ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 148
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/148.png)
விசித்திரமான உலகமடா
இது மானிடா !!
பசிக்கும் குழந்தைக்கு பாலூட்டிட
தாய்க்கு நேரமில்லை..
தவிக்கும் வாய்க்கு நீர் கொடுத்திட
யாருக்கும் மனமில்லை ..
துடிக்கும் உயிருக்கு கரம் நீட்டிட
எவருக்கும் தயவில்லை ..
ஆனால்
புறம் பேசுவதும்
பிறர் வாழ்வை கெடுப்பதும்
பொய்யாக நடிப்பதும்
வீண் புகழ்ச்சி தேடுவதும்
அன்றாட வாழ்க்கையாகி விட்டது..
தேவைதானா இந்த
தற்பெருமை
நாடகம்
வஞ்சகம் ??
மனிதன் மனிதனாக இல்லாமல்
எதையோ தேடி ஓடுகின்றான் முடிவின்றி
தான் மனிதன் என்பதை மறந்து ..
ஒரு நொடி நின்று
யோசித்துப்பார் மானிடா !!
நீ மனிதனாய் பிறருக்கு செய்ய
கடமைகள் கோடி உண்டு ..
நீயும் உயர்ந்து பிறருக்கும்
தோள்கொடுத்து உயர்த்திடு ..
இல்லையேல் உனக்கும் ஐந்தறிவு
ஜீவராசிகளுக்கும் வித்தியாசம் தான் ஏது ??
பாவம் வஞ்சம் அறிந்திடா குஞ்சுகள் பார் ..
கையில் பலம் இல்லை அறிவிலும் முதிர்வில்லை
தங்கள் ஆபத்தும் உணரவில்லை ..
உதவும் உள்ளம் ஒன்றே கொண்டு நாய்க்கும் இரங்கி
நானிநலம் போற்றிட நம்நடுவே உயர்ந்துவிட்டனர் ..
வாழும்போது உன்னை பற்றி
பிறர் பெருமையாய் பேசாவிடினும்
இறந்த பின் உன்னை இகழ்ந்து
பேசுவார் இல்லையேல் அதுவே சிறந்தது ..
பொய்யாய் சுயநலமாய்
வாழ்ந்து மடிவதைவிட
உண்மையாய் நேர்மையாய்
வாழ்ந்து மாண்டிடு மானிடா !!
~ மைனா தமிழ் பிரியை ~