில் நடிகர்கள் என்.எஸ்.கே, கே.ஆர்.ராமசாமி, டி.வி. நாராயணசாமி, எஸ்.எஸ். ஆர், வளையாபதி, முத்து கிருஷ்ணன் இன்னும் சிலர் ஒரு கூட்டாக அமைந்தார்கள். சிவாஜி, டி.ஆர். மகாலிங்கம் இவர்கள் தனி இவர்கள் வளர, வளர சினிமாவில் இவர்களுக்கு முன் மூத்த கதாநாயகர்கள் கொன்னப்பா, தியாகராஜ, பாகவதர், பி.யு. சின்னப்பா, எம்.கே. ராதா இன்னும் சிலர்கள் இவர்கள் எல்லாம் சினிமாவில் இருந்து விலக ஒருசந்தர்ப்ப சூழ்நிலை ஏற்பட்டது. இதை நான் சுருக்கமாக எழுதி உள்ளேன்.
 
1960ல் இருந்து 1976 வரை தமிழக மக்களின் இதயங்களிலும், அகில உலக தமிழ் மக்கள் இதயங்களிலும் கொடி கட்டி பறந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய சினிமா வாழ்க்கையை சற்று சுருக்கமாக முடித்து கொண்டு அடுத்து அவருடைய அரசியல் வாழ்க்கையை பற்றி பார்ப்போம். எம்.ஜி.ஆர். அவர்கள் 1937ல் வெள்ளையர் ஆட்சி காலத்தில் காந்தியுடைய இயக்கத்தில் இணைந்து வெள்ளையனே வெளியேறு, வந்தே மாதரம் மகாத்மாகாந்திக்கு ஜே என்று சொல்லியவர்களில் ஒருவர் மக்கள் திலகமும் ஒருவர். இவருக்கு நாடக கம்பெனி முதலாளிகள் எல்லாமே காந்தி இயக்கம் இதைபோல் சினிமாவுக்கு வந்த பிறகு இங்கேயும் காந்தி இயக்கம். இதில் காந்தி அடிகள் அகிம்சை போராட்டம் செய்பவர். அகிம்சை முறை பிடிக்காமல் சுபாஷ் சந்திரபோஸ் விலகி வீரபோர் என்ற பெயரில் ஒரு அமைப்பை வீர சுபாஷ் போஸ் கொண்டு வந்தார். இந்த இயக்கத்தில் பல இளைஞர்கள் சேர்ந்தார்கள் இதில் மக்கள் திலகமும் ஒருவர்.
 
1947ல் இந்தியாவை காங்கிரஸ் வெள்ளையர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியது. 1948ல் இருந்து எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரசில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காமராசர் சிஷ்யனாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் 1953ல் கலைஞர் கருணாநிதி, டி.வி. நாராயணசாமி இவர்களுடைய தூண்டுதலில் அண்ணா அவர்களுடைய சிஷ்யன் ஆனார். பிறகு எம்.ஜி.ஆர். அவர்களுடைய புரட்சிகரமான அரசியல் வாழ்க்கையை பற்றி தமிழ் மக்களும், அகில உலக தமிழர்களும் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அரசியல் திறமையை பற்றி எல்லோருக்கும் அறிந்த விஷயமே. எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் புரட்சி நடிகர் என்று புகழ்பெற்றார். அரசியலில் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார். பிறகு 1977 தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். (1967ல் பரங்கிமலை காங்கிரஸ் கோட்டையை பிடித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிலிருந்து அரசியல் கொடியை தமிழ்நாடு எங்கும் ஏற்றி வந்தவர் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்ட்ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினத்தன்று மக்கள் திலகம் தேசிய கொடியை ஏற்றினார். இதை தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு வரை இந்த தேசிய கொடியினை 10 ஆண்டு காலமாக சுதந்திர கொடியை ஏற்றி வந்தார் என்பது தமிழக மக்கள் அறிந்த விஷயமே. இந்த 10 ஆண்டு கால கட்டத்தில் தமிழக மக்களுக்கு எப்படி ஒழுங்கு முறையாக ஆட்சி நடத்தினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.
 
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் முப்பிறவி எடுத்தவர், மூன்று முறை அரசு ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்தவர், மேலும் எம்.ஜி.ஆர் அவர்கள் மூன்று துறைகளில் புகழ் பெற்றவ்ர, சினிமா, அரசியல், அரசாட்சி இதோடு அவருடைய சொந்த வாழ்க்கையில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். இதில் முப்பிறவி எடுத்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இவைகள் அனைத்தும் தமிழக மக்கள் நன்கு அறிந்ததே.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #24 on: January 28, 2012, 08:36:31 PM »
21.வி.என். ஜானகி அம்மா வரலாறு


வி.என். ஜானகி அம்மா அவர்கள் சொந்த ஊர் கேரளா பாலக்காட்டுக்கு அடுத்து உள்ள வைக்கம் என்ற ஊர். இவர் பிரபல கர்நாடக பாடல் அசிரியர் பாபநாசம் அவருடைய தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள் தான் வி.என். ஜானகி அம்மா அவர்கள். வைக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும் படித்தது, நடனம் கற்றக்கொண்டது எல்லாம் சென்னைதான். இவருடன் பிறந்தது ஒரு ஆண் அவர் பெயர் நாராயணன். இவர்கள் சென்னை மைலாப்பூர் கேசவப் பெருமாள் கோயிலுக்கு அருகில் வசித்தார்கள். இவர்கள் பக்கா பிராமின் வி.என். ஜானகி அவர்கள், பிரபல டைரக்டர் K. சுப்பிரமணி, நடிகை S.D. சுப்புலட்சுமி அவர்கள் நடத்தி வந்த நாடக குழுவில் நடித்து வந்தார். பிறகு டைரக்டர் K. சுப்பிரமணி வழியாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” இந்த படத்தில் கதாநாயகியாக ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளார். அந்த படத்தில் இவர் ஆயிரம் தலைகளை வெட்டி குவிக்கும் காட்சி மயிர் சிலிர்க்க வைக்கும் அந்த படம். எம்.ஜி.ஆர். அவர்களுடன் கதாநாயகியாக நடிக்க சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் மோகினி 1948ல் வெளிவந்தது. அதை அடுத்து மருதநாட்டு இளவரசி, நாம் போன்ற படங்கள் இவர்கள் நடித்த படங்கள். இந்த கால கட்டத்தில் இல்லற வாழ்க்கையே நமக்கு இனிமேல் ௾ல்லை தான் உண்டு தன் தொழில் உண்டு உழைப்பே உயர்வு என்ற ஏணியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய சறுக்கல் அதாவது எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மூன்றாவது கல்யாணம் நடக்க இயற்கை அழைக்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் மூன்று படங்களில் ஜானகி அம்மாள் நடித்து உள்ளார்கள்.
 
இதற்கு இடையில் எம்.ஜி.ஆர். மீது அன்பு கொண்டார். (காதல்) இதை அறிந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அன்புக்கு அடிமையானார். ஆனால் காதல் என்பது சினிமாவில் மட்டும் (நடிப்பில்) என்னுடைய சொந்த வாழ்க்கையில் இல்லை. என் தாய் உடனே எனக்கு கேரளாவில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். நான் அந்த பெண்ணுடன் ஒரு வருடம் தான் வாழ்ந்தேன். பிறகு ஒரு வருடம் கழித்து எனக்கு கட்டாயமாக இரண்டாவது கல்யாணம் நடந்தது. அந்த பெண்ணோடு நான் ஒரு வருடம் தான் நல்ல சந்தோஷமாக வாழமுடிந்தது.
 
பிறகு அந்த பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அது சரி ஆகாமல் தொடர்ந்து உடல் நலக்குறைவாகவே இருக்குது. இந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ள என்னிடம் என்னை நீங்கள் விரும்புவது எப்படி சரியாகும், தயவு செய்து இது வேண்டாம் நாம் இருவரும் நண்பர்களாக ௾ருப்போம் தொடர்ந்து படங்களில் நடிப்போம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் மிக விளக்கமாக சொன்னார். இருந்தாலும் தன்னுடைய குடும்ப நிலைகளை விபரமாக சொன்னார். வி.என். ஜானகி அவர்கள் பெண் என்றால் பேயின் மனம் இறங்கும் என்பது போல் எல்லாவற்றையும் யோசித்த எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்பட்டார். ஒரு பக்கம் தன் தாய், மறு பக்கம் தன் மனைவி, மேலும் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணை காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ சட்டப்படி குற்றம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் நன்கு அறிவார். அவர் நாடகம், சினிமா, குடும்ப வாழ்க்கையில் மிகவும் அனுபவம் பெற்றவர். எதையும் யோசிக்காமல் செய்யமாட்டார். அப்படிபட்ட இவருக்கு வி.என். ஜானகி அம்மா விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. வி.என். ஜானகி அம்மாவிடமும், சதானந்தவதியிடமும் பேசுவது, சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடுவோமே என்று மிகவும் மனதை தைரியப்படுத்தி கொண்டு ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் தன் மனைவியை பார்த்து விட்டுத்தான் மற்ற வேலைகளை செய்வது வழக்கமாக நடக்கிற விஷயம். இப்போ தன் மனைவியிடமே நேரடியாக இதை பற்றி பேசி விடலாம் என்ற எண்ணத்துடன் தன் மனைவியிடம் வி.என். ஜானிகி அவர்களைப் பற்றி முழுவிவரத்தையும் சுருக்கமாக சொல்லிவிட்டு பிறகு காதல் கல்யாண விஷயத்தையும் கடகடவென்று சொல்லிவிட்டு தன் மனைவியின் கையை பிடித்து கொண்டார். இந்த விஷயத்தில் மனைவியின் சம்மதம் இருந்தால் போதும். பிறகு மற்றவர்களுடைய சம்மதத்தை பெற்று விடலாம். தன் கணவர் தன்னிடம் பேசியதை கேட்டு கொண்டு இருந்த சதானந்தவதி அவர்களின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
 
இதை பார்த்த எம்.ஜி.ஆர். உடனே கண்ணீரை துடைத்து விட்டு கொண்டே தன் மனைவியிடம் உனக்கு இது பிடிக்காவிட்டால் விட்டு விடு அழாதே உன்னுடைய சம்மதம் இல்லாமல் இனி மேல் அந்த பெண்ணிடம் பேச கூட மாட்டேன். கவலைபடாதே இந்த விஷயத்தை அம்மாவிடம் கூடநான் சொல்லவில்லை நீ நல்லா யோசித்து உன் முடிவை மெதுவாக சொல் அவசரம் இல்லை என்று சொல்லிவிட்டு அவருடைய அறைக்குள் போய்விட்டார். இவர் சென்ற பிறகு தன்னுடைய கணவருடைய நிலமையைப் பற்றியும் அவருடைய வேண்டுகோளைப் பற்றியும் நினைத்து இந்த விஷயத்தை அடுத்த நாள் தன் மாமியார் இடமும் எம்.ஜி.சி. அவர்களிடமும் இந்த விஷயத்தை பற்றி பேசினார். இந்த செய்தியைக்கேட்ட இந்த இருவருக்கும் அதிர்ச்சி அடைந்து போனார்கள். பிறகு சதானந்தவதி சத்தியதாயிடமும் எம்.ஜி.சி அவர்களிடமும் தன் கணவர்விருப்பப்படி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும், எனக்கு என் கணவருடைய மன நலம் தான் முக்கியம் அவருடைய மனம் நோகக்கூடாது. என்னுடைய உடல் இனிமேல் நலம்பெற்று நான் எழுந்து மீண்டும் என்னுடைய பொறுப்புகளை சேவைகளை அவருக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே தயவு செய்து அவரிடம் எந்த வித மறுப்பும் சொல்லாமல் கேள்விகள் கேட்காமல் அவரிடம் நீங்களே உங்களுடைய சம்மத்தை சொல்லுங்கள். அவர் மனம் புன்படாமல் நல்ல சந்தோஷமாக இருப்பது தான் நமக்கு முக்கியம் என்று சொல்லிக்கொண்டு சத்தியதாயுடைய கையை பிடித்து கண்ணீர் விட்டார். இந்து அகராதிப்படி கணவன் தன் மனைவியிடம் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளபோகிறேன் என்று சம்மதம் கேட்டதும் இல்லை. மனைவி கணவருக்கு சரி செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதில்லை. எந்த சூழ்நிலையிலும் தன் கணவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் வைப்பாட்டியோ 2வது பெண்டாட்டி வைத்து கொள்ள நல்லமனத்துடன் சம்மதிக்க மாட்டார்கள்.
 
ஆனால் சதானந்தவதி அவர்கள் தன் கணவர் தன்னிடம் நான் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டதை நினைத்து பூரிப்பு அடைந்து போனார். தன் மனைவி ஒரு படுக்கை நோயாளி என்று நினைக்காமல் பாசத்தோடும் பற்றோடும் கேட்டாரே இவர் வேறு திருமணம் செய்து கொண்ட பிறகு நம் மீது வைத்துள்ள அன்பும், பாசமும், பற்றும் போய்விடுமோ என்று நினைத்து எதுவானாலும் சரி அவர் நல்லா இருந்தால் போதும். நாம் சாகும் வரை அவருடைய முகத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் போதும். இந்த விஷயத்தில் சத்தியத்தாயும் எம்.ஜி.சி. அவர்களும் எந்த வித மறுப்பும் சொல்லவில்லை. அப்படி இப்படினு எப்படியோ 1957ல் எம்.ஜி.ஆர் அவர்களும், வி.என். ஜானகி அம்மா அவர்களும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு ராயப்பேட்டையிலேயே ஒரு தனி வீடு பார்த்து குடித்தனம் அமைத்தார். திருமணம் செய்து கொண்ட உடனே வி.என். ஜானகி அவர்களை சதானந்தவதிக்கு அறிமுகப்படுத்தினார். உடனே வி.என். ஜானகி அவர்கள் சதானந்தவதி அவர்களுடைய காலை தொட்டு வணங்கி விட்டு அக்கா நான் உங்களுடைய உடன் பிறவா தங்கை என்னை உங்கள் தங்கை போல் நினைத்து கொள்ளுங்கள் எனக்கு இப்போ என் உடன் பிறந்த தம்பியைத் தவிர வேறு யாரும் இல்லை. இதை கேட்ட சதானந்தவதி அவர்கள் வி.என். ஜானகி அவர்களுடைய கையைப்பிடித்து கொண்டு நான் இருக்கிறேன் கவலைபடாதே என்றார்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #25 on: January 28, 2012, 08:37:32 PM »
22.ஜானகி அம்மையாரின் சபதம்


அன்று மதியம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். கல்யாணத்திற்கு பிறகு, வி.என். ஜானகி அவர்கள் இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை நான் உங்கள் மனைவி, வீட்டோ ட இருந்து விடுகிறேன் என்று எம்.ஜி.ஆர் அவர்களிடம் சபதம் எடுத்து கொண்ட வி.என். ஜானகி அவர்கள் கடைசிவரை அப்படியே வாழ்ந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் வாழ்ந்த காலங்கள் 40 ஆண்டுகள். 1957 முதல் 1987 வரை. பிறகு, 1958ல் சத்தியதாய் இறந்துவிட்டார். எம்.ஜி.ஆர். அவர்களும் வி.என். ஜானகி அவர்களும் தினமும் தாய் வீட்டிற்கு வந்து சதானந்தவதி அவர்களின் உடல் நலத்தைப் பார்த்து செல்வார்கள். இந்த கால கட்டத்தில் “எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்” என்ற பெயரில் எம்.ஜி.ஆர் அவர்கள் சொந்தமாக “நாடோ டி மன்னன்” என்ற பெயர் வைத்து பிரமாண்டமான முறையில் ஒரு படத்தை தயாரித்தார். அந்த படத்தை அவரே டைரக்ட் செய்தார். படம் சூட்டிங் முடிந்து வெளியிடப்பட்டது அந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இதற்கு முன் “எம்.ஜி.ஆர். நாடக மன்றம்” என்ற பெயரில் சில நாடகங்கள் சொந்தமாக நடத்தினார். திரு. எம்.ஜி.ஆர். அவர்களுடைய லட்சியமும் சத்தியதாயுடைய தெய்வ வேண்டுதலும் வீண் போகாமல் கொஞ்சம் நிறைவேறியது.
 
தன்னுடைய கடும் உழைப்பும் தன் அண்ணனுடைய உழைப்பும் தாயுடைய சிக்கன செலவும், அதாவது சிக்கனம் முக்கியம். சேமிப்பு அவசியம் என்ற சொல்படி எல்லாமே வெற்றிகரமாக நடந்தது. சொந்தத்தில் வீடு சொந்தத்தில் கார், சொந்தத்தில் நாடக கம்பெனி, சொந்தத்தில் ஸ்டூடியோ, சொந்தத்தில் சினிமா படம் தயாரிப்பு, சொந்ததில் கல்யாண மண்டபம், சொந்தத்தில் ஒரு சிறிய மார்க்கெட், சொந்தத்தில் ஸ்கூல், சென்னை நகருக்கு வெளியே ஒரு தோட்டத்தில் ஒரு சிறிய பங்களா, ஆடு, மாடு, கோழி, குருவிகள், பழமரங்கள், பண்ணையில் வேலை செய்ய பலவேலை ஆட்கள் உணவு உன்னும் நேரத்தில் தன்னை காண வீட்டுக்கு வந்து இருப்பவர்களுக்கு எல்லாம் உணவு தனக்கு வேண்டிய அளவிற்கு சம்பாத்தியம் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்படி வாழனும் என்று நினைத்தாரோ அதே போல் வாழ்ந்தார், நினைத்ததை முடித்தவர். மக்கள் திலகம் தன் தாயுடைய கனவுகளை எல்லாம் நிறைவேற்றிய மகன் எம்.ஜி.ஆர். ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். திரு. மக்கள் திலகம் அவர்களுக்கு தாய்க்குப் பின் தாரம் இந்த சொல் எம்.ஜி.ஆருக்கு மிக பொருத்தமாய் இருந்தது. நோயால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த சதானந்தவதி 1962ல் இறந்து போனார். பிறகு, இரண்டு மாதம் கழித்து சென்னை நகருக்கு வெளியே ராமாபுரம் என்ற இடத்தில் ஒரு தோட்டத்தில் புதிதாக கட்டியிருந்த வீட்டிற்கு தன்னுடைய மூன்றாவது மனைவி வி.என். ஜானகியுடன் சென்று வாழ்ந்தார்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #26 on: January 28, 2012, 08:38:28 PM »
23.தாய்க்குக் கோயில்



ராமாபுரம் தோட்டத்தில் தன் தாய்க்கு கோயில்கட்டினார். மக்கள்திலகம் வெளியே போகும் போது தினம்தோறும் தன் தாயை வணங்கிவிட்டு தான்செல்வார்.
 இதே போல், ராயபேட்டையில் தன் தாய் வீட்டிலும் ஒரு பெரிய தாயின் படம், “சத்யா ஸ்டூடியோ”விலும் அவருடைய அலுவலகத்திலும் தாயின் படம் மாம்பலம் அலுவலகத்திலும் தாயின் படம். தாயே தெய்வம் என்று தினந்தோறும் பூஜித்து வந்தார் மக்கள் திலகம். மக்கள் சேவையே என் சேவை. நான் முதல் மந்திரியாக இருந்தாலும் மக்கள் சேவகன். மக்கள் வாழ்வே என் வாழ்வு இது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு, அவர் சொன்ன வார்த்தைகளும், எண்ணமும் இது தான்.
 
தன் தாய் இறந்த பிறகு தன் அண்ணன் சக்கரபாணி அவர்களை தாயாக நினைத்து எந்த விஷயமாக இருந்தாலும் கலந்து பேசாமல் செய்ய மாட்டார். இதில் அவர்கள் இருவரும் அண்ணன் தம்பியும் சொந்தத்தில் ஆரம்பித்த நாடக கம்பெனிக்கும் சினிமா கம்பெனிக்கும், முழு பொறுப்பையும் தன் அண்ணணிடமே கொடுத்து இருந்தார். அவருக்கு துணையாக இருந்து எல்லா பொறுப்புகளையும் கணக்கு, வழக்குகளையும் கவனிக்கும்படி ஆர். எம். வீரப்பன் அவர்களை நியமித்தார். தான் முதல் அமைச்சராக ஆன பிறகும் கூட தன் அண்ணனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து கொண்டே இருந்தார். இதே போல் சக்கரபாணி அவர்களும் தன் உடன் பிறந்த தம்பி மனம் நோகாமல் நடந்து கொள்வார். தம்பி தன்னிடம் பேசும்போதெல்லாம் மிக கவனமாக தம்பிக்கு ஏற்றமாதிரி பதில்களை சொல்வார். திரு. சக்கரபாணி அவர்கள் தன்னுடன் பிறந்த மூத்தவர்கள் சகோதரிகளையும், சகோதரனையும், தன் தந்தையுடைய புகழ்களையும் தன் தாய் அவர்களுக்கு பிறகு தன்னையும் தன் உடன் பிறந்த தம்பியையும், வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நினைக்காத நேரமும்இல்லை. இதை பற்றி தனக்கு வேண்டிய முக்கியஸ்தர்களிடம் பேசாமல் இருப்பதும் இல்லை. தன்னையும் மனைவி மக்களையும் எந்த குறைகளும் இல்லாமல் எனது தம்பி ராமச்சந்திரன் பார்த்து கொள்கிறான் என்ற பெருமையை வெளியே பேசாமலும் இருப்பதும் இல்லை. தன் தம்பி ராமச்சந்திரன் சிறுபிள்ளையாக இருக்கும் போது ரொம்பவும் சுறுசுறுப்பாகவும், சட்டித்தனமாகவும் இருப்பான். அவன் செய்யும் குறும்புகளை அம்மா ஒருவரால் தான் அவனை அடக்க முடியும். அப்படிப்பட்ட என் தம்பியுடன் நாடகம், சினிமா, அரசியல், இப்படி அவனுடன் நான் சேர்ந்து வாழ்ந்த காலங்களை நினைத்து ஆச்சரியப்படுவேன். அவன் பிரபலமாக வாழ்கின்ற இந்த காலத்தில் பெரிய சாது போலவும், ஞானிகள் போலவும் பெரும் அரசியல் தலைவர் போலவும் அவன் பேசுவதும் அவன் நடந்து கொள்ளும் விதமும் ஒரு பெரிய உயர்ந்த மாமனிதனாக ஆகிவிட்டான் என்பதை நினைத்து பூரிப்பு அடைகிறேன்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #27 on: January 28, 2012, 08:58:03 PM »
24.1957ல் ஒரு முக்கியமானவரிடம் மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விஷயம்



மக்கள் திலகம் அவர்களிடம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டி உங்களுக்கு அறிவுரைகளை சொன்னது யார், யார், என்பதை தயவுடன் சொல்லுங்கள் என்று ஒரு முக்கியமானவர் கேட்டார். உடனே திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் சற்றும் யோசிக்காமல் அந்த விஷயத்தை சொன்னார் சுருக்கமாக.
 1. எனது தாயுடைய அறிவுரைகள், கண்டிப்பான வளர்ப்பும் தான்.
 2. அடுத்து நான் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கு நாடகத்தில் நடிக்க சொல்லி தந்த வாத்தியார்.
 3. கம்பெனி முதலாளி
 4. நடனம், சண்டை பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவரும் எனக்கு நல்ல முறையில் மிகவும் கண்டிப்பான விதத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். நானும் அவர்களுடைய கண்டிப்பு, அடி, இவைகளையெல்லாம் சமாளித்து கொண்டு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிலும் நல்ல பையன் சுறுசுறுப்பானவன் நல்ல அறிவுள்ளவன் என்று அவர்களால் புகழப்பட்டேன். நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கூட திரை மறைவில் நின்று கொண்டு பிரம்பால் அடிப்பார்கள் அதை எல்லாம் அன்றைக்கு சமாளித்ததால் தான் சினிமாவில் நல்லா நடிக்க முடிந்தது என்றார் மக்கள் திலகம். அன்றைக்கு குருவாக இருந்தவர்கள் மதுரை பாய்ஸ் கம்பெனி முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், ஆசிரியர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு. கந்தசாமி, காளி. என். ரத்தினம் அவர்களும் சண்டைப் பயிற்சியாளர் இவர்கள் தான் இதற்கு மேல், பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே. ராதா இவர்களை விட தன் உடன் பிறந்த தம்பிபோல் பாவித்து என் மனம் கவலைபடாத அளவிற்கு குடும்ப விஷயத்திலிருந்து அதாவது குடும்ப விஷயத்தை பற்றி கூட அறிவுரைகளை சொல்லக்கூடியவர் திரு. என்.எஸ்.கே அவர்கள் தான்.
 
எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்பட்ட போதெல்லாம் அவரிடம் போய்விடுவேன். அவரிடம் ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தால் போதும், அவர் ஒரு காலகட்டத்தில் வெள்ளைக்கார ஆட்சியில் ஜெயிலுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது என்.எஸ்.கே. தியாகராஜபாகவதர் இவர்கள் மீது ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை சம்பந்தமாக 1944ல் ஜெயிலில் போட்டு விட்டார்கள். அது சமயம் நான் மிக மிக வேதனை அடைந்தேன். பிறகு, அவர்கள் ஜெயில் தண்டனை, முடிந்து விடுதலை ஆகி 1947க்க வீட்டுக்கு வந்த பிறகு, எல்லோரையும் பார்த்து நடந்த சம்பவத்தை பற்றி ஆறுதல் செய்திகள் சொன்னேன். பிறகு, என்.எஸ்.கே. அவர்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருந்தேன். அவர் கேட்காமலேயே நானும் அந்த சமயம் கொஞ்சம் வசதி உள்ளவன் ஆகிவிட்டேன். அப்படி நான் செய்யும் உதவிகளை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். கடவுள் தான் ராமச்சந்திரன் உருவத்தில் வந்து இருக்கிறாரோ என்று கலைவாணர் நினைப்பாராம். இதை என்னிடம் சொல்லுவார்கள்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #28 on: January 28, 2012, 09:00:46 PM »
25.கலைஞர்களை ரசித்த மக்கள் திலகம்


                டி.ஆர்.மகாலிங்கம்



மக்கள் திலகம் அவர்கள் ஒரு முக்கிய நண்பரிடம் சொன்ன விஷயம் எனக்கு டி.ஆர். மகாலிங்கம் அவர்களை பிடிக்கும். அவருடைய கர்நாடக இசையிலிருந்து சினிமா படங்கள் வரை நல்ல உயர்ந்த குரல் வளம் உடையவர். ஒருவர் சொந்த குரலில் பாடுவார். அந்த காலத்தில் சுதி, சுரம், என்று சொல்வார்கள். சுருக்கமாக கட்டை என்றும் இதற்கு ஒரு சொல் உண்டு.
 
இதில் தமிழ்நாட்டிலேயே அந்த காலத்தில் மகாலிங்கம் அவர்கள் 8 கட்டை சுரத்தில் பாடிய ஓரே ஆள் இவர்தான். இம்மாதிரி நான் இன்னும் எவ்வளவோ பெயர்களைப் பற்றி சொல்லுவேன். இப்போ நேரம் இல்லை. இன்னொரு நாளைக்கு பேசலாம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் முடித்துகொண்டார்.
 
அதே நபர் சில நாட்கள் கழித்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை மீண்டும் சந்திக்கிறார். வந்தவர் எம்.ஜி.ஆர். அவர்களை சார் என்று தான் அழைப்பார். வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு உங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறேன் என்று நினைக்காதீர்கள் எனக்காக அரைமணிநேரம் ஒதுக்கினால் போதும் என்று சொல்லி கொண்டே சார் உங்கள் வாழ்க்கையில் நாடகம், சினிமா, அரசியல் இப்படி மூன்று துறைகளிலும், இடையில் ஏற்பட்ட சிரமங்களையும் சமாளித்து கொண்டு வந்து இருக்கிறீர்கள். உங்களுடைய கொள்கை முயற்சியின் படி எல்லாவற்றிலும் நீங்களே முதல்வராக வெற்றி கொண்டு இருக்கிறீர்கள். இன்று உள்ள அரசியலைப் பற்றிபேசுவதை விட சினிமாவைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை விவரம் கேட்கிறேன்.
 
அதாவது இன்றைய தமிழ் சினிமா உலகத்தில் மக்கள் திலகம், நடிகர் திலகம் இந்த இருவரும் தான் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கும், தங்களுக்கும் போட்டி பொறமை எப்போதாவது ஏற்பட்டது உண்டா? உடனே மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பதில் ஒரு அட்டகாசமான சிரிப்பை சிரித்து கொண்டு சார் என் உடன் பிறந்த அண்ணன் சக்கரபாணி அவர்கள் எப்படியோ, அதே போல்தான் சிவாஜியும் தொழிலில் ஒருவருக்கு ஒருவர் அக்கறை கொள்வது தான் முக்கியம் அதற்கு பெயர் போட்டி அல்ல.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #29 on: January 28, 2012, 10:39:25 PM »
எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் – காவல் தெய்வத்தை கண்முன் நிறுத்தினார்



மலைக்கள்ளனுக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த “கூண்டுக்கிளி” வெளிவந்தது. டி.ஆர். ராமண்ணா டைரக்ஷனில், ஆர்.ஆர்.பிக்சர்சார் தயாரித்த படம் இது. விந்தன் வசனம் எழுதினார். இருபெரும் நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் என்பதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது எம்.ஜி.ஆர். படமாகவோ, சிவாஜி படமாகவோ அமையாதது மட்டுமல்ல, ஒரு நல்ல படமாகவும் அமையவில்லை. முக்கியமாக கதை சரியாக இல்லாததால், படம் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையில் 1955_ல் “குலேபகாவலி”யை தயாரித்தார், ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா, ராஜசுலோ சனா, சந்திரபாபு ஆகியோர் நடித்தனர். ஜனரஞ்சக படமான “குலேபகாவலி” வெற்றிகரமாக ஓடியது. இதன்பின் தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படம், 1956 பொங்கல் தினத்தில் வெளிவந்து, வெற்றி முரசு கொட்டியது. பழம் பெரும் படத்தயாரிப்பாளரான லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் “மதுரை வீரன்” கதையை பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர். மற்றும் டி.எஸ். பாலையா, ஓ.ஏ.கே.தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.கே.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, “மாடி” லட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர். கர்ண பரம்பரைக் கதையான மதுரை வீரனுக்கு, திரைக்கதை _வசனம் எழுதினார், கவிஞர் கண்ணதாசன். பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். டைரக்ஷன் யோகானந்த். கழுத்தில் மாலையுடன் குழந்தை பிறந்ததால், நாட்டுக்கு ஆகாது என்கிறார், ஜோதிடர். அதைக் கேட்டு, குழந்தையை காட்டில் விட்டு விடுகிறார், அரசர். குழந்தையை, செருப்பு தைக்கும் தொழிலாளியும், அவர் மனைவியும் (என்.எஸ்.கிருஷ்ணன் _ டி.ஏ.மதுரம்) எடுத்து “வீரன்” என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வீரன் வளர்ந்து வீரம்மிக்க இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஆகிறான். ஒரு சமயம் அரசகுமாரி பொம்மியை (பானுமதி) காப்பாற்றுகிறான். அவள் வீரனைக் காதலிக்கிறாள். பொம்மியின் முறைமாமன் நரசப்பன், பொம்மியை காவலில் வைத்து, கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், வீரன் தக்க தருணத்தில் பொம்மியைக் காப்பாற்றி, சிறை எடுத்துச் செல்கிறான். அவனுடைய வீரத்தை மெச்சிய விஜயரங்க சொக்கன், பொம்மி வீரனுக்கே உரியவள் என்று தீர்ப்பு கூறுகிறான். பொம்மியை மணக்கிறான், வீரன். திருமலை நாயக்கனுக்கு தளபதியாக நியமிக்கப்படுகிறான். அரசவை நர்த்தகி (பத்மினி) வெள்ளையம்மாள் வீரனைக் காதலிக்கிறாள். வீரனுக்கு எதிராக நரசப்பனும், குடிலனும் சதி செய்கிறார்கள். அவனைப் பற்றி, மன்னரிடம் பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். இதனால் வீரனை குற்றவாளி என்று மன்னர் தீர்மானித்து, மாறு கால், மாறுகை வாங்க உத்தரவிடுகிறார். கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறான், வீரன். அவனுடைய ஒரு கையும், காலும் துண்டிக்கப்படுகின்றன. அவன் இருக்கும் இடத்துக்கு பொம்மியும், வெள்ளையம்மாளும் ஓடி அவனுடன் உயிர் துறக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் காலம் காலமாக மதுரை வீரனை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். மதுரை வீரன் கதை ஏற்கனவே வி.ஏ.செல்லப்பா _ டி.பி.ராஜலட்சுமி நடித்து 1939_ல் படமாக வெளிவந்து வெற்றி பெற்றது. எனினும், எம்.ஜி.ஆர். நடித்த “மதுரைவீரன்” 13_4_1956_ல் வெளிவந்து பல ஊர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கண்டு, வசூலில் புரட்சி செய்தது. குறிப்பாக மதுரையில் இமாலய வெற்றி பெற்றது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன், பட அதிபர் லேனா செட்டியாருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. உடுமலை நாராயணகவி எழுதிய “பார் கடல் அலை மேலே” என்ற பக்திப் பாடல், இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலுக்கு பத்மினி நடனம் ஆடியிருந்தார். தி.மு.கழகத்தில் சேர்ந்து விட்ட காரணத்தால், இப்பாடல் தன் கொள்கைக்கு முரண்பட்டது என்று எம்.ஜி.ஆர். கருதினார். எனவே, பாடல் காட்சியை நீக்கிவிடும்படி பட அதிபரிடம் எம்.ஜி.ஆர். வற்புறுத்தினார். பாடலை விட, பத்மினியின் நடனம் அருமையாக அமைந்திருந்தது. அதை நீக்கிவிட பட அதிபர் லேனா செட்டி யாருக்கு மனமில்லை. எம்.ஜி.ஆர். எதிர்ப்பை மீறி படத்தை வெளியிடவும் விரும்பவில்லை. எனவே, அவர் ஒரு யுக்தி செய்தார். நடனக்காட்சியை மட்டும் தனியாக வெட்டி எடுத்தார். தனியாக சென்சார் சர்டிபிகேட் வாங்கினார். இடைவேளை முடிந்ததும், தனியாக இந்த நடனக் காட்சியைத் திரையிட்டு, நிலைமையை சாமர்த்தியமாக சமாளித்தார். “மதுரை வீரன்” வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில், சக்தி வாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். உருவாகத் தொடங்கினார்.