Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 285409 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இது ஒரு கவிதை விளையாட்டு..

ஒருவர் ஒரு கவிதை  எழுதிவிட்டு

"அடுத்த தலைப்பு" என்று  ஒரு தலைப்பை விட்டு செல்ல வேண்டும்...

அடுத்து வருபவர்

அந்த தலைப்புக்கு  ஒரு  கவிதை எழுத வேண்டும்.. அவர் ஒரு "தலைப்பை" தர 

வேண்டும்  இல்லை எனில்

உங்கள் கவிதையில் வரும் ஒரு சொல்லையோ... அல்லது வரியையோ தலைப்பாக

கொடுக்கலாம்.......கடைசி வரி தான் போட வேண்டும்  என்று  இல்லை...

கவிதையில் உள்ள எந்த வரியானாலும்..  கவிதையில் இல்லாத   வேற

சொல்..தரலாம்... சொந்தமாக கவிதை எழுத இதை ஒரு வாய்ப்பாக

பயன்படுத்திகொள்வோமே...

முயன்றால் நீங்களும் கவிஞர்/கவிதாயினி  தான்.... ;)  ;)

இது தான் விளையாட்டு....

நான் தொடங்கி வைக்கிறேன்

உன் உறக்கத்தின் கனவாக வந்து
உன்னை ரசித்துவிட்டு போய்விடுகிறேன்
எனக்காக ஒரு இடம் இதயத்தில் இல்லா விடினும்
உன் கனவினில் வந்து போகும் வரமாவது தந்துவிடு



அடுத்த தலைப்பு

வரம்

தமிழில் உங்கள் கவிதைகளை பதிவிடுங்கள்..முடிந்த வரை  :) :) :)

« Last Edit: August 08, 2011, 04:49:26 PM by Shruthi »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வாழ் நாள் கழிகிறது ..
என் வாழ்கையும் தொலைகிறது ..
உன்னோடு வாழ வழிதான்  தெரியவில்லை
உன் நினைவுகளை மட்டும் சுமக்க
வாரமாவது வேண்டும் ..அனுமதி தந்துவிடு ..


வாழ்க்கை
                    

Offline Yousuf

நிலை இல்லாத மனித வாழ்க்கையில்...

பொருளையும், பேராசையையும், சுயநலத்தையும்

விரும்பும் சுயநலமிக்க மனிதர்கள்....

இந்த மனிதர்களுக்கு பிறரின் வாழ்க்கையை பற்றி கவலை இல்லை...

இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சுய நலம் தான்...

இவர்கள் வாழ்க்கை முடியும் வரை...

இவர்களின் சுயநலமும் பேராசையும் நிரந்தரமா?

இனியவதும் பிறரின் வாழ்கையை பற்றி சிந்திக்கட்டும் இவர்கள்...!


கடமை

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
அருமை....வாழ்த்துக்கள் யுசுப்...மற்றும் ஏஞ்சல் .

 ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வீட்டுகாவலாளிக்கோ விடியும் வரை கடமை
தோட்ட தொளிலாலிக்கோ இருளும் வரை கடமை
காவல் தொளிலாலிக்கோ குறிப்பிட்ட நேரம் வரை கடமை
அவரவர் கடமைக்கு நேரம் குறித்த கடவுள்
காலையில் கோலம் போடுவதில் ஆரம்பித்து
இரவு படுத்து தூங்கும்வரை ...உன் குழந்தை
எழுந்து அழும் சத்தம் கேட்டு உறங்காது போன உன் இரவுகளை-----

அம்மா உன் கடமைக்கு பாசத்திற்கு வரையறை குறிக்கவில்லையே .. :-*


கோலம்
« Last Edit: August 08, 2011, 07:46:32 PM by Global Angel »
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கருமேக சுழண்டு இருளாக மாற
மின்னல்கள் கோவமாய் சீர
மரங்கள் பேயாய் தலைவிரி
கோலம் போட
வான்மகளே
யார் மீது கோபம்??
கண்ணீரை சிந்தி
எங்களை கண்ணீருக்குள்
தள்ளி விடாதே
:'( :'(

அடுத்த தலைப்பு


கோபம் ;)
« Last Edit: August 09, 2011, 05:07:33 AM by Global Angel »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
எதையும் தாங்குவேன்
உன் கோபத்தை தவிர
ஏனென்றால் ...
என் உணர்வுகளை உறையச்  செய்கிறதே
உன் கோபம் ...



உணர்வு
« Last Edit: August 08, 2011, 09:01:31 PM by Global Angel »
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என் உணர்வுகளின்
உயிர் வடிவம்
என் கவிதைகள்  :-*
என் கனவு காதலனே
கவிதையில் காதலிக்கிறேன்
அனுதினமும்
உன்னை :-[


உயிர்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஒவொரு தடவையும்
உன்னை பிரிகையில்
வலி கொள்ளுது என் உயிர் நாடி ..
உன்னை பிரியாத வரம் வேண்டும்
வாய்ப்பளித்துவிடு ...


வலி -.....
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
சொல்ல நினைத்து சொல்ல மறந்து
தவித்து துடித்தவை எல்லாம்
வரிகளில் முடிகையில்
உன்னிடத்தில் சொல்லுவதாய் ஒரு ஆனந்தம்...
அருகில் இருந்து சொல்லினாலும்
கிடைக்குமோ அறியவில்லை...
வரிகளில் வாழ்ந்துவிடுகிறேன்
வலிகளை மறந்து...


ஆனந்தம்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஒவொரு தடவையிலும்
நீ சொல்லும் ஹாய் இல் மட்டுமே
உணர்கிறேன் ஆனந்தம் ...



நீ
« Last Edit: August 09, 2011, 05:08:47 AM by Global Angel »
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஒவொரு தடவையிலும்
நீ சொல்லும் ஹாய் இல் மட்டுமே
உணர்கிறேன் ஆனந்தம் ...


நீ

வாவ்......அருமையான வரிகள்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நீ எனக்கு தந்த
அழகிய நினைவுகள்..
பேசி போன வார்த்தைகள்
எழுதிய கவிதைகள்
எல்லாமே எனக்காக
எனக்காக மட்டுமே


நினைவுகள்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
nice kavithai  ;)shruthi

உனக்காக நான் எழுதிய கவிதைகளை 
நீ மறந்து போகலாம்
என் நினைவுகள் ...உன்னால் மறக்க முடியுமா ...?


மறதி
                    

Offline pEpSi

  • Full Member
  • *
  • Posts: 178
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Nan Manithan Alla........
என் மறதி,
அவளை மட்டும்
மறக்க மறந்துவிட்டது!!




நினைவு
« Last Edit: August 09, 2011, 02:13:55 PM by Global Angel »