எல்லா அரண்ட இடைவெளிகளுக்குமான,
ஓர் நிரப்பமாய்!
எல்லா சலனத் தனிமைக்குமான,
ஓர் அருகாமையாய்!
எல்லா அயர்ச்சிக்கும் போதுமான,
ஓர் குதூகலமாய்!
மொத்தக் கண்ணீருக்குமான,
பெரும் ஆனந்தமாய்!
காரணங்களற்ற வேண்டுதலின் பின்னர்
வந்து விழும்,
பெரும் உற்சவ மழை போல்...!
எந்தக் கரத்தினை
பற்றிக் கொண்டு பேச,
இதயம் தயாராகிறதோ!
எத்தேவையின் நிமித்தமும் அணுகாது,
பிரேமித்துத் தீர்க்கும் பெரும் வரமாய்,
எவரை மனம் நாடி நிற்கிறதோ!
அக்கரத்தின் பற்றுதல்
நழுவிச் செல்லாதிருப்பதே,
ஆசீர்வதிக்கப்பட்ட பேரானந்த வாழ்வு.....