தூக்கி எறிய குப்பை அல்ல..
தூக்கி எறிய பழுதாகி போன
பண்டம் அல்ல
தூக்கி எறிய வேண்டாப் பொருளா
குழந்தை ஒன்றும் உயிர் இல்லா
ஜடம் அல்ல...
குப்பை தொட்டியிலும்,
கழிவு நீர் ஓடையிலும்
தூக்கி எறியும் மாந்தரே
வழி தவறிய உன்னால்
வழி இன்றி தவிக்கும்
சேயை மறப்பது ஏன்???
சந்தோசம் உனக்கு
தண்டனை மழலைக்கோ??