நீயின்றி ஒரு நொடியும் நகருமோ?
நானின்றி உன்னுலகம் சுழலுமோ?
நீயின்றி வாழ்வதில் பொருளேது?
நானின்றி உன்வாழ்வில் ஒளியேது?
அறிந்திருந்தும் ஏன் மௌனிக்கிறாய்?
புரிந்திருந்தும் ஏன் பரிதவிக்கிறாய்?
வருவாயோ என் வாசல் தேடி?
தருவாயோ நம் காதல் நீதி?
விழியோடு உயிர்தேக்கி வழியோடு
காத்திருக்கிறேன் காதலுடன்..