தெய்வீகக் காதல்!
புரிதலை தாயாக்கி
ஆசையை கருவாக்கி
உணர்வுகளை இரத்தமாக்கி
நம்பிக்கையை உடலாக்கி
பேரன்பை உயிராக கொண்டதேதெய்வீகக் காதல்!!
காதல் சரணம்
முன்பின் நேரில்
பார்க்காத,
பழகாத,
அனுபவமின்றி,
இணையவழி
ஆரம்பித்த முகப்புத்தக சந்திப்பு - அது
காதலாக மாற,
காலதாமதமாகவில்லை......
இணைய வலைக்குள் சிக்கிய -அந்த
இதமான காதலுக்கு
மார்கழி வந்தால்
ஈரிரண்டு வருஷம்~~!!!
பள்ளி பருவத்தில் ‘காதல் ‘ என்ற சொல்லையே
பகிஷ்ககரித்த மனம்-அன்று
பணிந்தது அவன் காதல் விண்ணப்பத்திற்கு மட்டும்..
சினிமாவிலும்
நிஜ வாழ்விலும்,
காதலை எதிர்த்து,
நட்புக்கள்,உறவுகளுக்கு
நடுநிலைமை என்றெண்ணி
காதலுக்கு எதிராக கொடுத்த
காரசாரமான வாதங்கள்,
கடும் வாக்குறுதிகள் எங்கே?
சொந்த நாடுவிட்டு ,
சொந்தங்களை பிரிந்து
தனிமையில் வாழ்க்கை
தள்ளாடி நின்றபோது
நிகழ்ந்த மர்மம்தான் -அந்த
நிழல் காதல்......