இரும்புக் காலம் 1200–180 BCE
வேதகாலம் -
• 1500–500 BCE
மகா ஜனபதங்கள்
• 700–300 BCE
மகத நாடு
• 684–424 BCE
நந்தர்
• 424-321 BCE
சேரர்
• 300 BCE–1200 CE
சோழர்
• 300 BCE–1279 CE
பாண்டியர்
• 300 BCE–1345 CE
மௌரியப் பேரரசு
• 321–184 BCE
பல்லவர்
• 250 BCE–800 CE
சுங்கப் பேரரசு
• 185-73 BCE
கண்வப் பேரரசு
• 75-26 BCE
கரவேலப் பேரரசு
• 209–170 BCE
Kuninda Kingdom
• 200s BCE–300s CE
Indo-Scythian Kingdom
• 200 BC–400 CE
சாதவாகனப் பேரரசு
• 230 BCE–220 CE
இந்தோ கிரேக்கர்கள்
• 180 BCE–10 CEவேதகாலம் - 1500- 500 BCE
வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம். இக் காலப்பகுதியோடு தொடர்புடைய பண்பாடு சில சமயங்களில் வேத நாகரிகம் எனக் குறிக்கப்படுவதும் உண்டு. இந் நாகரிகம், வடக்கு இந்தியாவையும், வடமேற்கு இந்தியாவையும் மையப்படுத்திச் செழித்து இருந்தது. இதன் முதற் கட்டத்தில் பழங்கால இந்தியாவில் பல்வேறு அரசுகள் தோன்றின. கிமு 600 ஆம்ஆண்டளவில் தொடங்கி மகஜனபாத என சமசுக்கிருதத்தில் குறிப்பிடப்படும் சிறிய நாடுகள் உருவாகின. தொடர்ந்து கிமு 320 ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசு உருவானது. வரலாறுவேதகால இந்தியாவின் வரலாறு பெரும்பாலும் அக்காலத்து நூல்களை அடிப்படையாகக் கொண்டே மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. மொழியியல் அடிப்படையில் வேதகால நூல்கள் ஆறு காலவரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
1. ரிக் வேத காலம்: ரிக் வேதமே தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய நூலாகும். அத்துடன், இதன் உள்ளடக்கமும், மொழியும் பொது இந்திய, ஈரானியக் கூறுகளை உள்ளடக்கி உள்ளது. இது பிற வேத நூல்களில் காணப்படவில்லை. ரிக் வேதம் பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாக உருவாகியதாகத் தெரிகிறது. இதன் பிற்காலத்துப் பகுதிகள் தவிர்ந்த பிற பகுதிகள் கிமு 1000 ஆவது ஆண்டளவில் முற்றுப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
2. மந்திர மொழிக் காலம்:
3. சங்கிதைக் காலம்:
4. பிராமணக் காலம்:
5. சூத்திரங்களின் காலம்:
6. இதிகாசக் காலமும், பாணினிய சமசுக்கிருதக் காலமும்:***********************************************************************************************************
மகா ஜனபதங்கள் - 700–300 BCE
கவுதம புத்தர் பிகாரில் உள்ள போத்கயா என்ற இடத்தில் பல்கு நதிக்கரையில், ஞானம் பெறுவதற்கு முன்னர் அவர் தீவிரமாக துறவறம் மேற்கொண்டார்.
வேதா காலத்தின் இறுதி காலக் கட்டத்தில் இந்திய துணை கண்டத்தில் நிறைய சிறு ராஜ்ஜியங்களும், நகர மண்டலங்களும் வரத் துவங்கின, என்று பல இந்து, புத்த, சமண மத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.கி.மு. 500 ஆம் ஆண்டில்,பதினாறு முடியாட்சிகளும் மற்றும் மகாஜனபதங்கள் என்று அழைக்கப்பட்ட குடியரசும் தோன்றியன. இந்த மகாஜனபதத்தில் காசி, கோசலா,அங்கா,மகதா,வச்சி (வ்ரிச்சி), மல்லா, செடி, வட்சா(வம்சா), குறு,பாஞ்சாலா, மச்சா(மத்ஸ்யா), சுரசேனா, அசக்கா,அவந்தி,கந்தாரா,காம்போஜா ஆகிய நகரங்கள் இந்திய கங்கை சமவெளியில் இன்றைய ஆப்கனிஸ்தானிலிருந்து வெண்கலம் மற்றும் மகாராஷ்டிரம் வரை பரவி இருந்தன.இந்தியாவை நகரப்படுத்தி பார்த்ததில் இந்து சமவெளி நாகரிகத்துக்கு பிறகு வேத காலமே அடுத்த இடத்தை பிடிக்கிறது.ஆரம்பக்கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பல குளங்கள் துணை கண்டத்தின் இந்த பகுதியில் காணப்பட்டன.இதில் சில அரசர்கள் வழி வழியாய் வந்தனர், மேலும் சிலர் அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.படித்தவர் சமஸ்க்ருதத்தில் பேசுகையில் மேற்கிந்தியாவின் பொது மக்கள் பிரக்ரித்தி மொழியில் பேசினார்.கி.மு.500/400 ல்,சித்தார்த்த கவுத்தமர் காலாதிலேயே இந்த பதினாறு ராஜியங்களும் ஒன்று கூடி நான்கு பெரும் அரசுகளாக உருமாறின.அவை வட்சா,அவந்தி,கோசலா,மகதா ஆகும்
மகாவீரரின் பிறப்பு பற்றியும் ஒரு இலையைப் பற்றிய விவரம் (24 வது சமண மத தீர்த்தங்கரா), கல்ப சூத்ராவிலிருந்து, கி.பி.1375-1400. இந்து மதப்படி செய்த சடங்குகள் எளிதானவையாக இல்லாததால் குருக்கொள் குலத்தை சேர்ந்தவர்கள் அவற்றை செய்தனர்.தத்துவங்களைப் புகட்டும் உபநிசதங்கள் பிற்கால வேத காலத்திலும் மகாஜனப்பதங்களின் ஆரம்பக்கலாம்பத்திலும் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. (அதாவது கி.மு. 600 இலிருந்து 400 வரை). இந்திய தத்துவங்களில் தனது ஆதிக்கட்ட்க்தை கொண்டிருந்த உபநிசதங்கள், புத்த மற்றும் சமண மதங்களும் வித்திட்டது. இது சிந்தனைக்கான பொற்காலமாகக் கருதப்பட்டது.கி.மு 537 ல், சித்தார்த்த கவுத்தமர் போதி நிலயை அடைந்து ஞானம் பெற்றவராகக் கருதப்பட்டதால் அவர் புத்தா என்று அழைக்கப்பட்டார்.அதே சமையத்தில் (சமண சமயத்தின் படி 24 வது தீர்த்தங்கரரான)மகாவீரர் புத்த மதத்தை போல் இருந்த மற்றும் ஒரு சமயத்தை கோட்படுத்தினார். அதையே மக்கள் சமண மதம் என்று அழைத்தனர்.[25] வேதங்களிலும் ஒரு சில தீர்த்தங்கர்களை பற்றிய குறிப்புடன் ஸ்ரமண இயக்கத்தின் முனிகளின் ஒழுங்கமைவு பற்றியும் வரையப்பட்டுள்ளது.[26] புத்தரின் பிரச்சாரங்கள் மற்றும் சமண மதத்தின் கோட்பாடுகள் துறவறம் பற்றி ஊத்தி, அவற்றை பிரக்ரிதி மொழி கொண்டு மக்களிடம் கொண்டு சேர்த்தன.இந்து மதத்துடனும், ஆன்மீக கோட்பாடுகளுடனும் தொடர்பு கொண்டிருந்த இந்த இரு சமயங்களும், சைவ உணவமைப்பு பற்றியும், விலங்குகளிடத்தில் கருனைகாடுதல் பற்றியும், அஹிம்சா வழி பற்றியும் கூறுகின்றன.
சமண மதம் இந்தியாவுக்குள் இருக்கையில் புத்தா மதத்தின் துறவியர்கள் நாடு கடந்து சென்று மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா,திபெத், இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியாப் பகுதிகளில் பரப்பினர்.
பதினாறு மிக வலிமையான ராச்சியங்களையும் குடியரசுகளையும் மகாஜன்பதங்கள் கொண்டிருந்தது.இந்திய கங்கை சமவேளிகலிருந்து பண்டைய இந்தியா முழுவதும் இந்த ஆட்சி நிலவி இருந்தது.*****************************************************************************************************
மகத நாடு - 684–424 BCE
கிமு 5 ஆம் நூற்றாண்டில் மகத நாட்டின் அண்ணளவான பரப்பு. மகத நாடு அல்லது மகதம் பழைய சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்படும் 16 சிறப்பான நாடுகளுள் ஒன்றாகும். இதன் முதன்மை நிலப்பகுதி கங்கை ஆற்றுக்குத் தெற்கே அமைந்துள்ள பீகாரின் பகுதி ஆகும். இதன் தலைநகரம் ராஜககா (இன்றைய ராஜ்கிர்) என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகாரின் பெரும்பகுதி, வங்காளம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் மகத நாடு பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பௌத்த, சமண நூல்களிலும் மகதம் பற்றிப் பெருமளவு குறிப்புக்கள் உள்ளன. மகதம் பற்றிய மிகப் பழைய குறிப்பு அதர்வண வேதத்தில் காணப்படுகின்றது.
இந்தியாவின் பெரிய சமயங்கள் இரண்டு மகத நாட்டிலேயே உருவாயின. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பேரரசுகளான மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு ஆகியவற்றின் மூலமும் இதுவே. இப் பேரரசுகளின் காலத்திலேயே இந்தியா அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டது. இது இந்தியாவின் பொற்காலம் எனக் கருதப்படுகின்றது.**************************************************************************************************
மகத நாடு - 684–424 BCE
நந்தப் பேரரசின் உச்சக் கட்டத்தில் அதன் ஆட்சிப் பகுதிகளைக் காட்டும் படம். தன நந்தன் காலம். கிமு 323. நந்தர் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரச மரபினர் ஆவர். இவர்கள் கிமு 5 ஆம், 6 ஆம் நூற்றாண்டுகளில் மகத நாட்டை ஆண்டுவந்தனர். சிசுங்க மரபைச் சேர்ந்த மன்னனான மகாநந்தி என்பவனுக்கு முறையற்ற விதத்தில் பிறந்த ஒரு மகனே நந்த அரச மரபைத் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது. மகாபத்ம நந்தா என்னும் பெயருடன் இவன் அரசு கட்டில் ஏறினான். தனது 88 வயது வரை வாழ்ந்து ஆட்சி புரிந்ததால், சுமார் 100 ஆண்டுகள் வரை நிலைத்திருந்த இந்த அரச மரபினரின் காலத்தில் பெரும்பகுதி இவன் ஆட்சிக்காலத்துள் அடங்குகிறது. நந்தப் பேரரசு உச்ச நிலையில் இருந்த காலத்தில் அதன் ஆட்சிப்பகுதி பீகாரில் இருந்து மேற்கே வங்காளம் வரை பரந்திருந்தது. நந்தப் பேரரசு பின்னர் மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியனால் தோற்கடிக்கப்பட்டது.
நந்த அரசமரபின் முதல் மன்னனான மகாபத்ம நந்தன் சத்திரியர்களை அழித்தவன் என வர்ணிக்கப்படுகின்றான். இவன், இக்ஷ்வாகு மரபினர், பாஞ்சாலர், காசிகள், ஹைகயர், கலிங்கர், அஸ்மாகர், குரு மரபினர், மைதிலியர், சூரசேனர், விதிகோத்திரர் போன்றோரை வெற்றி கொண்டான். இவன் தனது நாட்டை தக்காணத்துக்குத் தெற்குப் பகுதி வரை விரிவாக்கினான். நந்த மரபின் கடைசி மன்னன் தன நந்தன் என்பவன் ஆவான். கிரேக்க, இலத்தீன் நூல்களில் இவர் க்சந்ராமேஸ் (Xandrames) அல்லது அக்ராமேஸ் (Aggrammes) என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றான். இவனது கொடுமைகள் காரணமாக மக்கள் இவனை வெறுத்ததாகவும், அதனால் தான் இம் மன்னனை வெற்றிகொள்ளக் கூடியதாக இருந்ததாகவும் சந்திரகுப்த மௌரியன் கூறியதாக புளூட்ராக் என்னும் நூல் கூறுகிறது.
சிசுங்க மரபினரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய நந்தர்கள் சத்திரியர் அல்லாத மரபைச் சார்ந்தவர்கள். வட இந்தியாவை ஆண்ட சத்திரியர் அல்லாத அரச மரபினருள் இவர்களே முதல்வர். இந்தியாவின் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் இவர்களே என்றும் சொல்லப்படுவது உண்டு. மகத நாட்டின் ஆட்சியைப் பெற்றுக்கொண்ட இவர்கள், அதனை மேலும் விரிவாக்கினர். இதற்காக 200,000 பேர் கொண்ட காலாட்படை, 2000 தேர்கள், 3000 போர் யானைகள் என்பவை நந்த மன்னர்மகாபத்ம நந்தன்
பண்டுகா
பங்குபதி
புட்டபால
ராஷ்ட்டிரபால
கோவிசனாக
தக்சித்காக்க
கைவர்த்த
தன நந்தன்
********************************************************************************************************************