பூமியில் தோன்றும் ஒவ்வொரு உயிருக்கும்...
துணை நிற்கும் சக்தியே.. தெய்வம் என்போர் பலர்..
காற்றும்.. மழையும்.. அடித்து தள்ளும் பொழுது...
அரவணைக்கும் கைகள் தோன்றும் அக்கணமே..
அது யாராக இருந்தாலும்.. எதுவாக இருந்தாலுமே..
அதற்கு நன்றி சொல்வது.. அவ்வுயிரின் கடமையே..
நான் சொல்வதில் நம்பிக்கையில்லையா?..
இக்கவிதையை படிக்கும்.. நல்லுள்ளங்களே...
நம் முன்னோர்கள்.. நமக்காக விட்டு சென்ற..
சில சான்றுகளை.. சொல்கின்றேன் கேளுங்கள்..
உயிர் பயத்தால்.. கொல்ல துணிந்த கம்சனின்
பார்வையில் இருந்து.. மறைந்த வளர்ந்தான் கண்ணனுமே..
அவன்,
கொட்டும் மழையிலும்.. சீரும் காளிங்கனிடம் இருந்தும்...
ஆயர்குலத்தை காலத்துக்கும் காத்து நின்றான் ..
வம்சத்தின் அழிவு இவளாலே.. என ஜோதிடர் கூற...
இம்மண்ணில் புதையுண்டு.. மீண்டெழுதாள் சீதையுமே...
அவள்,
தன்னை தாங்கிய பூமித்தாயின் இருந்து கற்றுக்கொண்ட..
பொறுமையை கையிலெடுத்தாள்.. வாழ்ந்தும் காட்டினாள்...
இச்சமூகம் ஆயிரம் ஆயிரம் இம்சை கொடுத்தாலும்..
அவமானங்களை தாங்கி.. எழுந்துநின்று வாழ்ந்தான் கர்ணனுமே
அவர்,
தனக்கு தோள்கொடுத்த தலை நிமிர செய்தவனுக்காக..
அதர்மம் என தெரிந்தும்.. தோழனோடு கைகோர்த்தான்...
இவையாவும் சரித்திர கதைகள். கட்டு கதைகள் என்றாலுமே..
இன்றும் சில இயற்கை சக்தியுடன் எழுந்து நிற்போர் பலரே ...
நாம் அறியாமல் நம்மை காக்கும் செயல் யாவுமே..
விதியின் பயனா? இல்லை இயற்கையின் நியதியா..
தாய்.. தகப்பனின்.. அன்பான.. அரவணைப்பே...
நம்மைக்காக்கும் சக்தியில் முதன்மையாதே....
நம் உடலையும்.. உள்ளத்தை பலப்படுத்தும்..
அரணை... அள்ளி அள்ளி தருபவன்.. ஆசானே...
ஆபத்தில் தோள் கொடுக்கும்.. ஆபத்தாண்டவர்கள்..
நம்முடன் பயணிக்கும் நல்லுள்ளம்.. நண்பர்களே...
சில நேரங்களில்... மனிதர்கள் மட்டுமன்றி.. நம்மை...
காத்து நிற்கும்.. விலங்குகளும்... தாவரங்களும்....
ஏன் எப்படி என்று என்னை நோக்கி வினவ தோன்றுகிறதா?
நாம் உண்ணும் உணவும்.. வசிக்கும் குடிலும் எப்படி?
அது யாராக இருந்தாலும்.. எதுவாக இருந்தாலுமே..
அதற்கு நன்றி சொல்வது.. நம் பொறுப்பான கடமையே..