FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on November 03, 2012, 11:45:58 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 047
Post by: Global Angel on November 03, 2012, 11:45:58 PM
நிழல் படம் எண் : 047

இந்த களத்தின்

இந்த  நிழல் படம் Sham அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/047.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: shaM on November 03, 2012, 11:47:15 PM
அன்று  கொட்டும்  மழைதனிலும்
சுட்டெரிக்கும்  வெயில்தனிலும்
உனக்காய்  குடை பிடித்து
காதல்   கதை  பேசிய   காலங்கள்
நொடிப்  பொழுதில்    மறைந்துவிட்டன
நீயும்  என்னைவிட்டு  வெகு  தூரமாய்  பரந்துவிட்டா ய்

காணமல் போன  இதயமும்
கண்ணீர்  தேங்கிய  கண்களும்
தலை  தூக்கி  பார்க்கமுடியாமல்
உடல்  முழுவதும்  காதல் கரையுடன்
மாற்றார்க்கு  முகம் காட்டமுடியாமல்
யாருமே   இல்லாத  நடு  வானில்  மேகங்கள்   படைசூழ
நீ  என  நினைத்து  உண்மாயைக்கு  குடைபிடி த்து
குடையுடன்   காதல்   கதைய் பேசும்
காதல்  பித்துதலைகேறிய  காதல்கிறுக்கனாய்
உன்  வருகைக்காய்  உனக்காய்   ஏந்திய கைகளும்
விரித்த குடையுடனும் ஆஹாய முற்றதில்
உன்  வருகையை  எதிர்பார்த்து  காத்திருக்கும்
குடையுடன்  ஒரு தேவதாஸாய்     உன்னால்  நான் இன்று .........
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: RDX on November 11, 2012, 08:19:10 PM
நீ வாருவாய் என  குடை பிடித்தி நிற்கையில் நீ
நீ வரமால் போவதும். நீ  வர மாட்டாய் என
எண்ணும் தருணத்தில்  வந்து என்னை நனைப்பதும்
வேடிக்கை வினோதம் தான்

ஒ  வானமே பல தருணம் கெஞ்சியும் ஒரு துளியை
கூட மண்ணில் விழுத்த எண்ணும் உன் கண்களுக்கு
மட்டும் நாம் காத்திருப்பதும் கெஞ்சுவதும் வேடிக்கை

பல சிறு துளியாக மண்ணில் விழுந்தாலும் மண்ணில்
விழுந்த கணத்திலேயே ஒன்று சேர்ந்து கரைபுரண்டு
ஓடும் மழையின் துளியே  நீயும்  இயற்கையின் அதிசயம்தான் 
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: தமிழன் on November 16, 2012, 09:54:14 AM
பூமிக்கு வானமே குடை
அந்த வானுக்கு
குடை பிடிக்கும் கொ(கு)டைவள்ளல்
யாரோ இவன்

வானில் ஓசான் படலத்தில்
ஓட்டையென அதனால் தான்
சுட்டெரிக்கும் வெயில் என
சொன்னதைக் கேட்டு
ஓசான் படலம் ஒழுகாமல்
குடை பிடிக்கிறானோ இவன்

பூமியில் தண்ணீரின்றி
காய்ந்திருக்கும் நதிகள்
தவளைக்கு கூட
தண்ணீரில்லாத குளங்கள்
காத்திருந்து காத்திருந்து
காய்ந்து போனத‌னால்
மேகமதிலேறி தண்ணீரை தேடிகின்றானோ இவ‌ன்

உல‌க‌மே ப‌டைப்பின் நிய‌தியை தாண்டி
த‌லைகீழாக‌ சுழ‌ல்வ‌து க‌ண்டு
இறைவ‌ன் இருக்கிறானா என‌ ஐய‌ம் கொண்டு
வான‌ம‌தில் இறைவ‌னை தேடித்திரிகிறானோ இவ‌ன்


த‌ன் வானில் ஒரே நில‌வு
த‌ன் காத‌லி
அவ‌ள் தான் என்றிருந்த‌
திடீரென‌ காணாம‌ல் போன‌
த‌ன் காத‌லியை
வான‌மெங்கும் தேடிய‌லைகிறானோ இவ‌ன்

புரிய‌வில்லை என‌க்கு
புரிந்தால் சொல்லுங்க‌ள் என‌க்கு
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on November 17, 2012, 03:11:03 AM
ஏக்கங்களும் எண்ணங்களும்
தனிமைகளை சுகமாக
சுரண்டி தின்னுகின்றது
எட்டாத நிலவு
எரிகின்ற நெருப்பு
கை கொள்ளா கடல்
கை கூடா காதல்
அனைத்தையும்
கட்டி அணைக்க துடிக்கும்
எண்ண அதிர்வுகளுக்கு
வெறும் வண்ண கனவுகள்தான் மீதம் ...

கனவுகளை விதைத்து
கண்ணீரை அறுவடை செயும்
எண்ண அரக்கனை
எளிதில் கொன்றால்
வற்றாத ஜீவ நதியாகி
ஓடிகொண்டிருக்கும் உல்லாசமாய்  உள்ளம் ...

உனக்காக ஒரு தாஜ்மஹாலை
உள்ளத்தில் மட்டுமே கட்ட முடிந்தது
உலகுக்கு கொடுத்த சாஜஹான் கூட
அதை நனையாது காக்க எந்த வழியும் செயவில்லை ...
உனக்காக நான் பிடிக்கும்
இந்த ஒற்றை கருங் குடையின் கீழ்
என் உலகமே உனக்காய்
விரிந்து பரந்து காத்திருகிறது
நிழல் கொடுக்க ..
என்று வருவாய் ...
உன் பிடிவாதங்களையும்
வீண் பிதற்றல்களையும்
வீணென்று தூக்கி வீசி ..?

நிலவுக்கும் குடை பிடிப்பேன்
நீ அங்கு இருப்பாய் என்றால்
உன் நினைக்கும் குடை பிடிப்பேன்
என் கனவுகளில் மழை நாள் என்றால்
கனவுகளில் நீந்தி
கலவரம்  செய்யாது
என் கண்களில் நீந்த வா
காலம் எல்லாம்
உனக்கு நான் நிழல் கொடுப்பேன் ..
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Thavi on November 17, 2012, 12:12:17 PM
வான் மேகங்கள் சூழ்ந்து
வெள்ளி மழை பொழியும்  நேரம்
வளியோரமாய் உன்னினவுகளை
சுமந்து தனிமையில் செல்லுகையில்
என் நிழல்களாக  நீயும் வருவது போல
உணர்கின்றேன் நானடி ...
முத்து முத்து மழை துளிகள்
வெள்ளி காசு போல
வானில் இருந்து நமை நோக்கி வர
என் நிழல்க்கு குடை பிடிக்கிறேன்
நான் நனைந்தாலும் என் நிழல்கள்
நீ நனையாமல் இருக்க ....
நிழல்களாய் என்னை பின்தொடர்ந்தலும்
நீ பேசும் அன்புவார்த்தைகள்கு பஞ்சம் இல்லை
வெள்ளி மழையில் நனையும் நான்
உன் அன்பு மழையுளும் சேர்ந்து
நனைகிறேன் நானடி !