எத்தனை கவிதைகள் எழுதியிருப்பேன்
வாசிக்க நீ வரவில்லை
உனக்குள்
நா இல்லையா
நான் இல்லையா
எனக்கும் உனக்கும்
இடையில் ரோஜாக்கள்
என்ன கட்ட போகிறாய்
மலர் மாலையா
மலர் வளையமா
சந்தேகம் இல்லை
நீ ரசமானவள்
பழரசமா
பாதரசமா
சொல்
யாரென ஆக்கப்போகிறாய் என்னை
கணவனாகவா
கவிஞனாகவா