இசையோடு பிறக்கிறோம்
இசையோடு வளருகிறோம்
இசையோடு பயணிக்கிறோம்
மரணத்துக்கு பிறகும் இசை இசைத்துக்கொண்டிருக்கிறது
என் சந்தோஷமும் துக்கமும்
என்னுடன் பகிர்ந்துகொள்வது
என் இசை
மறந்தும் உன்னை கேட்காமல்
நான் இருப்பதில்லை
எங்கும் நீ இருக்கிறாய்
விடியலை நோக்கி புறப்பட கூவும்
சேவலின் ஒலியும்
இசைதான்
இருப்பதை மற்றவர்களுடன்
பகிர்ந்துண்ண கரையும்
காக்கையின் ஒலியும்
இசைதான்
பிரிந்தவரை எண்ணி எண்ணி வாடி
பாடும் குயிலின் ஏக்க ஒலியும்
இசைதான்
அழகான மாலையில்
நளினமாடி வீசும் மரங்களின்
குளிர்காற்றும்
இசைதான்
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து ரசிக்க
அடை மழையும் இசைதான்
நதிநீரின் அசைவுகளிலும்
கடக்கும் மனதில், அமைதியாய்
இசைதான்
ஜாதி, மதம், இனம், மொழி தாண்டி
நம்மை ரசிக்க வைப்பது
இசைதான்
உலகில்
இயற்கையை விட சிறந்த இசையை
இசைப்பவனும் உண்டோ ?
இயற்கையை ரசிப்போம்
இசையோடு வாழ்வோம்
வா தோழா !!
****ஜோக்கர் ****