நா வரள
ஒரு வாய் தண்ணீருக்கு அலைந்தேன்
நிழலில் ஒதுங்க மரமும் இல்லை
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
ஓடிய தார்ச்சாலையில்
தென்பட்டது கானல்நீரே
நிழலாடிற்று மனதில்
பாட்டன் கைப்பிடித்து
வயல்வெளிகளில் திரிந்ததும்
இளநீரும்,நுங்கும்
ஆற்றில் ஓடிய நீரும்
கண்மாய்க்கரையில் அமர்ந்து
துள்ளி விளையாடிய மீன்களை
ரசித்ததும்
சேற்று வயல்களில் நாற்றுகளின்
ஊடாய் பயந்து நடந்ததும்
பஞ்சு வெடித்த பருத்திச்செடியின் அடியில்
துயில் கொண்டதும்
சுற்றிலும் நீரைக்கண்டேன்
எங்கும்,எதிலும் செழிப்பும்,வளமையும்
அன்று
இன்றோ
வறண்ட நிலங்களும்,இலைகளற்ற மரங்களுமே
காணக்கிடைக்கிறதுஒரு குடம் நீருக்கு
பல கல் தொலைவு நடக்கும்
எம் சகோதரிகளைக் காண்கையில்
வருத்தமே மேவியது
விதைத்திட்ட வினையை
அறுவடை செய்கிறோம்
உறங்கியது போதும்
விழித்தெழு மானிடா
மரங்களை வளர்த்திடு
ஊறிடும் நிலத்தடிநீரும்
வாழ்த்தும் உன் சந்ததி
கையில் நீருடன்