என் உடலின்
எடை கூடி விட்டது
நீ என் இதயத்தில்
குடியேறியதால்
என் இரத்த அழுத்தம்
கூடி விட்டது
என் இரத்தத்தில் நீ
கலந்து விட்டதனால்
எனக்கு சக்கரை வியாதி
வந்து விட்டது
உன் பெயரை அடிக்கடி
உச்சரிப்பதனால்
மரத்தை விட்டு பறவைகள்
பறந்து போனாலும்
அதன் கிளைகளில் எச்சங்களாக
நீ என்னை மறந்து போனாலும்
என் மனதில் உன் நினைவுகள்