அதுலயும் இன்னிக்கு இருக்குற அம்மாக்கள் பலருக்கும் மக சூட்டு வலியில துடிக்கிறாளா.. பிரசவ வலியானு தெரியுறதில்ல. வலியில துடிக்கிற பிள்ளைக்கு என்ன செய்யணும்னும் தெரியுறதில்ல. அதைத்தான் இங்க சொல்லித் தந்திருக்கேன்.. கவனமா கேட்டுக்குங்க! இந்த வைத்தியத்தை செஞ்சு வலி நின்னுட்டா அது பிரசவ வலி கிடையாது. வலி நிக்கலைன்னா, பிள்ளைய டாக்டர்கிட்ட கூப்பிட்டுட்டுப் போய்டலாம்.
அடிவயிற்று வலி, நீர்க்கட்டு விலக..
புள்ளைத்தாச்சிப் பொண்ணுங்க சிலருக்கு ஏழாம் மாசம் நெருங்குறப்பவே சில உபாதைகளும் வந்துரும். அதுல முக்கியமானது சூலைவலிங்கிற அடிவயித்து வலி.
ஒரு பாத்திரத்துல ஒரு கைப்பிடி அளவுக்குப் பெருந்துத்தி இலை போட்டு, அதுகூட ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம், சீரகம் ஒரு ஸ்பூன், பசும்பால் கால் லிட்டர், தண்ணி அரை லிட்டர் சேர்த்து, மூடி, அடுப்புல வச்சி கொதிக்க விடணும். நல்லா ஆவி வந்ததும் அடுப்பை அணைச்சிட்டு இறக்கிடணும். பாத்திரம் சூடு தாங்குற அளவுக்கு வந்ததும், அப்படியே அடிவயித்துக்கு கீழ வச்சி ஆவி பிடிச்சா, அடிவயித்து வலி போயிரும்.
இதுக்கு இன்னொரு வைத்தியமும் இருக்கு. ஒரு டேபிள்ஸ்பூன் ஓமத்தோட 5 வெத்திலை, 3 பூண்டு பல்லு எடுத்துக்கணும்.
வெறும் கடாயில ஓமத்தைப் போட்டு வறுத்துக்கணும். அது நல்லா பொரிஞ்சு வெடிச்சதும் வெத்தலையை பிய்ச்சுப் போடணும். தோலு உரிக்காம பூண்டை நசுக்கிப் போட்டு 5 நிமிஷம் வதக்கணும். இதுல ஒண்ணரை டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா வத்துற வரைக்கும் காய்ச்சணும். இதுகூட 50 கிராம் பனைவெல்லம்.. இல்லைன்னா, நெல்லிக்காய் அளவு பசுவெண்ணெய்.. சேர்த்து, கலக்கிக் குடிக்கணும். சுரீர்னு வலிச்ச சூலை வலி நின்னுரும். நீர்க்கட்டு வராமலும் பாதுகாக்கும் இந்த பானம்.
குழம்பு வடகத்தை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து கடாயில போட்டுப் பொரிச்சிக்கணும். இதுல ஒரு டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா காய்ச்சி, சூடு ஆறினதும் குடிக்கணும். இப்படி குடிச்சா நீர்க்கட்டு விலகி, உடல் வீக்கமும் உருண்டோடிரும்.
அரிசி வேக வச்ச தண்ணிய (கூழா ஆறதுக்கு முன்னால) அரை டம்ளர் அளவுக்கு எடுத்துக்கணும். இதுகூட ஒரு நெல்லிக்காய் அளவு பசு வெண்ணெய சேர்த்துக் கலந்து, ஆறினதும் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிச்சிட்டு வந்தா.. எந்தத் தொல்லையும் எப்பவும் இருக்காது.
மஞ்சகாமாலைக்குமட்டுமில்ல... மனநலக் கோளாறுக்கும்...!
தூக்கமின்மை சரியாக...
சிலபேரு தூக்கமில்லாம தவிச்சிக்கிட்டே இருப்பாங்க. ஜாதிக்காயை பொடி பண்ணி, தினமும் காலையில ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா... சும்மா கும்முனு சொக்கிக்கிட்டுத் தூக்கம் வரும்.
மனநலக் கோளாறு விலக...
கீழாநெல்லினதும் மஞ்சகாமாலைக்கு மருந்துனுதான் தோணும். ஆனா, மனநலக் கோளாறை சரி பண்ற சக்தியும் அதுக்கு இருக்குங்கறது ஆச்சர்யமான சேதிதான். கீழாநெல்லி சமூலத்தை (இலை, வேர், பூ, காய் என செடி முழுக்க) கல் உரல்ல போட்டு (ஒரு கைப்பிடி அளவு), தண்ணி விட்டு மை மாதிரி அரைக்கணும். தொடக்க நிலை மனநலக் கோளாறு உள்ளவங்களோட தலையில, காலை நேரத்துல இதைப் பூசணும். ரெண்டரை மணியில இருந்து மூணு மணி நேரம் கழிச்சு, தலைக்குக் குளிக்கணும். இப்படி பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை செஞ்சா நல்ல குணம் கிடைக்கும். மொத்தம் ரெண்டு, இல்லனா மூணு தடவை செய்தாலே போதும்.
இதேமாதிரி 'நல்லவேளை இலை'யை கல் உரல்ல போட்டு மையா அரைச்சு தலையில பூசி, ரெண்டரை மணியில இருந்து மூணு மணி நேரம் கழிச்சு தலைக்குக் குளிச்சு வந்தாலும் மனநலக் கோளாறு சரியாகும்.
நினைவாற்றல் பெருக...
திரிபலாவை (நெல்லிக்காய், தான் றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேன்ல கலந்து தினமும் சாப்பிட்டு வந்தா நினைவாற்றல் பெருகும்.
இதேமாதிரி கோரைக்கிழங்கை பொடி பண்ணி, அரை ஸ்பூன் எடுத்து, அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும்.
வல்லாரை இலைப்பொடியை கால் ஸ்பூன் அளவு காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் வரும்.
அமுக்கிராங்கிழங்கு சூரணம் ரெண்டு ஸ்பூன், பாதாம் பருப்பு நாலு, காய்ஞ்ச திராட்சை ஒரு ஸ்பூன் எடுத்து, 200 மில்லி பசும்பால்ல போட்டுக் காய்ச்சி, ஆறினதும் காலையிலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா... நினைவாற்றல் அதிகரிக்கும்.
வல்லாரைத்தூள் 10 மடங்கு, வசம்புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வச்சிக்கிடணும். இதுல அரை ஸ்பூன் அளவு தேன்ல கலந்து காலை - மாலைனு சாப்பிட்டு வந்தா... நினைவாற்றல் கூடும்.
இதையெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும். தேவைப்பட்டா சில நாள் இடைவெளி விட்டுத் தொடரலாம்.