கடல்...
கடலாக நன் இருந்தால் அலையாக நீ வருவாய் பிரிவென்பதே நமக்கேதடா?
பூவாக நான் இருந்தால் மணமாக நீ உதிப்பாய் அழிவு கூட ஒன்றாகவேயாடா?
கண நேர பிரிவு கூட யுகமென்பாய் நம் அன்புக்கு அழிவேதடா ?
நான் சிரிக்க நீ சொல்லும் பொய்கள் தரும் இன்பங்களுக்கு எல்லையேதடா?
கன்னம் சுருங்கும் வயதிலும் காதலுடன் கரம் பிடிக்கும் உன் அருகாமைக்கு ஈடேதடா?
உடலென்பது அழியுமென்றால் ,
நம் தீரா காதலின் நினைவுகளுக்கு முடிவேதடா ?
பிரிவென்ற சொல்லை அகராதியில் நீக்க முறையிடுவோம் ஒன்றாகவேடா..
அடுத்த தலைப்பு - அகராதி