476 நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
477 நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
478 நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
479 நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
480 நமக்கு ஆகாதது நஞ்சோடு ஒக்கும்.
481 நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
482 நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
483 நயத்திலாகிறது பயத்திலாகாது.
484 நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
485 நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
486 நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை
487 நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
488 நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா?
489 நல்லது செய்து நடுவழியே போனால்,
490 நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
491 நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
492 நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.
493 நா அசைய நாடு அசையும்.
494 நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
495 நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
496 நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
497 நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
498 நாய் இருக்கிற சண்டை உண்டு.
499 நாய் விற்ற காசு குரைக்குமா?
500 நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.