பகல் இரவு நேரம் பாராமல்
பசி பட்டினி மறந்திருக்க
ஒவ்வொரு நாளும் உழைத்து
அந்த முப்பது நாளும் கடந்து
கையில் சம்பளம் கிடைக்கும் நாள்
விவரிக்க வார்த்தை இல்லை என்
ஆனந்தத்திற்கு ..
வீட்டில் காத்திருப்பாள் என் மனைவி
வீட்டுக்கு தேவையான பொருள்களின்
பட்டியிலிட்டு
பிள்ளை விரும்பி தினமும் நச்சரித்து கேட்டு
சம்பள நாள் வரை காத்திரு என்று சொன்ன
அவனுக்கு பிடித்த அந்த மிட்டாய் வாங்க வேண்டும்
அந்த இரவு சுகமான இரவு
சட்டைப்பையில் பணம்
கனவுகள் கூட வண்ணங்களில் வர கூடும்
பகல் விடிந்தது சேவல் கூவியது
உன் கனவு முடிந்தது என்று,
விழித்து எழுகையில் வாசலில்
ஓர் குரல் அது பால்காரனுடையது
அவனுக்கு கொடுக்க வேண்டிய பணம்
கொடுத்தாயிற்று , பின்னால் நின்றிந்தனர்
செய்தித்தாள் இடுபவன் , மளிகை கடைக்காரர் ,
அவசரத்துக்கு உதவிய பக்கத்துக்கு வீட்டு மாமி
மனைவி சொன்னாள் மறந்துடாதீங்க பிள்ளையின்
இந்த மாத பள்ளி தவணையை
சட்டைப்பையில் கை நுழைத்து பார்க்கையில்
காற்று கூட அகப்படவில்லை
இன்னும் முப்பது நாள் கடத்த வேண்டும்
யாரிடமேனும் கடன் வாங்கி ....
"விடியாமல் இருந்திருக்கலாம் நேற்றிரவு" !!
*****ஜோக்கர் *****