கல் தோன்றி மண் தோன்றா காலமதில்
,முன்தோன்றி வளர்ந்த மூத்த மொழி எம் தமிழே
உயிருடன் மெய் கலந்து உயிர்மெய்யான மொழி
இமயத்தே பிறந்த மொழி நம் தமிழே!
இலக்கணமும் இலக்கியமும்
இணை யாகக் கொண்ட மொழி'
முப்பாலும் கொண்ட மொழி
முத்தமிழும் நிறைந்த மொழி
இரண்டடியும் நாலடியும் கொண்ட மொழி
ஒளவையும் அகத்தியனும் கற்ற மொழி
அப்பரும் சுந்தரரும் மாணிக்கவாசகரும்
அப்பனையும் அம்மையையும் பாடித் துதித்த மொழி
வல்லினம் மெல்லினம் இடையினம் எனவே
வளமான சொல்லினத்தை பிரித்த மொழி
வேற்றுமொழி காணாத ழகரம்
எம் தமிழ் மொழியின் தனிச் சிறப்பு .
வாழையடி வாழையாய் வாழும் செந் தமிழ்
குழந்தையும் மழலையும் கொஞ்சும் பைந்தமிழ்
பாரதத்தில் உதித்து இன்று பலநாடு பார்த்த தமிழ் ,,, சந்தோஷ
சாகரத்தில் என்றும் நிலைத்திருக்க வேண்டிடுவோம் .
கட கட வென ஓடிய வண்டியில் இருந்த பெண்
கல கல என கைகொட்டிச் சிரித்தது
சல சல என அருவி ஓடியது போல உணர்ந்தேன்
இரைட்டைக்கிளவியின் அழகுதான் என்னே ! நம் தமிழில்
அண்ட சரராசரமும் நடுங்கும் - தமிழணங்கு
அவள் ஆடும் ஆவேசம் கண்டு
நிகரில்லை இப்புவியில் எம்மொழியும்
நம் உயிருக்குமேலான தமிழ் தாய் இவள்போல்.
தமிழே என் உயிரே தரணியெங்கும் நீயே
தலைமைத்துவம் பெறவே
வாழ்த்துவோம் உன்னை வாழ்நாள் முழுதும்
போற்றுவோம் நின் தாழ் சிரம்தாழ்த்தி ..