சம்மதத்தில் கலக்கவேண்டும்
என் மதமும் உன் மதமும்
எம்மத்தை சார்ந்தாலும் ..நம்
காதலுக்கு ஒரு மதமே
கண்டதும் காதல் கொண்டேன்
கண்களால் உன்னை கைதுசெய்தேன்
சென்றதும் உன்னை தேடுகின்றேன்
சேர்ந்துவிட தவிக்கின்றேன்
சொல்லத் துடிக்கிறது இதழ்கள்
தடுக்கிறது என் நாணம்
நீ கிட்ட வரும்போதெல்லாம்
எட்ட எட்ட போகிறதே கால்கள்
எட்டி நின்று பேசுகின்ற நம் இதயகங்கள்
தொட்டுவிட துடிக்கின்ற ஸ்பரிசங்கள்
கைகாட்டி விழும்வரை காத்திருக்கும் ரயில்போல்
காத்திருப்பதன் காரணம்தான் என்ன ?
காதல் என்ற மந்திரத்தால் கட்டுண்டோம்
மொட்டவிழ்ந்த மல்லிகைபோல் நானும்
கொட்ட கொட்ட விழித்திருக்கும் கருவண்டு நீயும்
காதலை சொல்ல தாமதம் ஏனோ ?
அத்தான் என்பதா/ அன்பே என்பதா
கண்ணா என்பதா மன்னா என்பதா
இக்காலத்தோரணையில் டார்லிங் என்பதா
பெயரே தெரியாத உன்னை எப்படி அழைப்பேன்?
சொல்லிவிடு சொல்லிவிடு என்கிறது மனசு
லப் டப்,,,,,,,,, லப் டப் .......... லப் டப் ..........
இதய நாடிகளின் வேகம் பட படக்கிறது
I Love you dear என்கிறது எதிர் குரல்
ஆகாயத்தில் அசரீரி ஒலித்ததா ?
அண்டை நாட்டில் அணுகுண்டு வெடித்ததா ?
அகலத் திறந்தன என் விழிகள் .. அதில்
அடைக்கலமானான் அவன்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி
யன்னல்வழியாக வந்த இசையில் லயித்தேன்
நிர்மலமான நீலவானில் ஜோடிக் குயில்கள்
பறந்தன. இறக்கைவிரித்து