FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 22, 2022, 04:32:08 PM
-
ஒன்றைப் பெறுவது
ஒன்றை இழப்பதற்கே
ஒன்றை இழப்பது
இன்னொன்றை பெறுவதற்கே
இது இறைவன் வகுத்த
உலக நியதி
பூக்கள் பறிக்கப்படாமல் இருப்பது
பூக்களுக்கு அழகல்ல
ஒருவர் சூடிக்கொள்ளும்போது தான்
பூக்களும் அழகு பெறுகிறது
செடிகளுக்கும் அர்த்தம் கிடைக்கிறது
சிலநேரம் அறிவுரை மட்டுமே
தவறு செய்தவனை
பண்படுத்துவது இல்லை
தவறை உணரச் செய்து - மீண்டும்
தவறு செய்யமால் தடுக்க
தண்டனையும் அவசியமாகிறது
பிள்ளையை கருவில் சுமக்கும்
அன்னையும் தெய்வம்
பெற்ற அன்னையை
முதுகில் சுமக்கும்
பிள்ளையும் தெய்வம்