எப்பிகியூரசு (கிமு 341–270), டெமோகிறிடசின் அணுவியக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்
பண்டைய எகிப்தியர்கள் கிமு 4000 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை வேதியியலின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். கிமு 1000 ஆண்டளவிலேயே பண்டைய நாகரிக மக்கள் வேதியியலின் பல்வேறு துணைப் பிரிவுகளுக்கு அடிப்படையாக அமையும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றுள் கனிம மூலங்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுத்தல், மட்பாண்டங்களை வனைந்து மெருகிடல், நொதிக்கவைத்துக் மதுவகைகள் தயாரித்தல், ஆடைகளுக்கும், நிறந்தீட்டலுக்கும் வேண்டிய வண்ணங்களைத் தயாரித்தல், மருந்துகளையும் வாசனைப் பொருட்களையும் செய்வதற்கு தாவரங்களில் இருந்து வேதிப் பொருட்களைப் பிரித்தெடுத்தல், பாற்கட்டிகளைச் செய்தல், ஆடைகளுக்கு நிறமூட்டல், தோலைப் பதப்படுத்துதல், கொழுப்பிலிருந்து சவர்க்காரம் உற்பத்திசெய்தல், கண்ணாடி உற்பத்தி, வெண்கலம் போன்ற கலப்புலோகங்களை உருவாக்குதல் போன்றவை அடங்கும்.
எப்பிகியூரசு (கிமு 341–270), டெமோகிறிடசின் அணுவியக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்.
வேதியியல், தாதுப் பொருட்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுப்பதற்கு வழி சமைத்த எரிதல் என்னும் தோற்றப்பாட்டில் இருந்து தோற்றம் பெற்றதாகக் கொள்ளலாம். அடிப்படையான கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பொன்னின் மீதிருந்த பேராசை அதனை தூய்மையாக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க உதவியது. இது தூய்மையாக்குதல் என்றில்லாமல் ஒரு மாற்றம் என்றே அக்காலத்தில் எண்ணியிருந்தனர். அக்காலத்து அறிஞர்கள் பலர் மலிவான உலோகங்களைப் பொன்னாக மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளன என நம்பினர். இது இரசவாதம் தோன்றுவதற்கு அடிப்படை ஆகியதுடன், மூல உலோகங்களைத் தொட்டதும் பொன்னாக மாற்றக்கூடிய "இரசவாதக்கல்"லைத் தேடும் முயற்சிகளுக்கும் வித்திட்டது.
கிமு 50 ஆம் ஆண்டில் உரோமரான லூக்கிரட்டியசு என்பவர் எழுதிய பொருட்களின் இயல்பு (De Rerum Natura) என்னும் நூலில் கண்டபடி,கிரேக்கர்களின் அணுவியக் கோட்பாடு கிமு 440க்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. தூய்மையாக்க வழிமுறைகளின் தொடக்ககால வளர்ச்சிகளில் பெரும்பாலானவை குறித்து மூத்த பிளினி என்பவர் தனது இயற்கைசார் வரலாறு (Naturalis Historia) என்னும் தனது நூலில் விளக்கியுள்ளார். வேதியியலின் வளர்ச்சிப் போக்கைப் பருமட்டாகப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:
1.எகிப்திய இரசவாதம் (கிமு 300 -கிமு 400), "ஆக்டோவாட்" (எண்மடங்கு) போன்ற தொடக்ககாலத் தனிமக் கோட்பாடுகளை உருவாக்கியது.
2.கிரேக்க இரசவாதம் (கிமு 332 - கிபி 642), மசிடோனியப் பேரரசர் அலெக்சாந்தர் எகிப்தைக் கைப்பற்றியபோது அதன் தலைநகர் அலெக்சாந்திரியாவில் உலகின் மிகப்பெரிய நூலகம் இருப்பதையும் அங்கே அறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வு செய்வதையும் அறிந்துகொண்டார்.
3.இசுலாமிய இரசவாதம் (கிபி 642 - 1200), இசுலாமியர் எகிப்தைக் கைப்பற்றினர். சாபிர் இபின் அய்யான், அல்-ராசி போன்றோர் இரசவாதத்தை வளர்த்தனர், சாபிர் அரிசுட்டாட்டிலின் கோட்பாடுகளைத் திருத்தியமைத்தார். வழிமுறைகளிலும் கருவிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
4.ஐரோப்பிய இரசவாதம் (1300 - இன்றுவரை), சியுடோ-கெபர் என்பார் அராபிய வேதியியலை அடிப்படையாக வைத்து மேலும் அதனை வளர்த்தெடுத்தார். 12 ஆம் நூற்றாண்டில் இருந்து பெரிய முன்னேற்றங்கள் அராபிய மண்ணிலிருந்து ஐரோப்பாவுக்கு மாறின.
5.வேதியியல் (1661), போயில் வேதியியலில் முக்கியமான நூலொன்றை (The Sceptical Chymist) எழுதினார்.
6.வேதியியல் (1788), இலவோசியே என்பார் தனது "வேதியியலின் கூறுகள்" (Elements of Chemistry) என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.
7.வேதியியல் (1803), டால்ட்டனின் "அணுக் கோட்பாடு" என்னும் நூல் வெளியானது.
8.வேதியியல் (1869), டிமிட்றி மென்ட்லீவ் தற்கான வேதியியலின் ச