இலட்சம் உயிர்கள் இழந்தோம் உனைக்கொண்டு
தலைநிமிர.....
தழிழே.....
என் அன்னை நீ..... என் சுவாசமும் நீ.....
என் வாழ்வின் அடையாளமும் ஆதாரமும் நீ.....
என் மேனியில் பாயும் உயிராம் குருதியும் நீ.....
உலகில் மூத்தவள் நீ.....
முதிர்ச்சி உள்ளவளும் நீ..... ஆனால்
முதுமை இல்லாதவளும் நீயே.....
எப்போது பிறந்தாய் தாயே.....
கடவுளை அன்றி உன்னை
ஈன்றதாய் சொல்ல..... உலகில்
வேறு மொழியுண்டோ தாயே உனக்கு முன்......
என்ன பாவம் செய்தாய்.....
உன்னை அன்னையென சொல்லும்
பிள்ளைகள் யாவரும் தேச பேதமின்றி.....
திரும்பும் திசையெல்லாம் அடிபடவும்.....
அவமானப்படவும்.....
நீ ஈன்ற பிள்ளைகள் ஓதிய நன் நெறிகொண்டு.....
உலகையும்..... உலகில் வாழும்யாவையும்.....
எம்மைப்போலவே நேசித்திடினும்...... காரியமாய்
அன்றி எம்மை நேசித்திட யாருண்டு உலகில்.....
யாவரும் உனக்கு எதிரியோ உலகில்.....
நீ கொண்ட ஆயுதம் ஒன்று
நீ கண்ட உயிர்கள் பன்னிரெண்டு
நீ செய்த மெய்கள் பதினெட்டு
உயிரும் மெய்யும் கொண்டு நீ ஈன்றவை
இரு நூற்று பதினாறு.....
அனைத்தும் மொத்தமாய் இருநூற்று
நாப்பத்தி ஏழு.....
இருநூற்று நாப்பத்தி ஏழுக்கு வெளியே
எழுத்துக்கள் கொண்டு எழுதுவதே
உன்னை இகழும் செயல்.....
தாயே உன்னைப் படித்திடவே பிள்ளைகள்
நாம் ஆர்வமாய் இல்லை பாவம் நீ.....
முதல் பிறந்தும் தொலைவில் விட்டு விட்டோம் தாயை.....
தமிழரும் உன்னையே உயிரென சொல்லும்
நானுமே உன்னை இகழ்வதில் தயங்குவதில்லை.....
நீ தன்னிறைவு கொண்டவள் தாயே.....
உன்னை கற்றிட ஆர்வமில்லை எமக்கு.....
எனவேதான் பிறமெழிச் சொற்கள்கொண்டு
உன்னை எழுதுகின்றோம் மன்னித்தருள்.....
உன்னை காக்க உயிர் ஈன்ற பிள்ளைகள்
ஏராளம் தீக்கிரையென.....
விஞ்ஞான ஆயுங்கள் கொண்டு போர் செய்து
மண்கேட்டோம் சுதந்திரமாய் வாழ.....
மண்கேட்க்கும் தகமையும் உரிமையும்
தமிழெனும் தாயே நீயேதந்தாய்.....
உன்னையே வாழ்வின் அதரமாக கொள்ளாவிடில்
தமிழரென இனமேது.....
தமிழருக்கென நாடேது.....
இலட்சம் உயிர்கள் இழந்தோம் உனைக்கொண்டு
தலைநிமிர.....
தமிழருக்காய் இப்போது ஏதுமில்லை சுதந்திரமாய்.....
தாயே தமிழே நீ இருக்கும்வரைதான் தமிழினம்
மார்பை நிமித்தி வாழ்ந்திட முடியும்.....
தாயே வாழ்க..... தமியே வாழ்க..... நீ வாழாது
நாம் அடையாளம் கொண்டு வாழ்ந்திட
முடியாது.....
ஆகவேயேனும் நீ வாழ்ந்திடவேண்டும் பூவினிலே.....
வாழ்க மானுடம்... வாழ்க தமிழர்... வாழ்க தமிழ்.....
வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு.....
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே