ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 303
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
Updated on 26 Oct 2020:
நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக, உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் , 60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/303.jpg)
இக் கவி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட என் ராதைக்கு…
என் உள்ளத்தை வருடிய புன்னகையே...
கற்பனையிலும் படைக்க முடியா கன்னி அவள்..
என் விழிகளில் ஊடுருவி
காதலை தூண்டிய பொன்நிலா அவள்...
பூவிதழ் போன்ற புன்னகையின் இருப்பிடம் அவள்...
நீ தோன்றியதால் தரணியே சுத்துகிறது உனக்காக..
உன் முகம் பார்க்க தென்றலும் ஓயாது வீசுகிறது...
உன் பார்வை பட்டதும் என்
இதயம் துடிக்காமல் இயங்குகிறது...
உன்னை பார்த்த நாள் முதல்
கனவுகளும் அழகாகிறது...
வெண்மேகங்கள் பின் தொடர்வதை பார்க்கிறேன்..
தனிமையில் தவிக்கிறேன் ...
தங்கத் தேரில் வரும் வெண்கல சிலையே!
உன் அழகில் மயங்காத மானிடர் எவரோ?
உன்னை படைத்த பூரிப்பில்
பூமகளே பெருமையில் மிதக்கிறாள்...
உன்னைப்பார்த்த கண பொழுதில்
நிலை தடுமாறினேன்...
உன் விழிகள் விண்மீன்களை விட
அழகாய் பிரகாசித்ததால்
என் சிந்தனையோ சீர்குலைந்தது..
அன்பே ஏனிந்த சோகம்?
ஏனிந்த துயரம்? காரணத்தைக் கூறிவிட்டால் கரைத்துவிட
முயன்றிடுவேன்..
முதுகு காட்டி நிற்கிறாய்..
முந்தி செல்ல இயலவில்லை
முன்பு வந்து நிற்கவும் தைரியமில்லை...
ஆகையால் பெண்ணே...
எந்தன் சிந்தை மறந்து
நினைவு குலைந்து
காற்றாய் உன்னைத் தொடர்கிறேன்..
காரணம் சொல்லும் வரை
உன்னை பின் தொடர்வதே
என் பிறப்பின் பயனாய் உணர்கிறேன்... அதனால்
தொடர்கிறேன்... இன்னும் தொடர்வேன் என் ராதையே
என் இறுதி மூச்சு வரை....HIRISH...
(https://friendstamilchat.net/chat/upload/private/user146762_cf83a60db546.gif)