மௌனங்கள் சத்தமாய் பேசி கொள்கையில் ..
இதயத்தின் அழுகை ஓசை கேட்பதில்லை !
சூனியத்தின் வெறுமையில் ..
நிரந்தரங்கள் நிறம் இழந்தன !
தனிமைகள் என்றும் உறவு !
அவை என்றும் நிராகரிப்பதில்லை !
புவி நீரும் காய்ந்து விட்டது !
விழி நீர் இன்னும் வற்றவில்லை
மனதோடு ஒரு விளையாட்டு !
மழை வரும் அதை கேட்டு !
நிலவை துரத்தும் மேகங்கள் ..
நீள் இரவின் விசும்பல்கள் !
கண்ணாடி இதயங்கள் உளி கொண்டு ..
சிதைக்க படும் ..அதில் ..
தெரிக்கும் பிம்பங்கள் !
கனவுகளின் கல்லறைகள் !
யாசித்தும் யோசித்தும் வருவதில்லை!
அன்பின் தரிசனங்கள் !
உண்மைகளின் வார்ப்பில் ...
நிலைத்து வருவது !
நொறுங்கும் இதயத்தின் காயங்களை ..
கண்ணீர் ஆற்றி விடட்டும் !