காயத்திரி நீங்கள் சவுதி அரேபியாவை பற்றி தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள் எனபது நீங்கள் பதிந்துள்ள இந்த பதிவின் மூலமே நன்றாக விளங்குகிறது.
நீங்கள் சொல்வது போல் பெண்களின் உரிமையை மறுக்கும் நாடி சவுதி அரேபியா எனபது உண்மை அல்ல. பெண்களை போதை பொருளாக உலகம் எங்கும் நினைத்து கொண்டு இருக்கையில் பெண்ணுக்கு ஒரு தனி இடத்தை பெற்று தந்தது இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே.
நீங்கள் இங்கு குறை கூறி உள்ள இஸ்லாமிய சரியத் சட்டம் தான் பெண்களின் பாதுகாப்புக்கு நீங்கள் சொன்ன எட்டாம் நூற்றாண்டிலேயே வழிவகை செய்தது.
கணவன் இறந்து விட்டால் மனைவும் கணவனோடு உடன் கட்டை ஏற வேண்டும் என்ற கொடுரமான பழக்க வழக்கம் இந்தியாவில் இருந்த கல கட்டத்தில் பெண் மறுமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது இந்த இஸ்லாமிய சட்டம். பெண்ணுக்கு தந்தையின் சொத்தில் பங்கிருக்கிறது என்று பிரகட படுத்தியதும் இஸ்லாமிய சரியத்துதான்.
பெண்களின் விருப்பம் இல்லாமல் அவளை திருமணம் செய்ய இயலாது என்று முதன் முதலில் உலகிற்கு பிரகடன படுத்தியதும் இந்த இஸ்லாமிய சரியத்துதான்.
இந்தர்கெல்லாம் மேலாக இன்னும் வரதட்சணை கொடுமையால் பெண்கள் இங்க பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் பெண்களுக்கு ஆண்கள் திருமண கோடை கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயம் ஆகியதும் நீங்கள் குறை கூறிய இதே இஸ்லாமியா சரியத்துதான்.
இன்று பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் அரை குறை ஆடை அணித்து அதன் விளைவாக எண்ணற்ற பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இதை எல்லாம் நீங்கள் சொன்ன எட்டாம் நூற்றாண்டிலேயே உடைத்தெறிந்து பெண்கள் கண்ணியமான முறையில் உடை அணிய வேண்டும் என்று உலகுக்கு கற்று கொடுத்ததும் இதே இஸ்லாம் தான்.
முற்போக்கு சிந்தனையோடு கட்டுரை பதிவிடுகிறோம் என்று நினைத்து சிந்திக்க மறந்து அவசரத்தில் எதையும் பதிவிட்டு விடாதீர்கள் காயத்திரி.
சரி நான் கீழே சில கேள்விகளை வைக்கிறேன் அதற்க்கு முடிந்தால் பதில் தரவும்!
1. உலகிலேயே சவுதி அரேபியாவை தவிர பாலியல் கொடுமைகள் மிக குறைவாக நடக்கும் வேறொரு நாட்டை உங்களால் கூற முடியுமா?
2. சவுதி அரேபியாவை தவிர பெண்கள் பாதுகாப்பாக வாழும் வேறொரு நாட்டை உங்களால் கூற முடியுமா?
3. சவுதி அரேபியாவை தவிர வட்டியை தடை செய்த நாட்டை உங்களால் கூற முடியுமா?
4. சவுதி அரேபியாவை தவிர மதுவை தடை செய்த நாட்டை உங்களால் கூற முடியுமா?
5.சவுதி அரேபியாவை தவிர பெண்கள் கண்ணியமான முறையில் உடை அணியும் வேறொரு நாட்டை உங்களாள் கூற முடியுமா?
இப்படி கேள்விகளை கேட்டு கொண்டே போகலாம்.
உங்களால் இங்கு தவறாக சித்தரிக்கப்பட்ட இஸ்லாமியா சரியத்து சட்டம் தான் பெண்களுக்கு இவ்வளவு பாதுகாப்பையும் உரிமைகளையும் வழங்கி உள்ளது.
எல்லாவற்றிர்க்கும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதையும் உங்களுக்கு சொல்ல ஆசை படுகிறேன்.
தாயின் பதத்தில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதுமட்டுமல்ல நீங்கள் குறை கூறிய அதே குர்'ஆணின் சரியத்து சட்டம் சொல்வதை கேளுங்கள்.
31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே ''நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.
46:15 மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும் அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: 'இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன் அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்' என்று கூறுவான்.
இப்படி எல்ல வகையிலும் பெண்களுக்கு மதிப்பளிக்க கூடிய மார்க்கம் இஸ்லாம். காயத்திரி ஒரு கருத்தை நாம் பதிவு செய்யும் முன் நன்றாக அறிந்து கொண்டு கருத்து கூறுவது நல்லது. இல்லை என்றால் அது நமக்கே பாதிப்பை ஏற்படுத்தி விட கூடும்.
முற்போக்கு சிந்தனை இருக்க வேண்டும் ஆனால் இணைய தளத்தில் பதிவிட படும் எல்லாமே முற்போக்கு சிந்தனை கொண்ட பதிவு தான் என்று நினைத்து அப்படியே பதிவிட்டால் நம்முடைய சிந்தனையை நாம் இழந்து விட்டோம் என்று தான் கருத வேண்டும்.
இந்த பதிவை உங்களுடைய மனதை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கொத்தொடு நான் பதிவுட வில்லை. இஸ்லாம் பற்றிய உங்களுடைய தவறான புரிதலை சுட்டி கட்ட வேண்டும் என்பதற்காக பதிவிட்டேன்.
நன்றி!