உன்னை நேசிக்கிறேன்
நீயும் என்னை
நேசிக்க வேண்டும்
என்று சொல்வது
நிர்பந்தம்...
நீ என்னை நினைக்காமல்
இருந்தாலும் பரவாயில்லை ...
நான் உன் நினைவுகளுடனே
வாழ்வேன் என்பது ...
உண்மையான நேசம் ...
அந்த நேசத்திற்கு
பலர் கொடுக்கும் பட்டம் ...
முட்டாள் தனம் ...
சிலர் கொடுக்கும் பதக்கம் ...
ஐயோ பாவம் ...
நேசித்தவர்க்கு மட்டுமே புரியும் ...
அது எவ்வளவு சுகமான வலி என்று ...