அதீத வறுமையினால் பண நெருக்கடி நேரும் பொழுது
பணம் நிறைந்தவர் , அவர் தம் நெருக்கடியினை நீக்கும் பொருட்டு
அவர் கடன் சுமைக்கு பொறுப்பேற்பதை போல
அதீத வலியினால் மன நெருக்கடி நேரும் பொழுது
மனம் நிறைந்தவர் ,அவர் தம் நெருக்கடியினை நீக்கும் பொருட்டு
தன் மீது ஏற்கும் ஏற்பாடு இருந்தால் .....
என்னவள் தன் ஒட்டுமொத்த வலியையும் நான் ஏற்க தயார்தான்
ஒப்பமருப்பர் எவரும் என்று தான்
மாதத்தில் ஒரு வார வலி மட்டும் என் மீது நான் ஏற்பேன்
முழு மனதோடு ......