Author Topic: கன்னிக் காதலா!! (ல்)  (Read 1095 times)

Offline !~Bharathy~!

கன்னிக் காதலா!! (ல்)
« on: April 15, 2012, 03:13:12 PM »
தெய்வீகக் காதல்!

புரிதலை  தாயாக்கி
ஆசையை  கருவாக்கி
உணர்வுகளை இரத்தமாக்கி
நம்பிக்கையை உடலாக்கி
பேரன்பை உயிராக கொண்டதேதெய்வீகக் காதல்!!



காதல் சரணம்

முன்பின் நேரில்
                பார்க்காத,
                பழகாத,
                அனுபவமின்றி,
                இணையவழி
                ஆரம்பித்த முகப்புத்தக சந்திப்பு - அது
                காதலாக மாற,
                காலதாமதமாகவில்லை......
               
                இணைய வலைக்குள் சிக்கிய -அந்த
                இதமான காதலுக்கு
                மார்கழி வந்தால்
                ஈரிரண்டு வருஷம்~~!!
!
           
 பள்ளி பருவத்தில் ‘காதல் ‘ என்ற சொல்லையே
 பகிஷ்ககரித்த  மனம்-அன்று
 பணிந்தது  அவன் காதல் விண்ணப்பத்திற்கு மட்டும்..

சினிமாவிலும்
நிஜ வாழ்விலும்,
காதலை எதிர்த்து,
நட்புக்கள்,உறவுகளுக்கு
 நடுநிலைமை என்றெண்ணி 
காதலுக்கு எதிராக கொடுத்த
காரசாரமான  வாதங்கள்,
கடும் வாக்குறுதிகள் எங்கே?

சொந்த நாடுவிட்டு ,
சொந்தங்களை பிரிந்து
தனிமையில் வாழ்க்கை
 தள்ளாடி நின்றபோது
 நிகழ்ந்த மர்மம்தான் -அந்த
நிழல் காதல்......









 

                                         
« Last Edit: April 15, 2012, 03:29:36 PM by !~Bharathy~! »


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline !~Bharathy~!

Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #1 on: April 15, 2012, 03:24:59 PM »
                              ~ அவன்~

காணொளியில் ஒளியில்லாத என் விம்பத்தோடு
             போராடிகளைத்த அந்த கண்களை
காவல்செய்யும் மை இன்றிய நெடிய இமைகள், –அதிகம்
             கோவப்படே  கூர்மையாகிப் போன மூக்கு,
அழுகைக்கே தடைபோடும் உன் சிரிப்பும் பேரழகு~!-இருந்தாலும்
             கொடிய வறுமையில்தான் உன்முகம் எப்போதும
ஆங்கிலத்தில் “சீரியஸ்”உன்னால்தான் வந்திருக்கும் போலும்...
             கோரிக்கை வைத்தாலும் மாற்றமுடியாது.-ஐயோ!
ஏழைக்கவி எனக்கேது உருவகம்?-உன்
             கோடி அழகை அணிசெய்ய........!!!


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #2 on: April 15, 2012, 04:42:01 PM »
அடேங்கப்பா!

பாரதியின் பெயரை தாம் கொண்டிருக்கின்றாய்
என்றிருந்தேன் ,
வார்த்தைகளின் வனப்பையும்,வரி சமைக்கும் வழி வகையும்
வசம் வைத்திருப்பாய் என்று எண்ணவில்லை .

ஒப்புபவர்கள் ஒப்பட்டும் ,ஒப்பாதவர்
முகம் திருப்பி  துப்பட்டும்

எப்படி இதை எடுத்தாலும்
உன் வரிகளுக்கு
என் விமரிசனம்
அருமை,அழகு,
அபாரம்,அபூர்வம்
அஹா , ஆனந்தம் 

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #3 on: April 15, 2012, 08:05:44 PM »
சொந்த நாடுவிட்டு ,
சொந்தங்களை பிரிந்து
தனிமையில் வாழ்க்கை
 தள்ளாடி நின்றபோது
 நிகழ்ந்த மர்மம்தான் -அந்த
நிழல் காதல்.....


அருமை....மூக்கி ;) ;) ;) ;) :-[ :-[ :-* :-* :-* :-* :-*


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #4 on: April 16, 2012, 02:19:10 AM »
nala kavithai

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #5 on: April 16, 2012, 05:40:28 PM »
Nalla kavidhai bharathy..... :) :) :) :) Ungaladhu ithu pondra padaipugalai indha podhu mandram inum neria edhir paarkirathu....

Offline !~Bharathy~!

Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #6 on: April 17, 2012, 02:26:41 PM »
 ஆசை அஜித் ,ஸ்ருதி ,தர்ஷினி,ஜாவா  நன்றிகள் !!


கவிதை படைபதிலோ/அவற்றை இணையத்தில் பிரசுரிபதிலோ உங்கள் அளவுக்கு எனக்கு பாண்டித்தியோமோ/பரிட்சயமோ இல்லை ..

இருந்தாலும் அசைஅஜித்தின் தொடர்ச்சியான மேலான  வேண்டுகோள்கள்  ,உந்துதல்களுகிணங்க கவிதை என்ற பெயரில் என்றோ ஒருநாள் எழுதிய சிலவற்றை இங்கே பதிவு செய்தேன்.தொடர்ந்தும் எழுத முயற்சி செய்கிறேன்..

.

   மீண்டும் நன்றிகள் !!


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline !~Bharathy~!

Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #7 on: April 17, 2012, 03:02:55 PM »


காதலின் வேண்டுதல்[/u]

நம்பு என்னை ===========>கேள்விகளின்றி
நேசிஎன்னை============>எதிர்பார்ப்பின்றி
ஆசைப்படு என்னை=======>அடக்குமுறையின்றி
தண்டி என்னை==========>காயங்களின்றி
கோபப்படு என்னில்=======>கொடியவார்தைகளின்றி
மன்னி என்னை-=========>வஞ்சகமின்றி
இரங்கு எனக்காக=========>பரிதாபமின்றி
உதவு எனக்கு ===========>எதிர்பார்பின்றி
விட்டுக்கொடு எனக்கு======>வேண்டுகோளின்றி
கற்றுக்கொடு எனக்கு=======>கர்வமின்றி
பேசவிடு என்னை=========>பாரபட்சமின்றி
காத்திரு எனக்காக========>காலவரையறையின்றி
காதலி என்னை==========.>நானின்றி……நீயாக!!


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #8 on: April 17, 2012, 04:47:07 PM »
Quote
நம்பு என்னை ===========>கேள்விகளின்றி
நேசிஎன்னை============>எதிர்பார்ப்பின்றி
ஆசைப்படு என்னை=======>அடக்குமுறையின்றி
தண்டி என்னை==========>காயங்களின்றி
கோபப்படு என்னில்=======>கொடியவார்தைகளின்றி
மன்னி என்னை-=========>வஞ்சகமின்றி
இரங்கு எனக்காக=========>பரிதாபமின்றி
உதவு எனக்கு ===========>எதிர்பார்பின்றி
விட்டுக்கொடு எனக்கு======>வேண்டுகோளின்றி
கற்றுக்கொடு எனக்கு=======>கர்வமின்றி
பேசவிடு என்னை=========>பாரபட்சமின்றி
காத்திரு எனக்காக========>காலவரையறையின்றி
காதலி என்னை==========.>நானின்றி……நீயாக!!

வரிகள் நன்று பாரதி....!
பாரதியின் எழுத்துக்களை  தொடர்ந்து கானொளியில் காண
ஆவல்.....

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #9 on: April 21, 2012, 08:01:28 PM »
நன்று பாரதி.... :-*
                    

Offline !~Bharathy~!

Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #10 on: May 11, 2012, 08:10:16 AM »

சுவைத்தது
    காதல்!...
              அறுக்சுவைக்குள்,
உறைப்பும் ,கசப்பும் அதிகம் இருக்மென்பதை
                  அறியாமலேயே!♒…♒…. ≧◔◡◔≦




The Purpose of Life is a Llife of Purpose!!

Offline !~Bharathy~!

Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #11 on: May 11, 2012, 08:11:53 AM »
பெளர்ணமியான என்காதல் வானில்
      அமாவாசைகள் தினம் தினம் வந்தது-இன்றது
             வானைத் தேடும் நிலவாகியதோ? ☾ ☾ ☾ ☾

மனம்பார்த்து ,குணம்பார்த்து
                  இதயத்தில் நிச்சயிக்கப்பட்டு
நினைவுகளில் அச்சிடப்பட்ட என்காதல்
                 கனவுமேடையுடன்  கலைந்தது ஏனோ??


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #12 on: May 16, 2012, 10:22:22 AM »

காதலை  ஏன் நீ நாடகமாய் காண்கிறாய் ??
காதலை வாழ்க்கையாய் கொள்
நீ வாழும் காலம் வரை
உன் காதலும் வாழும்
மறைந்த  பின்பும்,  உன்
நினைவோடு காதலும் நிலைக்கும் .

Offline !~Bharathy~!

Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #13 on: May 19, 2012, 06:19:36 AM »
உலகமே
நாடகமேடை
நாமெல்லாம்
நடிகர்கள்...என்று சொன்ன
 மாமேதை சேக்ஸ்பியர் பொய்யனா?


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: கன்னிக் காதலா!! (ல்)
« Reply #14 on: May 19, 2012, 10:32:55 AM »
சரித்திர நாயகரை பொய்யராக,
புரட்டு கதை திரட்டிட
முரட்டு மனமோ,இருட்டு இதயமோ
கொண்டவன் நான் இல்லை .
மாறாக,எதார்ததினை மிக எதார்த்தமாய்
எடுத்துரைக்கும் எதார்த்த மாணவன் நான் .

எந்த ஒரு துறையை சார்ந்த எவர்க்கும்
தத்தம் துறையை முன்னிறுத்தி, சமயத்தில்
மிகைபடுத்தி பேசுவதும் எதார்த்தமே.
அதன்  அடிப்படையில் தலை சிறந்த
நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர்
தன் துறையின் மேன்மையை
மேன்மைபடுத்தி கூறி இருக்கின்றார் .

இதே வில்லியம் ஷேக்ஸ்பியர்
"உலகமே ஒரு சிற்ப பொருட்காட்சி
இதில் இருக்கும் ஆணும் பெண்ணும் சிற்பங்களே "
என்றிருப்பார் தான் ஒரு சிற்பியாக இருந்திருந்தால் ...

அதே  வில்லியம் ஷேக்ஸ்பியர்
"உலகமே ஒரு கவிதை தொகுப்பு
இதில் இருக்கும்  பெண் அழகு கவிதை என்றும்
ஆண் எழுத்து பிழை, பொருட் பிழை நிறைந்த  கவிதை  "
என்றிருப்பார், தான் ஒரு கவிஞராக  இருந்திருந்தால்

"ஏதோ எனக்கு தெரிந்த கருத்தை எடுதுரைதிருக்கின்றேன் "
அவ்வளவே ....
« Last Edit: May 19, 2012, 02:00:47 PM by aasaiajiith »