Author Topic: முத்து B.E. (Mech)  (Read 3291 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
முத்து B.E. (Mech)
« on: December 09, 2011, 04:28:20 AM »
முத்து B.E. (Mech)

முத்துவிற்கு மூன்று அக்கா, பிள்ளையோ பிள்ளையென்று தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை, முதல் அக்காவிற்கு காதல் திருமணம், இரண்டாவது அக்காவிற்கும் மூன்றாவது அக்காவிற்கும் பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம், முத்து மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்து விட்டு பெங்களுருவில் ஒரு கம்பனியில் வேலை பார்த்து வந்தான், சரியான கஞ்சன், எச்சை கையில் காக்காய் ஓட்டாதவன், தனது முதல் அக்காள் காதலித்து திருமணம் செய்து கொண்டு, பொருளாதார நெருக்கடியில் அடிக்கடி தன் அப்பாவிடமிருந்து பணம் வாங்கி கொண்டு போவது முத்துவிற்கு மிகவும் எரிச்சலூட்டுவதாக இருக்கும், இதனால் தான் ஒரு காலமும் காதலித்து திருமணம் செய்வது கிடையாது என்று முடிவில் இருப்பவன், அக்காள் யாராவது முத்துவிடம் உதவி என்று கேட்டு விட முடியாது, அப்படிப்பட்ட முத்துவுக்கு உடல் சுகம் என்பது என்ன என்ற அந்த வயதிற்கே உள்ள நெருக்கம் ஏற்ப்பட ஆரம்பித்தது,

அவன் வாழ்க்கையில் சல்லாபம் செய்ய கிடைத்த பல இனிய சந்தர்ப்பாங்களை அவன் எப்படியெல்லாம் நழுவ விட்டான் என்பது பற்றி முதலில் பார்க்கலாம் பள்ளியில் முத்து ப்ளஸ் டு படித்துக் கொண்டிருந்த சமயம், இவனுடன் படித்து கொண்டிருந்த ஒரு நண்பனின் மூலமாக கிடைத்த ஒரு விபசாரியிடம் முதலில் உடல் சுகம் என்ன, பெண் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆசையில் அந்த விபசாரியிடம் போனான், அவள் ஐந்நூறு ரூபாய் கேட்டபோது தன்னிடமிருத்த பணத்தையும் தன் நண்பனிடமிருந்து கடன் வாங்கிய பணத்தையும் சேர்த்து அவளிடம் கொண்டு போன போது, அனுபவம் இல்லாத முத்துவை அவளால் சமாளிக்க முடியவில்லை, விபசாரிக்கு நேரமாகி விட்டது, அவள் குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் போய் விட்டாள், முத்துவின் கையிலிருந்த பணம் போனதுதான் மிச்சம், தான் நினைத்தபடி எக்ஸ்பெரிமென்ட் ஏதும் செய்ய முடியாமல் போனது பற்றி மிகவும் வருத்தப் பட்டான் முத்து.

அடுத்தது முத்து கல்லூரியில் படிக்கும் போது கிடைத்த வாய்ப்பு, அங்கேயும் சில குளறுபடிகள், [குளறுபடிகளைப் பற்றி விரிவாக எழுத வேண்டுமென்று தோன்றுகிறது, ஏற்கனவே பின்னூட்டங்கள் இல்லாத ஒண்டிக் கட்டையாய் இருக்கிற என்னையும் என் எழுத்துக்களையும் பலரும் புறக்கணித்து விடுவார்கள் என்பதால் எழுதவில்லை ] கையிலிருந்த காசு தான் செலவாகிறதே தவிர அவனால் அவன் நினைத்தபடி ஒன்றையும் பார்க்கவோ செய்யவோ முடியவில்லை.

ஒரு வழியாக முத்து ஒரு முடிவிற்கு வந்தான், தனது நண்பன் ஒருவன் எப்போதுமே திருமணமாகிய பெண்களுடன் காசு ஏதும் கொடுக்காமல் உடலுறவு வைத்துக் கொள்வதை கேள்வி பட்டு இருந்தான் தானும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் காசு செலவு செய்யாமல் ஒரு எக்ஸ்பெரிமென்ட் செய்து பார்க்கும் திட்டம் போட்டான், முத்துவிற்கு கல்யாணம் ஆகிய பெண்களுடன் உறவு வைத்து கொள்வது கொஞ்சமும் பிடிக்காத விஷயம், ஆனால் வேறு வழி இல்லாமல் இப்படியொரு முடிவெடுத்தான், ஒரு முப்பது வயதிற்குள் ஏதாவது பெண்கள் கிடைப்பார்களா என்று காத்திருந்தான், கிடைத்தது, ஆனால் செலவு அதிகமாகியதே தவிர வேலைக்கு ஒன்றும் ஒத்து வரவில்லை. முத்து மகா கஞ்சனுக்கு பர்ஸ் காலியாவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

முத்துவிற்கு இருபத்து ஐந்து வயது, நாற்ப்பது வயதில் ஒரு பெண் கிடைத்தாள், கல்யாணமான பெண்களை முத்துவிற்கு கொஞ்சமும் பிடிக்காது அதிலும் இத்தனை வயதான பெண்ணோடு உடலுறவு என்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை ஆனால் வேறு வழி இல்லைகிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவில் இருந்தான், இந்த முறை எப்படியாவது நினைத்ததை செய்து விட வேண்டும் என்ற குறிக்கோளோடு அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஒரு இடம் கண்டுபிடித்து கூட்டி சென்று தான் நினைத்த எக்ஸ்பெரிமேன்டை ஆரம்பித்தான், அந்த பெண்ணிற்கு கோபம் வந்தது, இந்த மாதிரி சின்னத்தனமான வேலை செய்யும் சின்ன பசங்களோடு வெளியே வருவதே மிக பெரிய தப்பு என்று முத்துவை திட்டி விட்டு அந்தப் பெண் கிளம்பி போய் விட்டாள்,

நீண்ட தேடலுக்குப் பின் முத்துவிற்கு ஒரு முப்பத்திரெண்டு வயது விதவை பெண் கிடைத்தாள், அந்த பெண்ணிற்கு கல்யாண ஆசை, தனியாக வாழ பிடிக்காமல் அவதி பட்டு கொண்டிருந்தாள், அவளிடம் தான் அவளை கல்யாணம் செய்து கொள்வதாக ஒரு பொய்யை சொல்லி முடிந்தவரை அவளை ஏமாற்றி, ஒரு வழியாக தனது எக்ஸ்பெரிமேன்டை முடித்தான் முத்து, பின் அவள் இவனது சுயரூபம் தெரிந்து கொண்டு ஒதுங்கி விட

இப்போது முத்துவிற்கு வயது முப்பது ஒன்று, அந்த விதவை பெண் அவளது சொந்தத்தில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு குடியேறினாள், ருசி கண்ட பூனையாக முத்து பெங்களூரு வேலையை விட்டு விட்டு சென்னையில் வேலை தேடி, வேலையும் கிடைத்து விட , இப்போது சென்னையிலேயே செட்டில் ஆகி விட்டான், அந்த பெண்ணின் கணவன் இல்லாத சமயங்களில் 'தன்னால் அவளை மறக்க முடியவில்லை ' என்ற பாட்டை பாடிக் கொண்டு அவளிடமே "சங்கமித்து" வருகிறான், இதற்க்கு முக்கிய காரணம் காசு செலவில்லாமல் கதை ஓடுகிற வரைக்கும் ஓடட்டும் என்று போய் கொண்டு இருக்கிறது இந்த ஏமாத்து வேலை,

முத்துவிற்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் கடந்த ஏழு எட்டு வருடங்களாக, கிடைக்கின்ற வரன்களில் குலம் கோத்திரமெல்லாம் ஒத்து வந்தால் அந்த பெண்ணிடமிருந்து கிடைக்கும் வரவு குறைகிறது, வரதட்சிணையும் படிப்பும் நினைத்தபடி இருந்தால் குலம் கோத்திரம் ஒத்து வரவில்லை ,

அவனுடன் படித்த எல்லாருக்கும் திருமணம் முடிந்து குழந்தையும் இருக்கிறது, இப்போது முத்துவிற்கு முப்பத்து ரெண்டு வயது, கடைசியாக முத்துவிற்கு ஒரு வரன் ஒத்து வந்திருக்கிறது, அவன் செல்போனில் அந்த பெண்ணுடன் பேசுவதெல்லாம் கல்யாணத்திற்கு பின் எங்கு வீடு வாங்குவது எந்த மாதிரி பண வரவை அதிகரித்து கொள்வது என்பது பற்றித்தான், அந்த பெண்ணும் இவனை போன்ற குணமுடையவளாக இருந்து விட்டால் பிரச்சினை இருக்காது, இப்போவாவது முத்து "இலவசத்தை" தேடி போகாமல் இருப்பான் என்பது சந்தேகமே. "ஓசி" என்பது தேடும் போது சுலபமாக கிடைத்து விட்டால், ருசி கண்ட பூனையாகி விடுபவர்கள் இந்த முத்துக்கள்......