எதைக்கேட்டாலும் ஆமோதிப்பாய் ஆமென்கிறாய்
“உன் விருப்பம் மீறி
மறுத்துப்பேசல்
அத்துமீறலன்றோ?.”
என கேள்வியாகிறாய்
தீர்மானங்களில் என்னைச்
சார்ந்திருப்பதே
உன் அன்பின் மொழியென
நியாயம் சொல்கிறாய்..
உனக்காக என
வேஷம் பூண்டு
விலகிநிற்க நான்
முயலுகையிலேனும்
மறுத்துப்பேசி
தர்க்கம் செய்திடு
ஆர்பரிப்பின்றி அமைதியாய்
தூங்கட்டும் காதலின் மனம்..