தமிழ்ப் பூங்கா > கவிதைகள்
எப்படி இருந்த நான்
Mr.BeaN:
காதலெனும் சொல்லை கொண்டு வந்து
உன் காலடி சேர்த்தவன் நான்தானே
கல்லென நெஞ்சமும் உள்ளது போல்
அதை கண்டு கொள்ளாமலே நீ இருந்தாய்
எப்படி உன்னை ஈர்ப்பதென்று யோசித்து பார்த்தே ஒன்றுணர்ந்தேன்
உன்னை ஈர்த்திட யோசித்ததை நான்
வேறு துறைகளில் செய்திருந்தால்
நற்பெயர் பல பெற்றுவிட்டு இங்கு
நலமுடன் நானே வாழ்ந்திருப்பேன்
விஞ்ஞானி மெய்ஞ்ஞானி என்று பல
பட்டமும் என்னுடன் சேர்ந்திருக்கும்
எப்படி ஆக வேண்டிய நான்
இப்படி ஆகி போனேனே..
Vethanisha:
Nanbaa oru request..
Konjam kathaliyai potri oru kavithai podalaame...
Mr.BeaN:
--- Quote from: Vethanisha on January 08, 2024, 03:47:47 PM ---Nanbaa oru request..
Konjam kathaliyai potri oru kavithai podalaame...
--- End quote ---
Kandippa panalame
Mr.BeaN:
இரு விழி தன்னில் நிறைந்தவளே
இதயக்கதவை திறந்தவளே
மனமது உன்னை கண்டபின்னே
நறுமணம் தனை இங்கே வீசுதடி
கண்கள் கண்ட உன் அழகை
கவியாய் பாடி காற்றினிலே
வீசிட நானும் எத்தனித்தேன்
வார்த்தை ஏனோ கிடைக்கவில்லை
உச்சந்தலையில் ஆரம்பித்து
உள்ளங்கால் வரை சொல்லிடவே
சொல்லி முடிக்க முடியாமல்
மிச்சம் எதுவும் தான் இருக்கும்
அப்படிப்பட்ட அழகுடைய
அணங்கிவள் என்றே மனமுறைக்க
இப்படி ஒரு கவி இயற்றுகிறேன்
இதுவும் உனக்கிங்கு இணையில்லயே..
Vethanisha:
Ahaaaaa... Arumai arumai 🌹
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version