மணமேடையில் கணவன் காத்திருக்க
சுற்றி குடும்பத்தார், உறவினர்கள்
வழைந்திருக்க,மணமகளுக்கு தன்
வீட்டை விட்டு ஒரு புதிய வீட்டுக்கு
குடியேற போகிறோம் என்ற பயமும்
தன் கணவனுடன் சேர்ந்து ஒரு புதிய வாழ்கையைஆரம்பிக்க போகிறோம்
என்ற பதட்டமும் மனதில் இருந்தாலும்
சிரிப்பு மாறாத உன் முகம் ஆயிரம்
விளக்குகளுக்கு சமம் ஆகும்...
புது கணவனின் முகம் பார்த்து வரும் வெட்கம்,மனதிலிருந்து வரும் உண்மையான
காதலை வெளிக்காட்டும் அவள் நானம்!
தன் மனதிற்கு பிடித்த வாழ்க்கை இந்த மணமேடையில் இனிதே ஆரம்பிக்க போகிறது என்ற ஒரு ஆனந்தம் தன் மனதிலிருக்கும் கஷ்டங்களை தூக்கி போட செய்கிறது வானுயர்ந்த தேவதைக்கு...
தேவைதயே உன் வீட்டார் பல சவரன் நகைகள் போட்டு உனக்கு அழகு பார்த்தாலும், பல ரூபாய் செலவு செய்து திருமணம் நடத்தினாலும்,உன்னை பிரியும் போது வரும் வலி கொடுமையிலும் கொடுமை...
புகுந்த வீட்டிற்கு செல்லும் நீ ஒரு புது தேவதையாக மாறுகிறாய்.உன் குணம் உன் சுற்றி உள்ளவர்களை ஈர்த்து,உன்னையும் உன் வளர்ப்பு பற்றி உன் வீட்டாரையும் பெருமயடைய செய்கிறது...
நீ வாழ போகும் புதிய வாழ்கை கடவுள் கொடுத்த வரம்,உன் வீட்டார்கள் செய்த தவம்
கடலின் ஆழத்தை போல,உனது மனதின் ஆழத்தை அளக்க வரும் கணவன் நீ செய்த பாக்கியம்.உனது அன்பை பாசத்தை கட்டி அடக்கி ஆள வரும் அரசன் உன் கணவன்.
உண்மையான அன்பு வெளிப்படும் தருணம்
காதல் புதிதாக பிறக்கும் இந்நேரம் குற்றால அருவியில் தண்ணீர் கொட்டுவது போல,உன் காதல் எனும் அருவி உன் கணவனிடத்தில் கொட்டும்,அப்போது வாழ்க்கை இன்பமாகும்,துன்பங்கள் மறைந்து போகும்...
தேவதையே இனி நீ வாழ போகும் வாழ்க்கை,நீயும் உன் கணவனும்
இன்பத்திலும், துன்பத்திலும் ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்து
பல செல்வங்கள் பெற்று வாழையடி வாழையாக ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்...
குறிப்பு: வரதட்சணை இல்லாத ஒரு நாடு உருவாக வேண்டும், வரதட்சணை கொடுமையால் நிம்மதி இழந்து வாழும் எத்தனை எத்தனை பேர்,ஒரு மனதிற்கு பிடித்த ஆணும் ஒரு மனதிற்கு பிடித்த பெண்ணும் மன நிம்மதியுடன் வாழும் காலம் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை
(இப்படிக்கு உங்கள் தோழன் Abinesh)