சின்னஞ்சறு பறவை போல் கனவு வளர்த்த நாள்..
விவரம் புரியா மனதில்
சிறு விதை நீ என ஆசைகள் வளர்த்த நாள்...
தனக்கென ஒருவன் தனக்கான கனவுகளுடன் நம்மிடம் எப்போது வருவான்
என்று எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாள்...
கண்கள் கண்ட நொடிகளில்
எதிர் காலம் அவர் எனப் புரியும் நாள்...
உலகமே சொர்க்கமாய் நந்த வனம் போல் ஆக
நீயும் நானும் பூக்கள் நிறைந்த இடத்தில்
பலவண்ண பூக்களின் அழகை
மிஞ்சி விடுமோ என்பதை போல்
கைகோர்த்து வீற்றிருக்க ..
ஒன்றாக அனைவர் ஆசி பெற்று இனிய வாழ்வு
இணையும் நாள் இதுவா என்று
கனவிற்கும் நினைவிற்கும் இடையில் சிக்கி தவிக்கிறேன்.
மனிதற்கே உரியது காதல் உணர்வு வெளிப்பாடு
பொய்கள் எனத் தெரிந்தும் அந்த உணர்வுகளை ரசிக்க
நமக்கு மட்டுமே இறைவன் கற்றுக் கொடுக்கிறானே..
அவ்வாறு இருந்தும் சிலர் திருமண பந்தத்தை துண்டித்து உணர்வு இல்லாத மனிதரைத் தேடித்தான் செல்கின்றனர்.
நமக்கானவர்களை அவர்கள் குறைகளோடு ரசித்து திருமண
வாழ்வை கசந்து விடாமல் இனிதாகவே நாம் துவங்கி
சிறு சண்டைகளோடு ,சிறு ஊடல்களோடு ,
சிறு கோபங்களோடு இறுதியாக காதலோடு வாழலாமே...