Author Topic: மாங்கனி - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்  (Read 46499 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - அடலேறு காதலுற்றான்
« Reply #30 on: September 12, 2012, 03:28:12 PM »
அவையோர் நிலை அவல நிலை

மென்மயில் நாட்டியம் பன்மையில் மனங்களை
அண்மையில் இழுத்தொரு அயன்மையில் கிடத்திட‌
தன்மையை மீட்டுதொல் தகைமையில் மீண்டிடும்
திண்மையை இழந்தவர் தவித்தப் பொழுதினில்
ம‌ண்முகில் வ‌ண‌ங்கியொரு புன்ன‌கை பூத்தாள்
நுண்மீத‌ முமின்றிமீள் தொலைத‌ன‌ர் ப‌ல‌பேர்


அடலேறு காதலுற்றான்

வெண்பா

மன்னன் மனஅரசி மாதரசி மாலையொன்று
அன்னத்திற்(கு) ஈந்தாள் பரிசாக - பின்னர்
மயிலழகு மாங்கனியை வாழ்த்தினான கோதை
அயில்விழியாள் ஏற்றாள் பணிந்து!

பூரித்து எல்லோர்க்கும் புன்னகையில் நன்றிசொல்லி
நேரிழையாள் ஏகினாள் அங்கிருந்து - ஏரிடை
கட்டுண்ட மாடாய் அவையோர் மனங்களும்
சென்றன மாங்கனி யோடு!


எழுசீர் கும்மி சிந்து


தெளியாத போதை தெய்வீக வஞ்சி
..தெவிட்டாத மதுவால் ஊற்ற
பொழியாத மேகம் புளங்காத மின்னாய்
..புரியாத தாப தீமூட்ட
கிழியாது நெஞ்சை கிரங்காது கொத்தி
...கிளியாக மாது நடைபோட
எலியான வீரன் எழில்மேனி போன
...இடம்பார்த்து நின்றான் மரம்போல

வெடியாக பாவை விறகாக நெஞ்சை
...இருவேறு துண்டாய் பிளந்துவிட்டாள்
கொடியாக கோதை கொம்பாக எண்ணி
...குலவீரன் தன்னை சுற்றிவிட்டாள்
அடியோடு யாரும் அறியாத வண்ணம்
...அடலேறு தன்னை பேர்த்துவிட்டாள்
வடியாத காதல் வழியாத நெஞ்சில்
...வலியாக ஏறு வழியானான்!


(வேறு)


என்ன நிகழ்கிறது என்று அறியாமல்
அன்னம் நடந்தாள் அன்னை பின்னே!
எண்ணம் நிகிழ்ந்திடுமா என்ற கேள்விக்கு
என்ன பதிலென்று யோசித்து குழம்பி
என்ன நிகழுமினி என்று அறியாமல்
ஏறு நடந்தான் வீட்டின் கண்ணே!


அந்தப்புரத்தில் சேரனிருந்தான் அன்னம் மாதரசியோடு

அறுசீர் விருத்தம்

பெண்கடலில் மூழ்கி மன்னம்
...பிரியமுத்து எடுத்த அந்த
மென்பொழுதில் சொர்க்க பாவை
...மாங்கனியின் வனப்பு பற்றி
கண்சங்கால் மையல் பாலை
...காண்போர்க்கு ஊட்டி காதல்
பொன்வீட்டில் பூட்டும் இன்ப
...பொலிவையரசி புகழ்ந்து சொன்னாள்

முகநிலவை கையில் ஏந்தி
...முன்னூறு முத்த மிட்டு
அகச்சூட்டு தகிப்பு கொஞ்சம்
...அடங்கிவிட அமுதை பார்த்து
சகபெண்ணை பற்றி பேச்சு
...சரியில்லை கண்ணே என்றான்
புகையிடையை மீண்டும் அள்ளி
...புதைந்துபோனான் சேர்ந்தான் சொர்க்கம்

மனதாலும் வேறு பெண்ணை
...வருடாத மன்னன் கற்பை
நினைத்துமாது மகிழ்ச்சி கொண்டாள்
...நெகிழ்ந்திறுகி நெருக்கம் கொண்டாள்
இணைகளுக்கு இடையில் சிக்கி
...இடம்பெயர இயலா காற்று
முனகியது "விடடா! என்னால்
...மூச்சிழுக்க முடிய வில்லை"


« Last Edit: September 12, 2012, 03:30:42 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - காவியம் துவங்கம்
« Reply #31 on: September 12, 2012, 03:32:36 PM »
//பெண்களையே பொறமை கொள்ள வைக்கும் அழகு வர்ணனை ஆதி தொடருங்கள் //

மகிழ்ச்சியாகவும் இருக்கு பயமாகவும் இருக்கு, மகிழ்ச்சி மாங்கனி குறித்து, பயம் எதிர்காலம் குறித்து :D
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - காவியம் துவங்கம்
« Reply #32 on: September 12, 2012, 04:58:23 PM »
ஆஹா பெண்களை தான் வர்நிகுறேங்க நல்லானு பார்த்தா ...

Quote
இணைகளுக்கு இடையில் சிக்கி
...இடம்பெயர இயலா காற்று
முனகியது "விடடா! என்னால்
...மூச்சிழுக்க முடிய வில்லை"
யம்மாடியோ ...மோகத்தை கூட எப்டிஎலம் வர்ணனை செய்றீங்க .... பொதுவே நான் கேள்விபட்டதுண்டு ... கவிஞ்சர்கள் எல்லாருமே இந்த விஷயங்கள் பத்தி எழுதுவதில் கில்லடின்னு ... பாக்குறேன் ... ஹிஹி நல்லாத்தான் இருக்கு ..


ஆமா எதிர்காலத்த எண்ணி என்ன பயம் எனக்கு  ஐடியா  இல்லை ஏதும்
 ;D ;D
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - காவியம் துவங்கம்
« Reply #33 on: September 12, 2012, 05:01:41 PM »
அது ஒண்ணுமில்லைங்க, வீட்டுல என்னை யார் தலையிலயாவது கட்டிவச்சுட்டாங்கனா இப்படியெல்லாம் கவிதை எழுத முடியாது இல்ல அதன நினைச்சு பயந்தேன்
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - காவியம் துவங்கம்
« Reply #34 on: September 12, 2012, 05:11:08 PM »
மாங்கனியை பொருத்த மட்டில் எல்லா விடயமும் சமமானது

மோகூரின் வளத்தில் இருந்து பல விடயங்கள், சரித்திர கதை என்பதால் நிச்சயம் ஒரு போர் இருக்கனும், அதனால் கற்றுக் கொள்ளவும், கவித்திறனை கூர்மையாக்கிக் கொள்ளவும் ஏகப்பட்ட வாய்ப்பிருக்கு

என்ன எழுதும் போது நமக்கே நேர்மையாக எழுதனும், அதை மட்டும் செய்ய முனைந்தால் பலவிடயங்கள் கற்றுக் கொள்ள முடியும், எழுதனும் என்று எழுத கூடாது

இந்த பகுதியிலும் பார்த்திங்கன்னா, சில பகுதிகளை திருத்திய பதிந்திருக்கேன்

மற்றும், வெண்பா, விருத்தம், சிந்து கும்மி என்று மூன்று வகையா பிரிச்சு எழுதியிருக்கேன், இது எதுவுமே கண்ணதாசனின் காவியத்தில் இல்லை

ஏறு காதல் வயப்படுவது எவ்வளவு அழகான விடயம், அதனால் தான் கும்மி பாட்டு வச்சி, இனி காதல் அவனை கும்மியடிக்க வேற போகுது இல்ல :)

ஒவ்வொரு பா வகை கையாளும் போது அதற்கு ஒரு காரணம் இருக்கனும் என்று நினைத்தேன்

அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - காவியம் துவங்கம்
« Reply #35 on: September 12, 2012, 05:33:35 PM »
 ;D  ;D  ;D


கட்டி வச்ச என்ன ..? அவங்களுக்கு கவிதை எழுதுங்க ..... ஆமாம் சரித்திர கதைகள் எல்லாம் இப்படி வர்ணனை இல்லாவிட்டால் படிக்க ரசனை குறைவாகவே இருக்கும் ... அருமையாக இருக்கிறது ... கண்ணதாசனை விஞ்சும் கவி திறமை பெற்றுக்கொண்டு இருகின்றீர்கள் போலும் .. வாழ்த்துகள் தொடர ..
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - காவியம் துவங்கம்
« Reply #36 on: September 12, 2012, 05:44:45 PM »
கண்ணதாசன் இடம் என்பது ஒரு ராஜ நாற்காலி அதனை அடையவே ஒவ்வொரு கவிஞனனும் முயல்கிறான், ஆனால் ஒருத்தன் கூட அங்கு சென்றதில்லை வைரமுத்து உட்பட‌

காதல் பாடலில் கூட தத்துவம் சொல்ல கண்ணதாசனால் மட்டுமே முடியும், துள்ளல் பாடலில் தத்துவம் சொல்ல அவனுக்கே வரும்

ஜெகமே மந்திர பாடல் போதாதா ?

மனித உன் ஜென்மத்தில் எந்நாளும் நந்நாளாம்
பல்லாக்கை தூக்காதே பல்லாக்கி நீ ஏறு

அவன் இடம் அது ராஜ மடம் அங்கு யாரும் செல்ல கூட முடியாது

அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - போதையுற்ற உள்ளம்
« Reply #37 on: September 13, 2012, 03:44:15 PM »
அடலேறு பாடுகிறான்

பாடல்

இதுவரையில் - என் இமைகரையில்
எந்த நிலவும் விரிந்து மலர்ந்ததில்லை
மலர்ந்ததில்லை - நான் கரைந்ததில்லை...

துளி ஒளியென்னும் உன் விழிகளால்
என்னை துகள்களாய் தகர்த்துவிட்டாய்
சுடும் வெளியன்ன என் இதயத்தில்
காதல் இலைவிட விதைத்துவிட்டாய்
அசையா மலைபோல் நின்றவனை
அடியோடு பேர்த்து சாய்த்துவிட்டாய்

சிரம் கொய்ய ஏவிடும் என் வாளை
பூ கொய்யும் கருவியாய் மாற்றிவிட்டாய்
ஒரு இடத்தில் நிற்காத என் மனதை
உன் நினைவு தியானத்தில் அமர்த்திவிட்டாய்
எனக்கென்று இருந்த நினைவுகளை
உனக்கென்று நீ எடுத்துக்கொண்டாய்


வெண்பா


கோதைமலர் பாவையவள் கோல நினைவினில்
போதையுற்ற வீரமகன் நீந்தினான் - சீதளமாய்
சின்னமகள் தன்னுள்ளே செய்தவிட்ட வேறுபாட்டை
எண்ணியெண்ணி பாடினான் பா!


போதையுற்ற உள்ளம்

மலராக மின்விழியாள் மலர நெஞ்சில்
உலராத சருகாக உதிர்ந்தான் தீரன்
வளராத பிறைபோன்ற வாட்டம் வந்து
தளராத தளபதியின் முகத்தில் சூழ

விரவிகொன்ற தனிமையோடு வீடு சென்றான்
அரவமற்ற நினைவோடு சோலை புக்கான்
அரவமொன்று நெளிந்தாலும் அறியான் போல
மரமிடையே மரமானான் மறவன் பாவம்!

தென்றலொன்று இதமாக தேகம் தீண்ட
பெண்விரல்கள் பட்டதுபோல் அவனில் சூடு
மென்மையாக மேலெழுந்து பரவி ஊட
கண்வானில் வெப்பநிலா காயக் கண்டான்


எண்சீர் விருத்தம்


உடலாறு உற்றவளின் நினைவால் பொங்கி
...உள்ளத்தை வெள்ளம்போல் உடைத்து ஓட
அடலேறு அதில்மூழ்கி இருந்த போது
...அழும்பிள்வேல் வந்துநின்றான் அவனின் பின்னே
மடலிதழை திறந்தழகாய் மகனே என்றான்
...மயக்கத்தில் இருந்தமகன் மதிக்க வில்லை
'அடலேறு' என்றழுத்தி அழைத்தான் மீண்டும்
...அறியாத வரைப்பார்ப்ப வன்போல் பார்த்தான்

யாரென்று அவனிதழ்கள் அசையும் முன்னே
...அருகேவந் தறிவாயா மகனே மற்றோர்
பேரென்றான் அழும்பிள்வேல்; கண்வேல் இட்ட
...புண்ணேஇன் னுமாறாத போது இன்னோர்
போரென்றால் புயலுற்ற நெஞ்சம் எப்படி
...பொறுக்கும்?உ தட்டிலொரு சொல்லு மின்றி
யாரிடமோ அழும்பிள்வேல் பேசு கின்றான்
...என்பதுபோல் நின்றிருந்தான் இளைய ஏறு!



யாருடந்தெ ரியுமாபோர் ? தெரியா தென்றான்
...ஏறுஅமைச் சன்மீண்டும் தொடர்ந்தான் வேந்தன்
ஆருயிர்நண் பன்செவ்வேல் மீது மோகூர்
...அரசன்ப டைத்திரட்டி விட்டான் அந்த
கூருகெட்ட குறுமதியன் மீது தான்போர்
..போருதவி செவ்வேலுக் குசெய்ய நாளை
சேரர்ப டைப்புறப்ப டவேண்டும் நீதான்
...சேனாதி பதியென்றான் தழுவிக் கொண்டான்..


அறுசீர் விருத்தம்

துவங்கிவிட்ட போரே வெற்றி
...தோல்வியென்று ஏது மின்றி
துவண்டுநிற்க தோழ னுக்கு
...துணைசெய்ய தானை ஏற்று
துவங்குநாளை பயணம் என்று
...சொன்னால் ஏ துசெவான் பிள்ளை
நவரசத்தில் இலார சத்தை
...அவன்முகத்தில் வழிய விட்டான்
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - காவியம் துவங்கம்
« Reply #38 on: September 13, 2012, 10:40:30 PM »
Quote
...சொன்னால் ஏ துசெவான் பிள்ளை
நவரசத்தில் இலார சத்தை
...அவன்முகத்தில் வழிய விட்டான்

ஹஹ்ஹா ... இதுதான் ஜொள்ளு என்ற 10 ரசம் .... ஹிஹி  அருமை ஆதி ஆண்கள் இந்த மயக்கம் வந்தால் அவ்ளோதான் போல ..... ஹிஹி கற்பனையில் கண்டு ரசிக்கின்றேன் .. சிரிக்கின்றேன் ... வெட்கம் கூட வருகிறது ... ஹஹஹா அந்த மாங்கனி நானாகவே மாரிவிட்டேனோ 
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - காவியம் துவங்கம்
« Reply #39 on: September 14, 2012, 06:09:43 PM »
ஹா ஹா ஹா

நன்றிங்க,  சொல்லவும் முடியாம சொல்லாம இருக்கவும் முடியாம பசங்க எப்பவும் பாங்க
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - மாங்கனி இல்லம்
« Reply #40 on: September 14, 2012, 06:27:30 PM »
மாங்கனி இல்லம்

ஏறின் மயக்கம்


அறு சீர் விருத்தம்

அனிச்சமலர் நினைவில் மீண்டும்
...ஆழ்ந்தான்;மான் அருகில் அற்ற
தனிமையில்தான் தத்த ளித்தான்
...தளர்ந்தநடை போட்டு; பார்வை
பனிச்சிந்து பாவை வீடு
...பயணமானான்; முற்றம் வந்து
துணிச்சலற்று நின்றான்; நீண்ட
..சுவாசமிழுத் தான்,உள் சென்றான்

(வேறு)
அமைச்சன் மைந்தன் அவ்விடம் போம்முன்
அவள்வீட்டில் நிகழ்ந்த வற்றை காண்போம்


சுற்றி போட்டாள் அன்னை

பொழிலகத்து பூமதியாள் வந்த பின்பு
எழில்குலத்து மாங்கனிக்கு சுற்றி போட்டாள்
வெளிர்குழலி அன்னை;பூவை முற்றும் காறும்
மொழிமறுத்து நின்றாள்;தன் அறைக்கு சென்றாள்


மாங்கனியின் அறைக்கு சென்றாள் அன்னை

அறுசீர் விருத்தம்

வெற்றிலை சிவந்த செவ்வாய்
...வெண்மணி யாடும் மார்பள்
முற்றிய வயதள்; சிந்தை
...முதிர்ந்தவள்; இளங்கா ளைகள்
சுற்றிமுன் வட்ட மிட்ட
...சொப்பண பூ;சு ருங்கி(ய)
நெற்றியாள்; எதையோ பேச
...நிலவவள் அறைக்கு சென்றாள்


அன்னையின் ஆசையும் மாங்கனியின் கோபமும்

எண்சீர் விருத்தம்

அறைபோன இளநங்கை; அரசி தந்த
...அழகுமாலை ரசித்திருந்தாள்; எண்ண வெள்ளம்
கரைபுரண்டு நெஞ்சிலோட அவையில் பெற்ற
...கரஓசை காததிர அரும்பின் செல்வி
உறைந்திருந்தாள் பெருமிதத்தில்; சுருக்கம் கொண்ட
...பிறைபோன்ற நெற்றியோடும் நெருக்கம் கொண்ட
கறையான பல்லோடும் அங்கே அன்னை
...கனியோடு உரையாட வந்து நின்றாள்


தோய்ந்திருக்கும் நினைவுகளின் மகிழ்ச்சி ஆற்றில்
...தொலைதூரம் போனவளோ திரும்பி மீள
காய்ந்திருக்கும் மலர்போன்ற இதழை கூப்பி
...கனியேயென கூப்பிட்டாள்; விரியும் பூபோல்
சாய்ந்திருக்கும் இமைதூக்கி தாயை பார்த்தாள்
...ஜாடையிலே சங்கதியென்ன என்றாள்; அன்னை
ஓய்ந்திருக்கும் குலதொழிலோ உன்னால் மீண்டும்
...ஒளிகொள்ள வேண்டுமென விருப்பம் சொன்னாள்

அவ்வார்த்தை கேட்டவுடன் கோதை வெப்ப
...அணல்க்கக்கும் கோபமுற்றாள், உன்னை போன்று
ஒவ்வொருநாள் ஒவ்வொருத்தன் என்று தாவி
...உடைகழட்டி வாழஎனக்(கு) விருப்ப மில்லை
அவ்வாழ்க்கை வாழுதற்கு மாறாய் சாதல்
...அமுதமென்றாள்; அடித்தபுயல் ஓய்ந்தார் போல
மௌனமானாள்; மாங்கனியின் கற்பை பேச்சை
...மனதுக்குள் எண்ணியெண்ணி மகிழ்ந்தாள் அன்னை!
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - மாங்கனி இல்லம்
« Reply #41 on: September 14, 2012, 06:36:59 PM »


அச்சோ மாங்கனி கணிகையர் குலத்தவளா...? அப்போ அரசி இல்லையா அவள் ... :( ::)
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - மாங்கனி இல்லம்
« Reply #42 on: September 17, 2012, 12:35:33 PM »
அது அவள் குற்றமில்லையே, தொடர்ந்து வரும் பின்னூட்டத்துக்கு நன்றிங்க‌
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - பாவம் ஏறு
« Reply #43 on: September 18, 2012, 03:21:43 PM »
இந்த உலகம்

எண்சீர் விருத்தம்

இத்தெளிவு எனக்கு முன்பே இருந்தி ருந்தால்
...இவ்வாழ்வில் உழன்றிருக்க மாட்டேன்; என்று
தத்தளித்தாள் தனக்குள்,த வித்தாள் காலம்
...சாய்ந்தபின்பு உணர்ந்தென்ன ஆகும் என்றே
அச்சுருங்கி ய,தோலினாள்தான் தேற்றி கொண்டாள்
...அழகைபார்த்து வேசிவீட்டில் பிறந்த உன்னை
இஜ்ஜெகத்தில் கற்போடு யார்தான் பார்ப்பர்
...இல்வாழ்க்கை நமக்கெல்லாம் வாய்கா தென்றாள்


அறுசீர் விருத்தம்

மாதவி குலத்தில் வந்த
...மாதவி, மனதில் கொண்ட
காதலன் நினைவில் கற்பை
...காக்கலை யா?பூ போன
பாதையில் நானும் ஏகி
...பத்தினி தன்மை காப்பேன்
மாதவன் எய்யும் அம்பாய்
...வாடகை மகளாய் வாழேன்!

என்றாள், சீதை யைநெருப்பில்
...இறங்கி கற்பை நிரூபிக்க
சொன்ன உலகம் கணிகைகுல
...தோகை உன்னை யாநம்பும்
அன்னை கூறி ய,அனைத்தும்
...அழகின் நெஞ்சில் அமிலமூற்ற
எண்ணம் கலங்கி இளயசெல்வி
...வெம்மை கண்ணீர் உகுத்திருந்தாள்..


பாவம் ஏறு


அப்போது அங்கேறு வந்தான்; யார்க்கும்
ஒப்பேதும் இல்லாத வீரன் மீது
தப்பேது? அன்னைமகள் உற்ற ஊடல்
எப்படிதான் அறிந்திருப்பான் அந்த பிள்ளை..

வெங்கனியாய் மாங்கனியாள் கண்ணீர் வேகும்
சங்கதியை உணராமல் மையல் கையால்
செங்கனியாள் கண்ணிரண்டை சேர்த்து மூட
தங்கமகள் தோழியென்று தட்டி விட்டாள்..

வேறுஇதம் கைகளிலே விரிய கண்டு
யாருஎன்று கோபமாக திரும்பி பார்த்தாள்
ஏறுமகன் காதலோடு ஏங்கி நிற்க
தாறுமாறாய் வார்த்தைகளை இதழ்த ரித்தாள்..

காமனை மாமனாய் எணும்கு லத்தாள்
ஆமென ஆசையில் அடைவேன் என்று
ஏமமுற வந்தீரோ நாட்டைக் காக்கும்
தூமகரே நாடுகாக்கும் திறம்தான் ஈதோ ?

நீர்ப்பட்ட கனகாம்ப ரவிதை போல
நீர்முட்டும் கண்ணுடையாள் வெடித்தாள் தூய
தீர்வொன்று காதலுக்கு தேடி வந்து
சீர்க்கெட்ட பேருற்றான் சேர மைந்தன்..
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - பாவம் ஏறு
« Reply #44 on: September 18, 2012, 05:56:23 PM »
இப்டிதான் சமயம் அறியாமல் இந்த பசங்க பேசப்போய் ... திட்டு வாங்குறதே பொழப்ப போச்சு ... இனிக்கு நேற்று இல்ல அன்னிக்கும் இதுதான் வழக்கம் போல .. ஆதி தங்கை கவி கையாள்கை நெறியோடு அருமையாய் உள்ளது ... நிச்சயமாக இந்த காவியத்தை உங்கள் பெயரில் நூலாக வெளியிட்டால் என்ன