கருவறையில் உதித்த என்னை
அன்னை தாங்க
என்னை தன் கற்பனையிலும்
அன்னையை கையிலும் தாங்கிய
என் முதல் காதல்
ஈன்றவள் கண் திறந்து
பார்க்கும் முன்னே என்னை
எடுத்து முதல் முத்தம் கொடுத்த
என் முதல் காதல்
பத்து மாதம் சுமந்த அன்னையை
விடவும் இன்று வரை
என்னை தன் இதயத்திலும்
சுமக்கும் என் முதல் காதல்
தோல்வியால் இதுவரை நான்
துவண்டது இல்லை
கவலையால் நான் இன்றுவரை
கலங்கியதும் இல்லை
காரணம் என் முதல் காதல்
இன்று வரை அம்மா கூட கண்டித்தது இல்லை
என்னை கண்டிக்கும் உரிமையை கூட
யாருக்கும் கொடுத்தது இல்லை
என் முதல் காதல்
என்னை அவர் தாயை போல்
கவனித்துக்கொள்ளும் அன்பு
பூவை போல் என்னை காக்கும்
என் முதல் காதல்
நான் பார்த்து ரசித்த முதல்
காதல் நீங்கள் தான் என் அப்பா
உங்களை என் தந்தையாய்
அடைய என்ன தவம் செய்தேனோ