மனப்பறவை
வலிக்க வலிக்க
வேதனையின் நீட்சியில்
சிறகை அடித்து
பறந்து கொண்டே
இருக்கின்றது. .
இளைப்பாற இடமுமின்றி
களைப்பாற மனமுமின்றி
தன் இறகுகள் துவள
சுற்றிக் கொண்டே
இருக்கின்றது. .
தன் இலக்கினை
நிர்ணயிக்கத் தெரியாது
நிர்ணயித்த பாதையிலும்
செல்ல முடியாது
கண்ணீர் சிந்தியபடி
வட்டமிட்டுக் கொண்டே
இருக்கின்றது. .
வெறுமை ததும்பும் வானமும்
ஆறுதலற்ற தனிமையும்
உடன்வர தன் ஒவ்வொரு
சிறகாய் உதிர்த்தபடி
அலைந்து கொண்டே
இருக்கின்றது
தன்னைத் தொலைத்த
மனப்பறவை ஒன்று....!