Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 339  (Read 224 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 339

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline விழியாள்

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

         ஒளிஞ்சி தாங்க வாழுறேன்
        பசியில என் புள்ள துடிச்சத கண்டு
        பத்து ரூபா திருடின பாவத்துக்காக
         இன்னும் பயந்துதாங்க வாழுறேன்
        அந்த மீசைக்கார போலீஸின்
      கூலிங் கிளாஸ்ல என் பிம்பம் படகூடாதுன் னு தானுங்க

         ஒளிஞ்சிதாங்க வாழுறேன்
        என் மருமகள் எங்க என்னும் குரல கேட்டதும்
      பெண்ணாய் பொறந்த பாவத்துக்காக
     இன்னும் மறஞ்சிதாங்க வாழுறேன்
     அந்த மனமற்றவன் மணம்
   என் மேல படக்கூடாதுன்னு தானுங்க

     ஒளிஞ்சி தாங்க வாழுறேன்
     ஆசையோடு அவள் நெற்றியில்
     குங்குமம் இட்ட அதிர்ஷ்டத்துக்காக
       இன்னும் பயந்து தாங்க வாழுறேன்
     ஆணவக்கொலைக்கு அடுத்த
      எடுத்துக்காட்டாய் நானும்
     ஆயிட கூடாதுன்னு தானுங்க

     ஒளிஞ்சிதாங்க வாழுறேன்
     குடிச்சி குடிச்சி  வீட்டை அழிச்சி
     அவரு நிம்மதியா போயி சேந்துட்டருங்க
      இன்னும் பயந்துதாங்க வாழுறேன்
      போன வாரம் கந்துக்காரன்
      பிடுங்கி போன ஆயிரமும்  அய்யோ நான்
      பேப்பர் போட்டு சேர்த்தது தானுங்க

      ஒளிந்து கொண்டு இருப்பவர்கள் ஏராள முங்க
       சுதந்திரமாய் அவர்களை சுற்ற வைக்க
       நம் மனதிற்கு ஏது தாராளமுங்க
       வாழ்கையும் இங்க கண்ணாமூச்சி தானுங்க
     வயது வந்தோர் ஆடும் ஆட்டம் தானுங்க
      பிரபஞ்சமே   எல்லை தானுங்க
      சிலர் மட்டும் களிப்படைவாங்க
      மற்றவர் இங்கே களைப்படைவாங்க.

       

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 642
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

அன்று ஓர் நாள்,
நான் யார், நான் எப்படி இங்கே, என யோசிக்க தொடங்கினேன்...
இன்று இப்பொழுது, நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றினை மறந்து..
சிறுக சிறுக.. என் நினைவுகளை பின்னே தள்ளினேன்..

அந்த ஓர் நாள்,
நான் இவ்வுலகை முதல் முதலாய் பார்த்த நாள்...
விழி மூடி, சுவாசம் அடக்கி பலநாள் காத்திருப்பு கலைந்து...
மெல்ல மெல்ல.. புவி காற்று என்மீது பட புல்லரித்தேன்..

அது ஓர் நாள்,
யார் யாரோ என்னை உற்று உற்று  பார்க்க..
யார் யாரோ என்னை தொட்டு தொட்டு  வியக்க ..
நானோ எதுவும் அறியாதவளாய்.. மிரண்டேன்..

அதே நாளில்,
விழிகளை லேசாக சுழற்றி சுழற்றி பார்த்தேன்...
இது என்ன இடம்.. நான் ஏன் இங்கே வந்தேன்...
என்னை சுற்றி ஏன்.. இப்படி ஒரு கூட்டம் வியந்தேன்..

அந்த நேரம்,
கூட்டங்கள் அதிகமாக அதிகமாக.. பயம் கவ்வியது..
நான் இருந்ததோ.. ஒரு குட்டி அறை போலிருந்தது..
என் நெஞ்சிலும் விழிகளிலும் பயம் தொற்றி கொண்டது..

அதே பொழுது,
அதிகமானோர் வர.. வர.. என் சிறு அறையும் இருளானது ..
நானும் என் சிரசை.. உள்ளே இழுத்து கொண்டேன்..
அதிக பீதியில் ஓஓ... என கரைய தொடங்கினேன்...

அப்பொழுது,
பதட்டம் ஒரு பக்கம்.. பயம் ஒரு பக்கம்,.. பசி ஒரு பக்கம்..
என் சிறிய இதழ்களும் பலகோணங்களில் நெளிந்தது...
அப்படியே ஒரு ஓரமாக ஒளிந்து கண் மூடி கொண்டேன்..

அச்சமயம்,
ஒரு நறுமணம், என் நாசிகள் துளைக்க கண் திறந்தேன்..
இரு கைகள் என் அருகில்....  ஒரு கரம் என தலை கோரா..
மற்றும் ஒரு கரம் என் தோள்களை தட்டி தடவி கொடுத்தது...

அதே நாளில்,
எனை வாரியெத்தாள்.. அவளோடு என்னை அணைத்து.கொண்டாள்
நானும் அவள் கரங்களை. என் பிஞ்சு விரல்களால்  பிடித்தேன்..
கரைகளும் அழுக்கும் படிந்த என் முகத்தை.. முகர்ந்து முத்தமிட்டாள்...

அந்நேரம்,
"இவ்வளவு அழகான குழந்தை.. எந்த பாதகி.. குப்பையில் வீசினாளோ .."
ஊர் என்ன சொன்னாலும்... யாரை யார் வசைபாடினாலும்..
என் பிறப்பும் என் தொட்டிலும்..  இந்த குப்பை தொட்டியே..
 
அதே நொடியில்,
கடவுள் அனுப்பிய தேவதையின் தோள் மீது சாய்ந்து..
அமைதியாக அந்த பசும் நிற தொட்டியை பார்த்தேன்... அதுவும்..
போய்வா மகளே.. போய்வா.. என  அமைதியாக சிரித்தது...

« Last Edit: March 20, 2024, 11:50:04 AM by TiNu »

Offline vaseegaran

உங்களை பார்த்தால் பயமாக இருக்கிறது ஆனால் அதைவிட பசி  எனக்கு அதிகமா இருக்கிறது

அன்றைக்கு மேலே இருந்து குண்டு விழுந்துகொண்டே இருந்தது

அம்மா அப்பவே சொன்னாள் வெளியே போகவேண்டாம் என்று அப்பா கேட்கவேயில்லை

சாப்பாடு வாங்க போன அப்பா இன்றுவரை  காணவேயில்லை

போனமாதம் எங்கள் பள்ளிக்கூடம் மேல் ஒரு குண்டு போட்டார்கள் ஒரே புகை

அம்மா அழுதுகொண்டே என்னை கூட்டிப்போனால் அன்றைக்கு என் 2 தோழி காணாமல் போய்விட்டார்கள்

எங்கள் தெருவில் பேசிக்கொண்டு இருந்தார்கள் நமக்கும் பக்கத்து நாட்டுக்கும் சண்டை, குண்டு போடுவார்கள்

பத்திரமாக இருக்கவேண்டும் என்று வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டுமாம்

இன்று இங்கே தான் சொன்னார்கள் ஹெலிகோப்டேரில் இருந்து சாப்பாடு  போடுவதாக

ஆனால் கூட்டமாக இருக்கிறது யார் வீட்லயும் சாப்பாடு இல்லை போல

நல்லவேளை எங்கள் வீட்டில் அம்மா இருக்கிறாள் என் பக்கத்துவீட்டில் நண்பனின் அம்மா இல்லை

எங்கள் ஊரில் சாப்பாடு வாங்க போனாலே  காணாமல் போய்விடுகிறார்கள், அவனின் அம்மாவும் காணோம்

அவனுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு போகணும்

நீங்கள் எப்பிடியும் என்னை கொன்றுவிடுவீர்கள் இந்த உணவை மட்டும் என் தம்பிக்கு தந்துவிட்டு வருகிறேன்

அதன்பின்பு என் மேல் குண்டு போடுங்கள்  நான் ஓடமாட்டேன் அவனால் நடக்க முடியாது

நான் ஒளிந்துகொண்டு இருக்கிறேன் நீங்கள் என்னை பார்க்கவில்லைதானே ,

பார்த்தாலும் பார்க்காத மாதிரி கொஞ்ச நேரம் விளையாட்டு காட்டுங்களே, மாட்டீர்களா |?

எனக்கு ஒன்றே ஒன்று உங்களிடம் கேட்கவேண்டும்

உங்கள் வீட்டிலும் எங்களை போல் சிறுவர்கள் இருப்பார்கள் தானே!!!

« Last Edit: March 27, 2024, 08:56:26 PM by vaseegaran »

Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 183
  • Total likes: 789
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


பயம்

தனிமை கண்டு பயந்தேன்
தாலாட்டுப்பாடி தூங்க வைத்தீர்...
இருட்டை கண்டு பயந்தேன்
இருக்கமாய் அணைத்து கொண்டீர்...

படிப்பை கண்டு பயந்தேன்
படிப்படியாய் அதன் அருமையை உணர்த்தினீர்...
மிருகங்களை கண்டு பயந்தேன்
மிருளாதே என்று அதட்டினீர்...

பருவமடைந்த காலத்திலோ.. கன்னியரை
மயக்கும் கட்டிளம் காளைகளை கண்டு பயந்தேன்..
பக்குவமாய் எடுத்துரைத்து..அவர்களும்
நம் நட்புதான் என விளக்கினீர்...

யார் வந்தாலும் யார் போனாலும்
நான் இருப்பேன் உனக்காய்
என்றும் தனித்து இயங்க விடேன்
என்று நம்பிக்கை மொழி உரைத்தீர்...

உம்மீது இருந்த நம்பிக்கையில்
உலகை எதிர்கொள்ள துணிந்தேன்..
வீரமங்கையாய் உலா வர நினைக்கையில்
வெறுமை ஆகி போனதென்ன நின் இடம்...


நீர் கொடுத்த தைரியங்களை
ஆயுதமாய் ஏந்தி போராடி களைத்தேன்
இனி வரும் காலம் தனை..
உம் கை கோர்த்து கடந்திட காத்திருக்கிறேன்

என் கண்ணெதிரே தோன்றி
என் கவலையெல்லாம் நீக்கி
என் பயம் தனை போக்க
என்று வருவீரோ ... அப்பா

❤️❤️❤️❤️❤️❤️





Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 127
  • Total likes: 761
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
சாக்லெட்களின் குவியல்கள்..
ஐஸ்கிரீமின் சாலைகள்..
அப்பாவிடம் கேட்டு அடம்பிடித்த கிரிக்கெட் மட்டைகள் ஒன்றல்ல ஓராயிரம் என்னைச் சூழ்ந்தபடி..
மகிழ்ச்சி கடலில் நீந்திய படியே
நிறைவேறாத என் ஆசைகளை நிறைவேற்றிய வண்ணம் சுழன்று கொண்டிருந்தது எனது கனவு உலகம்..

சட்டென்று விழிப்பு வர அடி வயிற்றில் பூமிப் பந்து சுழல்வது போன்ற உணர்வு..

அம்மா ஏற்கனவே எச்சரித்தாள் தூங்கும் முன் அனைத்தையும் முடித்து விட்டு தூங்கு என்று..
அம்மா சொல்லும் எதையும் சட்டை செய்யாத நான் இதை மட்டும் செய்து விடுவேனா என்ன?

அம்மாவை எழுப்பி விடலாமா?
வேண்டாம். ஸ்டேசன் வந்த ரயில் போல் அலறுவாள்..
நாமே போய்விடலாம் துணிந்து..

எங்கும் இருள் ..
எங்கும் மௌனம்..
நிசப்தத்தின் சாலைகளில்
ஊர்ந்து சென்றது
என் மன ரயில் பூச்சி..

ஆத்திரத்தைக் கூட அடக்கி விட முடிகிறது.. இதை அடக்கி விட முடியவில்லையே..

அடிமேல் அடிவைத்து யாரும் முழித்திரா வண்ணம் ஒரு வழியாக என் பாரம் இறக்கிட
பாத்ரூம் வாசலைத் திறந்தேன்..

அங்கு நான் கண்ட காட்சி ....
அய்யோ.........
இது யார்?
இந்த நேரத்தில் எங்கள் பாத்ரூமில்?
ஒரு வேளை கொல்லி வாய் பிசாசோ ? ரத்தக் கட்டேரியோ?
அதென்ன அதன் கைகளில் கோடாரி போல் தெரிகிறதே?
பயம், பயம், பயம், பயத்தில் "வீல்" என்று அலறினேன் ..

சில நொடிகள் பாலில் விழுந்த சீனியாய் கரைந்தன..
அது.. அது.. ஏன்
இன்னும் நம்மை ஒன்றும் செய்யவில்லை என்ற
ஒரு நீண்ட பெருமூச்சுக்கு பின்
நன்றாக உற்று பார்க்கிறேன் மீண்டும் அந்த உருவத்தை..
அட அது கழற்றி போட்ட எனது ஆடையின் நிழல் தான்..

வந்த வேலையை அவசர கதியில் முடித்து விட்டு வந்த சுவடு தெரியாமல் மீண்டும் என் படுக்கை சென்று தலையணையில் முகம் புதைத்துக் கொண்டேன்..

தூக்கம் வரவில்லை..
குப்பென்று வேர்த்த உடலும்
உலர்ந்த உதடுகளும், தாகம் தீர்த்து குளிர வை என்று கதறிக் கொண்டிருந்தன..
பேசாமல் இரு காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று
முணு முணுத்தன
எனது உதடுகள்..

Online KS Saravanan

எங்கும் யுத்தம் எதிலும் யுத்தம்
கருவரைக்கும் யுத்தம் கல்லறைக்கும் யுத்தம்
கண்காணா தேசம் தேடி கடல் வழியே போனாலும்
கண்டவுடன் சுட வேண்டி கண்டவர்கள் யுத்தம்..!

தோழனிடம் தோன்றிய தீண்டாமை யுத்தம்
வார்த்தைகளால் மாறிய மொழிபேத யுத்தம்
மண்ணால் தோன்றின மண்ணாசை யுத்தம்
அரசுகளிடம் தோன்றிய வல்லமை யுத்தம்..!

இயற்கையை ரசித்திடும் மனிதம் எங்கே..
இயற்பியலை கண்டறிந்த மானிடன் எங்கே..!
யுத்தம் எனும் சொல் உருவாகும்
என்று கணக்கிடாத கணிதன் எங்கே...!

நிலை தடுமாறும் அழிவுறு ஆயுதங்கள் அழிந்திடுமா..!
நிலை மாறிய  மண்ணில் புண்ணிய பூமி பிறந்திடுமா..!
குரங்கில் இருந்து வந்த மனிதர்களே
மீண்டும் நாம் குரங்காய் போனால் என்ன..?

நாட்டிலே ஒளிந்து வாழ்வதை விட
காட்டிலே சுதந்திரமாய் இருப்போம்..!
பூமியே தரையாகி வானமே கூரையாக
வாழும் வழியே நாமும் அறிவோம்..!
« Last Edit: March 23, 2024, 07:04:14 PM by KS Saravanan »


Offline SweeTie

மாறு வேடத்தில் மறைந்திருந்தால் 
மாண்பு மிக்க உன்னை  தெரியாமல் போய்விடுமா?
கன்னியரை  கவர்ந்து   
காதல் எனும் மாயவலையில் வீழ்த்தி
கடைசியில்  நட்டாற்றில்  விடுபவன் அல்லவா  நீ

காலமெல்லாம்  நீயென்று 
காத்திருந்த  காயத்ரி   
பள்ளியில்  படிக்கையிலே   பவித்ரா
உன்னையே  உலகம் என நினைத்து
உனக்காக தவம்கிடந்த ஊர்வசி 
தான் உண்டு தன வேலை உண்டு என்றிருந்த
தமிழரசியை கூட விட்டுவைக்கவில்லையே
இன்னும் எத்தனை பெண்களை நிர்க்கதியாக்கினாயோ?

கன்னியரை கழுவேற்றும்   மனிதா !
காதல் எனும் மோக வலையில் 
காலத்தை   கறையாக்கும்  மனிதா !
களைந்துவிடு  உன்  வேடத்தை   
இல்லையெனில்,  சீக்கிரமே  நீ கழுவேறும்
காலத்துக்கு இரையாவாய்? 

காலக்  கொடுமைகளில் சிக்கி சீரழிந்து
காலாவதியாகும்   பெண்ணினத்தை வாழவிடு
நீதிக்கு  பயந்து   ஒளிந்து வாழும்   
உன் சீரற்ற வாழ்க்கைக்கு   வை  ஒரு முற்றுப்புள்ளி
உத்தமனாய்  வாளாவிட்டாலும்   
உலகத்தின்   ஒரு மனிதனாய் வாழப்பார்

நான்கு சுவற்றுக்குள்  எத்தனை  காலங்கள் வாழப்போகிறாய்
உன் முகமூடி வாழ்க்கைக்கு  முடிவே இல்லையா?
நீ  திருந்துவதும்   செத்து முடிவதும்   
உன் கையில்தான் இருக்கிறது.   
சிந்தித்து  செயல்படு  மனிதா !
 

Offline Dito

  • Newbie
  • *
  • Posts: 12
  • Total likes: 23
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
எப்பப்பபப்ப... எப்படித் தான் முடிகிறது இதனால் மட்டும்..?
கையில் கத்தியின்றி,
இரத்தமின்றி சுற்றி இருக்கும் எல்லோரையும் விரட்டி விட முடிகிறது இதனால் மட்டும்..

இத்தனை நாள் தெரியவில்லை
அம்மாவும் அப்பாவும் சண்டையிட்டுக் கொண்ட காரணங்கள்..

இத்தனை நாள் தெரியவில்லை அப்பாவை கண்ட அனைவரும் மிரண்டு ஓடிய காரணங்கள்..

என் நண்பர்கள் கூட சொல்லி இருக்கிறார்கள். உன் அப்பாவைக் கண்டால் பயமாய் இருக்கிறது என்று..

இப்போது எனக்கும் பயமாய் தான் உள்ளது...
 என் தந்தை கையில் இருந்த உடைந்த மதுபாட்டிலைக் கண்டு..

எனக்கும் மிரட்சியாய் தான் உள்ளது..
எனது தாயின் வயிறு கிழிந்து தொங்கிய குடலையும் கொட்டிய குருதியையும் கண்டு..