26
« Last post by TiNu on May 15, 2024, 11:04:13 AM »
அன்று,
ஓ.. விளையாடலே.. எனையாளும் கலையே..
உன்னை விரும்பாதவர் யாருமுண்டோ?
உன்னால் நாங்கள் அடையும் பயன்கள்.. ஏராளம்.
அது, எண்ணுக்குள்ளும் எழுத்துக்குள்ளும் அடங்காது..
உன்னை, சில மனிதர்கள்.. பொழுது போக்கு என்பர்.
இன்னும், ஒரு சிலர் மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்பர்..
ஆனால் நானோ.. ஒரு கடின வித்தையை ஒருவர் அறியாமல்
அவருக்கு நாம் எளிமையாக கற்பிக்கும் யுக்தி என்பேன்..
நீயோ! ஒரு நிகழ்வுக்கு வியூகம் அமைக்க.. கற்று தருகின்றாய்..
அவ்வியுகத்தை செயலாக்கும் நுட்பம் செதுக்க.. கற்று தருகின்றாய்.. ..
செதுக்கிய நுட்பத்தை செயலாகும்.. மனவலிமை கற்று தருகின்றாய்..
மனவலிமையோடு.. வேகம் விவேகத்தையும் கற்று தருகின்றாய்..
மேலும்,
உள்ளரங்க விளையாட்டு.. வெளி அரங்க விளையாட்டு..
தனிநபர் விளையாட்டு..., குழுக்களின் விளையாட்டு...
எல்லைக்குள் விளையாட்டு.. எல்லைகளில்லா சுதந்திர விளையாட்டு..
விதிமுறைகளின் கட்டுப்பாட்டில் நீந்த கற்று தருகின்றாய்..
இன்றோ,
மட்டைபந்தே... உலகின் மாபெரும்.. இதய துடிப்பு என்கிறார்கள்..
அகன்ற ஓர் அரங்கில், ஆயிர கணக்கானோர் சுற்றி நிற்க...
ஒருவர் மட்டும் பத்துஎறிய.. அதை ஒருவர் தடுத்து ஆட..
மற்ற வீரர்கள் வேடிக்கைபார்க்க, நடந்தேரும் விளையாடல்.. அது..
இன்று, விளையாட்டை விளையாட்டாக பார்க்க ஆளில்லை..
தனக்கு, பொருளீட்டும் தொழிலாக பார்க்கின்றது.. ஒரு கும்பல்..
தான், உருவாக்கிய பொருளை சந்தைப்படுத்துகிறது.. ஒரு கும்பல்..
கைகள் தட்டி கொண்டவந்தவர்களை.. சூதாடிகளாக மாற்றுகிறது.. ஒரு கும்பல்..
இன்றைய விளையாட்டுக்கள் எல்லாம்.. விளையாட்டாக இல்லையே..
மட்டைபந்திடம்.. தன் தன்மை மறந்து மயங்கி தடுமாறி கிடக்கின்றன..
பண்டைக்கால நம் பாரம்பரிய விளையாட்டுகள் எங்கே போயின?
நம்மை செதுக்கி சிற்பமாகிய நம்ம விளையாட்டை காத்து நிற்போமா?
இவை, ஆயக்கலைகளில் 64-ல் நம்மை களிப்பூட்டும் கலையிலும் சேராது.
இது, வீரம் செறிந்த போர்ப்பயிற்சி கலைகளிலும் அடங்காது...
நாம், விவேகவீரத்துக்கு விலைகள் பேசாது.. விலைகளுக்கும் போகாது..
அதன், சிறப்புகளை.. மதிப்புகளை.. மங்காது மறையாது.. காத்து நிற்போம்...