காலம்
அனைவருக்கும் பொதுவா நீ ?
உன்னை இயக்கும் ஆற்றல் வேண்டும் என்று நினைப்பவர் பலர் இருக்க, நட்பு பாராட்டி விண்ணப்பிக்கும் என்னை ஒதுக்கிவிடுவாயோ!
நீ இல்லாத இடம் உண்டோ.. பூமியை விட்டு வெளியில் சென்றால் நீ சாது என்றான் ஒருவன்.. ஆனால் நான் சுவாசிக்க ?
சாதுவாக இருந்தாலும், இல்லாமல் அல்லவே.. நீ இல்லாத இடமும் உன்டோ..
எங்கும் இருக்கிறாய்.. உடுத்திரளை விட்டுச்சென்றாலும், கருந்துளைக்குள் புகுந்து சென்றாலும் அங்கும் இருப்பாய் போலும்..
உன்னைக்கண்டு ஏன் அனைவரும் அச்சப்பட வேண்டும்.. இறப்பையும் முதுமையையும் தருகிறாய் என்றா ?
அனுபவத்தை தருவதும் நீதானே.. நீ எப்போது பிறந்தாய் ? உனக்கும் அந்தம் உண்டா ?
அடுத்த தலைப்பு :: விழிகள்