வணக்கம் RJ,
முதல்முறையா இசைதென்றல் நிகழ்ச்சியில நான் விரும்பிய பாடல் கேட்கப் போறது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. நான் கேட்க விரும்பும் பாடல், காதல் கொண்டேன் படத்துல இருந்து "நெஞ்சோடு கலந்திடு"
திரைப்படம்: காதல் கொண்டேன்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன் & சுஜாதா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
எனக்கு நா.முத்துக்குமார் அண்ணா எழுதிய எல்லா பாடல்களும் ரொம்ப பிடிக்கும். வலிகளும்,வேதனைகளும், பேரன்பும் நிறைந்த, வாழ்க்கைக்கு மிகவும் பக்கத்தில நிக்கிற வரிகள் நிறைஞ்சிருக்கும் அவரோட பாடல்கள்ல. முத்துக்குமார் அண்ணனோட இழப்பு கடந்து போக கஷ்டமான விஷயம் என்றாலும் அவர் இல்லங்கிற உணர்வே வராதபடி அவரோட பாடல்கள்ல எப்பவும் வாழ்ந்துட்டு இருப்பார்.பொதுவாக நான் பாடல்களில் கவித்துமான வரிகளை தேடுவேன். முத்துக்குமார் அண்ணனோட பாட்டுல அப்படி தனியா தேட வேண்டிய அவசியமே இருக்காது. அதே நேரத்துல அவருடைய பாடல்கள் ஒருவித அரவணைப்பு எப்பொழுதும் இருக்கும்.
இந்த பாட்டு எனக்கு புரிஞ்ச வரை தோழியை ஒரு தாயாக பாவிக்கும் பாட்டு.தோழி தனக்காக மட்டுமே இருக்கனும்னு ஒரு possessivenessசோட இருக்கிற தோழனுக்கு அந்த தோழி ஒரு தாயாகவே மாறி அரவணைப்போட பாடுறத போல இருக்கும். அந்த மாதிரி ஒரு தோழனோ/தோழியோ அபூர்வமாக இதுவரை எனக்கு கிடைச்சதில்லை. அந்த ஏக்கம் எனக்குள்ள எப்பவும் இருக்கிறதால தான் எனக்கு இந்த பாட்டு ரொம்பவும் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்
இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்,
"கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முகமூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா"
இதே படத்துல நா.முத்துக்குமார் அண்ணன் எழுதிய பிற பாடல்களும் எனக்கு பிடித்தமான பாடல்கள்
1.தேவதையைக் கண்டேன்
2. தொட்டுத் தொட்டு போகும் தென்றல்
வைரமுத்து எழுதின 'நட்பினிலே நட்பினிலே' பாடலும் அழகான வரிகளை கொண்ட பாடல்.
நான் இந்த பாடலை என்னோட FTC நண்பர்கள் எல்லாருக்கும் dedicate பண்றேன். Thank you everyone for being so kind to me. எதிர்பாராத அன்பு எப்பவும் விலைமதிப்பில்லாதது.
நன்றி RJ
என்றும் அன்புடன் ChikU