அன்று நானும் எனது தோழி வனஜாவும் ஒரு ஓவிய கண்காட்சிக்கு செல்வதாக தீர்மானித்தோம். வனஜாவும் நானும் ஒரே இடத்தில் வேலை செய்வதால் ஒரு அபார்ட்மெண்ட் இல் ஒன்றாகவே இருந்தோம். நல்ல வசதியான இடம். எங்கள் ஆபிசுக்கு ம் அருகில் அமைந்திருந்தது. அவசரசமாக விடிய முன்னர் எழுந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த அபார்ட்மெண்டில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்று சனிக்கிழமை என்பதால் வேலைக்கு போகவேண்டிய தேவை இருக்கவில்லை. எனவேதான் எப்படியாவது இன்று அந்த ஓவிய கண்காட்சிக்கு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் எங்களை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.
“ஸ்வீட்டி ரெடியா ? “வனஜாவின் குரல் அடுத்த அறையிலிருந்து கேட்டதும்.
“எஸ் எஸ் நான் ரெடி: என்று சொல்லிக்கொண்டே என் அறையை விட்டு வெளியே வரவும் வனஜாவும் அவள் அறையை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. வனஜா ஒரு ஊதா கலர் ட்ரெஸ்ஸில் ரொம்ப அழகாக இருந்தாள் :
" வனஜா உன்னோட டிரஸ் ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப விலைபோல இருக்கு"
"அப்படிலாம் ஒன்னும் இல்ல ஸ்வீட்டி ஒரு ஐந்தாயிரம் தான் "
"என்னது ஐந்தாயிரம் ரொம்ப விலை இல்லையா?" என்றேன் ஒரு பெருமூச்சுடன்
“:ஸ்வீட்டி உன்னோட டிரஸ் கூட ரொம்ப அழகுடி"
‘சரி சரி சீக்ரம் போகலாம்’ சொல்லிக்கொண்டே டாக்ஸி ஸ்டாண்ட் நோக்கி நடக்கலானோம். இருவரும் டாக்சி ஸ்டாண்ட் இல் நின்ற ஒரு டாக்சியில் ஏறிக்கொண்டோம்.
நாங்கள் செல்லும் அந்த ஓவிய கண்காட்சி சாலை அதிக தூரம் இல்லை. அரை மணித்தியாலத்தில் போய்விடலாம். 7 மணிக்கு மூடி விடுவார்கள். ஆகவே சீக்கிரம் சென்றால்தான் நன்றாக பார்க்க முடியும் . நாங்கள் அந்த இடத்தை அடையும்போது மணி 6 ஆகிவிட்டது. சீக்கிரம் பாஸ் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். அன்று சனிக்கிழமையாதலால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. எல்லோரும் எங்களை போல சீக்கிரம் எல்லாவற்றையும் பார்த்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் பரபரப்பாக
இருந்தார்கள்.
நாங்களும் அந்த வரிசையில் சேர்ந்துகொண்டோம். வரிசை நத்தை போல் ஊர்ந்துகொண்டிருந்தது. திரும்பி பார்க்கும்போது எங்களுக்கு பின்னால் ஏறக்குறைய இருபது முப்பது பேர் நிற்பது தெரிந்தது. அதுவே மனசுக்கு சந்தோசமாக இருந்தது. . நத்தை போல் ஊர்ந்த வரிசை இப்பொது கூடத்தினுள் நுழைய ஆரம்பமாகியது.
அந்த காட்சி கூடம் அழகாக சோடனை செய்யப்பட்டு ஸ்பாட் லைட்கள் போடப்பட்டு இருந்தது.. அதனால் ஓவியங்கள் மிக அழகாக காட்சியளித்தன. நாங்களும் ஒவொன்றாக பார்த்தபடியே நகர்ந்துகொண்டிருந்தோம். ஒவொரு ஓவியத்தின் கீழும் ஓவியத்தை பற்றிய விவரம் ஓவியர் பெயர் விலை என்பன பொறிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன. இயற்கை காட்சிகள், அப்ஸ்ட்ரக்ட் ஓவியங்கள், ஸ்டில் லைப் என்று பலதரப்பட்ட ஓவியங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. கையால் வரையப்பட்ட அசல் ஓவியங்கள் என்பதால் விலை அதிகமாக காணப்பட்டது.
”வனஜா ஓவியங்கள் ரொம்ப விலை போல் தெரியுது” என்றேன்
“ஸ்வீட்டி ஆமா எல்லாம் கையால் வரைந்த அசல் ஓவியங்கள். அப்படித்தான் இருக்கும்” என்றாள் வனஜா
பரவாயில்லை இந்த அழகான ஓவியங்களை பார்ப்பது மனசுக்கு எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது. எங்கள் ரசனை தொடர வரிசை ஊர்ந்து கொண்டு சென்றது.
அந்த சாலையில் கடைசியில் அமைந்திருந்தது உருவப்பட( போர்ட்ரைட்) ஓவியங்கள் பகுதி . அதில் பலவிதமான உருவ ஓவியங்கள் காணப்பட்டன. அதை தொடர்ந்து ஒரு பெண்ணின் உருவப்படம் . அசல் என்னை போலவே இருந்தது. \பார்த்ததும் திகைத்து போனோம். பல பல போஸ்களில் அந்த பெண்ணின் உருவம் காணப்பட்டது. அதில் சில பென்சில்களாலும் சில வர்ணங்களாலும் தீட்டப்படிருந்தன.
வனஜா என்னையும் அந்த போர்ட்ரைட் ஓவியங்களையும் மாறி மாறி பார்த்தாள் .
”ஸ்வீட்டி என்னடி இதெல்லாம்” என்றாள்
“ஆமாடி என் கண்களையே நம்பமுடியவில்லை “ என்றேன்
“நீ முகப்புத்தகத்தில் உன் படத்தை போட்டியா என்றாள் வனஜா
“அய்யோ நான் போடவே இல்லையே “ என்றேன்
“அப்படியானால் எப்படி உன் படத்தை வரைந்தார்கள்” என்றாள்
“அதான் வனஜா எனக்கும் புரியாத புதிராக இருக்கு” என்றேன்
: அந்த ஓவியங்களை வரைந்த ஓவிய பெயர் என்னவென்று பார்த்தோம். அடியில் கையெழுத்து போட்டிருந்தார். அவர் பெயர் விஜயபாரதி என்று போடப்பட்டிருந்தது. . எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ,மனதில் ஒரு பீதி உண்டாயிற்று
சீக்கிரம் வீட்டுக்கு போய்விடலாம் என்றிருந்தது. அவசர அவசரமாக மீதியிருந்த ஓவியங்களையும் பட்டும் படாமலும் பார்த்துவிட்டு சீக்கிரமே வீடு திரும்பாலானோம். போகும் வழியெல்லாம் இருவரும் இதையே பேசிக்கொண்டும் சென்றோம். பயம் ஒரு புறம் இருந்தாலும் ஆர்வம் இன்னொருபுறம் இருந்தது.
வீட்டுக்கு சென்றதும் இருவரும் கணினியில் உட்கார்ந்து விஜய பாரதி யாரென்ற ஆராய்ச்சியில் ஈடுபடலானோம். அவரது வலைப்பக்கத்தை தேடினோம். . எத்தனையோ விஜய பாரதிகள் அங்கே காணப்பட்டார்கள்
ஓவியர் விஜயபாரதி என்று தேடினோம். அப்போதும் சிலர் வந்து போனார்கள். அவர்களது சுயவிவர படத்தை பார்க்கும்போது அதிகமாக எல்லாரும் வயதானவர்களாகவே இருந்தார்கள்.
" கண்டிப்பா இவர்கள் யாருமே இருக்கமுடியாது " என்றாள். வனஜா
"எப்படி சொல்கிறாய் வனஜா"
"விஜய பாரதி ரொம்ப லேட்டஸ்ட் பேரா இருக்கு:, ஆகவே ஒரு யூத் ஆகத்தான் இருக்கும்"
" எங்க பக்கத்து வீட்டு ஆண்டி பேரு கூட ரொம்ப லேட்டஸ்ட் " எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை.
ஹாஹாஹா....ஹாஹாஹா. இருவரும் சிரித்துக்கொண்டே தேடலில் முனைந்தோம்.
" ஸ்வீட்டி எனக்கு ஒரு ஐடியா தோணுது. நாளைக்கு அந்த கண்காட்சி அரங்கத்துக்குபோய் அமைப்பாளரிடம் விசாரிப்போம் " " எனக்கும் அதுவே நல்லதா தோணுது" இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வனஜா அவள் அறைக்கு சென்றுவிட்டாள். நானும் எனது இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு தூங்க சென்றுவிட்டேன். இரவு கனவு முழுவதும் அந்த ஓவியங்கள் வந்துகொண்டே இருந்தன.
அடுத்த நாள் வழக்கம்போல இருவரும் பொடிநடையில் ஆபிஸ் சென்றுகொண்டிருந்தோம். எங்களது பேச்சில் விஜய பாரதி அடிக்கடி உலவி கொண்டிருந்தார். எதற்காக எனது படத்தை வரைந்து கொண்டிருக்கிறான் என்ற கேள்வி என்னை உலுப்பிக்கொண்டே இருந்தது. ஆபிஸ் முடிந்ததும் கூறியது போலவே அந்த அரங்கத்தில் நுழைந்து அமைப்பாளரை சந்தித்தோம். அவரிடம் விஜய பாரதி பற்றி விசாரணை செய்தோம். அவர் முதலில் தயங்கினார். :ஓவியர்களின் அனுமதி இல்லாமல் நாங்கள் அவர் பற்றிய தகவல் தர முடியாது என்று மறுத்துவிட்டார். வனஜா அவரிடம் மிகவும் கெஞ்சி கேட்டுக்கொண்டிருந்தாள்.
"சார் நான் அவரிடம் ஓவியம் கற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். அதற்காகத்தான் கேட்கிறேன் " என்று கூசாமல் ஒரு பொய்யை கூறினாள்
அவர் முகத்தில் இப்பொது கொஞ்சம் பரிதாபம் தெரிந்தது. கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பது போல் இருந்தது. கடைசியில் வனஜாவின் தந்திரம் வெற்றி கண்டுவிடவே விஜயபாரதியின் போன் நம்பரை வாங்கிவிட்டாள் என்னை பார்த்து ஒரு சிறிய நக்கல் சிரிப்பு சிரித்தாள். இருவரும் நன்றி சார் என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டோம்.
வீட்டுக்கு சென்றபோது நேரம் 7 மணியாகிவிட்டது. இந்த நேரம் போன் பண்ணுவது சரியா தப்பா என்று யோசிக்கலானோம்.
" எதற்கும் ஒரு தரம் அடிச்சு பாப்போம். பேசுனா பேசுவோம். இல்லன்னா நாளைக்கு பேசுவோம்" என்றாள் வனஜா
கடவுளை வேண்டிக்கொண்டு அந்த நம்பரை டயல் செய்தோம். ஆனால் அவர் எடுக்கவில்லை. சரி நாளைக்கு பார்ப்போம் என்று வைத்துவிட்டு எங்களை ஆசுவாசப் படுத்திகொண்டு தூங்க சென்றுவிட்டோம்.
காலை ஆபிஸ் செல்வதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தேன். அப்போது எனது கைத்தொலைபேசி கிணுகிணுத்தது. யாரென்று பார்க்கையில் அது விஜய பாரதி நம்பர் . எனக்கு மனம் திக் திக் என்று அடிக்க . ஓடிச்சென்று வனஜாவின் அறையை தட்டினேன்.
" நீ பேசு " என்று என் கைத்தொலைபேசியை கொடுத்தேன். அவள் கைகள் நடுங்கி கொண்டிருந்தன.
குட் மோர்னிங் சார்" என்றால்
அவரும் குட் மோர்னிங் சொல்லிருக்கலாம் போலும்
" நேற்று உங்கள் நம்பரில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது: என்றார்
“ஆமாம் சார். நாங்கள்தான் அழைத்தோம். உங்கள் ஓவி:ய கண்காட்சியை பார்க்க சென்றிருந்தோம் மிகவும் அழகான ஓவியங்கள்” : என்று தட்டுத்தடுமாறி. கொண்டிருந்தாள் வனஜா
“தங்க் யு” என்றார் .
அடுத்து என்ன பேசுவாளோ என்று நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
" சார் உங்கள் அடுத்த கண்காட்சி எப்போது எங்கே நடக்கும்" என்றாள் படீரென்று
“:இப்பொது எதுவும் என் அட்டவணையில் இல்லை. வரும்போது சொல்கிறேன்”: என்றார் அவர்.
வனஜாவின் முகத்தில் அசடு வழிந்தது. கண்டிப்பாக இதுக்கு மேல் அவளால் பேசமுடியாது என் உள்மனம் சொல்லியது. ஆனால் வனஜா சளைத்துவிடவில்லை. அடுத்த கேள்வியை கேட்க ஆயத்தமானாள்.
"சார் உங்க வலைப்பக்கம் விலா சம் கொடுக்கமுடியுமா" என்றாள்
" விஜய பாரதி ஆர்ட்ஸ” என்றார். மிகவம் ஷோர்ட் அண்ட் ஸ்வீட் ஆகவே
"தங்க் யு சார்” வனஜா போனை திருப்பி என்னிடம் கொடுத்தாள்.
எதோ சாதனை படைத்துவிட்டதுபோல் அவள் முகத்தில் சந்தோசம்
பரவாயில்லை. அவர் வலைப்பக்கத்தில் தேடி பார்ப்போம் என்றேன்
அன்று முழுவதும் அந்த பக்கத்தை புரட்டி எடுத்தோம். என்ன ஆச்சர்யம் அங்கேயும பல ஓவியங்கள் என்னைப்போலவே வரைந்திருந்தார். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. வியப்பாகவே இருந்தது
(தொடரும்...)