FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KS Saravanan on December 19, 2022, 01:31:52 PM
-
உங்களுடன் ஓராண்டு..!
என் அன்பு நண்பர்களே, சகோதர சகோதரிகளே,
நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கத்தின் மூலம்
ஒன்றிணைந்தோம்..!
தனிமனித கவலைகளை மறந்து இங்கு
ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்..!
பள்ளி, கல்லூரி வாழ்க்கை போல நண்பர்கள் ஆனோம்..!
மறக்க முடியாத பல நினைவுகள் இங்கு கிடைத்துள்ளன..!
ஒவ்வொரு நாளையும் திருவிழாவாக கொண்டாடுகிறோம்..!
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு அல்லது இடைவெளி உண்டு
அது இயற்கையின் விதி..!
அத்தகைய இயற்கைக்கும் விதி விளக்கு உண்டு
என்பதை இங்கே உணர்ந்தோம்..!
ஒரு நல்ல நட்பு ஒன்று இருந்தாலே போதும்
நம் வாழ்க்கையின் துயரங்கள் கூட
நமக்கு வெளிச்சம் காட்டும் தூண்டி விடப்பட்ட
விளக்கொளி தான்..!
இங்கே எண்ணற்ற நட்புக்களும் சொந்தங்களும்
இருப்பதினால் சூரியனை கண்ட பனிபோல்
துயரங்கள் யாவும் மறக்கப்படுகின்றன..!
மாறா நட்புடன் என்றும் இங்கே இணைந்திருப்போம்..!
இங்கே எனது ஓராண்டு நிறைவு நாளில்,
என்றென்றும் உங்கள் அன்பு நினைவுகளோடு
நண்பராகவும் சகோதரனாகவும் மச்சானாகவும்..!
உங்கள்
சரவணன்