🕛நேரம்🕛
கடிகாரத்தைப் பார்த்தேன்..
எனக்குள் ஒரு பயம் ஏற்பட்டது மேலும்
நேரம் போய்விடுமோ என்ற பயம்...
நான் எப்போதும் சுதந்திரமாக
இருப்பதையே விரும்புகிறேன்...
ஒரு நாள் நான் கிளம்புவேன்...
நான் அடையாத உடைந்த கனவுகள் அனைத்தையும் இங்கேயே விட்டு விட்டு... சுதந்திரமாக ,நிம்மதியாக ...
நான் வெளியேற விரும்புகிறேன்
மணலில் இதோ எனது கால் தடம்..
நான் திட்டமிட்ட அனைத்தையும்
செய்வேன் என்பதை என்னவர்கள் அறிவார்கள்...
என்னுடைய மிகப்பெரிய பயம் எனக்குத் தெரியும்...
நேரமில்லாமல் போய்விடுமாயின்
அது எனது பலவீனமாய் ஆகிவிடும் அன்றோ?
காலம் சொல்கிறது, "என்னைக் கையாளக் கற்றுக்கொள், இல்லையெனில்
நான் பறந்துவிடுவேன் என்று..
பிறப்பு முதல் இறப்பு வரை
எல்லா இடங்களிலும் காலம்
தன் கைவண்ணத்தை காட்டுகிறது...
பிறக்கும் காலம் இறக்கவே இல்லை,
அது மெல்லிய காற்றில் பறந்து பறந்து
நம்மை வெறுமையாக்குகிறது...
நான் வெறுமை ஆகுவனோ?
சிறகு கொண்டு பறப்பேனா?
"நேரமே வாழ்க்கை. இது மீளமுடியாதது மற்றும் ஈடுசெய்ய முடியாதது. உங்கள் நேரத்தை வீணாக்குவது உங்கள் வாழ்க்கையை வீணாக்குவதாகும், ஆனால் உங்கள் நேரத்தை திட்டமிட்டு செய்வது உங்கள் வாழ்க்கையை செம்மையாக்கும்....
naughty Princess meow😺