அழகான காதல் கவிதை Sunrise !! மிக அழகாக கவிதைவரிகளை கட்டமைத்து எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள். உங்கள் கவிதைகள் அனைத்தையும் வாசித்து கொண்டிருக்கிறேன் நன்றாக எழுதுகிறீர்கள் பாராட்டுக்கள். தமிழ் படித்தவன் என்பதால் சிறு அறிவுரை அதுவும் தலைப்பிலே என்பதால் கூறுகிறேன்
பிறிவு - பிரிவு,
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பிறிவு என்று பயன்படுத்தி இருப்பார். எதுகைக்காக ரகரம் றகரமாகத் திரிந்திருக்கும். நீங்கள் புதுக்கவிதை எழுதி இருக்கிறீர்கள், தலைப்பெடுக்க அவ்வாறு பயன்படுத்த தேவையில்லை பயன்படுத்தினால் எழுத்துப்பிழை.
பிறிவு எனும் பீழை தாங்கள்
பிறந்த நாள் தொடங்கி என்றும்
உறுவது ஒன்று இன்றி, ஆவி
ஒன்று என நினைந்து நின்றான்,
எறிவரும் செருவில் தம்பி
தன்பொருட்டு இறந்தான் என்ன
அறிவு அழிந்து, அவசன் ஆகி,
அரற்றினான், அண்டம் முற்ற.
- திருவாசகம்