FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 24, 2022, 10:25:15 AM
-
என் உடலின்
எடை கூடி விட்டது
நீ என் இதயத்தில்
குடியேறியதால்
என் இரத்த அழுத்தம்
கூடி விட்டது
என் இரத்தத்தில் நீ
கலந்து விட்டதனால்
எனக்கு சக்கரை வியாதி
வந்து விட்டது
உன் பெயரை அடிக்கடி
உச்சரிப்பதனால்
மரத்தை விட்டு பறவைகள்
பறந்து போனாலும்
அதன் கிளைகளில் எச்சங்களாக
நீ என்னை மறந்து போனாலும்
என் மனதில் உன் நினைவுகள்
-
இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் sweetie sweetie nu என் பெயரை அடிக்கடி கூப்பிடாதீங்க னு . நீங்க கேக்கவே இல்ல. இப்போ பாருங்க சக்கரை வியாதி வந்துருச்சு. அருமை கவிதை