வராதவளாய்
வருவதும்
வந்து
வரி வரியாய் என்
வரிகளை
வாசித்து
வருடி செல்லும்
வசந்தமே !
வா வா !
வருகையின்
வாசிப்பின்
வருடலின்
விலாசத்தை
விடையாய்
வேண்டாம்
விமரிசனமாய் கூட
வேண்டாம்
வாசமாய் ஆவது
விட்டுசெல்லலாமே !
வசந்தமே
வாடிக்கையாய்
வந்து
வாசிக்கும் என்
வரிகளை எனும்
விஷேஷ கௌரவத்திற்காக !